சனி, 10 அக்டோபர், 2009

ஓர் தாய் வயிற்று பில்லைகளே சிந்திப்பீர் -
M.S.ரஹ்மத்துல்லாஹ் பாகம் 1
உலகில் வாழும் மக்களிடையே பலவிதமான மதங்களும் சாதிகளும் சித்தாந்தங்களும் உள்ளன. மக்களும் இதன்காரனங்களால் பல கூறுகளாக பிரிந்து பலதெய்வக் கொள்கைகளில் சிக்கி இவ்வுலக வாழ்க்கையையும் சத்தியமான மறுமை வாழ்க்கையையும் இழந்து அழிவைநோக்கி மிகவேகமாக நடைபோடுகின்றார்கள். அந்த அழிவிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் அன்பு சகோதரர்களே!! எத்தணையோ விஷயங்களில் சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுக்கும் நாம் கடவுள் கொள்கை விஷயத்தில் கவனமற்று இருப்பது ஏனோ??
இதோ நமது கடவுளின் வார்த்தையை கேளுங்கள்
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 4:01)
இரவும், பகலும் சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். ஆகவே, நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; சூரியனையோ, சந்திரனையோ வணங்காதீர்கள். இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள். (அல்குர்ஆன் 41:37)
வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வருவதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருபவற்றைக் கடலில் சுமந்து செல்லும் கப்பல்களிலும்;, வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக இறந்தபின் பூமியை உயிர்ப்பிப்பதிலும்;, அதில் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை பலவாராக சுழலச் செய்வதிலும்;, வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன.(திருக்குர்ஆன் 2:164)
அல்லாஹ் நாடினால் தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக