செவ்வாய், 26 ஜனவரி, 2010

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது?
ஏகஇறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக !
"ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?- திருக்குர்ஆன்:88:17."

ஒட்டகம் ஓர் உயிர் பிராணி என்பதால் தாகம் ஏற்பட்டு நாக்கு வறண்டு விடாதா ? நாக்கு வறண்டு சுமை இழுக்க முடியாமல் நமது ஊர் மாடுகள் போன்று அப்படியே உட்கார்ந்து விடாதா ? என்ற சந்தேகம் ஏற்படலாம். அப்படியே உட்கார்ந்து விடும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது . ஒட்டகம் என்ன ? மனிதனுடைய நிலையே அது தான் !மனிதனுக்குப் பசியும் தாகமும் ஏற்பட்டு விட்டால் தனது அடுத்த வேலைகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு முதலில் பசியையும், தாகத்தையும் முடித்துக் கொள்வான் இல்லை என்றால் மொத்த இயக்கமும் நின்று விடும் மற்ற அனைத்து உயிரிணங்களுடைய நிலையும் இது தான்.இதே நிலை ஒட்டகத்திற்கும் ஏற்பட்டால் அதன் மீது அமர்ந்து பயணிக்கும் பயணியுடைய நிலை என்னாவது ? ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? திருக்குர்ஆன்:88:17. என்று இறைவன் கூறுவதில் அர்த்தமில்லாமல் போய்விடும். அல்லது ஒட்டகம் வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீரை கக்கி மீண்டும் குடிக்க முடியுமா ? அவ்வாறு கக்குவதாக இருந்தால் கக்கிய அனைத்து நீரையும் அசுர வேகத்தில் வறண்ட பூமி உறிஞ்சி விடும். எல்லாம் அறிந்த இறைவன் மனிதர்கள் வியக்கத்தக்க வகையில் அதற்கான ஏற்பாடு ஒன்றையும் அதனுடைய உடலின் உட்புறத்திலேயே அமைத்து வைத்தான்.

ஒட்டகம் நீரை பம்பிங் செய்து கொண்டப் பொழுது அதில் குறிப்பிட்ட அளவு தன்னீரை இரத்தத்தின் சிகப்பணுக்கள் உறிஞ்சிக் கொள்வதைப் போல் குறிப்பிட்ட அளவு தண்ணீர் ஒட்டகத்தின் திமிலுக்கு செல்கிறது திமிலுக்குச் சென்றதும் அது கொழுப்பாக மாறுகிறது ( அதனுடைய திமில் சுமார் 45 kg எடை இருக்கும், அதில் அதிகமாக கொழுப்பு இருக்கும்) உணவோ, நீரோ கிடைக்காத வறட்சியான நேரத்தில் அதற்கு தாகமும் பசியும் ஏற்பட்டால் அதன் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவாசிக்கும் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்கிறது.
நமது புதிய இல்லத்திற்கு பால்கனியில் வாட்டர் டாங்க் அமைப்பது போல் ஒட்டகத்தின் உடலின் மேல்மட்டத்தின் மையப்பகுதியில் திமிலை இறைவன் அமைத்தான் அதனால் ஒட்டகத்தின் மூளை அதற்கு பசியையும் தாகத்தையும் தூண்டியதும் அசுர வேகத்தில் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவாசிக்கும் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றியதும் உணவையும், நீரையும் இழுத்துச் சென்று உரிய இடத்தில் சேர்த்து பசியையும், தாகத்தையும் கட்டுப்படுத்தக் கூடிய ‘வேகஸ்’ நரம்புகள் தனது வேலையை சுறு சுறுப்பாகச் செய்து ஒட்டகத்தின் தாகத்தையும், பசியையும் கட்டுப்படுத்தி விடுகிறது. வேகஸ் நரம்புகளின் பணிகளில் சில: இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துவது, உணவு உடலில் பல் வேறு பகுதிகளில் நகர்வதற்குத் துணை செய்யும் சுற்றிழுப்பசைவுக்கு (peristalsis) துணை செய்வது, வாயில் உள்ள பல தசைகளை இயக்குவது, பேசுவதற்குத் துணை செய்யும் குரல்வளை தசைகளை இயக்குவது, மூச்சு விடுவதற்குத் துணை செய்வது, காதின் புற செவி மடல்களில் இருந்து உணர்வு பெறுவது, மண்டை ஓட்டின் தசைகள் சிலவற்றைக் கட்டுறுத்துவது, பெருங்குடலின் சில பகுதிகளை கட்டுப்படுத்துவது என்று பல பணிகளைக் கட்டுறுத்தும் நரம்புகள் ஆகும் .

இறைவன் ஓட்டகத்தை வறண்ட பூமிக்கு ஒரு வாகனமாக வடிவமைத்தக் காரணத்தால் அது பயணிக்கும் வழிகளில் உணவும் நீரும் எளிதில் கிடைக்காது என்பதால் அதனுடைய உடலின் உட்புறத்தில் மெகா ஏற்பாடு ஒன்றை செய்து அது தாமாக இயங்கிக் கொள்ளும் நிலையில் அதனுடைய அமைப்பை ஏற்படுத்தினான். இறைவனின் இந்த மெகா செட்டப் காரணத்தால் ஒட்டகம் உணவு மட்டும் கிடைத்தால், நீரின் தேவையில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். உணவோ, நீரோ கிடைக்காத பட்சத்தில் கூட எந்த தேவையுமில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். குளிர்காலங்களில் ஆறு மாதம் வரை கூட நீர் குடிக்காமல் பயணிக்கும்.

"அவனே இறைவன். (அவன்) படைப்பவன், உருவாக்குபவன், வடிவமைப்பவன், அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்." - 59:24.

இதற்கு முன் இரத்தத்தை உறைய விடாமல் தடுப்பதற்காக ஒட்டகத்தினுடைய இரத்தத்தின் சிகப்பணுக்கள் அதனுடைய உண்மையான அளவை விட விரிந்து இடமளித்து அதிக நீரை தேக்கிக் கொள்வதற்காக மற்ற உயிரிணங்களுக்கு இருப்பதை விட ஒட்டகத்திற்கு இரத்தத்தின் சிகப்பணுக்களை பெரிய அளவில் இறைவன் வடிவமைத்தான். அதேப்போன்று அதனுடைய தாகத்திற்காகவும், பசிக்காகவும் அதன் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவாசிக்கும் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்வதற்காக அதனுடைய முதுகில் மிகப்பெரிய அளவிலான திமிலை இறைவன் வடிவமைதான். இன்னும் மனிதர்கள் வியக்கத்தக்க வகையில் வித்தியாசமான முறையில் ஒட்டகத்தின் உட்புற, வெளிப்புற அமைப்புகளை வடிவமைத்து ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? திருக்குர்ஆன்:88:17. என்றுக் கூறி அதை ஆய்வு செய்யும்படி இறைவன் கூறுகிறான்.

பாலைவன மக்களுடைய வெளிஉலகப் பயணத்திற்காக பிரத்தியேகமாக உயிரிணத்தில் வடிவமைக்கப்பட்ட 680 kg வரை எடையுள்ள ஓட்டக(வாகன)ம், 450 kg வரை உள்ள சுமையை சுமந்து கொண்டு சீரமைக்காத சாலைகளில் பயணிக்கும் போது சிறு சிறு கற்கள் அதனுடைய கால்களில் குத்தி வலித் தாங்க இயலாமல் விழுந்து விட்டால் அதன் மீது அமர்ந்து பயணிக்கும் பயணியுடைய நிலை என்னாவது ?அதேப்போன்று அதனுடைய காலும் சதைப்பகுதி என்பதால் ஒரு குறிப்பிட்ட தூரமே நடக்க இயலும் அதன் பிறகு காலின் சதைப்பகுதித் தேய்ந்து இரத்தக் கசிவு ஏற்பட்டு நடக்க முடியாமல் கீழே விழுந்து விட்டால் அதில் பயணிப்பவருடைய நிலை என்னாவது ?இதனால் தான் பாரம் சுமக்கும் நமது ஊர் மாடுகளின் கால்களின் குளம்புகளில் லாடம் அடித்து விடுவார்கள்.

ஆனால் அன்றைய பாலை வெளிப் பிரதேசத்தின் நெடுந்தூரப்பயண வழிகளின் நிலை அவ்வாறில்லை. கரடு முரடான பாதைகள், ஒதுங்குவதற்கு அறவே நிழலில்லாத வனாந்திரம் ( எங்காவது பலநூறு மைல்களுக்கப்பால் மட்டுமே கிராமங்கள் தென்படலாம் ) ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாடு செல்லும் வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒட்டகத்தின் முதுகில் அமர்நதிருப்பார்கள் .இதை எல்லாம் அறிந்த அல்லாஹ் அதனுடைய தட்ப வெட்ப நிலைக்கொப்பவே ஒட்டகத்தை வடிவமைத்தான்.ஒட்டகம் பயணிக்கும் வழிகள் சீரமைக்காத சாலைகள் என்பதால் ஒட்டகம் இலகுவாக ஓடுவதற்கு அதனுடைய கால்களில் மூன்று மடக்குகளை வைத்துப் படைத்தான்.குட்டிப் போட்டு பால் கொடுக்கும் (மனிதன் உட்பட) பிராணிகள் அனைத்திற்கும் கால்களில் இரண்டு மடக்கும் மூட்டு இணைப்புகள் (Ankle Joint) மட்டும் இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்று இணைப்புகள் இருக்கும். அதனால்தான் ஒட்டகத்தால் எளிதாக பாலை மணலின் மேடு பள்ளங்களில் செல்ல முடிகின்றது. மனிதன் கண்டுப்பிடித்த மோட்டார் வாகனத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கியர்கள் இருக்கும் ஒன்றிலிருந்து அடுத்த கியர் மாற்றும் பொழுது வாகனத்தின் வேகம் அதிகரிக்கும் அதேப் போன்று வேகத்தைக் குறைப்பதற்கும் டாப் கியரிலிருந்து அடுத்த கீழ் கியருக்கு மாற்றுகிறோம். பாரங்களை சுமந்து கொண்டு ஓட்டகம் மேடானப் பகுதிகளில் இலகுவாக ஏறுவதற்கும், அதிலிருந்து பள்ளாமானப் பகுதிக்கு மெதுவாக இறங்குவதற்கும் அதனுடைய கால்களில் அமைக்கப்பட்டிருக்கும் மூன்று மடக்குகளே உதவுகின்றன. அவனே சிறந்த படைப்பாளன். …அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலிரியாவான். திருக்குர்ஆன்:23:14.

அதேப்போன்று கற்கள் நிறைந்தப் பகுதிகளில் சிறு சிறு கற்கள் காலில் குத்தி கிழே விழுந்து விடாமல் இருப்பதற்காக மற்ற மிருகங்களுக்கு இருப்பதைப் போல் வெடித்த இருக் குளம்புகளாக அல்லாமல் அவற்றை இணைத்து ஒரேக் குளம்பாக மாற்றி அதனுடைய உயரத்தையும் அதிகப்படுத்தினான்.மற்ற மிருகங்கள் வெடித்த இருக் குழம்புகளைக் கொண்டு நடக்கும், ஆனால் ஒட்டகம் அதன் வெடித்த ஒரு குழம்புகளை இணைக்கும் மெத்தென்ற பட்டையான சதை இணைப்பைக் கொண்டு நடக்கிறது. (அதன் பாத அமைப்பிற்கு சரியான உதாரணம் Snow Shoes ஆகும்).மிருகங்களின் கால் குளம்புகளைப் பார்த்தே வாக்கிங், ரன்னிங் சூ உருவாக்கப்பட்டிருக்குமோ ?மேல்படி ரன்னிங் சூ வில் மட்டும் மற்ற சூ வில் இல்லாத அளவுக்கு அதனுடைய அடிப் பாகத்தில் அரை அல்லது ஒரு இஞ்ச் அளவுக்கு தடித்த ரப்பரால் உயரம் அமைக்கப் பட்டிருக்கும் காரணம் அதனுடைய தடித்த ரப்பர் போன்ற அடிப் பாகங்கள் அதை அணிந்து ஓடுபவர்களுடைய கால்களை எவ்விக் கொடுக்கும் அதனால் அதிக களைப்பில்லாமல் ஓடுவதற்கு, வாக்கிங் செய்வதற்கு இலகுவாக இருக்கும். இன்று மனிதன் கண்டுப்பிடிக்கும் அதி நவீன கண்டுப் பிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்வது பெரும்பாலும் இறைவனின் படைப்புகளேயாகும். உதாரணத்திற்கு விண்ணில் பறக்கும் பறவைகளின் இடைவெளி இல்லாத இறக்கைகளின் அசைவுகளே உயரேப் பறப்பதற்கு காரணமாக இருக்கிறது என்பதை உணர்ந்த ரைட் சகோதரர்களுக்கு விமானம் உருவாக்குவதற்கு தூண்டுதலாக இருந்தது. 680 kg வரை எடையுள்ள ஒட்டகம், 450 kg வரை சுமையை சுமந்துக் கொண்டு கற்கள் நிறைந்த பகுதிகளில் ஓடும் பொழுது கற்கள் அதனுடைய கால்களில் குத்துவதால் எந்த பாதிப்பும் தெரியாமல் ஓடிக் கொண்டிருப்பதற்கு அதனுடைய இணைக்கப்பட்ட கால்களின் குளம்பும், ரப்பர் போன்ற உயரமான அமைப்புமேயாகும். சுப்ஹானல்லாஹ் அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். 23:14 சுட்டெரிக்கும் வெயில் ஒட்டகத்தின் முதுகின் மீது பயணிப்பவர் சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பம் தாங்க முடியாமல் கண்களை துணியைக் கொண்டு மறைத்துக் கொள்வார்.

அதேப் போன்று திடீரென அடிக்கின்ற சுழல் காற்றினால் கடுமையான தூசு விண்ணை முட்டும் அளவுக்கு மேல்நோக்கி கிளம்பிவிடும் அது மாதிரி நேரத்தில் யாரும் ரோட்டில் நடக்கவே முடியாது கண்களைத் திறந்தும் பார்க்க முடியாது, மூச்சு விடக் கூட முடியாது அன்றும் இதே நிலை தான் இன்றும் இதே நிலை தான். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் அவைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அது மாதிரி நேரத்திலும் கூட எதுவும் நடக்காதது போல் ஒட்டகம் ஓடிக் கொண்டே இருக்கும். அதற்கு காரணம். • மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது நாம் ஜன்னலுக்கு திரையிடுவது போல் மூக்கை மூடிக்கொள்ளும் வசதியுள்ளது ஒட்டகத்திற்கு.

அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும் அடர்த்தியான முடிகள் மணலோ, தூசியோ, காதுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது. • அதன் இமையிலுள்ள நீண்ட மயிர்கள் மணலிருந்து கண்ணிற்கு பாதுகாப்பு அளிக்கிறது. அதன் புருவத்திற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பு, பாலை சூரியனின் பிரகாசமான வெளிச்சம் கண்ணைத் தாக்கிவிடாமல் தடுத்து விடுகிறது ( sun glass) கண்ணிற்கு கீழே உள்ள இமைப்போன்ற அமைப்பு, கண்ணை மணல் தாக்கி விடாமல் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் பாலை சூரியனின் வெளிச்சத்தை பாதியாக குறைத்து விடுகிறது. ஆனால் பாதையை மறைத்துவிடுவதில்லை. அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்திருப்பதால் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்.

பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்துவிடாமல் இருப்பதற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள். ஏற்கனவே வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீர் தீரும் நிலையை அடைந்து விடடால் தனது மூக்கால் மோப்பமிட்டு நீர் நிலையை அடைந்து கொள்ளும் ஆற்றலை அதற்கு இறைவன் வழங்கினான்.

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? திருக்குர்ஆன்:88:17.

அவனே அல்லாஹ். (அவன்) படைப்பவன், உருவாக்குபவன், வடிவமைப்பவன், அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன். திருக்குர்ஆன்: 59:24.

புதன், 20 ஜனவரி, 2010

பால் உற்பத்தி குறித்து அல்-குர்ஆன்
M.S.Rahmathullah.

உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ் என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார். இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார்.
உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation) சென்றடைகிறது. இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது. இவ்வாறு குடல்களுக்குச் சென்ற உணவு பொருட்களின் சத்துக்கள் குடல்களின் இரத்த நாளங்கள் மற்றும் இரத்த ஓட்டங்களின் வழியாக பால் சுரப்பிக்கும் (Mammary Gland) சென்று அவைகள் பால் சுரப்பதற்கு ஏற்ற சக்தியை அளிக்கின்றது.
இது இன்றைய தினம் நாம் பெற்றிருக்கும் ‘பால் எங்கிருந்து எப்படி சுரக்கிறது’ என்பதைப் பற்றிய அறிவியலாகும். இந்த நவீன விஞ்ஞான அறிவை 1430 ஆண்டுகளுக்கு முன்னரே அல்லாஹ்வின் அருள்மறை கூறியிருக்கிறது என்றால் அது ஆச்சரியமளிப்பதாக இருக்காதா? ஆம் இது விஞ்ஞானிகளுக்கு பேராச்சரியமாகத் தான் இருக்கிறது. இந்தப் பேருண்மையை சத்திய திருமறை ஸூரத்துல் நஹ்ல்-ன் 66-வது வசனத்தில் கூறுகிறது.
“நிச்சயமாக (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது. அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம்” (அல்குர்ஆன்: 16:66)
“நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கிறது. அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்” (அல்குர்ஆன்: 23:21)

வயிற்றில் உள்ளவற்றுக்கும் (சத்துக்கள் உறிஞ்சி எடுக்கப்பட்ட உணவு பொருட்களுக்கும்) இரத்தத்திற்கும் இடையிலிருந்து பால் உற்பத்தியாகின்றது என்று நவீன விஞ்ஞானம் கூறும் உண்மைகளை 1430 ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்தியம்பிய திருமறை வசனங்களை பார்க்கும்போது, இது மனிதர்களின் வார்த்தைகளல்ல, நிச்சயமாக இது அனைத்து உயிரினங்களையும் படைத்து பரிபக்குவப்படுத்திய இறைவனின் வார்த்தைகள்தான் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.
அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள். வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, 'எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மகா தூய்மையானவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!'(என்றும் கூறுவர்)(திருக்குர்ஆன்3:191)
நிச்சயமாக எவர்கள் 'எங்கள் இறைவன் அல்லாஹ்வே' என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன்46:13)
நன்றி சுவனத்தென்றல்.காம்

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

M.S.RAHMATHULLAH

திட்டமிட்டுச் செயலாற்றும் கறையான்
அவருக்கு (சுலைமானுக்கு) நாம் மரணத்தை விதித்த போது பூமியல் ஊர்ந்து செல்லும் கறையான் தான் அவரது மரணத்தை (ஜின்களுக்குக்) காட்டிக்கொடுத்தது. (34:14)
கரையான்கள் எறும்புகளைப் போல இருந்தாலும், உண்மையில் அவை எறும்புகள் வகை அல்ல. எறும்புகள் Hymenoptera என்ற வரிசையைச் சேர்ந்தது. ஆனால், கரையான்கள் Isoptera என்ற வரிசையைச் சேர்ந்தது. Iso என்றால், 'ஒரே மாதிரி ' என்று பொருள். Ptera என்றால், 'இறக்கை ' என்று பொருள். அதாவது, கரையான்களின் மறுவடிவமான ஈசல்களின் முன் மற்றும் பின் இறக்கைகள் ஒரே மாதிரி இருப்பதால், இந்த வகைப்பாட்டியல் பெயர். கரையான்களில், உலகம் முழுதும் சுமார் 275 பேரினங்களும், சுமார் 2750 சிற்றினங்களும் உள்ளன. கரையான்களில் ஒரு சில சிற்றினங்கள், மரங்களில் வாழும். அவை மரங்களை, அரித்து தின்று விடும். மண்ணில் புற்று அமைத்து வாழும்.
கரையான்களும், தேனீக்களைப் போல ஒரு சமுதாய பூச்சி (Social insect) ஆகும். ஏன் அப்படி அழைக்கிறோம் எனில், அவற்றால் தனித்து வாழ இயலாது. ஒரு கரையான் கூட்டத்தில் இராணிக்கரையான் (Queen), மன்னர் கரையான் (King), இராணுவ வீரர்கள் (Soldiers) மற்றும் பணிக்கரையான்கள் (Workers) என நான்கு வகை இருக்கும். இதில் இராணுவ வீரர்களும், பணிக்கரையான்களும் மலட்டுத் தன்மை கொண்டவை. ஆனால் இவையும் பிறப்பால் மலடு அல்ல. வளர்ப்பால்தான் மலடு ஆகின்றன. தேனீக்களைப் போல இராணிக்கரையான் தன் உடலிலிருந்து Queen pheromone எனப்படும் ஒருவித பிரத்யேக சுரப்பினைச் சுரக்கும். இந்த சுரப்பினை எல்லா பணி மற்றும் இராணுவ வீரர்கள் கட்டாயமாக குடிக்க வேண்டும். அவ்வாறு குடிக்கும்பட்சத்தில் அவை மலடு ஆகிவிடும்.

இராணுவ வீரர்களுள் இரண்டு வகை உண்டு. முதல்வகை பருத்த தலையுடன், முகத்தில் ஒரு பிரத்யேக அரிவாள் போன்ற கொடுக்குடன் இருக்கும். அவை Mandibulate Soldiers எனப்படும். இவை பகைவர்களின் மீது தாக்குதல் நடத்தி விரட்டிவிடும். அடுத்த வகை, Nasute Soldiers எனப்படும். இவை பகைவர்களின் மீது துர்நாற்றம் மிக்க சுரப்பினைத் துப்பி விரட்டிவிடும். இதில் நாம் கவனிக்க வேண்டிய விசயம், இராணுவ வீரர்கள் கண்பார்வையற்ற குருடர்கள். இராணுவ வீரர்களுள் ஆண், பெண் என இருபாலருமே உண்டு. பணிக்கரையான்களும் கண்பார்வையற்ற குருடர்களே ! அவற்றிலும், ஆண், பெண் என இருபாலருமே உண்டு. இராணுவ வீரர்கள் மற்றும் பணிக்கரையான்களின் வாழ்நாள் 1-2 ஆண்டுகள் ஆகும். பணிக்கரையான்கள் புற்றினைக் கட்டுதல், பழுதடைந்த புற்றினைச் சரிசெய்தல், இளம்கரையான், இராணுவ வீரர்கள், மன்னர் மற்றும் இராணி கரையான்களுக்கு உணவு கொடுத்தல் என பல வேலைகளைச் செய்யும்.

இராணிக்கரையான் ஒரு நாளைக்கு சுமார் 2000 முட்டைகள் வைக்கும். அதாவது, ஒவ்வொரு 15 நொடிக்கும் ஒரு முட்டை வைக்கும். இராணிக்கரையான்களின் வாழ்நாள் 15-25 ஆண்டுகள் ஆகும். இராணுவ வீரர்கள் மற்றும் பணிக்கரையான்களுக்கு ஒரு குறிப்பிட்ட வாசனை உண்டு. ஒரு வேளை, பாதுகாப்பு பணியில் உள்ள இராணுவ வீரர்கள் பகைவர்களுடனான போரில் கணிசமாக இறந்து விட்டால், இந்த வாசனை குறைந்துவிடும். இந்த Signal கிடைத்தவுடன், இராணிக்கரையான் இராணுவ வீரர்களுக்கான முட்டைகளை வைக்கும். இப்படியாக இந்த கரையான்களுக்கு தனி இராஜியங்கள் உண்டு என்பதை அறியும்போது இந்த சின்னஞ்சிறிய கண்தெரியாத பூச்சிக்கு இத்தனைப்பெரிய ஆற்றலைக் கொடுத்த இறைவன் எப்பேர்ப்பட்ட சக்திபடைத்தவன் என்பதை நாம் அறிய முடிகின்றது.

...வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான் அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்.(திருக்குர்ஆன் 3:29) ...வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள அனைத்தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம். அவன் நாடியதைப் படைக்கிறான் இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.(திருக்குர்ஆன் 5:17 )

பாம்பு ஏன் புற்றுக்கு வருகிறது ?

ஒரு கரையான் புற்றில், பல மில்லியன் கரையான்கள் இருக்கும். அவற்றின் வளர்சிதை மாற்றங்களால் உருவாகும் வெப்பம் மற்றும் நீராவி ஆகியன ஒருவிித மிதவை உந்து விசைகளை (Buoyant forces) உள்ளிழுக்கும். எனவே புற்றின் உள்ளிருக்கும் காற்று Central chimney மூலம் மேலே வரும். அப்போது புற்றின் உள்காற்றிலிருக்கும் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு, வெப்பம் மற்றும் நீராவி ஆகியன Surface conduits மூலம் புற்றின் வெளிக்காற்றுடன் பரிவர்த்தனை செய்துகொள்ளும். எனவே புத்தம் புதிய காற்று, மீண்டும் புற்ிறுக்குள் Surface conduits, Central chimney மூலம் உள்ளிழுக்கப்படும். எனவே புற்று எப்போதும் சில்லென்றே இருக்கும். எனவேதான், பாம்பு புற்றுக்கு வந்து தங்கிவிடும்.

கரையான்கள் மரம் மற்றும் நூல்களை உண்ணுகிறதே, அதை எப்படி செரிக்கிறது ?
பொதுவாக, பேப்பர் மற்றும் மரங்களில், செல்லுலோஸ் என்ற பொருள் இருக்கும். அதை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதி நமக்கோ, கரையான்களுக்கோ இல்லை. கரையான்கள் தங்கள் குடலில் Protozoa க்களுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்கும். இதற்குக் Protozoa க்கள் கரையான்களுக்கு செல்லுலோஸை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதியைக் கொடுக்கும். இப்படித்தான் கரையான்களுக்கு உணவு செரிக்கின்றது.

நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் அற்பமானதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். இறைநம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்.( திருக்குர்ஆன்2:26 )

இத்துணை ஆற்றல்களைப் பெற்றிருக்கும் இந்த அதிசயப்பிராணிகளான கரையான்களுக்குக் கண்களே இல்லை என்பது அதைவிடவும் அதிசயமல்லவா? கொசுக்களுக்கு 100 கண்களைக் கொடுத்த இறைவன் கண்களே இல்லாதும் என்னால் படைப்புகளை படைத்து இயங்கச் செய்யமுடியும் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.
Ahmad Baqavi
இதோ இன்றைய விஞ்ஞானிகள் பூமியைப்பற்றி கண்டறிந்தவைகளில் சில:
1. பூமியின் வயது 455 கோடி வருடங்கள்.
2. பூமியின் சுற்றளவு 25000 மைல்கள். உருண்டை வடிவம் கொண்டது.
3. பூமியின் குறுக்களவு 8000 மைல்கள்.
4. எவரெஸ்ட் மலையின் உயரம் 29000 அடி உயரம்.
5. பெண்ட்லி பள்ளத்தாக்கு 8300 அடி ஆழம்.
6. இப்போது நாம காணும் மண்ணும் கல்லும் கலந்த பகுதி தான் பூமியின் பொறுக்கு. சுமார் 25 மைல் வரை தான் இந்தப் பொறுக்கு.
7. அதற்குக் கீழே 1800 மைல் வரை பாறை.
8. அதற்கும் கீழே 2160 மைல் வரை அக்கினிக் குழம்பு. அதாவது பாறையும் இரும்பும் உருகி உலோகக் குழம்பாகி பயங்கரச் சூட்டில் கொதித்துக் கொண்டிருக்கும்.
9. இந்த அக்கினிக் குழம்புக்கும் கீழே 780 மைலுக்கு கனத்த உலோகம்.
10. இதையெல்லாம் தோண்டிப் பார்க்க நம்மிடம் ராட்சஸ இயந்திரங்கள் இல்லை. ஆனால், ரஷ70 அடிவரை அதிக ஆழம் தோண்டிப் பார்த்திருக்கிறார்கள்.
11. பூமி சூரியனைச் சுற்றும் தூரம் 68 கோடியே 39 இலட்சம் மைல்கள்.
12. பூமியோடு சேர்ந்து நாமும் ஒரு வினாடிக்கு 18.5 மைல்கள் பிரயாணம் செய்கிறோம்.
13. பூமி தன்னனைத் தானே சுற்றுவதில் நாம் வினாடிக்கு 1525 அடி நகர்ந்து போகிறோம்.
14. பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவர ஒரு முழு நாள் ஆகும். (அதாவது 23 மணி நேரமும், 56 நிமிடங்களுமாகும்.)
15. பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஒரு வருடம் ஆகும்..(அதாவது 365 நாட்களும் 6 மணி நேரமும், 46 நிமிடங்களும். 48 வினாடிகளுமாகும்.)
16. சந்திரனோ பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.
17. பூமியும் ஏனைய கிரகங்களும், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பிறழாமல் சுற்றிக்கொண்டே இருக்கின்றன.
18. பூமியிலிருந்து சற்திரன் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிம் மைல்களுக்கு அப்பால்இருக்கிறதது.
19. பூமியின் முக்கால் பாகம் நீரால் சூழப்பட்டுள்ளது. கால் பாகம் மேற்பரப்பில் தான் உயிரினங்கள் வாழ்கின்றன. (பூமியின் ழுழுப்பரப்பின் 70.8 விழுக்காடு கடல்கள்.மீதமுள்ள பகுதியே நாம் வாழும் பகுதி.)
20. பூமியின் மேற்பரப்பை நான்கு கோளங்னாகப் பிரிக்கலாம். 1. பாறைக்கோளம்.2. நீர்கோளம். 3. வளிமண்டலம் (யவஅழளிhநசந) உயிர்கோளம்எத்தனை பிரயாணங்கள் ?
21. தன்னைத்தானே சுற்றும் பிரயாணம்!
22.சூரியனை சுற்றும் பிரயாணம்!
23. சூரியன், சதிரன், நட்சத்திரங்கள், மற்றும் கிரகங்கள் இவற்றோடு சேர்ந்து செய்யும் பிரபஞ்சப் பிரயாணம்.! இங்கேயும் முடிவில்லை.
24. பிரபஞ்சம் முழுமையாக சேர்ந்து அண்ட வெளியில் வெளிநோக்கி வளைய மடித்துக்கொண்டு போகும் பிரயாணம்!
ஆக நான்கு பிரயாணங்கள் செய்து கொண்டே இருக்கிறோம். அதே நேரம் நாம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வீட்டிலே நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிஙோம்.
25. நாம் நினைப்பது போல் பூமி ஒன்றா ? ஒரே ஒரு பூமி மட்டுமல்ல. ஒரு சூரிய குடும்பத்துக்கு ஒரு பூமி. உலகில் பல சூரிய குடும்பங்கள் உள்ளன. ஒவ்வொரு சூரிய குடும்பத்துக்கும் ஒவ்வொரு பூமி உள்ளது. ஒரு பால் வெளியில் (புயடயஒல) 200 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன. பால் வெளி; (GALAXI)என்பது ஒன்றா? நூறா ? அதுவே 200 பில்லியன் பால் வெளிகள்; (GALAXI க்கள்) உள்ளன. அப்டியானால் உலகில் எத்தனை பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கும். படைத்தவனுக்கே வெளிச்சம்.
அல்லாஹ்வின் கணக்கில்லா இந்த அற்புதப் படைப்புகளின் எண்ணிக்கை பற்றியோ, அவற்றின் அற்புதத் தகலவல்கள் பற்றியோ விஞ்ஞானிகள் கூறுவதைக்கேட்டாலே தலை சுற்றுகிறது. இனியும் என்னன்ன கண்டுபிடிக்கப் போகிறார்களோ ? அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள் பற்றி சிந்தித்து அவனைப் புகழ்ந்து அவனுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டாமா ?
வான்மறையில் பூமியைப்பற்றி ..
பூமி எவ்வாறு விரிக்கப்பப்பட்டுள்ளது என்பதை அவர்கள் (ஆராய்ந்து) பார்க்க வேண்டாமா?(அல்குர்ஆன் 88: 20)
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதில் இரவு பகல்மாறிவருவதிலும் அறிவுடையோருக்கு சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 3:190)
வானங்களையும் பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதைவிடப் பெரியது.(அல்குர்ஆன் 40: 57)
இவ்வாறாக திருக்குர்ஆனில் 461 தடவைகள் திரும்பத் திரும்ப கூறியிருப்பதிலிருந்தே அதன் முக்கியத்துவத்தையும் அதிசயங்களையும் அறியலாம்.

திங்கள், 4 ஜனவரி, 2010

தேங்கை முனீப்
கேள்வி:
//குர்ரான் சொல்வதுபோல் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை அவருக்கு பதில் வேறொருவர் மாற்றப்பட்டார் என்றே வைத்துக்கொள்வோம். இந்த உண்மையை ஏன் இயேசு (அல்லது இறைவன்) சீடர்களுக்கு கூட தெரிவிக்கவில்லை? அவர் தெரிவிக்காமல் போனதால்தானே இந்த சீஷர்கள் எல்லோரும் தவறான கருத்துகொண்டு பிரச்சாரம் செய்து கிறிஸ்த்தவம் என்றொரு மதத்தை உருவாக்கி இன்று உலகில் முதல் பெரிய மதமாக நிற்கிறது. இங்கு கிறிஸ்த்தவம் உருவாக காரணம் யார்? இயேசுவின் சீடர்களா அல்லது இயேசுவை பின்பற்றிய சீடர்களுக்கு கூட உண்மையை சொல்லாமல் அவரை எடுத்துக்கொண்ட இறைவனின் பொறுப்பற்ற செயலா?//
விளக்கம்:
கிறிஸ்தவம் என்ற மதத்தை மனிதர்கள் உருவாக்க இறைவன் காரணமானவனா? என்பதை ஆராயும் முன் இறைவனைப் பற்றியும் மதங்களைப் பற்றியும் ஓர் அடிப்படையை நாம் அறிந்து கொள்வது அவசியம் ஆகும்.பசியும் தாகமும், துன்பமும் வேதனையும் உடையவனாக, அழுபவனாக, அபயம் தேடுபவனாக, முன்கோபக்காரனாக, மனிதர்களிடம் மல்லுக்கு நிற்பவனாக, தன் அடிமையைக் காணாமல் தேடி அலைபவனாக, தான் செய்த காரியத்தைக் குறித்து வருத்தம் கொள்பவனாக இப்படி ஒரு சாதாரண மனிதனுக்கு ஏற்படக் கூடிய எல்லா பலவீனங்களையும் கொண்டவனாக கிறிஸ்தவம் இறைவனை நமக்கு அறிமுகம் செய்கின்றது!
கேள்வி கேட்ட அந்த நண்பர் ஒருவேளை கடவுளைப் பற்றிய இத்தகைய தவறான மதிப்பீடுகளின் மேல் நின்று கொண்டு ”இறைவனின் பொறுப்பற்ற செயல்” என்ற முறையில் கேள்வி எழுப்பியிருக்கிறார் போலும்! எனவே இறைவனின் உயரிய பண்புகள் எத்தகையது என்பதை முதலில் அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
இஸ்லாம் கூறும் இறைவனின் உயரிய பண்புகள்!
அல்லாஹ் என்பது சர்வ வல்லமை மிக்க இறைவனைக் குறிக்கும் தன்னிகரற்ற ஓர் அரபுச் சொல்.அல்லாஹ், நுண்ணறிவும் பரிபூரண ஞானமும் மிக்கவன்! அவனை யாரும் மிகைத்து விட முடியாது! எல்லாப் பொருட்களும் அவனது ஆற்றலுக்குட்பட்டது! நமது சிந்தனையும் ஆற்றலும் அல்லாஹ் வழங்கியதாகும்! நமது அறிவு சொற்பமானது! வரம்புகளுக்கு உட்பட்டது! அல்லாஹ்வுடைய ஆற்றலையும் அவனது நாட்டத்தையும் செயல்பாடுகளையும் குறித்து மனிதனால் கேள்வி எழுப்ப இயலாது!
இறைவன் ஏன் அப்படிச் செய்தான் இப்படிச் செய்தான் என்று கேள்வி எழுப்புவது அறிவுடைமை ஆகாது. மாறாக ஏன் இவ்வாறெல்லாம் நிகழ்கிறது? என்பதை சிந்தித்து இறைவன் பால் நெருங்குவதற்குரிய வழியைத் தேடிக் கொள்வதே அறிவுடைமை. ஏன் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இருக்கிறது? ஏன் சிலரை மட்டும் கடுமையான நோய் தாக்குகிறது? ஏன் சிலர் ஊனமாகப் பிறக்கின்றனர்? ஏன் இயற்கைச் சீற்றங்களால் பேரழிவு ஏற்படுகிறது? இவை எல்லாம் அந்த வல்லமை மிக்க இறைவனின் ஆற்றலையும் மனிதனது இயலாமையையும் வெளிப்படுத்துகிறது.
ஏழைக்கு அவனது ஏழ்மையும் நோயாளிக்கு அவனது நோயும் ஊனமுற்றோனுக்கு அவனது ஊனமும் சோதனைகளாகும். அது போன்றே சிலரைச் செல்வந்தர்களாகவும், உடல் நலம், உடல் பலம் மிக்கவர்களாகவும் ஆக்கி அவர்களையும் சோதிக்கிறான். இறைவனின் இந்த விதியைப் பொருந்தி கொண்டு அவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்களே நல்லடியார்கள். இவ்வுலகத்தின் நியதியை இவ்வாறு இறைவன் ஆக்கியுள்ளான்.
ஆன்மீகத்தைப் பொறுத்தவரை, மனிதனுக்கேற்ற நேர்வழியை அல்லாஹ் தெளிவு படுத்திவிட்டான். அதைத் தேர்ந்தெடுக்க அல்லது நிராகரிக்க உள்ள சுதந்திரத்தையும் மனிதனுக்கு வழங்கியுள்ளான். அத்துடன் யார் நிராகரிக்கின்றார்களோ அத்தகையோருக்கு கடுமையான தண்டனையைக் குறித்தும் எச்சரிக்கிறான்.
“இன்னும் நீர் கூறுவீராக: இந்த சத்திய(வேத)ம் உங்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ளதாகும். எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் நம்பிக்கை கொள்ளட்டும் எவர் நாடுகிறாரோ அவர் நிராகரிக்கட்டும்! நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நரகத்தை நாம் தயார் செய்து வைத்துள்ளோம் அதனுடைய சுவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே அவர்கள் முறையீடு நிறைவேற்றப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும் “(18 அல் கஹ்ஃபு – 29)
அல்லாஹ் நாடியிருந்தால் மக்கள் அனைவரையும் ஒரே கொள்கையைச் சேர்ந்தவர்களா ஆக்கிவிடலாமே? என்ற கேள்வியும் அடிப்படையற்றதாகும். இதுவும் அல்லாஹ்வின் வல்லமையை நோக்கி பலவீனமான மனித சிந்தனையின் கேள்வியாகும். இதற்கு அல்லாஹ்வே விடையளித்து விட்டான்.
“அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான், எனினும் உங்களுக்கு அவன் வழங்கியவற்றில் உங்களை அவன் சோதிப்பதற்காக (இவ்வாறு) செய்திருக்கிறான்“ (5 அல் மாயிதா: 48)
“அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்குப் பின் வந்தவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள் எனினும் அவர்கள் (தங்களுக்குள்) கருத்து வேற்றுமை கொண்டார்கள்“ (2 அல் பகறா 253)
“உம்முடைய இறைவன் நாடினால் மனிதர்களை ஒரே சமுதாயத்தவராய் அவன் ஆக்கியிருப்பான் (அவன் அப்படி நாடாமையினால்) அவர்கள் கருத்து வேறுபாடு உள்ளவர்களாகவே இருந்து வருவார்கள்” (11 ஹூது 118)
கருத்து வேறுபடுவது மனிதனின் இயல்பு.
இந்த இயல்பிலிருந்தே நல்லவர்களையும் தீயவர்களையும் சோதித்து நல்லவர்களுக்கு நற்கூலியும் தீயவர்களுக்குத் தண்டனையும் வழங்குவது என்பது இறைவன் ஏற்புடுத்திய விதி என்பதை மேற்கண்ட வசனங்கள் நமக்கு விளக்குகின்றன.இந்நிலையிலேயே இறைவழியிலிருந்து பிறழ்ந்து உருவான மனித மதங்களைக் குறித்தும் நாம் ஆராய வேண்டும்.
மதங்களும் மனிதர்களும்
மனித சமூகத்தின் தொடக்க கால கட்டத்தில் ஒரே இறைவனை மட்டுமே மக்கள் வணங்கி வழிபட்டு வந்தனர், பின்னர் தங்களுக்குள் கருத்து வேறுபட்டனர் என்பது குர்ஆன் கூறும் செய்தியாகும். (2:213)
நூஹ் நபி (நோவா தீர்க்கதரிசி) அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய காலத்தில் மக்கள் வணங்கி வந்த வத்து, சுவாஉ, யஃகூஃத், யஊக், நஸ்ரு ஆகிய ஐந்து சிலைகளும் முன்னர் வாழ்ந்த நல்லடியார்களின் நினைவுச்சின்னங்களாக எழுப்பப்பட்டவை! அவர்களின் பின்தோன்றல்களால் வணக்கத்துக்குரிய சிலைகளாக எடுத்துக் கொள்ளப்பட்டன! என்ற ஆதாரமும் ஏக இறைவழிபாட்டிலிருந்து பிறழ்ந்து மதங்கள் பரிணமித்ததின் அடிப்படை வரலாற்றை எடுத்தியம்புகிறது.ஒவ்வொரு இறைதூதர்களுக்குப் பின்னரும் அந்த இறைதூதர்களைப் பின்பற்றியவர்களின் பின்தோன்றல்களிலிருந்தே வழிகேடு உருவாகிறது என்ற அடிப்படைதான் பிற்காலத்திலும் இறைதூதர்களை அனுப்ப வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியது. இறைவனால் வழங்கப்பட்ட இறைநூல்களில் புரோகிதர்கள் நடத்திய கையூடல்களும் இதில் அடங்கும்.
முந்தைய வேதநூல்கள் ஏன் பாதுகாக்கப் படவில்லை? என்ற கிறிஸ்தவர்களின் கேள்விக்கும் இதில் பதில் உள்ளன. முந்தைய வேதநூல்களுக்கு பாதுகாக்கும் உத்தரவாத்ததை இறைவன் வழங்கவில்லை. இறுதித் தூதர் வாயிலாக அருளப்பட்ட திருக்குர்ஆன் முந்தைய வேதங்களைப் பாதுகாப்பதாகவும் முந்தைய வேதங்களின் செய்திகளை உண்மைப் படுத்துவதாகவும் இருக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஒரு நடைமுறைச் சான்று பைபிளும் அதில் உருவாக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ கோட்பாடுகளும்!

கிறிஸ்தவம் யாரால் உருவாக்கப்பட்டது?
கிறிஸ்தவம் என்பது கிறிஸ்து என்ற பெயருடன் தொடர்பு படுத்தப்பட்ட ஒரு மதம்! இயேசுவோ அதற்கு முந்தைய தீர்க்கதரிசிகளோ இப்படி ஒரு மதத்தைப் போதித்ததாக பைபிள் கூறவில்லை. மாறாக அவர்கள் இஸ்லாம் என்ற இறைவனின் மார்க்கத்தையே பிரச்சாரம் செய்தனர். இஸ்லாம் என்றால் சமாதானம்! இந்த சமாதானத்தின் உடன்படிக்கை குறித்தே தீர்க்கதரிசிகள் உபதேசித்ததாகவும் அந்த சமாதானத்தையே இயேசு போதித்ததாகவும் பைபிள் கூறுகிறது! (பார்க்க: எண் 25:12, ஏசாயா 26:12, 32:17, லூக்கா 1:79, யோவான் 14:27)
இயேசுவுக்கு முன்னர் கிறிஸ்தவம் என்ற மதம் இல்லை எனில் அது யாரால் உருவாக்கப்பட்டது?

இயேசுவின் கொள்கைக்கும் அவரைப் பின்பற்றியவர்களுக்கும் எதிரியாக இருந்து கொண்டு அவர்களைத் துன்புறுத்திய பவுல் என்பவர் பின்னாளில் தான் மனம் திரும்பியதாகவும் தனக்கு கடவுளிடமிருந்து செய்தி வந்ததாகவும் கூறி அதனடிப்படையில் ஒரு கொள்கையைப் பிரச்சாரம் செய்தவர். (அப்போஸ்தலர் 9: 1-9) கடவுளிடமிருந்து செய்தி வந்தது என்பதும் பவுல் தன்னைப் பற்றித் தரும் சுய அறிக்கை மட்டுமே! அவரது பிரச்சாரங்கள் நியாயப் பிரமாணங்களை மறுக்கும் விதமாகவும் இயேசுவின் நடைமுறைக்கு எதிராகவும் அமைந்துள்ளது! கடவுளுக்காகத் தான் பொய் சொல்வதாகவும், தூய ஆவியால் அவர் தூண்டப்படுகிறார் என்பதற்கு அவரது மனச்சான்று மட்டுமே போதும் என்றும் அவர் கூறியிருக்கிறார்! (உரோமையர் 3:7, 9:1) பவுல் உருவாக்கிய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு மதம் பிரச்சாரம் செய்யப்பட்டது! அது பின்னாளில் கிறிஸ்தவம் என்றும் அதைப் பின்பற்றியவர்கள் கிறிஸ்தவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர் என்பதே உண்மை!

இயேசுவின் பெயராகிய கிறிஸ்து என்ற வார்த்தையுடன் சேர்த்து பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மதமே கிறிஸ்தவம் என்பதை பைபிளின் புதிய ஏற்பாடும் ஒப்புக்கொள்கிறது!
அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள். (திருத்தூதர் பணிகள் 11 : 26)

ஆதியில் அறியப்படாத ஆதிபாவம்?!
இன்றைய கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கை ஆதி பாவ சித்தாந்தம் ஆகும். ஆதாம் செய்த பாவம் தலை முறை தலை முறையாக மனித சமுதாயத்தைப் பின் தொடர்கிறது என்றும் அந்த பாவத்தை நீக்கவே கடவுள் இயேசுவாகப் பிறந்து வந்து சிலுவை மரணத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் அதனை நீக்கினார், எனவே இயேசுவின் சிலுவை மரணத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இரட்சிப்பு பெறுவர் என்பது இன்றைய கிறிஸ்தவ நம்பிக்கை ஆகும்.மனிதனின் நிரந்தர மீட்புக்கு, நித்திய ஜீவனுக்கு வழிவகை செய்வது இயேசுவின் சிலுவை மரணம் என்றால் இது மறைக்கப்பட வேண்டிய ஒரு செய்தி அல்ல. மனித சமூகத்தின் இரட்சிப்புக்கான அடிப்படை மார்க்கம் இதுவென்றால் இதனை இறைவன் மறைத்திருக்க மாட்டான். அப்படியிருக்க இயேசுவின் சிலுவை மரணம் குறித்து பைபிளின் பழய ஏற்பாட்டில் ஒரு செய்தியும் இல்லையே? இறைவன் கூறுவதாக உள்ள உபதேசங்களிலாகட்டும் தீர்க்கதரிசிகளின் மொழிகளாகட்டும், மனித சமூகம் தவிர்ந்திருக்க வேண்டிய தீமைகளைப் பற்றியும் அவர்களின் நடை முறை வாழ்க்கையின் சட்டதிட்டங்களைப் பற்றியும் கூறும் எந்த இடத்திலும் மனித சமூகத்தின் ஈடேற்றத்திற்கான வழி என்று வாதிக்கப்படும் சிலுவை மரணம் குறித்த எந்த குறிப்பும் இல்லை மாறாக சிலுவை மரணத்திற்கு எது அடிப்படையாகக் கூறப்படுகிறதோ அந்த ஆதிபாவம் என்னும் சித்தாந்தத்துக்கு எதிரான செய்திகளே பைபிளில் பார்க்க முடிகிறது.

ஆதிபாவத்தை மறுக்கும் பைபிள்!
“பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலை செய்யப்படவேண்டாம், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்படவேண்டும்” (உபாகமம் : 24:16)
“பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும், குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்” (எசேக்கியேல் 18:20)
“பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள், அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான், எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்” (எரேமியா 31:29,30)
திராட்சைக் காய்களை பிதாக்கள் தின்றால் பிள்ளைகளின் பல் எப்படிக் கூசாதோ அது போன்றுதான் பிதாக்களின் பாவம் பிள்ளைகளைச் சேராது என்று அழகிய உதாரணத்துடன் பைபிளின் பழய ஏற்பாடு விளக்குகிறது.
புதிய ஏற்பாட்டை எடுத்துக் கொள்வோம். இப்படி ஒரு பாவ சித்தாந்தத்தைப் பற்றி இயேசு எங்காவது கூறியிருக்கிறாரா? இயேசுவின் உபதேசங்களாக பைபிளில் காணக்கிடைக்கும் வசனங்களில் ஆதி பாவத்தைக் குறித்து இயேசு ஒன்றும் கூறவில்லை. அப்படி ஒரு சித்தாந்தத்தையே அவர் அறிந்திருக்கவில்லை என்பதை அவரின் உபதேசங்களும் விளக்கிக் காட்டுகின்றன. உதாரணத்திற்கு அவரின் உபதேசங்களாக பைபிள் குறிப்பிடுவதைப் பாருங்கள்:
“அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள். இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி: நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்” (மத்தேயு 18: 1-4) இன்னும் (மார்கு 10: 13-16)
மனம் திரும்பி பிள்ளைகளைப் போல ஆகிவிடுங்கள் என்பது இயேசுவின் உபதேசம். மனம் திரும்புங்கள் என்றால் பாவங்களிலிருந்து மீண்டு மன்னிப்புக் கோருங்கள், அதன் மூலம் பிள்ளைகளைப் போன்று பாவமற்றவர்களாக ஆகி விடுங்கள் என்பதுதானே பொருள்? பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஆதாம் செய்த பாவத்தை சுமந்து கொண்டே பிறக்கின்றன என்ற கிறிஸ்தவ சித்தாந்தத்தை இயேசுவின் இந்த உபதேசம் மறுப்பதாக இருக்கிறதல்லவா? பின்னாளில் உருவான கிறிஸ்தவம் என்ற சித்தாந்தத்திற்கும் இயேசுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனபதை இது விளக்கிக் காட்டவில்லையா?
சிலுவை மரணம்?
இயேசுவின் சிலுவை மரணம் குறித்த நம்பிக்கை நூற்றாண்டுகளாக இருந்து வந்தது எனவும் முஹம்மத் (ஸல்) வந்த பின்னரே அது மறுத்துக் கூறப்பட்டது என்பதாகவும் கிறிஸ்தவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். இதில் உண்மையிருக்கிறதா? என்பதையும் ஆராயக் கடமைப்பட்டுள்ளோம்.
இயேசுவின் வரலாற்றைப் பொறுத்தவரை அது அவர் வாழ்ந்திருக்கும் காலகட்டத்தில் எழுதப்பட்டது அல்ல. அவர் மரணித்து அறுபது அல்லது எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர் கேள்விப்பட்ட செய்திகளின் அடிப்படையில் சுவிசேஷத்தின் எழுத்தர்களால் எழுதப்பட்ட கோர்வை ஆகும்.
சிலுவையில் அறையப்பட்டவர் இயேசுவின் தோற்றத்திற்கு ஒப்பாக்கப்பட்டார் என்று குர்ஆன் கூறுகின்றது! சுவிசேஷத்தின் எழுத்தாளர்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது உடன் இருக்கவில்லை. சிலுவையில் அறையப்பட்டவரை இயேசுவாக்கி இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்று எழுதியிருக்கலாம் அல்லவா? ஆம்! அப்படி இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களே பைபிளில் காணப்படுகிறது!

இயேசுவுக்குப் பின்னர் சுவிசேஷ எழுத்தாளர்களால் எழுதப்பட்ட வரலாற்றில் சிலுவை மரணம் குறித்த பரஸ்பரம் முரண்பட்ட செய்திகளும், இயேசு தேவ தூதர்களால் முன்றாம் வானத்துக்கு உயர்த்தப்பட்டார், அவரைக் காட்டிக் கொடுக்க முற்பட்ட யூதாஸ் அவரின் தோற்றத்துக்கு ஒப்பாக்ககப்பட்டு அவனே பிடிக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டான் என்ற இயேசுவின் நேரடிச் சீடராக விளங்கிய பர்னபாஸ் என்பவரின் ஏடு தரும் செய்திகளும் இயேசு சிலுவையில் அறையப்படவே இல்லை, அவருக்கு ஒருவன் ஒப்பாக்கப்பட்டான், அவரை அல்லாஹ் தன்பக்கம் உயர்த்திக்கொண்டான் என்ற குர்ஆனின் செய்தியை உண்மைப் படுத்துகிறது!

அடுத்து, இயேசு சிலுவையில் அறையப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதை பைபிளின் துணை கொண்டே ஒவ்வொன்றாக ஆராய்வோம்.
1. சிலுவை மரணத்திலிருந்து இயேசு அபயம் தேடினார்!
“அந்நாள்முதல் அவரைக் கொலை செய்யும்படிக்கு ஆலோசனைபண்ணினார்கள். ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம்விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார்” (யோவான்: 11:53,54)

சிலுவை மரணம் பாவமீட்சிக்கான ஒரே வழி என்றிருப்பின், இயேசு அதனை மனமுவந்து ஏற்றுக்கொண்டிருப்பார். மரணத்திலிருந்து தப்பிப்பதற்காக இன்னொரு இடத்தில் தஞ்சம் புகுந்திருக்கமாட்டார். இயேசுவின் இந்த செயல்பாடாக பைபிள் குறிப்பிட்டுக் காட்டும் செய்தி மனிதர்களின் பாவமீட்சிக்காக அவர் சிலுவையில் மரித்தார் என்ற சித்தாந்தத்திற்கு முரணாக உள்ளதல்லவா?
2. மரணத்தை விட்டும் தற்காத்துக் கொள்வதற்காக ஆயுதங்களை வைத்துக் கொள்ள இயேசுவின் கட்டளை
“அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன், பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்” (லூக்கா: 22:36)
“அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்” (லூக்கா: 22:36)
சிலுவை மரணம் பாவமீட்சிக்கான ஒரே வழி என்றிருப்பின் தன்னை கொலை செய்யத் தேடியவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக வாளை எடுத்து வாருங்கள் என்று இயேசு கூற வேண்டிய அவசியம் இல்லையே? சிலுவை மரணம் பாவமீட்சிக்கான வழியல்ல, அதனை அவர் விரும்பியிருக்கவும் இல்லை என்பதைத்தானே இதுவும் வெளிப்படுத்துகிறது?
3. இயேசுவின் மனமுருகிய வேண்டுதல்!
“சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்” (மத்தேயு 26:38)
“அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார் அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44)
மிகுந்த கவலைப் பட்டு இயேசு இறைவனிடம் வேண்டியதும் அவர் சிலுவை மரணத்தை விரும்பவில்லை என்பதையல்லவா காட்டுகிறது?! அதுவும் முகம் குப்புற விழுந்து என்றால் இஸ்லாமிய வழக்குப்படி சிரம் பணிந்து ஸஜ்தா செய்து இறைவனிடம் வேண்டினார்! சிலுவை மரணம் தான் இரட்சிப்புக்கான வழி என்றால் அத்தகைய மரணம் என்னும் பாத்திரத்தை தன்னை விட்டும் நீக்குமாறு பிரார்த்திக்கவேண்டிய அவசியம் இல்லையே?
4. சிலுவை மரணம் சாபத்திற்குரியது!
“மரத்தில் தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன்” (உபாகமம் 21:23) என்று பைபிள் கூறுகிறது. கடவுளின் மிகுந்த நேசத்துக்குரியவராகிய இயேசு சிலுவையில் தூக்கிக் கொல்லப்பட்டார் என்பது பைபிளின் இந்த கோட்பாட்டுக்கே முரணானதல்லவா?
5. இயேசுவின் வேண்டுதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது!
சிலுவை மரணம் என்ற பாத்திரத்தை தன்னை விட்டும் அகற்ற வேண்டும் என்ற இயேசுவின் வேண்டுதலை பைபிள் வசனங்களுடன் விளக்கினோம். இந்த வேண்டுதல் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது தான் பைபிளிலிருந்து நாம் பெற்றுக் கொள்ளும் செய்தியாகும்.
கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும், தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள், தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும் ஏனென்றால்,கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான், தேடுகிறவன் கண்டடைகிறான், தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? (மத்தேயு 7:7-10)
தெளிவாக விளங்குகிறதல்லவா? கேட்பவனுக்கு நிச்சயம் கிடைக்கும். அப்பத்தைக் கேட்கும் மகனுக்கு கல்லையும் மீனைக் கேட்கும் மகனுக்கு பாம்பையும் எவரும் கொடுக்காதது போல தன்னை சிலுவை மரணத்திலிருந்து விடுவிக்கும் படி மனமுருகி வேண்டிய தன் நேசத்துக்குரியவரின் வேண்டுதலை கடவுள் ஏற்றுக் கொள்ளாமலிருந்திருப்பாரா? நிச்சயம் இருந்திருக்கமாட்டார்!
நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. (யாக்கோபு 5:16) என்ற வசனத்தின் அடிப்படையிலும் நீதிமான் ஆகிய இயேசுவின் வேண்டுதல் ஏற்கப்பட்டிருக்க வேண்டும்.
நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவது எதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள் (யோவான் 11: 21,22) என்ற மார்த்தாளின் கூற்றும் இயேசுவின் பிரார்த்தனை ஏற்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையே விளக்குகிறது. இன்னும் தெளிவாக அவரின் வேண்டுதல் ஏற்கப்பட்டது என பினவசனம் கூறுவதைப் பாருங்கள்
அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பரிசுத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, (எபிரேயர் 5:7)
சிலுவை மரணத்திலிருந்து தன்னை காக்கும்படி இயேசு வேண்டிக் கொண்டார் என்றும் அவரது வேண்டுதல் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும் பைபிள் கூறும் போது அதே பைபிளில் அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்ற செய்தி யும் இடம்பெறுகிறது! காரணம் வரலாற்றை எழுதிய பிற்கால எழுத்தர்கள் அவரது சரிதையுடன் சிலுவையில் அவர் மரித்தார் என்று அவர்களுக்கு மத்தியில் நிலவியிருந்த ஒரு குழப்பமான கருத்தையும் சேர்த்து எழுதினர் என்றே விளங்க முடிகிறது. சிலுவை மரணம் பற்றிக் கூறுகையில் சுவிசேஷ எழுத்தாளர்கள் தரும் முரண்பட்ட செய்திகள் இதில் குழப்பம் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது!
6. சிலுவை மரணம் குறித்த செய்தியில் முரண்பாடுகள்!
சிலுவை மரணம் சம்மந்தமாக பல்வேறு எழுத்தர்களின் முரண்பட்ட கூற்றுக்களும் இதைப் பற்றி அவர்கள் யூகத்திலும் சந்தேகத்திலும் உள்ளனர் என்ற குர்ஆனின் கூற்றையே வலுப்படுத்துகிறது.

சிலுவையில் அறைவதற்காக இயேசுவை யூதாஸ் முத்தம் செய்து காட்டிக் கொடுத்தான் என்று மத்தேயுவும் லுக்காவும் (மத் 26: 47-50, லூக் 22) கூறும்போது யோவான் அதற்கு மாற்றமாக இயேசு தன்னைத் தானே காட்டிக் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறார் (18:3-8)

இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்தில் கொண்டு சென்றார்கள் என்று மத்தேயு (26:57) குறிப்பிடும்போது அதந்கு மாறாக யோவான் (18:13) காய்பாவின் மாமனாகிய அன்னா என்பவரிடத்தில் கொண்டு சென்றதாகக் குறிப்பிடுகிறார்.

குறிப்பாக இயேசுவைக் காட்டிக் கொடுத்ததாகக் கூறப்படும் செய்திகளிலும் (மத் 26: 47-50, லூக் 22 – யோவான் (18:3-8) அவரைக் கொண்டு சென்றது யாரிடத்தில் என்பதிலும் (மத்தேயு 26:57, யோவான் 18:13) சிலுவையைச் சுமந்தது யார்? என்பதிலும் (யோவான் 19:17 – மத்தேயு 27:32) இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்ட கள்வர்களைப் பற்றிய செய்தியிலும் (லூக்கா 23:42 – மத்தேயு 27:44) தெளிவான முரண்பாடுகள் காணப்படுகின்றன!

இயேசுவின் இறுதிக் கால நிகழ்வுகளைக் குறித்து இயேசுவுக்குப் பின்னர் பல ஆண்டுகள் கழித்து சுவிசேஷகர்கள் எழுதி வைத்ததில் பல முரண்பாடுகள் காணும் நிலையில் இயேசுவின் நேரடிச் சீடராக இருந்த பர்னபாஸ் என்பவரின் சுவிசேஷம் கூறும் செய்திகள் அவர் வானத்துக்கு உயர்த்தப்ட்டார் என்றும் அவருக்கு வேறொருவன் ஒப்பாக்கப்பட்டான் என்றும் குறிப்பிடும் குர்ஆனின் செய்தியை முற்றிலும் உண்மைப்படுத்துகிறது!
பர்னபாஸின் சுவிசேஷம் (ஆங்கிலத்தின் தமிழாக்கம்)

இயேசு நின்ற இடத்திற்கு அருகே யூதாசும் படையாளிகளும் வந்தடைந்தபோது இயேசு ஜனங்களின் ஆரவாரத்தைக் கேட்டு வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றார். பதினொரு அப்போஸ்தலர்களும் அப்போது நித்திரையிலிருந்தனர். அப்பொழுது கர்த்தர் தன் ஊழியக்காரனுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை அறிந்து, தன்னுடைய மந்திரிகளாகிய கப்ரியேல், மீக்காயேல், ராஃபேல், உரியேல் என்போருக்கு இயேசுவை பூலோகத்திலிருந்து புறமே எடுத்துவிடும் படிக்கு கட்டளையிட்டார். தெற்குப் பக்கமாக திறந்திருக்கும் சாளரம் வழியாக இயேசுவை தேவ ஊழியர்கள் வெளியே எடுத்தார்கள். அவரையும் கொண்டு அவர்கள் கர்த்தரின் அருள் என்றைக்கும் நிலைத்து நிற்கக்கூடிய தேவ ஊழியக்காரர்கள் தங்கியிருக்கக்கூடிய மூன்றாவது வானத்துக்குக் கொண்டு சென்றார்கள்.

இயேசு எடுக்கப்பட்ட உடனே யூதாஸ் மற்றவர்கள் முன்னிலையில் அறைக்குள் சாடிச் சென்றான். அப்போது எல்லா அப்போஸ்தலர்களும் நித்திரை கொண்டிருந்தனர். அப்பொழுது அற்புதங்களை உடைய கர்த்தர் அற்புதத்தை நிகழ்த்தினார்! யூதாசின் உரையாடலும் அவனது முகமும் இயேசுவினுடையது போல ஆயிற்று! நாங்கள் அனைவரும் அவன் இயேசுவென்று நினைக்கும் நிலைக்கு ஆகிவிட்டது! எங்களை எழுப்பி அவன் குரு எங்கே என்று தேடினான். அப்பொழுது நாங்கள் வியப்புடன் அவனுக்கு பதில் கூறினோம் ”ஆண்டவரே! தாங்கள் தானே எங்களுக்கு குருவானவர், இப்போது எங்களை மறந்து விட்டீர்களா?” அவன் புன்னகைத்துக் கொண்டு கூறினான்: நான்தான் யூதாஸ் இஸ்காரியாத், இதனைப் புரியாத நீங்கள் இப்போது அறிவீனர்களே!”
இப்படிக் கூறிக்கொண்டிருக்கையில் படையாட்கள் உள்ளே நுழைந்தனர். முற்றிலும் இயேசுவைப் போல மாறிவிட்டிருந்த யூதாசைப் பிடித்துக் கொண்டார்கள். எங்களைச் சுற்றியிருந்த படையாட்களுக்கு இடையில் நாங்கள் ஓடுகையில் யூதாஸ் கூறிக்கொண்டிருந்ததை நாங்கள் கேட்டோம். நார்ப்பட்டுத் துணியால் தன்னைப்ப் போர்த்தியிருந்த யோவான் எழுந்து ஓடியபோது ஒரு படையாள் நார்ப்பட்டுத் துணியைப் பிடித்தபோது, அவர் அதை விட்டு விட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்! இயேசுவின் வேண்டுதலுக்கு கர்த்தர் செவிகொடுத்து, பதினொன்று பேரும் காப்பாற்றப்பட்டார்கள்.
படையாட்கள் யூதாசைப் பலவந்தமாகப் பிடித்து வைத்திருந்தனர். அவனோ தான் இயேசு அல்ல என்று மறுத்துக் கொண்டிருந்தான். படையாட்கள் அவனைப் பரிகசித்துக் கொண்டு சொன்னார்கள், ஐயா, தாங்கள் பயப்படவேண்டாம், தங்களை இஸ்ரவேலரின் மன்னராக ஆக்குவதற்கு நாங்கள் வந்திருக்கிறோம். அரசாட்சியை தாங்கள் மறுப்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் தான் உங்களைப் பிடித்து வைத்துள்ளோம்!”
(The Gospel of Barnabas: Translated by Lonsdale and Laura Ragg, Chapter 215,217)
சிலுவை மரணம்? குழப்பத்தை நீக்கிய குர்ஆன்!
தன்னுடைய அடியாருக்கு இழிவான சிலுவை மரணம் நிகழக் கூடாது என்பது இறைவனின் நாட்டமாக இருந்தது! எனவே அவரை உயர்த்த நாடினான்! அவருக்கு இன்னொருவன் ஒப்பாக்கப்பட்டான். இந்த உண்மைச் செய்தி இயேசுவின் சீடர்களுக்கு அறிந்திருந்தாலும் பொது மக்கள் இதனை அறியாமல் இருந்தனர். பின்னர் வந்த சுவிசேஷத்தின் எழுத்தர்கள் அவர் சிலுவையில் மரித்துவிட்டதாக எழுதி வைத்தனர். இறைவனைப் பொறுத்த வரை வஹீ என்னும் இறை செய்தி மூலமே இந்த உண்மையை உலகுக்கு எடுத்துக் கூறுவது என்பது அவனது நியதி! அதற்காக ஓர் இறைதூதர் வரவேண்டும். இதோ மக்காவில் அகில உலக மக்களுக்கு இறுதி இறைதூதராக அகிலத்திற்கோர் அருட்கொடையாக வந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலம் இச்செய்தியைச் சொல்லிவிட்டான்.
14 நூற்றாண்டுகளுக்கும் மேலாக அதில் ஒரு எழுத்துக் கூட மாற்றப்படாமல் இன்றும் உலக மக்களை நோக்கி அறைகூவல் விடுக்கும் குர்ஆனின் செய்தி இதோ!
மேலும், ‘நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுடைய தூதரான மர்யமின் மகன் ‘ஈஸா மஸீஹை‘ கொன்று விட்டோம்‘ என்று அவர்கள் கூறியதாலும் (சபிக்கப்பட்டனர்.) மேலும், அவரை அவர்கள் கொல்லவுமில்லை; அவரைச் சிலுவையில் அறையவுமில்லை; ஆயினும், அவர்களுக்கு, அவர் (போன்று ஒருவர்) ஒப்பாக்கப்பட்டார். நிச்சயமாக இதில் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தை பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு அதுபற்றிய (உண்மையான) எந்த அறிவும் இல்லை. அவரை அவர்கள் உறுதியாகக் கொல்லவேயில்லை. எனினும், அல்லாஹ் அவரைத் தன்பால் உயர்த்திக் கொண்டான். மேலும், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோனும், ஞானமுள்ள வனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4: 157, 158)
சுருங்கச் சொன்னால் இயேசுவின் சிலுவை மரணம் என்பது கிறிஸ்தவர்களின் உறுதியான நம்பிக்கையாக இருக்கவில்லை. அவர்களுக்குள் நூற்றாண்டுகளாக நீடித்திருந்த ஒரு குழப்பத்தை குர்ஆன் நீக்கி தெளிவுபடுத்தியது என்பதே உண்மை! தன்னுடைய இறுதித் தூதர் வாயிலாக அருளப்பட்ட இறுதி வேதம் குர்ஆனில் அதைத் தெளிவு படுத்திவிட்டான்! அளவற்ற அருளாளன் ஆகிய அல்லாஹ்வின் மிகப்பெரிய கருணை இது! உறுதியான சான்றுகள் வந்த பின்னரும் குழப்பத்தைத் தேடிச் செல்வது தம்மைத் தாமே ஏமாற்றத்தில் ஆழ்த்திக் கொள்வதைத் தவிர வேறில்லை! அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!