திங்கள், 17 அக்டோபர், 2011

மனிதனுக்கேற்ற மார்க்கம்

மனிதனுக்கேற்ற மார்க்கம்

الإسلام دين الإنسانية

மௌலவியா எம். வை. மஸிய்யா B.A (Hans)

இன்று உலகில் 180 கோடிக்கும் அதிகமான மக்களால் இஸ்லாம் மார்க்கம் பின்பற்றப்படுகின்றது. இஸ்லாம் மார்க்கம் எந்த வகையில் ஏனைய மதங்களிலிருந்து வேறுபட்டிருக்கின்றது? இஸ்லாம் என்றால் என்ன? அதன் அடிப்படைக் கொள்கை என்ன? என்பனவற்றையெல்லாம் அறிந்துகொள்ள நாம் கடமைப் பட்டுள்ளோம்.

இஸ்லாம் இரு அடிப்படைகளை உலகத்திற்குச் சொல்கிறது.

1. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.

2. முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய திருத் தூதராவார்கள்.

ஒருவன், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்பிக்கை கொள்ளும்போது, அவனிடம் மொழியால், இனத்தால், நிறத்தால், தேசத்தால் இருந்த பிளவுகள், கோத்திரத்தின், குலத்தின் அடிப்படையில் அவன் ஏற்படுத்திக்கொண்ட பிளவுகள் எல்லாமே இந்த ஓரிறைக் கொள்கையால் அடிபட்டுப் போகின்றன.

இவ்விரு கொள்கைகள்தான் இஸ்லாத்தின் அடிப்படைகளாகும். ஒருவன் இவற்றை நம்புகின்ற காரணத்தினால் ஏனைய மார்க்கங்களில் இருந்து தனித்தவனாக, வித்தியாசமான ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டவனாக மாறுகின்றான். அந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவனுடைய வாழ்க்கையிலே ஏராளமான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இது போக, இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இன்று உலகத்தில் உள்ள எல்லா மதங்களையும், மார்க்கங்களையும் எடுத்துப் பார்த்தால் ஏதோ ஒரு வகையில் அங்கு பல தெய்வ வணக்கம் குடி கொண்டிருப்பதைப் பார்க்கலாம். பல தெய்வ வணக்கம் என்பது பல தெய்வங்களை வணங்குவது மட்டுமல்ல, உயிரோடுள்ளவர்களை வணங்குவது, இறந்தவர்களை வணங்குவது, பொருட்களை வணங்குவது போன்ற அனைத்துமாகும். இப்படி எல்லாம் நடப்பதை இன்றைய அறிவியல் உலகிற் பார்க்கிறோம்.

புதன், 12 அக்டோபர், 2011

திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம் - 2

திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம் - 2

Seithi Raja
பூமியின் வடிவம்

ஆரம்ப காலத்தில் பூமி தட்டையானது என்று தான் மனிதர்கள் நம்பிருந்தார்கள். 1607-ல் சர் பிரான்ஸிஸ் டிராக் என்பவர்தான் பூமி கோள வடிவமானது எனக் கண்டுபிடித்தார். இதனை ஜியாய்டு (Geoid) என்ற பதம் கொண்டு குறிப்பர். திருக்குர்ஆன் இதனை அத்தியாயம் 31 வசனம் 29-ல் விளக்குகிறது,

"நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புக செய்கின்றான்". இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் புகச் (நுழையச்) செய்தல் என்பதன் பொருள் சீராக மெதுவாக இரவைப் பகலில் நுழையச் செய்வதென்றால் பூமி தட்டையாக இருக்க வாய்ப்பில்லை என்பதையே விளக்குகிறது. (கோளமாக இருந்தால் தான் மேற்கண்ட செயல் நடை பெற வாய்ப்பிருக்கிறது.)

திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்-1

திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்-1

Seithi Raja

முஸ்லிம்களாகிய நாங்கள் குர்ஆனை இறைவனின் வார்த்தை எனவும் பரிசுத்தமான, எவராலும் எப்பொழுதும் மாற்ற இயலாத ஒரு வேதமென்றும் நம்புகின்றோம். மேலும் மலக்குகளின் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலம் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இந்த குர்ஆன் 23 ஆண்டுகள், சிறிது சிறிதாக இறக்கியருளப்பட்டு, அவர்களுடைய தூதுத்துவ காலத்திலேயே முழுமைப் படுத்தப்பட்டது என்றும் நம்புகிறோம்....மேலும் இந்தக் குர்ஆன் ஏழாம் நூற்றாண்டில் முழுமைப்படுத்தப்பட்டு, இன்று வரை மாற்றப்படாமல் இருக்கின்றது என்பது சரித்திரப் பூர்வமான உண்மையாகும். வரலாற்று ஆய்வாளர்களில் இஸ்லாத்தின் நண்பர்களாகட்டும் அல்லது இஸ்லாத்தின் எதிரிகளாகட்டும் அவர்கள் முயற்சி செய்து இது உண்மையானது தானா என்பதை ஆராயட்டும்...!

திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம் என்பதற்காண ஆதாரங்களை திருக்குர்ஆனிலிருந்தே தங்களுக்கு அறியத்தருகின்றேன். 

என்னை கவர்ந்த இஸ்லாம்

என்னை கவர்ந்த இஸ்லாம்

முஹம்மத் அஸத்

போலந்து நாட்டில் யூதராகப் பிறந்து லியோபால்ட் வைஸ் எனப் பெயர் சூட்டப்பட்டவர். 1926-ஆம் ஆண்டு தம்மை லியோபால்ட் முஹம்மத் அஸத் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அரபியிலுள்ள ஸஹீஹ் புகாரியை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார். அதற்கு விளக்கவுரையும் எழுதினார்.

லியோபால்டுக்கும் மதக்கல்வி கண்டிப்பான முறையில் கற்றுக் கொடுக்கப்பட்டது. ஹீப்ரு மொழி பயின்றார். அம்மொழியிலுள்ள மார்க்க நூல்களையெல்லாம் மனனம் செய்தார். 13ஆவது வயதில் அவருக்கிருந்த யூத சமய அறிவு அவர் வயதையொத்த வேறு யாருக்கும் கிடையாது என்று நிச்சயமாகச் சொல்லலாம்.வைதீக யூதக் குடும்பத்தில் உதித்த ஓர் இளைஞர் அம்மதக் கோட்பாடுகளை நல்லபடி கற்றுணர்ந்த ஓர் அறிவாளி ஐரோப்பிய நாகரிகத்தில் ஊறிப் போயிருந்த ஒரு மேலை நாட்டவர் முஸ்லிமானதுடன் மட்டுமின்றி இஸ்லாத்தின் சட்ட நுட்பங்களை எடுத்து விளக்கும் மேதை என்று புகழப்படும் அளவுக்கு மாறியது எப்படி? இதைத் தெரிந்துகொள்வது அதுவும் அவர் வாயிலாகவே தெரிந்து கொள்வது நல்லதல்லவா?

நான் சொல்லவில்லை...

நான் சொல்லவில்லை...
Seithi Raja
மானிட சமத்துவம் என்ற புத்தகத்தில் T.P. கணபதி அவர்கள் எழுதியதிலிருந்து...

அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஹரிஜனங்களுக்கு சம உரிமை

அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஹரிஜனங்களுக்கு சமஉரிமை என்பது வெறும் ஏட்டளவில் தான்! அப்படிச் சமஉரிமை நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தால் மகாத்மா காந்திக்கு இணையான இந்த நாட்டில் அரசியல் சாசனம் இயற்றிய டாக்டர் அம்பேத்கார் அவர்கள் ஹிந்து மதத்தைவிட்டு விலகி புத்த மதத்திற்கு மதம் மாறவேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது.

திரு.ஜெகஜீவன்ராம் அவர்களும் மகாத்மா காந்திக்கு இணையான ஒரு பெரிய தலைவர். இவரும் ஒரு ஹரிஜன். முன்னாள் உ.பி. முதல்வராக இருந்த காலஞ்சென்ற சம்பூர்ணாந்தின் உருவச் சிலையை (மனிதனின் சிலையை) ஹரிஜன தலைவர் ஜெகஜீவன்ராம் திறந்து வைத்தார். அதனால் தீட்டு ஏற்பட்டுவிட்டதாம்! காசியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து அந்தச் சிலை கழுவி சுத்தி செய்யப்பட்டது.

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

இஸ்லாம் என்றால் என்ன? பாகம் - 2

இஸ்லாம் என்றால் என்ன? பாகம் - 2

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் யார்?


நம்பிக்கையின் இரண்டாவது பிரிவு:

மேலே சொன்ன அக் கொள்கையை இறைத் தூதர்கள் என்ற பெயரில் மனிதர்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் இப்புவியில் பரப்பினார்கள். இறைவன் (கடவுள்) பெயரால் நடக்கும் சுரண்டல்கள், மதத்தின் பெயரால் நடக்கும் மோசடிகள், பூரோகிதங்கள் போன்றவற்றையெல்லாம் எதிர்த்து ஒவ்வொரு கால கட்டத்திலும் இறைத்தூதுவர்கள் போராடி இருக்கிறார்கள். அவர்களில் இறுதியாக வந்தவர்களே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள். அவர்கள் தாம் இக் கொள்கையை முதலில் முன் வைத்தவர்கள் என்று முஸ்லிம்கள் நம்ப மாட்டார்கள். நம்பவும் கூடாது.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலம் சுமார் 1400 வருடங்களுக்கு முந்தையதாகும். அதற்கு முன்னர் இக்கொள்கையை முன்மொழிந்த பல ஆயிரம் தீர்க்க தரிசிகள் இவ்வுலகில் பிறந்து மறைந்துவிட்டனர். ஓரிறைக் கொள்கையை முன் மொழிந்த காரணத்திற்காக அவர்களெல்லாம் ஒதுக்கப்பட்டார்கள்; உதைக்கப்பட்டார்கள்; நாடு கடத்தப்பட்டார்கள்; பலர் கொலையும் செய்யப்பட்டார்கள். இவற்றை யெல்லாம் ஏற்றுக்கொண்டு மனித இனத்தை ஒரே கொள்கையின்பால், ஒரே நம்பிக்கையின்பால் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்பதற்காக அத்தூதுவர்கள் போராடினார்கள்.


இதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி போராடிய அவர்களையே ஒரு குழு கடவுளாக ஆக்கி அவர்களது பெயரால் சிலைகளை உருவாக்கி வணங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதுதான் ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைத் தூதுவர்களாக வந்தவர்களை இறைவனாக(கடவுளாக)வே அம்மக்கள் மாற்றியமைத்து விட்டனர்.


இயேசு, ஆப்ரஹாம், மோஸே, இஸ்மவேல், நோவா போன்ற இறைத் தூதுவர்களின் வரிசையில் இறுதியாக வந்தவர்களே முஹம்மத் (ஸல்)அவர்கள். முஹம்மத் (ஸல்) அவர்கள் மட்டுமே இறைத்தூதர் என முஸ்லிம்கள் நம்புவதில்லை. மாறாக இறுதித்தூதர் என நம்புகின்றனர். ஏனைய தூதர்களைப் போன்று இவர்களும் ஓரிறைக் கொள்கையையே முன்வைத்தார்கள். அத்துடன் தமக்கு முன் வாழ்ந்த தூதர்கள் மரணித்த பிறகு அவர்களின் கொள்கை மக்களால் சிதைக்கப்பட்டது போன்று தனது கொள்கையும் சிதைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக எல்லா முனேற்பாடுகளையும் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அதனால்தால் பதினான்கு நூற்றாண்டுகள் கடந்து விட்ட இவ்வேளையிலும் இஸ்லாம் மாசு படாமல் இருக்கிறது.


நான் இறைவனின் தூதன் ஓரிறைக் கொள்கையைச் சொல்ல வந்திருக்கிறேன். நான் இறைவன் (கடவுள்) அல்ல என்னிடத்தில் கடவுள் அம்சம் எதுவும் கிடையாது. நானும் உங்களைப்போன்ற மனிதனே! உங்களைப் போன்று உணவு அருந்துகிறேன்; பருகுகிறேன்; உறங்குகிறேன்; குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுகிறேன். அதோடு ஓரிறைக்கொள்கையை போதிக்கிறேன் என ஓங்கி முழங்கி, அவர்களது காலில் விழ வந்தவர்களை விழக்கூடாதெனத் தடுத்து, என் காலில் மட்டுமல்ல எவர் காலிலும் விழவே கூடாது எனவும் கட்டளையிட்டார்கள். குனிந்து கும்பிடு போடுவதை கொடுமை என்றார்கள். இறைவனுக்கு மட்டுமே உரித்தான எந்தக் கிரியைகளையும் மனிதர்களுக்குச் செய்யக்கூடாது என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரும்போது சபையில் எவருமே எழுந்து நின்று மரியாதை செய்யக்கூடாது என்று சட்டம் போட்டு அமுல்படுத்தினார்கள்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர்களது தோழர்கள் தங்களது உயிரினும் மேலாக நேசித்தார்கள். இருந்தும் தன்னை இறை (கடவுள்) அந்தஸ்திற்கு உயர்த்த அவர்கள் இடம் தரவில்லை. இறை அந்தஸ்த்திற்கு தன்னை உயர்த்த அவர்களது வாழ்நாளிலேயே மேற்கொள்ளப்பட்ட அத்தனை முயற்சிகளையும் முறியடித்தார்கள். தன்னை வரையக் கூடாது. உருவப்படன் எடுக்கக் கூடாது என்றெல்லாம் தடை விதித்திருந்தார்கள்.


இன்றைய காலத்தில் உருவப் படங்கள் எல்லாம் பக்திகுரியவைகளாக ஆகி விட்ட நிலையை நாம் காண்கிறோம். உதாரணமாக, பாட்டன் முதல் தர போக்கிரியாக இருப்பார். அவருடைய உருவப்படம் வீட்டிலே தொங்க விடப்பட்டு ஊதுபத்தி கொழுத்தி கும்பிடு போடப்படுவதை தினமும் பார்க்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவருக்குச் சிலை உண்டு. படம் உண்டு. நபிகளாருக்கு முன் வாழ்ந்த ஏசுவுக்கும் கூட சிலை உண்டு, சித்திரம் உண்டு. ஆனால் ஆயிரத்து நானூரு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அப்படி ஏதும் இல்லை.


மக்களை ஏமாற்ற வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எண்ணியிருந்தால் அறியாமைக்கால அம்மக்களை இலகுவாக ஏமாற்றியிருக்கலாம். அவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தும் 'ஏமாற்றாதீர்கள்; ஏமாறாதீர்கள்' என்பதுதான் அவர்களது போதனையாக இருந்தது. அவர்களது புதல்வர் இபுறாஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டதை கவனித்த அம் மக்கள் இந்த இறப்புக்காக வானம் கூட துக்கம் அனுஷ்டிக்கிறது' எனப் பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்ட நபிகளார் தாமும் பதிலுக்கு 'ஆமாம்' எனக் கூறி தலையாட்டி தன் பெருமையை, மதிப்பை உயர்த்திக் கொள்ளவில்லை. மாறாக இப்படி எப்போதுமே சொல்ல வேண்டாம்; இது இறைவன் ஏற்படுத்திய இயற்கையின் நிகழ்வு. எவருடைய பிறப்பிற்காகவோ அல்லது இறப்பிற்காகவோ இது போன்று நிகழ்வதில்லை என அம்மக்களுக்கு பகுத்தறிவுப் போதனை நடத்தினார்களே தவிர பிழைப்பு நடத்த முன்வரவில்லை.


மார்க்கத்தின் பெயரால் சுரண்டிச் சம்பாதிக்கும் நோக்கில் காணிக்கை கொண்டு வருமாறு மக்களைப் பணிக்கவில்லை. கடைசி வரை தம் கரம் கொண்டு உழைத்தே சாப்பிட்ட உத்தமராகத்தான் நபிகள் நாயகம் இருந்தார்கள். ஆட்டும் பண்ணை நடத்தி அதன் வருமானத்தில் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். மத ஸ்தாபகர், மதகுரு எனக் கூறிமக்களைச் சுரண்டவில்லை.


தனது நாற்பதாவது வயது வரைக்கும் அவர் தன்னை இறைத்தூதர் எனப் பிரகடனப்படுத்தவில்லை. அப்போது அவர் ஒரு செல்வந்தர். நல்ல குடும்பத்தில் பிறந்தவர். செல்வம், சொல்வாக்கு, செலிப்பு எல்லாம் ஒருங்கே பெற்றும் திகழ்ந்தார். தன்னை இறைத்தூதர் எனப் பிரகனப்படுத்திய காரணத்தால் இவையனைத்தும் பறிபோனது. உடுத்திய உடையோடு ஊரை விட்டு விரட்டப் பட்டார்கள். அகதி நிலைக்கு ஆளானார்கள் தன்னை வளப்படுத்திக் கொள்ள, வசதி வாய்ப்பை ஏற்படுத்திகொள்ள மனிதர்கள் மதத்தை, இயக்கத்தை நிறுவி இருக்கிறார்கள், நிறுவுகிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பொறுத்த வரை இருந்தவைகளை இழந்தார்களே தவிர மேலதிகமாக எதையும் சேர்த்துக்கொள்ளவில்லை.


முஸ்லிகளாகிய நாங்கள் நபி (ஸல்) அவர்களை கடவுள் என்றோ, இறைவனின் குமாரன் என்றோ ஒரு போதும் கூற மாட்டோம். எம்மை பெற்றெடுத்த எம் தாய், தந்தை எம் உயிர் உட்பட அனைத்தையும் விட மேலாக அவர்களை நாம் மதிப்போம். எந்த முஸ்லிமிடமாவது சென்று உன்னிடம் மதிப்பு வாய்ந்தது உன் தாயா? நபிகள் நாயகமா? எனக் கேட்டால் நபிகள் நாயகம் என சட்டென பதிலலிப்பான்.


ஆட்சித் தலைவராக, ஒரு மாபெரும் சாம்ரஜ்யத்தை உருவாக்கியவராக இருந்த நபிகள் நாயகம் மரணிக்கும்போது அவர்களது கவச ஆடை சில படிக் கோதுமைகளுக்காக அடகு வைக்கப்பட்ட நிலையில் இருந்த தென்றால் அவர்களது வாழ்வுஎவ்வளவு தூய்மையாக இருந்திருக்குமென எண்ணிப் பாருங்கள். வயிறு நிறைய தொடர்ந்து மூன்றுநாட்கள் உணவு உண்ட வரலாறே கிடையாது. சல்லடையில் சலிக்கப்பட்ட மாவில் உணவு செய்து உண்டதில்லை.கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டு ஒரே ஒரு ஆடையால் போர்த்திக் கொண்டிருப்பார்கள். கோதுமை கிடைக்காத நாட்களில் பேரித்தம் பழங்களை உண்டு வாழ்க்கை நடத்தி இருக்கிறோம் என அவர்களது மனைவி ஆயிஷா(ரலி) அவர்கள்அறிவிக்கும் செய்தியைப் பார்க்கிறோம். இப்படி பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து வரலாறு படைத்திருப்பதுதான் அவர்களது மிகப் பெரும் சாதனை.


இன்று எந்த ஒரு அரசியல் வாதியானாலும் ஆன்மீக வாதியானாலும் ஏமாற்றுவதையே தகுதியாக வைத்திருக்கிறான். இதன் பெயர் ராஜதந்திரம், அதனைச் செய்பவன் பெயர் ராஜதந்திரி. ஏமாற்றுபவனுக்கு பதவி, பட்டங்கள் கூடுகின்றன. அவ்வாறு இந்த உலகில் 'ஏமாறாதீர்கள் ஏமாற்றாதீர்கள்' என அடுத்த வருக்கும் போதித்து தானும் வாழ்ந்த ஒரு மாமனிதர் நபிகள் நாயகம் மட்டுமே.


அவர்களுக்கிருந்த புகழ், மரியாதை, மதிப்புக்கு எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்திருக்கலாம். அவர்களின் விரல் அசைவுக்கு கட்டுப்பட மக்கள் தயாராக இருந்த காலம் அது. பதினான்கு நூற்றாண்டு களாகியும் அவர்களது கொள்கையில் இன்னும் ஒரு கூட்டம் அசையா நம்பிக்கையுடன் இருந்து கொண்டு இருக்கிறது எனில் அதற்குக் காரணம் இறைக் கட்டளையுடனான அவர்களின் நற்பண்பு களாகும்.


முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வைத் தவிர எதையும் எவரையும் வணங்க மாட்டோம்.எவருக்கும் கும்பிடு போடமாட்டோம். எம்மைப் போன்று மல ஜலத்தைச் சுமந்திருக்கும் மனிதர்களுக்கு நாம் எப்படி கும்பிடு போடுவது? அவர் பெரிய அரசியல் தலைவராக இருக்கட்டும் அல்லது ஆன்மீகவாதியாக இருக்கட்டும். ஒரு மதத்தின் குருவாக இருக்கட்டும். ஆனால் மனிதர்கள் தானே! அவர்களது காலில் விழுந்து உஙகளை விட்டால் எங்களுக்கு வேறு கதி இல்லை எனக் கூறி பகுத்தறிவை அடகு வைக்கலாமா? என்ற உணர்வையூட்டி மக்களை மீட்டெடுத்த மகான் நபிகள் நாயகம் அவர்கள்.


வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது தூதர் இவ்விரண்டையும் நம்புவதற்குப் பெயர்தான் இஸ்லாம். மேலே சொன்ன இரு பகுதி விளக்கங்களும் இவற்றுள் பொதிந்துள்ளன. ஆகவே, ஒரே இறைவனை நம்ப வேண்டும் அந்தக் கொள்கையை மிகத் தெளிவாகச் சொல்லி விட்டுச் சென்ற இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மதிக்க வேண்டும்.அவர்கள் காட்டிய வழியில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.

இதனடிப்படையில் புனித குர்ஆனில் எவைகள் சொல்லப்பட்டிருகின்றனவோ அவைகளும், நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் கற்பித்தவைகளும்தான் இஸ்லாம்.

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

இந்து மதம் இஸ்லாம்

இந்து மதம் - இஸ்லாம்
ABDULLA
சிந்து நதிக்கரையோரம் (இந்துஸ் நதி) வாழ்ந்த மக்களின் பூகோள ரீதியான அடையாளப் பெயர் "ஹிந்து" என வழங்கப்பட்டது. சில வரலாற்று ஆசிரியர்கள் வடமேற்கு இமயத்தின் வழியாக இந்தியா வந்த பெர்ஸியர்களால் இப்பெயர் அழைக்கப்பட்டது எனக் கூறுகின்றனர். முஸ்லிம்கள் இந்தியாவை வெற்றிகொள்வதற்கு முன்பாக ஹிந்து என்னும் இவ்வார்த்தை இந்தியாவின் இலக்கியங்களிலோ அல்லது சரித்திர வரலாற்றுக் குறிப்புகளிலோ இல்லை. இச்செய்தியை மதம் மற்றும் வேதங்கள் பற்றிய என்ஸைக்ளோபீடியா (Encyclopedia) உறுதி செய்கிறது.

ஜவஹர்லால் நேரு தம் நூலகிய டிஸ்கவரி ஆஃப் இந்தியாவில் பக்கம் 74, 75ல் ஒரு மதம் சாராத ஒரு பிரதேசத்தில் வசித்த மக்களைக் குறிப்பிடும் வார்த்தை இது எனக் குறிப்பிடுகிறார். ஹிந்து என்பது ஒரு மதம் சார்ந்தது என்பது பின்னர் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது. சுருக்கமாக இந்தியாவில் சிந்து நதிக்கரையில் வாழ்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தைக் குறிப்பிடும் வார்த்தையே பூகோள ரீதியாக சரியானது.

ஹிந்துத்துவம் என்றால் என்ன?

ஹிந்துத்துவம் என்பது ''ஹிந்து" என்ற வார்த்தையிலிருந்து வந்தது. ஹிந்து என்ற பெயரை ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழியில் 19ம் நூற்றாண்டில் ஒரு மத நம்பிக்கை விசுவாசம் கொண்ட மக்களை அழைக்கப் பயன்படுத்தினர். புதிய என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிகாவில் 20:581ல் பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் (1830) முஸ்லிம்களல்லாத, கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்கள் நீங்கலாக, உள்ள பிற மக்களை ஹிந்து என அழைத்தனர்.

மதநம்பிக்கை எண்ணம் ஆகியவற்றின் கூட்டே ஹிந்துத்துவா என நாம் கருதுவது தவறு. ஏனெனில் ஒரே கலாச்சாரம் மதநம்பிக்கை கொண்ட மக்களின் கூட்டமைப்புக்கு எதிராக இந்த ஹிந்துத்துவம் உள்ளது. இதற்கு என எந்த ஆரம்பமோ, வரம்போ, தீர்க்கமான வரையரையோ என்று எதுவும் சொந்தமாக இல்லை. எனவே இதன் சடங்குகள் சம்பிரதாயங்களில் கூட பல்வேறுபட்ட மாறுபாடுகள் உள்ளன. இந்துத்துவத்தை நிலை நிறுத்த எந்த விதியுமில்லை, வரம்புமில்லை. எனவே இந்து என தன்னைக் கூறிக் கொள்ளும் ஒருவர் தம் மனதுக்கேற்றவாறு எதையும் வணக்க வழிபாடுகள் புரியலாம். அது பழக்கத்தில் உள்ளதாக விசுவாசத்துக்குட்பட்டதாக இருந்தால் போதும்.

ஹிந்து அறிஞர்களின் கூற்றுப்படி இந்து மதம் ஒரு சாதாரண தர்மங்களைக் கூறுவது, என்றென்றும் நிலைத்து நிற்கும் மதம் அல்லது வேத தர்மங்களைக் கூறுவது எனக் கூறுகின்றனர். ஸ்வாமி விவேகானந்தரின் கூற்றுப்படி இந்து மதத்தைப் பின்பற்றுவோர் ''வேதாந்திகள்" ஆவர்.

இஸ்லாம்-ஒர் அறிமுகம்

''ஸலாம்" எனும் அரபுச் சொல்லிலிருந்து வந்ததுதான் இஸ்லாம். ஸலாம் என்றால் சாந்தி அமைதி எனப் பொருள். படைத்த வல்ல இறையோனுக்கு கட்டுப்படுதல் என்று மற்றொரு பொருளும் உண்டு. முஸ்லிம் என்றால் யார்? யார் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுகின்றாரோ அவரே முஸ்லிம்.

இஸ்லாத்தைப் பற்றித் தவறாகப் புரிந்தோர்

இஸ்லாம் கடந்த 1400 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது. அதனை நிறுவியர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் என பெரும்பாலோர் புரிந்து வைத்துள்ளனர். உண்மையில் இஸ்லாம் மனித சமுதாயம் படைக்கப்பட்ட நாளிலிருந்து பூஉலகில் உள்ளது. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார். இஸ்லாத்தின் நிறுவனர் முஹமது நபி(ஸல்) அல்ல. மாறாக இறைவனின் இறுதி நபியும் முத்திரை நபியுமாவார்.

இந்துமத விசுவாசத்தின் தூண்கள்

இந்து மத விசுவாசத்தின் வரையறைகள் என ஒன்றுமில்லை. ஏற்கனவே குறிப்பிட்டது போல இந்துத்துவத்தின் ஆரம்பமோ, வரம்போ, தீர்க்கமான வரையறைகளோ என்று எதுவுமில்லை. ஒரு இந்துவாக இருந்தால் இன்னின்ன கட்டாய கடமைகளை, வணக்க வழிபாடுகளை இவ்வாறு புரிந்தால்தான் ஒரு இந்துவாக முடியும் என்ற ஒரு கட்டுக்கோப்பான பொதுவான நம்பிக்கை எதுவுமில்லை. ஒரு ஹிந்து தனக்கு திருப்தி அளிக்கும் செயலை சுதந்திரமாக செய்யலாம். அது அவருக்கு தடுக்கப்பட்டதாகவோ அனுமதிக்கப் பட்தாகவோ, கட்டாயம் செய்யவேண்டியது அவ்வாறு செய்யத் தவறினால் அவர் ஒரு இந்துவல்லாதவராகப் போய்விடுவார் என்ற கெடுபிடியோ எதுவும் இல்லை.

ஒருவரை இந்து அல்லாதவர் என்று கூற மத சடங்கு ஏதேனும் அவர் செய்யாமல் புறக்கனித்துவிட்டார், அதனால் இவர் இந்து அல்லாதவராக ஆகிவிட்டார் என கூற வியலாது. இருப்பினும் இந்துக்களிடம் பெரும்பாலும் சில பொதுவான நம்பிக்கைகள் உள்ளன. அதனை 100 சதவீதம் இந்துக்களும் ஏற்றுக் கொள்வதில்லை. அதனைப் பின்னர் விவரிப்போம்.

இந்துத்துவத்தில் கடவுள் கொள்கை

ஆரியர்களின் மதமே இந்துத்துவம். பொதுவாக ஒரு இந்துவிடம் உங்களின் கடவுள்கள் எத்தனை? (உங்கள் விசுவாச அடிப்படையில்) என்று வினவினால் சிலர் 3 என்பர், சிலர் 33 என்பர். சிலர் ஆயிரம் என்பர் இன்னும் சிலர் 33 கோடி என்பர். கற்றறிந்த இந்து ஆன்மீகத் தலைவரிடம் (வேதங்களை, புராணங்களை) இதுபற்றி வினவினால் கடவுள் ஒருவனே அவரே வணக்க வழிபாடுகளுக்குறியவன் எனப் பதிலளிப்பார்.

இஸ்லாத்துக்கும் இந்துமதத்துக்கம் உள்ள வேறுபாடுகள்

இஸ்லாம் ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குறியது. Every thing is God’s எனக் கூறுகிறது. இந்து மதமோ ஒவ்வொரு பொருளும் கடவுள் Every thing is God எனக் கூறுகிறது. ஆகவே இவ்விரண்டுக்கும் உள்ள முதல் வித்தியாசம் ’s ஆகும். இஸ்லாத்துக்கும் இந்துமதத்துக்குமுள்ள மிகப் பெரிய வேறுபாடு வணக்க வழிபாடுகளாகும். ஒரு சாதாரண இந்து மண், மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன், பாம்பு, பசுமாடு, எலி, புலி என ஒவ்வொரு பொருளையும் வணங்குபவனாக இருக்கிறான். அதற்கு கடவுள் அந்தஸ்தும் தருகிறான்.

ஆனால் முஸ்லிமோ மண் அல்லாஹ்வுக்குறியது, மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன், பாம்பு, பசுமாடு, எலி, புலி, மனிதன் என ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குரியது என்பதையும் ஒவ்வொரு பொருளும் கடவுள் எனக் கருதக்கூடிய (ஆங்கிலத்தில் ’s) ’s நீக்கிவிட்டால் விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் இஸ்லாத்துக்கும் இந்து மதத்துக்கும் எந்த வேறுபாடுமிருக்காது. அருள்மறை குர்ஆனின் கீழ்க்கண்ட வசனம் இதனையே வலியுறுத்துகிறது.

(நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள். (3:64)

ஓரிறைக் கொள்கையை உரக்க ஒலிக்கும் வேதங்கள்

பகவத் கீதை 7:20

மிகப் பிரசித்திபெற்ற இந்து மதப் புனிதநூல் பகவத்கீதை அதன் 7வது அத்தியாயத்தின் 20 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: ''எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்".

சிலை வணக்கம் உருவ வழிபாட்டின் முதுகெலும்பை முறிக்கிறது.

உபநிஷங்கள்:

உபநிஷங்களும் இந்துக்களின் புனித வாக்குகளே. அவை கூறுவதைப்பாருங்கள்

1. சந்தோக்ய உபநிஷம்

சந்தோக்ய உபநிஷத்தில், பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று (Verse No.1) இவ்வாறு கூறுகிறது.

''ஏகம் எவதித்யம்"

''இரண்டல்லாத அவன் ஒருவனே - ஒருவன் மட்டுமே"

உபநிஷங்களின் தொகுப்பு - எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தின் முதல் பாகம், பக்கம் 447, 448.

உபநிஷம் கூறும் வாக்கு சரி என்பதை அருள்மறையின் கீழ் கண்ட வசனம் உறுதி செய்கிறது


குர்ஆன் கூறுகிறது

(நபியே?!) நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்ஆன் 112:1)

2. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)

''நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா" அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை.

''நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே"

அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான எவரும் இல்லை. (எஸ். ராதாகிருஷ்ணனின் உபநிஷங்களில் பாம்-15ல் பக்கம் 745)

குர்ஆன் கூறுகிறது:

அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)

3. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)

நதஸ்ய பரதிமா அஸ்தி

அவனுக்கு ஒப்பாக யாருமில்லை.

னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத்

நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ்

அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது.

குர்ஆன் கூறுகிறது:

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்ஆன் 112:4)

.அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (குர்ஆன் 42:11)

4. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)

ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம்

அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை.

ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி

அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர்.

குர்ஆன் கூறுகிறது

பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)

 நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்..(குர்ஆன் 2:28.)

 அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்..(குர்ஆன் 2:29)

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

குர்ஆனை அழிக்க முடியுமா?

குர்ஆனை அழிக்க முடியுமா?


 Dr. Ahmad Baqavi PhD.


குர்ஆனை அழிக்க முடியுமர்?


இஸ்லாம் தோன்றியது முதல் இன்று வரை அதன் தூய கொள்கை களையும் வேத நெறிகளையும் தகர்க்க பல் வேறு சூழ்ச்சிகள் பல்வேறு கால கட்டங்களில் நடந்து வந்துள்ளன.

நபி பெருமானார் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பின்னரும் அவர்களின் கொள்கைகளை எதிர்த்து அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் பல முயற்சிகளை பல் வேறு வடிவங்களில் மேற் கொண்டனர். அனைத்திலும் தோல்வியே கண்டனர்.

இருந்தும் இஸ்லாத்தை அழிக்க முடியவில்லையே, அது மிகவேக மாகப் பரவிக் கொண்டே செல்கிறதே என்ற ஆவேசம் தணியவே இல்லை.



இன்றும் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி வீசி பல முனைத்தாக்குதல் களை தொடர்ந்த வண்ணமுள்ளனர்.



அல்குர்ஆனை அழிக்க பெரும் சதி!


முஸ்லிமகளை வழிநடத்தும் அருள்மறை அல்குர்ஆனை அழித்துவிட்டால் தீர்வு கிடைத்துவிடும் என்று பகற்கனவு கண்டு வருகின்றனர். அதற்காக,

‘ஷீஆயிஸம், காதியானியிஸம், சூபித்துவம், தரீக்காயிஸம்’ போன்ற பல இயக்கங்களை தோற்றுவித்தும் அது முடியாது போயிற்று.

 
பல இலட்சம் போலிக் குர்ஆன்கள்!


குர்ஆனில், யூதர்களின் கைவரிசைகளையும்;, அக்கிரமச் செயல்கைளயும் குறித்து வரும் வசனங்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு இசைவான வசனங்களை சேர்;த்து பல இலட்சம் பிரதிகளை அச்சடித்து ஆப்ரிக்க நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும், குறிப்பாக இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் வினியோகித்தனர்.கூலிப்படையினரின் சூழ்ச்சிகளில் அகப்பட்ட அப்பாவி மக்கள் பலியாகி செய்வறியாது திகைத்தனர்.


இந்தோனேசியாவில் ‘மேடான்’ என்ற நகரில் மட்டும் 25000 பிரதிகள் வினியோகிக்கப்பட்டன. இந்தத் தகவலை நேரிலே கண்டு நாம் கூறியதும், ‘பல நாடுகளில் விற்பனைக்காகவும், வினியோகத்திற்காகவும் வைத்திருந்த பிரதிகளை ‘ராபிதத்துல் ஆலமுல் இஸ்லாமியா’ என்ற உலக இஸ்லாமிய அமைப்பு அவற்றை வாங்கி தீ வைத்துக் கொளுத்தினர்;’.

அமெரிக்காவின் போலிக் குர்ஆன்


யூதர்களைத் தெடர்ந்து அமெரிக்காவின் சதிகள் தொடந்தன. இஸ்லாத்திற் கெதிராக பல்வேறு புத்தகங்களையும்,இணைய தளங்களையும் வெளியிட்டும் ஆத்திரம் அடங்கவில்லை. ஸல்மான் ருஷதி, தஸ்லீமா நஸ்ரீன் போன்ற போலி முஸ்லிம்களை வைத்துப் பல நூல்களையும் கதைகளையும் கற்பனையாக எழுதினர். எஃகு போன்ற உறுதிமிக்க கொள்கைப் பிடிப்புள்ள முஸ்லிம்களை எந்த வகையிலும் அவர்களால் அசைக்க முடியவில்லை.


நாடகம் தொடர்ந்தது! அவர்;களின் வேதங்களிலே விரும்பியவாறு எழுதி விளையாடியதுபோன்று குர்ஆனிலும் விளையாட மீண்டும் தொடங்கியுள்ளனர். பல யூத, கிறித்தவ அறிஞர்களின் ஆதரவோடும் ஆக்கங்களோடும் புதிய குர்ஆன் ஒன்றை அரங்கேற்றியுள்ளனர். இதோ ! படியுங்கள்.!


தலைப்பு : ‘ TruQuran ‘(உண்மைக் குர்ஆன்),


New American Quran (புதிய அமெரிக்கக் குர்ஆன், இந்த நூறறாண்டின் தலைசிறந்த குர்ஆன் என்ற விளம்பரங்களுடன் குவைத்தில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு குர்அனை வெளியிட்டனர்.


ஆபத்தான விளைவை ஏற்படுத்தும் சூது நிறைந்த ஒரு புதிய குர்ஆனை அமெரிக்கர்கள் உருவாக்கி ‘தி ட்ரூ ஃபுர்கான்’ – உண்மையான குர்ஆன்- என்ற பெயரில் குவைத் பாடசாலைகளில் விநியோகம் செய்துள்ளனர். மேலும் ‘சாத்தானின் வசனங்கள்’ எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.


இத்தகவலை ‘அல் புர்கான்’ வார இதழ் தெரிந்து அதை வெளியிட்டு இரு புத்தக வெளியீட்டாளர்களின் பெயர்களையும் அம்பலப்ப டுத்தியுள்ளது. இரு பெரும் நிறுவனங்களான’ஒமேகா-2001-ம்;,ஓய்ன் பதிப்பகமும்’ இணைந்து தான் இப்பெரும் கைங்கரியத்தை அரங்கேற்றியுள்ளது என்பதையும் வெளியிட்டுள்ளது.


அது மட்டுமல்ல ‘இது 21-வது நூற்றாண்டின் தலைசிறந்த குர்ஆன்’எனவும் முதல் பக்கத்திலேயே குறிப்பிட்டும் உள்ளனர்;.


366 பக்கங்களைக் கொண்ட இந்நூல் அரபி,ஆங்கிலம் ஆகிய இருமொழி களிலும் காணப்படுகிறது. இதனை குவைத் தனியார்; ஆங்கில பாடசாலை களில் வினியோகமும் செய்துள்ளனர்;.


இந்நூலில் 114 அத்தியாயங்க்குப் பதிலாக, 37 அத்தியாயங்களை தள்ளி விட்டு, 77 அத்தியாயங்களைத் தொகுத்துள்ளனர். அதில் அல்-பாத்திஹா அத்தியாத்தைத் தொடர்;ந்து அல்ஜனா, இஞ்சீல் என இருபுதிய அத்தியா யங்களையும் சேர்;த்துள்ளனர்.

அத்தியாயத்தின் காப்பு வாக்கியமான பிஸ்மில்லாஹ்வுக்குப் பதிலாக ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் முக்கடவுள் (வுசinவைல) கொள்கையைக் சித்தரிக்கும் ‘முக்கடவுள்களின் அருளால்’ என்ற நீண்ட வாக்கியத்தையும் குறிப்பிட்டுள்ளனர்;.


இந்த புதிய குர்ஆன் உலகின் எல்லா இஸ்லாமியர்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் அவர்களின் உணர்வுளை சீண்டியுள்ளது.


அது மட்டுமல்ல, அதில்,


1. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணப்பது கூடாது. (அதாவது பலதாரமணம் கூடாது)

2. விவாகரத்துக்கு அனுமதி கிடையாது.

3. நடைமுறையில் உள்ள சொத்துரிமை சட்டங்களை மாற்றி உயில் மூலம் விரும்பியவருக்கு சொத்துரிமை வழங்கலாம்.

4. இஸ்லாத்தில் ஜிஹாத்- மார்க்கப்போர் ‘ஹராம்’ தடைசெய்யப் பட்டுள்ளது.

மேலும், அல்லாஹ்வின் வல்லமையை விமர்சனமும் செய்து பல நச்சுக் கருத்துக்களையும் திணித்து ‘மூன்று டாலர் விலைதான்’ என மலிவு விலையிலும் வெளியிட்டுள்ளது.


அல்லாஹ்வின் பாதுகாப்பு

 
கோடிக்கணக்கில் செலவு செய்து எப்படிப்பட்ட சூழ்ச்சிகளை உலகளாவிய அளவில் செய்தாலும் அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆனை அணைத்துவிட முடியாது! அழித்துவிட முடியாது! ‘அதை நாம் பாதுகாத்தே தீருவோம்’ என்ற உத்தரவாதத்தை அதை அருளிய நாயனே நமக்குத் தந்துள்ளான்.



இதோ அந்த உத்தரவாதம்

உலகப்பொது மறையை வழங்கிய வல்ல நாயன் அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்.



إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ

நிச்சயமாக நாமே இந்த குர்ஆனை அருளினோம்! மேலும் நாமே இதை பாதுகாப்போம். (அல்ஹுஜர் 15:09)

 
يُرِيدُونَ لِيُطْفِؤُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

நிச்சயமாக அல்லாஹ்வின் வேதத்தின் ஒளியை தங்களின் வாய்களால் ஊதிஅணைக்க நினைக்கின்றனர். மேலும் நிராகரிப்பவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் அதை (அணைக்கவிடாமல்) பூரணமாக்கவே விரும்புகிறான். (அஸ்ஸஃப்- 61:08, அத்தவ்பா- 9:32)



குர்ஆனை கிழித்தெறிந்த பிரிட்டிஷ் பிரதமர் குர்ஆனுடைய குடியிருப்பு மனித உள்ளங்கள் ஆகும் எழுதப்பட்ட நூலுக்குள் அல்ல. இதை நமது எதிரிகள் யாவரும் புரிந்து வைத்துள்ளனர்.


குர்ஆனிய சமுதாயமாகிய நாம் குர்ஆனை மனனம் செய்து அதை ஓதியும், ஆய்வு செய்தும் அதனடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள் முஸ்லிம்கள்.

ஆகவே, குர்ஆனிய சமுதாயத்தை எந்த காரணத்தை முன்னிட்டும் எந்த சக்தியும் வெற்றி கொள்ள முடியாது .

குர்ஆன் பெரும்பான்மையான முஸ்லீம்களுடைய மனங்களில் வாழ்ந்த போது முழு உலகையும் தமது காலடியில் கொண்டு வந்த ரோமானியர்களால் கூட வெல்ல முடியாமல் திணறினார்கள் இறுதியில் ரோமானிய சாம்ராஜ்யத்தையும் சின்னஞ் சிறுக் கூட்டத்தினரிடம் தாரை வார்த்தார்கள். அதற்கடுத்த ஆங்கிலேயர் நாடு பிடிக்கும் ஏகாதிபத்திய வெறியில் ஈடுபட்டிருந்த போது பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் அவர்களுடைய பிடியில் சிக்கவில்லை.

அதனுடைய காரணத்தைக கண்டறிந்த அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் கிலாடுஸ்டோன் (Glad stone) பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஒரு கையில் குர்ஆனை ஏந்தியவாறு அதனுடைய சில பக்கங்களைக் கிழித்தவாறு கீழ்வருமாறு கர்ஜித்தான்.

குர்ஆனுடைய சில பக்கங்களைக் கிழித்து விடுவதால் மட்டும் முஸ்லிம்களை வெற்றி கொண்டு விட முடியும் என்று நான் கூற மாட்டேன். மாறாக முஸலீம்களுடைய உள்ளங்களில் மனனமாகி இருக்கும் குர்ஆனை மறக்கடிக்காதவரை அவர்களை வெற்றிக் கொள்ள முடியாது என்று கொக்கரித்தான்.

முஸலிம்களே!

குர்ஆனை மனனம் செய்யுங்கள் உள்ளத்தில் பதிய வையுங்கள், மனித வாழ்வின் ஒப்பற்ற நெறிகளை போதிக்கும் , குர்ஆன் நமது உள்ளத்தில் இருக்கும் வரை எவரும் நம்மை அழிக்கமுடியாது. மாட்டார்.



கிறித்தவ தேவாலயம் குர்ஆனை எரிக்க அறிவிப்பு


புனிதக் குர்ஆனை எரித்து இஸ்லாமியச் சகோதரர்களின் மனக் கடலைக் கொந்தளிக்கச் செய்து காயப் படுத்தும் அமெரிக்க மூர்க்கர்களின் அடங்கா வெறியையும் அவர்களின் குர்ஆன் எதிர்ப்பு அறிவிப்பையும் கண்டு உலகே கொதிந்து எழுந்தது. இதையறிந்த கிறித்தவ உலகம் ஆடிப்பேயிற்று.


ஒரு முட்டாள் பாதிரியாரின் அறிவிப்பால் உலக அமைதிக்கு மீண்டும் ஓர் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது.


சக மனிதனை பார்த்து புன்னகைப்பதும், மக்கள் நடமாடும் இடத்தில் கிடக்கும் தீங்கு விளைவிக்கும் ஆணி, இரும்பு போன்ற பொருள்களை நீக்குவதும் தர்மம் என போதிக்கும் இஸ்லாத்தை “சாத்தான் மதம்” என்று சொன்னதோடு மட்டுமன்றி, அமெரிக்க ப்ளோரிடா மாநிலத்தைச் சார்ந்த பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் இந்த ஆண்டு செப்டம்பர் பதினோராம் தேதி குர்ஆன் எரிப்பு தினமாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பினால் அமெரிக்கா மிகுந்த பயத்திற்கு உள்ளாகி உள்ளது. மேலும் இதுவரை அமெரிக்கா கடைபிடிக்க நினைக்கும் முஸ்லிம்கள் நல்லெண்ண நடவடிக்கைகள் அணித்தும் இந்த ஒரு நிகழ்ச்சியால் அடிபட்டு போகும் என்றும் உணர்ந்தனர். இதற்கு ஹிலாரி கிளிண்டன் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆப்கானிலும் , ஈராக்கில் மீதும் இருக்கும் அமெரிக்க படையினர் பற்றி கவலை தெரிவித்து உள்ளார் அமெரிக்க பொறுப்பு கலோனல் .


வாடிகன் போப் ஆலயமும் இதை காட்டு மிராண்டி தனம் என்று அறிவித்து உள்ளதோடு இதை கைவிட கோரி உள்ளது. ஆனால் இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நிறுத்தாமல் செய்வதாக அந்த தேவாலைய தகவல்கள் தெரிவித்தன.


இதற்கிடையே ஃபுளோரிடா தேவாலயத்தின் இந்த குரான் எரிப்பு நிகழ்ச்சிக்கு அமெரிக்காவிலுள்ள கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய குழுக்கள் பல கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ‘த நேஷனல் அசோசியேசன் ஆப் எவான்ஜெலிக்கல்ஸ் (NAE)’ என்ற கிறிஸ்தவ அமைப்பு> குரான் எரிப்பு நிகழ்ச்சியை ஃபுளோரிடா தேவாலயம் கைவிட வேண்டும் என்றும்> இது உலக அளவில் இரு பிரிவு மதத்தினருக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரித்தது.


இந்த நிகழ்ச்சி நடந்தால் உலக முஸ்லிம்களின் கொந்தளிப்பும் மீண்டும் செப்டம்பர் பதினொன்று போன்ற தீவிரவாத சம்பவங் களுக்கும் காரணமாக அமைந்துவிடும்.


உலக அமைதியை குலைக்க நினைக்கும் இது போன்ற விசயங்களில் இருந்து உலகைகாக்க அமைதியும் மனிதர்களிடையே மனித நேயமும் சக மனிதனையும் அவன் உணர்வுகளை மதிக்கும் எண்ணங்களை உயர்த்திடவேண்டும் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தனர்.


இருந்தும் செப்டம்பர் 11 ஆம் தேதி டென்மார்க்கில் குர்ஆன் எரிப்பு நிகழ்ச்சியும், காலணிகளால் மிதித்து அடித்து அதன் மீது செருப்புக்கால்களால் ஏறிநின்றும் அசிங்கங்களை வீசியும் தங்கள் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.அதோடு நின்று விடாமல் குர்ஆனை கிழித்து தீவைத்துக் கொளுத்தியும் குர்ஆன் வெறியை வெளிப்படுத்தினர்.



முஸ்லிம்களே! விழித்தெழுங்கள்!


இன்னுமா தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள் ? நமது இறையருள் வேதமாம் உலகப்பொதுமறை அல்குர்ஆனின் மாண்பினைப் புரியாது அதை துணியில் சுற்றி ஏதோ வீட்டு மாடத்திலும், கைக்கெட்டா விட்டத்திலும் தூக்கி வீசியதன் விளைவு தான் இன்று நமது எதிரிகள் நம் குர்ஆனோடு விளையாடத் துவங்கியுள்ளனர்.

முதலில்

குர்ஆனின் முக்கியத்துவத்தை இன்னும் நாம் புரிந்து கொள்ள வில்லை. புரிந்து கொண்டால் அதில் அல்லாஹ் விவரிக்கும் உலகத்தின் வரலாறு உலக அதிசயங்கள், அறிவியல் உண்மைகள், வாழ்கை நெறிகள்,சட்ட திட்டங்கள் போன்ற அனைத்தையும் அதில் காணலாம்.



இறைவன் கூறுவதைக் கேளுங்கள்!

1.
إِنْ هُوَ إِلاَّ ذِكْرَى لِلْعَالَمِينَ

إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ

إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ

نْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ

அல்அன்ஆமில் 6:90, யூசுப் 12:104, ஸாத் 38:87, அத்தக்வீர் 81:27 -ல் 4 வசனங்கள்! நான்கு தடவைகள் ஓங்கி முழங்குகிறான்

1.இது உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமாகும் என்று மீண்டும் மீண்டும் கூறி, ‘ இது ஓர் உலகப் பொது மறை’ என்று அறிவிக்கிறான்.



2.
مَّافَرَّطْنَا فِي الكِتَابِ مِن شَيْءٍ }الأنعام

நாம் (இவ்) வேத நூலில் எப்பொருளையும் எடுத்துரைக்காது விட்டு வைக்கவில்லை.

(அல்அன்ஆம் 6:38) என்ற வசனத்தின் மூலம் ‘இது மனித சமுதாயத்திற்கு தேவையான அனைத்தையும் கூறும் அருள் மறை’ என்று கூறுகிறான். அது மட்டுமா ?

3.
وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَاناً لِّكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ

நாம் உங்களுக்கு ஒவ்வொரு விசயத்தையும் தெளிவாக விளக்கக் கூடிய இவ்வேதத்தை நாமே அருளினோம் (16:89) என்று கூறி ‘அனைத்தையும் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கும் வேத நூல்’ என்றும் உலகுக்கு உணர்த்துகிறான்.

அதில் என்னதான் இல்லை ? உலகமே அதிசயிக்கும் அனைத்தும அதில் உள்ளன.

குர்ஆனைப் படியுங்கள்! ஆய்வு செய்யுங்கள்.வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துங்கள்.

குர்ஆனைப்பின்பற்றும் காலமெல்லாம் முஸ்லிம்களை எவரும் எந்தக் காலத்திலும் அழிக்க முடியாது

வணங்கத் தகுதியான இறைவன் யார் ?

வணங்கத் தகுதியான இறைவன் யார் ?


 Dr. Ahmad Baqavi PhD.


( அல்குர்ஆன் 27: 59-66 வசனங்களின் கருத்துரை)


புகழ் யாவும் இறைவனுக்கே உரியன. அவன் தேர்ந்தெடுத்த நல்லடியார்களுக்கு வெற்றி உண்டாவதாக!

அல்லாஹ் மேலானவனா? அல்லது மனிதர்கள் அவனுக்கு இணைவைத்து வணங்குபவை மேலானவையா?


வானங்களையும், பூமியையும் படைத்து மேகத்திலிருந்து உங்களுக்காக மழை பொழியச் செய்பவன் யார்?

அந்த மழையினால் கண்ணைக்கவரும் அழகிய தோட்டங்களை அல்லாஹ்வே உற்பத்திச் செய்கிறான்.

அவனது உதவியின்றி அவற்றின் மரங்களை முளைப்பிக்க உங்களால் முடியாது.


இவ்வாறிருக்க அல்லாஹ்வைத் தவிர்த்து இன்னொருவரை வணங்கலாமா? ஆனால், இவர்களோ தங்களின்

கற்பனையான தெய்வங்களை அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்விற்கு இணையாக வணங்குகின்றனர்.


பூமியை உறுதிமிக்க தங்குமிடமாக அமைத்து அதன் மத்தியில் ஆறுகளையும், மலைகளையும் அமைத்தவன் யார்?

இருகடல்களுக்கிடையே தடுப்பை ஏற்படுத்தியவன் யார்?


இத்தகையை படைப்பாளனாகிய அல்லாஹ்வை தவிர்த்து இன்னொருவரை வணங்கலாமா? ஆனால், அவர்களில் பெரும்பாலோர் இதனை புரிந்து கொள்வதில்லை.


(துன்பத்தில் சிக்கித்) துடித்துக் கொண்டிருப்போர் அபயமிட்டு அழைத்தால் அவர்களுக்கு பதிலளித்து அவர்களின் துன்பங்களை துடைப்பவர் யார்? பூமியில் உங்களை பிரதிநிதிகளாக ஆக்குபவன் யார்?


இத்தகைய அல்லாஹ்வைத்தவிர்த்து இன்னொருவரை வணங்கலாமா? மக்களில் நல்லுணர்வு பெறுவோர் வெகுசிலரே!


கடலிலோ கரையிலோ இருள்களில் சிக்கித் தவிக்கும் உங்களுக்கு வழிகாடடிக் காப்பது யார்? அவனது அருள் மழை பொழியுமுன் குளிர்ந்த காற்றை நற்செய்தியாக அனுப்பி வைப்பவன் யார்?


இவற்றையெல்லாம் உங்களுக்காகச் செய்யும் அல்லாஹ்வைத் தவிர்த்து இன்னொருவரை வணங்கலாமா? மக்கள் இணைவைக்கும் கற்பனைக் கடவுள்களைவிட்டும் அல்லாஹ் மிக்க உயர்ந்தவன்.


துவக்கத்தில் படைப்புகளை எவ்வித முன்மாதிரியுமின்றிப் படைத்து அவை அழிந்த பின்னர் மீண்டும் உருவாக்குபவன் யார்? மேகத்திலிருந்து மழையை இறக்கிப் பூமியில் தானியங்களை முளைக்கச் செய்து உங்களுக்கு உணவளிப்பவன் யார்?

இவற்றையெல்லாம் திட்மிட்டுச் செயலாற்றும் அல்லாஹ்வைத்தவிர்த்து இன்னொருவரை வணங்கலாமா? நீங்கள் செய்வது சரியானது என்றால் அவற்றை நிரூபிக்கும் ஆதாரங்களை கொண்டு வாருங்கள்.

வானங்களிலும் பூமியலும் மறைந்திருப்பவற்றையும், மரணித்தோர் எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர எவரும் அறிய மாட்டார்கள்.


மறுஉலக வாழ்வைப் பற்றி மக்கள் தவறாகவே புரிந்து வைத்துள்ளனர். அது குறித்து அவர்கள் பெரும் செந்தேகத்திலே உள்ளனர். அதுமட்டுமா? அவர்கள் (கருத்துக் ) குருடர்களாகவே இருக்கின்றனர்.

புதன், 27 ஜூலை, 2011

பூமியின் முளைகளாக இருக்கும் மலைகள்

பூமியின் முளைகளாக இருக்கும் மலைகள்



கோள வடிவிலான இந்த பூமியின் மேற்பரப்பு (Outer Crust Of The Earth) மட்டுமே உறுதியாகவும், கடினமானதாகவும் இருக்கிறது. ஆனால், உள்பகுதியில் ஆழமாக செல்ல செல்ல அவைகள் அதிக வெப்பமுடையதாகவும், உருகிய நிலையிலும் இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். பூமியின் மேற்பரப்பில் உள்ள இந்த இருகிய பகுதி (Outer Crust) பூமியின் மேற்பரப்பிலிருந்து 1 முதல் 10 கிலோமீட்டர் வரைதான். அதற்கு கீழே உருகிய நெருப்பு குழம்புகள் இருக்கின்றன.


இவ்வாறு பூமியின் மேற்பகுதி இறுகியும், உட்பகுதி இறுகாமல் உருகிய நிலையிலும் இருப்பதால், பூமியின் சுழற்சியின் காரணமாக மையவிலக்கு விசையால் (Centrifugal Force) பூமியின் மேற்பரப்பு நகர்ந்து இடம் பெயர்ந்தது என்று புவியியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக உலக வரைபடத்தை காட்டுகிறார்கள். உல்கம் முழுவதிலும் வளைந்தும், நெளிந்தும் இருக்கும் பூமியின் நிலப்பரப்புகளை ஒன்று சேர்த்தால் அவை கச்சிதமாகப் பொருந்திக் கொள்ளும் என்கின்றனர்.  . பார்க்கவும் வீடியோ : The function & Movements of Mountains! (Pegs & Continental Drifts)

இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால் ஒரு காலத்தில் ஒரே துண்டாக இருந்த பூமியின் நிலப்பரப்புகள் எல்லாம் விலகி தனித்தனி துண்டுகளாகியது (Continental Drift) என்பதுதான். பூமியின் மேற்பகுதி கடினமானதாகவும், உட்பகுதி உருகிய நிலையிலும் இருப்பதால் தான் இது நடைபெற்றதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இவ்வாறு இந்த நிலப்பரப்புகள் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்த வேளையில் ‘Folding Phenomena’ என்ற முறையில் நிலப்பரப்புகளில் மலைகள் தோன்ற ஆரம்பித்தன. இந்த மலைகள் பூமியின் மேற்பரப்பில் அல்லாமல் பூமிக்குள்ளும் ஆழமாகச் சென்று முளைகளாக அமைந்தன. அதனால்தான் வேகமாக நகர்ந்து கொண்டிருந்த கண்டத்தின் நிலப்பரப்புகள் அவ்வாறு வேகமாக நகராமல் நிலைநிறுத்தப்பட்டன. இவ்வாறு மலைகளை முளைகளாக நிலைநிறுத்தியதை அல்லாஹ்வும் தன் திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான்.


“நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?” (அல்குர்ஆன்: 78:6-7)


“இன்னும் இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம். அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம்” (அல்குர்ஆன்: 21:31)


“அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கின்றீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அதன்மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான். மேலும், அதன்மீது எல்லாவிதமான பிராணிகளையும் அவன் பரவ விட்டிருக்கின்றான். இன்னும், நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம்” (அல்குர்ஆன்: 31:10)


“உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான். இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்)” (அல்குர்ஆன்: 16:15)


மலைகள் பூமிக்குள் இவ்வாறு முளைகளாக அமைந்திருக்காவிட்டால், நாம் வசிக்க முடியாத அளவிற்கு இந்த பூமி ஆடி, அசையும் என்கின்றனர் புவியியல் வல்லுணர்கள்.


அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.

சனி, 16 ஜூலை, 2011

சேவையைப் பிழைப்பாக மாற்றிக் கொள்ளும் புரோகிதரர்கள்!

சேவையைப் பிழைப்பாக மாற்றிக் கொள்ளும் புரோகிதரர்கள்!

orkadavul.com

இறைவன் எந்த நோக்கத்திற்காக மனிதனைப் படைத்திருக்கிறானோ அந்த நோக்கம் நிறைவேற மனிதன் மனிதனாக வாழவேண்டும். அப்போதுதான் மனிதன் இவ்வுலகிலும் மறு உலகிலும் வெற்றிப் பாதையை அடையமுடியும். ஆயினும் மனிதன் அந்த வெற்றிப் பாதையில் நடைபோட ஷைத்தான் தடையாக இருக்கிறான். அவனது சபதம் எப்படியும் மனித வர்க்கத்தை எரியும் கொடும் நரகில் கொண்டு தள்ளுவதே. எந்த மனிதனின் காரணமாக தனக்கு நரக தண்டனை கிடைத்ததோ அந்த மனிதனையும் நரகத்தில் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்று அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறான் ஷைத்தான்.



இவ்வுலக வாழ்க்கை சோதனை வாழ்க்கையாக இருப்பதால் பரிட்சையின் நிமித்தம் அல்லாஹ் மனிதனுக்கு அவனது விருப்பங்களை நிறைவு செய்து கொள்ள இரண்டு வழிகளைக் கொடுத்துள்ளான். ஒரு வழி அவனை சுவர்க்கத்தில் கொண்டு சேர்க்கும். இரண்டாவது வழி அவனை நரகில் கொண்டு சேர்க்கும். மனிதனின் படைப்பில் அடிப்படையில் அவனுக்கு இயற்கையான பல உணர்வுகள் இருக்கின்றன. பசி உணர்வு, காம உணர்வு, இன உணர்வு, மொழி உணர்வு, பிரதேச உணர்வு, தேச உணர்வு என்றெல்லாம் அந்த உணர்வுகள் பரிணமிக்கின்றன. ஷைத்தான் இந்த உணர்வுகளை வெறியாகத் தூண்டிவிட்டு மனிதனை மனித நிலையிலிருந்து மிருக நிலைக்கு மாற்றி விடுகிறான்.



ஷைத்தானின் இந்த முயற்சிக்கு மனித இனத்திலிருந்தே சிலர் துணை போகிறார்கள். அவர்கள் மறுமையை மறந்து இவ்வுலக சுகத்தில் மயங்கி தறி கெட்டுச் செல்கிறார்கள். இவர்களில் முன்னணியில் நிற்பவர்கள் மதப்புரோகிதரர்கள், அரசியல்வாதிகள். இறைவனை நெருங்கச் செய்வதாக கூறிக்கொள்ளும் புரோகிதரர்கள் அவர்கள் உண்டு கொழுப்பதற்கும், உலக சுகங்களை அடைவதற்கும் சேவையைப் பிழைப்பாக மாற்றிக் கொள்கிறார்கள். எனவே அவர்கள் மக்களின் உணர்வுகளை வெறியாகத் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள்; உலக ஆதாயம் அடைகிறார்கள்.



இதே போல் அரசியல்வாதிகளும் ஆட்சியில் அமரும் ஆசையில் மக்களின் வாக்குச் சீட்டைக் குறியாகக் கொண்டு இன, மொழி பிரதேச உணர்வுகளை தூண்டி விடுகின்றனர். உணர்வுகள் மிதமாக இருக்கும்போது மனித வர்க்கம் பலன் பெறுகிறது. அவை வெறிகளாக மாறும்போது மனிதனே மனிதனை வெட்டிச் சாய்க்கும், மனித இரத்தத்தை ஆறாக ஓடச் செய்யும் நிலை ஏற்படுகிறது.



புரோகிதரர்களும், அரசியல்வாதிகளும் தங்களின் அற்ப சுகங்களை தியாகம் செய்து மக்களின் நல்வாழ்வுக்கு துணை செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது குதிரைக் கொம்பாகும். எனவே மக்களே அவர்களின் கெடுதிகளைப் புரிந்து அவர்களை ஓரம் கட்டவேண்டும். ஆனால் கைசேதம் கசாப்புக் கடைக்காரர் பின்னால் செல்லும் ஆடுகளைப்போல், மக்கள் வெள்ளமும் இந்த புரோகிதரர்களின் பின்னாலும் அரசியல்வாதிகளின் பின்னாலும் செல்லுவது அதிகரித்தே வருகிறது. காரணம் மக்களிடையே போதிய சுய சிந்தனை இல்லை.



மக்களின் இந்த நிலையை மாற்றிட ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி அவனது போதனைகளை கடைப்பிடிப்பதின் மூலம்தான் இவர்களிடமிருந்து இந்த மனித சமுதாயம் விடுபட முடியும். எனவே அன்பார்ந்த சகோதர சகோதரிகளே இந்த சுயநல வாதிகளான அரசியல் தலைவர்களையும் மதப்புரோகிதரர்களையும் நம்பிச் செயல்படுவதைக் கைவிடுங்கள். உங்களை ஏமாற்றி அவர்கள் ஆதாயம் அடைவதில் இந்த இருசாரரும் கூட்டுள்ளவர்கள்தான். இந்த நிலை மாற வேண்டுமானால் மக்கள் இந்த அரசியல் தலைவர்கள் பின்னாலும், மதப்புரோகிதரர்கள் பின்னாலும் கண்ணை மூடிக்கொண்டு குருட்டுத் தனமாகச் செல்வதைக் கைவிட வேண்டும். ஒவ்வோரு ஆணும், பெண்ணும் சுய சிந்தனையாளர்களாக மாற வேண்டும்.


7:3 اتَّبِعُوا مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِن دُونِهِ أَوْلِيَاءَ ۗ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ

 (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.

thanks: readislam.com

மனிதர்கள் சிந்திக்க வேண்டாமா?

மனிதர்கள் சிந்திக்க வேண்டாமா?


குர்ஆனின் நற்போதனைகள்


நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? 2:44



தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. 2:269



அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். 4:82



(நபியே!) நீர் கூறும்; “என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.” இன்னும் நீர் கூறும்; “குருடனும் பார்வையுடைவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” 6:50



உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம். 6:98



அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும் ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் – நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. 13:3



நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும் நன்மை செய்யுமாறும் உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும் மானக்கேடான காரியங்கள் பாவங்கள் அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் – நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். 16:90



அவர்கள் தங்களுக்குள்ளே (இத பற்றிச்) சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும் உண்மையையும் குறிப்பட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை எனினும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள். 30:8



அச்சமும் ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து அதைக் கொண்டு பூமியை – அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சகள் இருக்கின்றன.30:24



மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும் பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன் அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை அவ்வாறிருக்க (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள். 35:3



அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும் போதும் மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் – சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. 39:42



அவர்கள் கூறுவார்கள்; “நாங்கள் (அவர் போதனையைச்) செவியுற்றோ அல்லது சிந்தித்தோ இருந்திருந்தோமானால் நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்.”

இஸ்லாம் ஓர் அதிசயம்

இஸ்லாம் ஓர் அதிசயம்

Post image for இஸ்லாம் ஓர் அதிசயம்
orkadavul.com

ஒரு மதம் (மார்க்கம்) தானாக பரவுகின்றது, வளருகின்றது என்றால் நீங்கள் நம்புவீர்களா?.ஆம் அந்த அதிசயத்தை உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தை பரப்புவதற்கு உலகளவில் ஒரு அமைப்பு இல்லை. ஒரு இயக்கம் இல்லை. ஆனாலும் அது பரவுகின்றது வளருகின்றது.



இஸ்லாத்தை எதிர்த்தால் பெரிய பெரிய வல்லரசுகளின் ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கின்றது. அதற்கு உதாரணம் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரின். ஒரு முஸ்லிம் விரைவில் கோடீஸ்வரன ஆக வேண்டுமா? அவன் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. திருக்குர்ஆன் சரியில்லை என்று அவன் ஏதாவது உளறினாலோ, கிறுக்கினாலோ போதும்; உடனே அவனுக்கு உலகில் பெயரும் புகழும் கிடைக்கும். ஒரே இரவில் அவனை ஓர் ஒரு சிறந்த அறிஞன், மிகப்பெரிய சிந்தனையாளன், புரட்சி எழுத்தாளான் என்றெல்லாம் அவனுக்கு பட்டங்கள் வந்து சேர்ந்துவிடும்.



எல்லா பத்திரிகைகளும் பத்தி பத்தியாக செய்திகள் வெளியிடும். அப்பாவி முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்பட்டு கொதித்தெழுவார்கள். துப்பாக்கி சூடுகளுக்குப் பழியாகி பிணமாவார்கள். இஸ்லாத்தை விமர்சித்த அந்த பெயர் தாங்கி முஸ்லிமுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கிடைத்துவிடும். ஒரு சிலர் ஆத்திரப்பட்டு கொலை மிரட்டல்கள் விடுவார்கள். உடனே அவனுக்கு பாஸ்போர்ர்ட் இல்லாமலேயே உலகப் பயனம் மேற்கொள்ளும் தகுதி கிடைத்துவிடும். அவனுக்காக அடைக்கலம் தர பெரிய பெரிய நாடுகள் முன் வருவார்கள். வல்லரசுகளின் அதிபர்கள் எல்லாம் அவனுக்கு விருந்துகளும், விருதுகளும் தந்து கெளரவிப்பார்கள். முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை; விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனோபக்குவம் இல்லை; கருத்து சுதந்திரம் இல்லை; முஸ்லிம்கள் என்றாலே அது ஒரு வெறிப் பிடித்த கூட்டம்; தீவிரவாத கூட்டம் என்றெல்லாம் உலக அரங்கில் பிரச்சாரம் முடுக்கிவிடப்படும்.



இஸ்லாத்தை எதிர்ப்பதுதான் கெளரவமான செயல் என்பதை நிலை நாட்டத்தான் இத்தனை ஆதரவுகள் தரப்படுகின்றன. இஸ்லாத்தை முஸ்லிம்களே எதிர்க்க வேண்டும் என்று சில முஸ்லிம் அதிருப்தியாளர்களை தூண்டத்தான் இத்தனை வஞ்சக நாடகங்களும் நடத்தப்படுகின்றன. ஆக அனைத்து மீடியாக்களும் ஒன்று சேர்ந்து அல்லும் பகலும் பிரச்சாரம் செய்கின்றன. ஆனாலும் இஸ்லாம் தேய்பிறையாக மாறாமல் வளர் பிறையாக மின்னுகிறது. இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் நாடுகளிலேயே அவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இஸ்லாம் வளருகின்றது.



எதிர்ப்புகள் வளர வளர, அப்படி இஸ்லாத்தில் என்னதான் குறைகள் இருக்கின்றன; நாமும் பார்ப்போமே என்று, இன்று இஸ்லாத்தை ஆராய முன் வருகிறார்கள். அவர்களுடை மனக்கண்கள் திறக்கின்றன. உலகில் இப்படி மனித குலத்தை ஒருங்கிணைக்கும் மார்க்கம் ஒன்று இருக்கின்றதா? அடடா இதுவரை எங்களுக்கு தெரியாமல் போய்விட்டதே என்று அங்கலாய்க்கிறார்கள். ஒரு தூய்மையான மார்க்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தோமே என்று வருத்தப்படுகிறார்கள். உண்மை என்னவென்று தெரிந்த பிறகு உடனே அதை அரவணைத்துக் கொள்கிறார்கள். இன்று இஸ்லாத்தை எதிர்க்கின்ற அனைத்து சக்திகளும் தங்களுக்கு தெரியாமல் இஸ்லாம் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றார்கள். எதிர்ப்புகளையும், எதிர்ப்பாளர்களையும் வைத்தே இஸ்லாம் பரவுகின்றதென்றால் இது ஒரு அதிசயமல்லவா?



பத்திரிகைகள், சினிமா தொலைக்காட்சி, இசை இவை இல்லாமல் இன்று உலகில் எதுவும் பரவ முடியாது. இது இன்றைய உலக நிலை. மற்ற மதங்கள் அழகான பெண்களைக் காட்டி சீரியல் நாடகங்களையும் நடத்தி பட்டி மன்றங்களையும், திருவிளாக்களையும், தெருக்கூத்துகளையும் காட்டி இசையுடன் சேர்ந்த பாடல்களை பாடி பத்திரிகைகளில் விளம்பரம் செய்து தங்கள் மதங்களை வளர்க்க முயற்சிக்கின்றன. ஆனால் இத்தனைக்குப் பிறகும் இவைகளைப் பார்த்து மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த மதத்தில் இணைந்ததாக செய்திகளை நாளிதல்களில் பார்க்க முடிகிறதா?



ஒரு மதம் பரவ வேண்டுமானால் சிலைகள் அவசியம் வேண்டும். மதச் சின்னங்களைப் பரப்ப வேண்டும். இவையில்லாமல் எந்த மதத்தையும் பரப்ப முடியாது. ஆனால் சிலைகளும் இல்லாமல்; சின்னங்களும் இல்லாமல் இஸ்லாம் பரவுகின்றதே! இது ஆச்சயரியமில்லையா?



இன்றைய பிரச்சார சாதனங்களுக்கு மூலதனமே பெண்கள்தான். விளம்பரத்தின் திறவுகோலும் தோற்று வாயுமாக இருக்கின்ற பெண்ணின் கவர்ச்சியான உடலமைப்பிற்குத் திரைப்போட்டு மூடிவிட்டு இஸ்லாம் வளருகின்றதே… இசை கூத்துக்கு இங்கே இடமேயில்லை. மனிதன் விரும்பும் மனம்போல் வாழ இஸ்லாத்தில் சுதந்திரம் இல்லை. மனம்போன போக்கில் ஒரு முஸ்லிம் வாழ முடியாது, இங்கு கட்டுப்பாடுகள் அதிகம். மக்கள் விரும்பும் விபச்சாரம், சூதாட்டம், மதுபானம், வட்டி இந்த நான்கையும் அறவே தடுப்பது இஸ்லாம் ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே.



முஸ்லிம்களிடம் வல்லரசுகள் இல்லை. ஐ.நா சபையில் ஆதிக்கம் இல்லை. ஒருங்கிணைப்பு இல்லை. எங்கே பார்த்தாலும் முஸ்லிம்கள் தம் வீடுகளிலிருந்து துரத்தப்படுகிறார்கள், முஸ்லிம் என்று சொன்னாலேயே ஆபத்து வலிய வருகின்றது. ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே. முஸ்லிம்களின் கடவுளோ கண்களுக்குத் தெரியாது. அவர்களுடைய தலைவரின் (இறைத்தூதர்) படம்கூட அவர்கள் பார்த்ததில்லை.



முஸ்லிம்கள் தொழுவதற்கு கைகால் கழுவ வேண்டும். சிறு நீர் கழித்தாலும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். குளிப்பு கடமையானால் (முழுக்கு) குளித்து விட்டுத்தான் இறை ஆலயத்திற்குள் நுழைய வேண்டும். தினந்தோறும் ஐந்து வேளை கட்டாயம் தொழ வேண்டும். இத்தனை சிரமங்கள், இத்தனை கஷ்டங்கள் இருப்பினும் இஸ்லாம் பரவுகின்றதே.



தர்மம் செய்துதான் தீரவேண்டும் என்று எந்த மதத்திலும் கட்டாயமில்லை. ஆனால் வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் வருடா வருடம் ரூபாய்க்கு இரண்டரை சதவீதம் தன்னுடைய சம்பாத்தியத்திலிருந்து ஏழைகளுக்குக் கொடுத்தே தீர வேண்டும். இந்த சுமையையும் ஒரு முஸ்லிம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். இஸ்லாத்தில் குற்றங்களுக்கு தண்டனை மிக கடுமையானவை. ஆனாலும் இஸ்லாம் பரவுகின்றதே! இது எப்படி சாத்தியமாகின்றது?



இறைவன் தன்னுடைய திருமறையில் இப்படி கூறுகின்றான்;



يُرِيدُونَ لِيُطْفِؤُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ



“அவர்கள் அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர். ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூரணமாக்கியே வைப்பான். (61:8)



உலகில் உள்ள மதங்கள் கடவுளுக்காக அல்லாமல், மதங்களுக்கே கடவுளை பயன்படுத்துகின்றன. கடவுளின் சட்டங்கள், கடவுளின் ஆட்சி வரவேண்டும் என்று கடவுளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்கள் முஸ்லிம்கள் மட்டும்தான். மாற்று மதத்தினர் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்காகத்தான் கடவுளை வணங்குகிறார்களே தவிர, கடவுளின் விருப்பங்கள் நிறைவேற அவர்கள் ஆசைப்படுவதில்லை. கடவுளை தங்கள் இனத்திற்கும் மதத்திற்கும் சொந்தமாக்க முயற்சி செய்கின்றார்களே தவிர, கடவுளை எல்லோருக்கும் பொதுவாக்க அவர்கள் விரும்புவதில்லை.



Universal god என்ற பரந்த நோக்கை குறுகிய மனப்பான்மையோடு, கடவுளையே சிறுமைப்படுத்த முயல்கின்றார்களே தவிர, இவர்கள் கூறும் மதங்களால் கடவுளுக்குப் பெருமையில்லை. மனித குலத்திற்காக மதம் சேவையாற்ற வேண்டுமே தவிர, மதங்களுக்காக மனித குலத்தைக் கூறு போடக்கூடாது. ஆக உண்மையான கடவுள் நம்பிக்கை உடையவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதை தவிர வேறு வழி கிடையாது.



இஸ்லாம் ஒன்றுதான் கடவுளை பெருமைப்படுத்தும் மதமாக (மார்க்கமாக) இருக்கின்றது. அது மட்டும்தான் தனக்காக வாழாமல் கடவுளுக்காக வாழ கற்றுத் தருகின்றது. கடவுளை அடைய அது ஒன்றுதான் வழியாய் இருக்கின்றது. போலிப் பொருள்களுக்குத்தான் போலியான விளம்பரங்கள் தேவை. சர்க்கரையை யாரும் விளம்பரம் செய்ய அவசியமில்லை. அதன் இனிப்பு சுவைத்தவர்களுக்கு நன்கு தெரிகின்றது. விளம்பரம் இல்லாமல் அது தானே விற்பனையாகிறது. அது போலத்தான் இஸ்லாமும். நாம் சர்க்கரை உள்ள இடத்தைக் காட்டினால் போதும். மக்கள் தானே அதைப் பெற்றுக் கொள்வார்கள். இன்பம் அடைவார்கள்

வியாழன், 14 ஜூலை, 2011

இம் மாமனிதரைத் தெரிந்துக் கொள்ளுங்கள்

இம் மாமனிதரைத் தெரிந்துக் கொள்ளுங்கள்

orkadavul.com
மௌலவி M.S.M. இம்தியாஸ் ஸலஃபி

நீங்கள் ஒரு நாத்திகராக இருக்கலாம். அல்லது கடவுள் நம்பிக்கையைப் பற்றிக் கவலைப்படாதவராக இருக்கலாம். அல்லது இன்று இவ்வுலகில் நிலவும் பல மதக் கோட்பாடுகளில் ஏதேனும் ஒன்றைப் பின் பற்றுபவராக இருக்கலாம். நீங்கள் ஒரு பொதுவுடமை வாதியாகவோ, ஜனநாயகம் மற்றும் மனித சுதந்திரக் கொள்கையில் ஆர்வம் உள்ளவராகவோ விளங்கலாம். நீங்கள் யாராக இருந்தாலும் சரி, உங்களது மதம் மற்றும் அரசியல் கொள்கை எதுவாக இருப்பினும் சரி, உங்களது தனிப்பட்ட மற்றும் சமூக பழக்க வழக்கங்கள் எப்படி இருந்தாலும் சரியே. நீங்கள் அவசியம் இம் மாமனிதரைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இம்மாமனிதரைப் பற்றித்தான் பிரித்தானியக் கலைக்களைஞ்சியம், “மதத் தலைவர்கள் அனைவரிலும் தலைசிறந்த வெற்றியாளர்” என்று புகழ்கிறது. உலகப் புகழ் வாய்ந்த அறிஞர் பெர்னாட்ஷா, “முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இன்று நம்மிடையே இருப்பாரானால்,இன்று மானுட நாகரிகத்தையே அழித்திட முனைந்திருக்கும்.பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காண்பதில் வெற்றி கண்டிருப்பார்”என்று இம்மாமனிதரைப் போற்றுகிறார்.

உலகில் தோன்றிய மனிதர்கள் அனை வரையும் விட இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவர் ஒரு அறநெறியைப் போதித்தார். ஓர் அரசை நிறுவினார்.ஒழுக்க மாண்புகளின் அடிப்படையில் ஒரு நாட்டை உருவாக்கினார்.எண்ணற்ற சமூக, அரசியல் மாற்றங்களுக்கு வித்தூன்றினார். நாம் அறிவுறுத்திய கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒரு வலுவான, நிலையான சமுதாயத்தை நிறுவினார். மனித சிந்தனைகளையும் போக்கையும் புரட்சிமயமாக்கி புதிய சகாப்தத்தை உருவாக்கினார்.

அம்மாமனிதர் தாம் முஹம்மத் (ஸல்) அவர்கள்.

ஆம் அவர்கள் தாம் மிகக் குறுகிய காலமாகிய இருபத்தி மூன்று ஆண்டுகளில் மாபெரும் சாதனைகளைப் புரிந்து பலரும் புகழும், பெருமை உடையவரானார்கள். அவர்கள் கி.பி. 571ஆம் ஆண்டு அரேபியா நாட்டில் பிறந்தார்கள். தம்முடைய அறுபத்தி மூன்று ஆண்டு வாழ்வுக் காலத்திற்குள் மக்கள் அனைவரையும் சிலை வணக்கத்தினின்றும் விடுவித்து, ஒரே இறைவனை வணங்கும் உன்னத நிலைக்கு உயர்த்தினார்கள். சூது, மது, மாது ஆகியவற்றில் மூழ்கிக் கிடந்த அம்மக்களை அவற்றினின்றும் நீக்கிப் பண்பும் பக்தியும் உடையோராய் மாற்றினார்கள். சட்டத்தையும் அரசையும் விரும்பாத அவர்களின் வாழ்வை ஒழுங்கும் கட்டுப்பாடும் உடைய வாழ்வாக மாற்றினார்கள். இத்தகைய முழுமையாக சமூக மாற்றத்தை உலக வரலாறு அதற்கு முன்பு கண்டதில்லை, பின்பும் கண்டதில்லை.

நமது காலத்தின் தலைசிறந்த சரித்திர ஆசிரியர் லாமர்டின் மனித மேன்மையின் சிறப்பைக் குறித்து கூறுகிறார்: “உயர்ந்த இலட்சியம், குறைவான் வசதிகள், வியப்பூட்டும் வெற்றி, ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்? புகழ்மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள். சட்டங்களை இயற்றினார்கள். பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்.பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாயுதக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவ முடிந்தது.

ஆனால் முஹம்மத் (ஸல்) அவர்களோ போர்ப் படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள், அரச வம்சங்கள், ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை. அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக் கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார்கள். வழிபாட்டுத் தலங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துக்களையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும், ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களைப் பதித்தார்கள். நாம் ஏற்றுக் கொண்ட ஒரு கருத்தாக தம்மையே முழுமையாக அர்பணித்துக் கொண்ட அவரது உயர் நோக்கம், ஆழ்ந்த விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் கொள்ளாமல் உலகப் பற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவர்களின் முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், அவர்களின் மரணம்,மரணத்திற்குப் பின்னரும் அவர்கள் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர்கள் ஒர் ஏமாற்றுக்காரர் என்றோ, மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிடவில்லை. மாறாக, சமயக் கொள்கை ஒன்றை நிலைநாட்டிட அவர்களுக்கிருந்த மனோ உறுதியைத்தான் பறைசாற்றுகின்றன.

இந்த சமயக் கொள்கை இரண்டு அடிப்படைகளைக் கொண்டது. ஒன்று, இறைவனின் ஒருமை. மற்றொன்று இறைவனின் ஸ்தூலப் பொருளற்ற தன்மை.முந்தியது இறைவன் என்றால் என்ன வென்று எடுத்துரைக்கின்றது. பிந்தியது இறைவன் என்னவாக இல்லை என்பதைத் தெரிவிக்கின்றது. ஒன்று, தவறான கடவுள்களைத் தனது பலத்தால் தூக்கியெறிகின்றது. மற்றொன்று பிரச்சார துணையில் ஒரு புதிய கருத்தை உருவாக்க விழைகின்றது.

தத்துவ போதகர், சொற்பொழிவாளர், இறைத் தூதர், சட்ட நிபுணர், மாபெரும் போர் வீரர், கருத்துக்களை வென்ற வரலாற்று வீரர், பகுத்தறிவுப் பூர்வமான கொள்கைகள் நம்பிக்கைகளை நிலைநாட்டியவர், மாயைகள், கவர்ச்சிகள் இல்லாத பகுத்தறிவு ரீதியில் ஒரு கொள்கை வழி நாகரிகத்தை உருவாக்கியளித்த மாமேதை, ஒரே ஆன்மீக தலைமையில் இருபது பூவுலகப் பேரரசுகளின் நிறுவனர் தாம் முஹம்மத் (ஸல்) அவர்கள்.

திங்கள், 11 ஜூலை, 2011

அன்பே உருவான அம்மா…! – பாகம் – 2

அன்பே உருவான அம்மா…! – பாகம் – 2


ஹேம்குமார் அகர்வால்

இறையொளியால் என் உள்ளம் நிறைந்து இருக்கிறது. என் அம்மா!

நான் உங்கள் மகன். நான் இஸ்லாத்தை ஏற்குமுன், இஸ்லாமியப் பாதையிலான பயணத்தை ஆரம்பிக்குமுன், எத்தகைய கெட்ட செயல்களை உடையவனாக இருந்தேன் என்பது நீங்கள் அறியாதது அல்ல. திருடுவது, பொய் சொல்வது போன்றவை அப்போது எனக்கு மிகச் சிறிய விஷயங்கள். எந்தக் கணமும் இத்தகைய தீமைகளில் மிக தைரியமாக ஈடுபட பின் வாங்கியது இல்லையே! அந்த அளவுக்கு தீய எண்ணங்கள் என் உள்ளத்தை ஆக்கிரமித்து இருந்தன. என்னுடைய தரங்கெட்ட வார்த்தைகள், தமாஷ்கள், நிந்தனைகள் எத்தனை பேரின் கண்களில் நீர் மல்கச் செய்திருக்கும்?

ஆனால் இன்று, இப்படி ஒரு தீர்மானம் எடுத்ததன் பின்பு, இஸ்லாத்தை என் வாழ்வோடு ஒன்றிவிட்ட மார்க்கமாக ஏற்றதற்குப் பின்னர், இறையொளியால் என் உள்ளம் நிறைந்து காணப்படுகிறது. பாவ இருள்கள் முற்றாக நீங்கி விட்டுள்ளன.

என்னைப் படைத்த நாயன் ‘இவை கெட்டவை’ எனத் தடுத்தவற்றை நான் எப்படியம்மா தைரியமாகச் செய்ய முடியும்? அது அவனுடைய கூற்றைப் புறக்கணிக்கும் கொடிய குற்றமல்லவா?

அன்புள்ள என் அம்மா!

நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறைக்குப் பெயர் இஸ்லாம். அது முழு மனித சமுதாயத்திற்கும் அல்லாஹ்வால் அருளப் பெற்றது. அதில் எத்தகைய குறையும் இலலை. மனிதனின் முழு வாழ்வுக்கும் அவசியமான அத்தனை சட்டதிட்டங்களும் அதில் அடங்கியுள்ளன.

ஒரு மனிதன்எப்படி வாழ்வது

எப்படி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது

மற்றவர்களுடன் நெருங்கிப் பழகும் பொழுது ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்வது.

அரசியலில் எவ்வாறு ஈடுபடுவது

ஓர் ஆட்சியை எவ்வாறு நடத்திச் செல்வது

வாழ்வில் எத்தகைய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பது.

எவ்வாறு உண்பது, உழைப்பது, திருமணம் புரிவது

இவை போன்ற எல்லா விஷயங்களிலும் இஸ்லாம் முன் வைக்கும் இறையாணைகள் பொருத்தமான வழிவகைகளை நமக்குக் காட்டித் தருகின்றன.

இன்னும் கேளுங்கள் அம்மா!

இஸ்லாம், மனிதர்கள் தமது பெற்றோர், சகோதர சகோதரிகள், கணவன், மனைவி, அயல்வீட்டார், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றுமுள்ளோருடன் எவ்வாறு நடந்து கொள்வது என்பதையும் சொல்லித் தருகின்றது. நபி (ஸல்) அவர்கள் நடந்து காண்பித்து விட்டுச் சென்றார்கள்.

நான் இப்பொழுது வல்லமையும், அன்பும், கருணையும் உடைய அல்லாஹ்வின் ஆணைகளை சிரமேற்கொண்டு, அவன் விருப்பப்படி வாழ திடசங்கற்பம் பூண்டுள்ளேன். அந்த வகையில், பெற்றோருடன் எவ்வாறு நடந்து கொள்வது என்பது பற்றிய அவனது வழிகாட்டல் என்ன என அறிய விழைந்து, அவற்றிற்கு அமைய நடந்து கொள்கிறேன்.

அல்லாஹ்வும், அவனது இறுதித் தூதர் (ஸல்) அவர்களும், பெற்றோருடன் எவ்வாறு நடந்து கொள்வது? அவர்களுக்கு எவ்வாறு மரியாதை செய்வது என்பன பற்றி என்ன மொழிந்துள்ளனர் என உங்களுக்குத் தெளிவுபடுத்த விழைகின்றேன்.

வல்லமைமிக்க அல்லாஹ் தனது பரிசுத்த குர்ஆனில் பெற்றோருக்குப் பணிந்து நடப்பது பற்றி பெருமளவு குறிப்பிட்டுள்ளான்.

‘பெற்றோருடன் பேணுதலாக நடந்து கொள்ளுங்கள், அவர்களைத் துன்புறுத்தாதீர்கள், அவர்கள் கூறுபவற்றை மிக்க மரியாதையுடன் செவிமடுங்கள், அவர்கள் செய்த உதவிகளுக்கு நன்றி செலுத்துங்கள் என்பன அவற்றுள் சில.

முஹம்மத் (ஸல்) அவர்கள் பெற்றோருக்குக் கண்ணியம் அளிப்பது பற்றி மொழிந்தவை இவ்விறை போதனைகளுக்கு முற்றிலும் இணக்கமானவை.

ஒருமுறை, ஒருவர் வந்து, ‘யா ரசூலுல்லாஹ்! அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான செயல் எது?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவினார்.

‘உரிய வேளையில் தொழுவது’ என நபி (ஸல்) அவர்கள் பதில் மொழிந்தார்கள்.

‘அதற்கு அடுத்த, அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான செயல் எது?’ என மீண்டும் அவர் வினவினார்.

‘பெற்றோருடன் கண்ணியமாக நடந்து கொள்வது’ என அல்லாஹ்வின் தூதர் பதில் மொழிந்தார்கள்.

மற்றொரு முறை, வேறொருவர் வந்து நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, ‘யா ரசூலுல்லாஹ்! தாய் நாட்டையும் பிறந்தகத்தையும் விட்டுவிட்டு அல்லாஹ்வுக்காகப் புனிதப் போரில் ஈடுபடுவதாக உங்கள் கரங்களில் சத்தியம் செய்கிறேன். அதற்கான வெகுமதிகளை அவனிடம் மட்டுமே எதிர்பார்க்கிறேன்’ எனக் கூறினார்.

இதை நிதானமாக கேட்டுக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் மிக அமைதியாக, ‘உங்கள் பெற்றோர் இருக்கின்றனரா? எனக் கேட்டார்கள்.

அதற்கவர், ‘அல்லாஹ்வின் அருளால் அவ்விருவரும் நலமாக இருக்கின்றனர்’ என பதில் அளித்தார்.

‘அப்படியா? நீங்கள் அவர்களுக்குப் பணிவிடை செய்யுங்கள். அப்பணிவிடைகளாவன அல்லாஹ்வுக்காக ஹிஜ்ரத்தும், ஜிஹாதும் செய்த நன்மையை அவனிடமிருந்து பெற்றுத் தரும்’ என்பது ரசூல் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கமாக இருந்தது.

நபி (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்:

‘உங்கள் சுவனமும் நரகமும் உங்கள் பெற்றோரின் பாதத்தடியில் தான்!’ என்று.

இந்த நபி மொழியின் கருத்து இதுதான்:

தமது பெற்றோருக்கு அடிபணிந்து, அவர்களுக்குப் பணிவிடை புரிந்து, அவர்கள் செய்த உதவி ஒத்தாசைகளுக்கு நன்றி பகர்ந்து, அவர்களுக்கு நல்லன செய்தால் சுவனம் கிட்டும். அவ்வாறின்றி, அவர்களைத் துன்புறுத்தி, தொல்லைகள் பல கொடுத்து வாழும் ஒருவர், நரகில் கொழுந்து விட்டெரியும் நெருப்புக்கு இரையாவார் என்பதாகும்.

பிள்ளைகள் தம் பெற்றோருடன் மிக நல்ல விதமாக நடந்து கொள்ளல் வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் பல கட்டங்களில் மொழிந்துள்ளார்கள்.

அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:


‘அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை (‘உஃப்’) சீ என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம்’. (அல்குர்ஆன் 17:23)

தொடரும்...

நன்றி:இஸ்லாமியதாவா.காம்