வியாழன், 24 டிசம்பர், 2009

வேதம் புதிது

Ahmad Baqavi
நன்மையை ஏவித் தீமையைத் தடுப்போமாக!
இன்று உலகில் வேதங்கள் என்ற பெயரால் கற்பனைகளையும், கனவுகளையும், அறிவிற்கே பொருந்தாத கதைகளையும் கலந்து உலா வரும் பல வேதநூல்களைக் காணமுடிகிறது. மனிதன் தான் விரும்பியவாறு தன் கையாலே எழுதிவிட்டு அதை இறைவன் அருளியதாக வாதிடுகிறான். ஆன்மீகத்தின் பெயரால் புனையப்படும் பல கதைகள் கேட்பதற்கே வேடிக்கையாக இருக்கும் அந்தக் கதைகளில் ஒன்றை தெரிந்து கொண்டு நம் தலைப்புக்கு வருவோம்.ஒரு படகோட்டியும், ஓர் ஆன்மிகவாதியும் அருகேயுள்ள ஆற்றில் படகில் பயணம் செய்துகொண்டிருந்தனர்.. படகு புறப்பட்டு சிறிது நேரத்தில் அந்த ஆன்மிகவாதி, தான் மதித்துப் போற்றும் தன் வேதத்தின் ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டி படகோட்டியிடம் இதை நீ படித்திருக்கிறாயா…? என்று கேட்க, அதற்கு படகோட்டி இல்லை என்று சொன்னானாம். இதைக்கேட்ட அந்த ஆன்மிகவாதி, வாழ்க்கையில் ஒரு பகுதியை இழந்துவிட்டாயே… என்று வருத்தத்துடன் கூறினாராம்.பின்னர் அவர் வேதத்தின் மற்றொரு பகுதியைச் சொல்லி, சரி, இதையாவது தெரிந்து வைத்திருக்கிறாயா?… என்று கேட்க, அதற்கும் படகோட்டி இல்லை என்றே பதில் கூறினானாம். இதைக் கேட்ட ஆன்மிகவாதி, உன் வாழ்க்கையில் சரி பாதியை நீ இழந்துவிட்டாயே…! என்று கூறி நொந்துகொண்டாராம்…பின்னர் மீண்டும் ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டி, எல்லாம் போகட்டும்! இந்த வசனத்தையாவது தெரிந்து வைத்திருக்கிறாயா…? என்று கேட்க, அதற்கும் அந்த படகோட்டி வழமைபோல் இல்லை என்றே பதிலளித்தானாம்… அதைக்கேட்ட அந்த ஆன்மிகவாதி ஏளனத்துடன், என்னப்பா…! உன் வாழ்க்கையில் முக்கால் பாகத்தை அநியாயமாக தொலைத்து விட்டாயே…! என்று வேதனையுன் கூறினாராம்.
இப்படியே படகு சென்று கொண்டிருக்கிறது. சிறிது நேரம் கழித்து படகோட்டி அந்த ஆன்மிகவாதியிடம் பணிவுடன், ஐயா… தங்களுக்கு நீச்சல் தெரியுமா? என்று கேட்டானாம். அதற்கு அவர், தெரியாதப்பா… ஏன் கேட்கிறாய்…? என்று ஆவலுடன் கேட்டாராம். இல்லை… இப்போது ஆற்றில் வெள்ளம் வந்துவிட்டது…எனக்கு நீச்சல் தெரியும். தப்பித்துக்கொள்வேன்… தாங்களோ முழு வாழ்க்கையையும் தொலைத்து விட்டீர்களே…! என்று சொல்லிக்கொண்டே ஆற்றில் குதித்து, நீந்தித் தப்பித்துக்கொண்டானாம். – இது தான் கதை.இனி விஷயத்துக்கு வருவோம்… ஆன்மிகம் என்பது பெரும்பாலும் பழைய விட்டலாச்சாரியார் கதைகளையும், நாம்வாழும் இந்த உலகை விட்டுவிட்டு வேறு ஏதோ உலகங்களைப்பற்றி மட்டும் சொல்லுகின்ற செய்திகளாகவே இருந்து வருகிறது.இப்படி ஒரு புறம் என்றால், அவ்வப்போது மனிதர்கள் தாம் விரும்பியதை எல்லாம் எழுதி வைத்துக்கொண்டு, இது தான் வேதம் என்று மக்களை நம்பவைத்து, மூட நம்பிக்கைகளையும், சடங்கு சம்பிரதாயங்களையும் சாடி மக்களை எவ்வித அறிவும் இருந்திராத ஒரு கற்காலத்துக்கு அழைத்துச் செல்கின்றனர்.

வேதங்களில் கற்பனைக் கதைகள்
இப்படிப்பட்ட வேதங்களில் அறிவியல் சார்ந்த கருத்துக்கள் எங்காவது இடம் பெற்றிருக்குமா என்றால், அதற்கு நேர்மாற்றமான ஜோதிடக் கருத்துக்களும், பேய் பிசாசு, பில்லி, சூனியம் போன்ற கருத்துக்களும் தான் நிறைந்து காணப்படுகின்றன. இவை இவ்வாறிருக்க, இறைவனால் அருளப்பட்ட வேதங்கள் என்று கூறப்படும் சில வேதங்களோ… இறைவன் அருளிய வேத வசனங்களையெல்லாம் தன் விருப்பத்கேற்ப மாற்றியமைத்து, மக்கள் தங்கள் சுயவிருப்பத்திற்கேற்ப எழுதிவைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது. . இவற்றிலும், மூடநம்பிக்கைகளுக்கும், அறிவியலுக்கு முரண்படும் கருத்துக்களுக்கும் பஞ்சமே இல்லை.ஆக, ஆன்மிகம் என்பது வெறுமனே கடவுளை வணங்குவதையும், ஏதோ மனிதனுக்குப் புரியாத ஒரு உலகத்தைப் பற்றி மட்டுமே சொல்லும் வேதங்களையும் கொண்டிருப்பதால் விரக்தியடைந்து போன ஒரு சாரார் ”கடவுளே இல்லை” என்று சொல்லும் முடிவுக்கு வந்து நாத்திகர்களாகி விட்டனர்.இந்த வேதங்களின் போலித்தனத்தின் விளைவாக அவர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் ”மதம் ஒரு அபின்” போன்றது என்றே கூறிவிட்டனர்.
பிற வேதங்களில் வாழ்க்கை நெறிகள் அனைத்தும் இல்லை.
மனிதன் தான் பிறந்தது முதல் இறக்கும் வரை தன் வாழ்வை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நெறிகள் எந்த வேதத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை.அப்படி ஏதாவது வேதம் இருந்திருந்தால், மக்கள் செய்துவரும் பெரும்பாலான பாவ காரியங்கள் தானாகவே தவிர்க்கப்பட்டிருக்கும். பிறருக்கு உதவும் மனப்பான்மை பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.

எல்லா காலத்திற்கும் ஏற்ற வேதம்
எல்லோருக்கும், எல்லா இடத்துக்கும் பொருந்தும் வகையில் அப்படி ஒரு வேதம் இருக்கிறதா என்று கேட்கும் மக்களுக்கு இதோ ஒரு நற்செய்தி…! ஆம்…! ஒரு வேதம் இருக்கிறது. அது இறைவனால் அருளப்பட்ட வேதம்தான் என்பதற்கு எல்லா வகையான சான்றுகளோடும் இருக்கிறது.அதுதான் சுமார் 1430 வருடங்களுக்கு முன்னர் இறைவனால் அருளப்பட்ட வேதமான திருக்குர்ஆன். “1430 வருடங்களுக்கு முன்னர் உள்ள வேதமாம்! இதுவரை ஒரு எழுத்து கூட கூட்டாமல் குறைக்காமல் அப்படியே திருத்தப்படாமல் உள்ளதாம்.!”. நம்ப முடிகிறதா என்று நீங்கள் கேட்கலாம். இனி வரும் செய்திகளை முழுமையாகப் படித்து முடியுங்கள். இக்கேள்விக்கான பதில் தானாகவே கிடைக்கும்.

காலத்தால் மாறாத வேதம்
நாமே இந்த இந்த வேதத்தை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். (திருக்குர்ஆன் 15:9) திருக்குர்ஆனை அருளிய இறைவன் அத்துடன் நின்றுவிடாமல், அதைத் தானே பாதுகாப்பதாகவும் உறுதியளிக்கிறார். இறைப்பாதுகாப்பு எப்படிப்பட்டது என்பதை இனிவரும் செய்திகளை வைத்து முடிவு செய்து கொள்ளுங்கள்.இது (திருக்குர்ஆன்) மனித குலத்துக்குச் சென்றடைய வேண்டியதாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படவும், வணக்கத்திற்கு உரியவன் ஒரே ஒருவனே இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், அறிவுடையோர் சிந்திப்பதற்காகவும் (இது அருளப்பட்டுள்ளது.) (திருக்குர்ஆன் 14:52)

மனித வாழ்வுக்குத் தேவையானவை அனைத்தும்
இது மனித குலத்துக்குரிய வேதம்…என்பது சர!. அப்படியானால் அதில் மனித வாழ்வுக்குத் தேவையானவை என்னென்ன சொல்லப்படிருக்கும் என்று அறிய ஆவலாய் இருப்பீர்கள்.? இதோ ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.மனிதன், காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை, எப்படியும் வாழலாம் என்று இல்லாமல், இப்படித்தான் வாழ வேண்டும் என்று திருக்குர்ஆனும் அதற்கு விளக்கமாக உள்ள இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாறும் வலியுறுத்துகின்றன. “அந்நாளில் ( மறு உலக நீதி விசாரணை நாளில் உங்களுக்கு வழங்கப்பட்ட) அருட்கொடைகள் பற்றி விசாரிக்கப்படுவீர்கள”. (திருக்குர்ஆன் 102:8)
மேற்சொன்ன வசனம், மனிதன் என்ற வகையில் நமக்கு இறைவன் அளித்துள்ள உயிர், அறிவு, நேரம், பொருள் என அனைத்தைப் பற்றியும் இறந்த பின் எழுப்பப்பட்டு மறு உலகில் விசாரணை செய்து சரியான தீர்ப்பை கடவுள் வழங்குவார் என்பதைச் சொல்கிறது. நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச்செலவிட்டாலும் பெற்றோருக் காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக் காகவும், திக்கற்றோருக்காகவும் (செலவிட வேண்டும்)… (திருக்குர்ஆன் 2:215) சுயநலத்தை மட்டுமே கவனத்தில் கொள்ளாமல் பொதுநலத்தையும் பேண வேண்டும் என்பதை மேற்சொன்ன வசனம் அழகாக வலியுறுத்துகிறது.
நாம் நாள்தோறும் வகைவகையாக உணவுகளை உட்கொள்கிறோம். எவையெல்லாம் உண்ணவேண்டும் எவையெல்லாம் உண்ணக் கூடாது என்று கூட ஒரு வேதம் கூறுமா? ஆம், கூறுகிறது… இதோ பாருங்கள்:தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுத்துப்பலியிட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன… (திருக்குர்ஆன் 5:3) இதே வசனத்தின் தொடர்ச்சியாக இன்னும் பலவற்றையும் மனிதன் சாப்பிடக் கூடாது என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது. என்ன ஆச்சரியம்…! இன்றைய நவீன அறிவியல் கூட நீண்ட ஆய்வுக்குப் பிறகு இந்த வசனம் சொல்வதைப் போன்று அப்படியே கூறுகிறது.
மதுவும் சூதும்
“மதுவை நாடு முழுவதும் ஒழிக்கவேண்டும்” என்று கூறினார் தேசத்தந்தை காந்தியடிகள். ஆனால் அவர் பிறந்த குஜராத்திலேயே இன்று மது சில தடைகளுக்கு மத்தியிலும் சர்வ சாதாரணமாகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இஸ்லாம் தனது அருள்மறை குர்ஆன் மூலம் மதுவை முற்றிலுமாகத் தடை செய்கின்றது. மது மற்றும் சூதாட்டம் பற்றி (தூதரே…!) உம்மிடம் கேட்கின்றனர். அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு தான் இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது என்று நீர் கூறுவீராக…. (திருக்குர்ஆன் 2:219) இன்று மனிதன் பெருள் ஈட்டுவதற்கு ஒரு வரைமுறையே கிடையாதோ என்று நினைக்கும் அளவுக்கு எண்ணற்ற குறுக்கு வழிகள் கையாளப் படுகின்றன. தவறுகளைச் செய்யாத மனிதர்கள் கூட எப்படியும் சம்பாதிக்கலாம் என்று மனம் போன போக்கில், மனித ரத்தத்தை உறிஞ்சும் வட்டியை வியாபாரமாகக் கொண்டு பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால், இறைவேதம் திருக்குர்ஆனோ வட்டியை கடுமையாகத் தடை செய்கிறது.

உடலை அழிக்கும் விபச்சாரம்
விபச்சாரம் மனித அழிக்கும் கொடிய செயல் எனக்கூறுகிறது இஸ்லாம். இதனால் தான் “விபச்சாரத்தின் பக்கமே நெருங்காதீர்கள்” என குர்ஆன் ( 17:32) மனித சமுதாயத்திற்குக் கட்டளையிடுகிறது.இன்று உலகமக்களின் அழிவுக்கும் மேலைநாடுகளின் ஒழுக்க வீழ்ச்சிக்கும் இந்த பாலியல் குற்றங்களே காரணமாகும் என உலகின் புள்ளி விவரங்கள் பட்டியலிட்டுக் கூறுகின்றன.

வட்டி
வட்டியை உண்போர் ( மறைமை நாளில்) சாத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். வியாபாரம் வட்டியைப் போன்றதே என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (திருக்குர்ஆன் 2:275)இன்று உலகில் லஞ்சம் வாங்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
லஞ்சம்
உலக நாடுகளில் அதிகமாக லஞ்சம் வாங்குவோர் கணக்கிடப்பட்டு சமீபத்தில் புள்ளிவிபரமாக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அப்பட்டியலில்; நம் நாடு கூட இடம் பெற்றுள்ளது. இந்தக் கேவலமான லஞ்சத்தை ஒழிப்பதற்காக அந்தந்த அரசாங்கங்களும் பல்வேறு சட்டங்களை இயற்றி, பலதரப்பட்ட முயற்சிகளையும் மேற்கொள்ளத்தான் செய்கின்றன. எனினும், லஞ்சம் சிறிது கூட குறைந்த பாடில்லை. உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! மக்களின் பொருட்களில் ஒரு பகுதியை தெரிந்துகொண்டே பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள். (திருக்குர்ஆன் 2:187)
மேற்சொன்ன படிப்பினைகளையெல்லாம் சிறிதும் வழுவாது தன் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும் ஒருவன், இதன் காரணமாக சிரமப்படும்போது, அவனைப் பொறுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும் இருக்கச் சொல்கிறது இஸ்லாம். விரக்தியடைந்து தற்கொலைப் பக்கம் கண்டிப்பாகப் போகக்கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக்கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக…! (திருக்குர்ஆன் 2:155)…உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்….(திருக்குர்ஆன் 4:29) -

பெற்றோரைப்பேணல்
இனி, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நம்மைப் பெற்று, பேணி வளர்த்து, ஆளாக்கும் பெற்றோர் இடத்திலும், மற்றவர்களிடத்திலும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்: அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தொலைவாக உள்ள அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், திக்கற்றோருக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 4:36).பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள் என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்துவிட்டால் அவ்விருவரையும் நோக்கி சீ… என்று கூட கூறாதீர்கள்! அவ்விருவரையும் விரட்டாதீர்கள்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுங்கள்! (திருக்குர்ஆன் 17:23)

ஏழையின் துயர் துடைத்தல்
தர்மம் என்பது அவரவர் விருப்பத்துக்கேற்ப செய்யப்படும் ஒன்றாகவே உலகத்தில் கருதப்படுகிறது. உலகின் அனைத்துநாடுகளிலும் எதற்கெல்லாமோ வரி வசூலிக்கப்டுகிறது, ஆனால், ஏழைகளில் துயரை நிரந்தரமாகத் துடைப்பதற்கென்றே ஏழைவரி என்ற பெயரில், வசதியுடையோரிடமிருந்து வரி வசூலித்துக் கொடுக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் தான். இது பற்றி இறைவேதம் திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்: (தூதரே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக! (திருக்குர்ஆன் 9:103) இப்படி வசூலிக்கப்படும் ஏழைவரி யார் யாருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதையும் திருக்குர்ஆன் கூறுகிறது…தர்மங்கள், யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்;பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், திக்கற்றோருக்கும் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன். ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 9:60)

உயிர்களையும் உடைமைகளையும் காத்தல்
மனித உயிர்கள் உயர்வானவை. உயர்வாக மதிக்கப்படவேண்டும். ஆனால், இன்று உலகில் எங்கு பார்த்தாலும், சாதாரண சிறு கொலைகளிலிருந்து மிகப்பெரும் இனப்படுகொலைகள் வரை சிறிதும் தயக்கமின்றி கொலைபாதகம் நிகழ்த்தப்படுகிறது.இக்கொலைகளைச் செய்வோர் சாரதாரண மனிதர்களாக இருந்தால், சில காலங்களை சிறையில் கழிக்கின்றனர். அங்கு அவர்களுக்கு உணவு, உறைவிடம் மருத்துவம் என அனைத்து வசதிகளும் கேட்டவுடன் கிடைக்கிறது. இதே கொலைகளை சற்று செல்வாக்கு மிக்கவர் செய்தால் அவருக்கு அதை விட இலகுவான தண்டனைகள் கொடுக்கப்படுகின்றன. அல்லது கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றனர். இது தான் பெரும்பாலும் செய்யப்படும் நடைமுறை.இது போன்றவற்றால்;, பாதிக்கப்ட்டவனின் மனக்குமுறல் சிறிதும் துடைக்கப்படாது என்பதே உலகறிந்த உண்மை. ஆனால் இஸ்லாம் திருக்குர்ஆன் மூலம்,…ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால், அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு மனிதரை அவர் வாழவைத்தால், எல்லா மனிதரையும் வாழ வைத்தவர் போலாவார்… (திருக்குர்ஆன் 5:32) இவ்வாறு கூறுகிறது.

குற்றவியல் தண்டனைகள்
அத்தோடு நிறுத்திவிடாமல் கொலைக்கு மரணதண்டனை விதிக்க கட்டளை இடுகிறது. இன்னபிற பெரும்பாவங்களுக்கும் கூட எல்லோருக்கும் எக்காலத்திலும் பொருந்தும் அற்புத சட்டங்களை முன்வைக்கிறது. விரிவாக அறிந்து கொள்ள வேண்டுமானால், திருக்குர்ஆனை விரிவாகப் புரட்டிப் பார்த்துக்கொள்ளலாம்.

அறிவியல் உண்மைகள்
வாழ்க்கைக்கு வழிகாட்டி..என்பது . சரி. இன்றைய அறிவியல் உண்மைகளை உறுதிப் படுத்தும் சான்றுகள் ஏதேனும திருக்குர்ஆனில் உள்ளனவா என நீங்கள் கேட்டால் அதற்கு பலப்பல சான்றுகளைக் கூறமுடியும். எனினும் விரிவை அஞ்சி சில சான்று களை மட்டும் தருகிறோம்..உலகம் உருண்டை என்று சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆய்வு செய்து சொன்னவர் விஞ்ஞானி கலிலியோ! அவருக்கு அன்றைய மக்கள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? மரண தண்டனை!. ஆனால், அதையே கலிலியோவுக்கும் முன்னரே 1430 வருடங்களுக்கு முன் திருக்குர்ஆன் எவ்வளவு அழகாகக் கூறுகிறது பாருங்கள்: (அவனே) இரண்டு கிழக்குத் திசைகளுக்கும் இறைவன். இரண்டு மேற்குத் திசைகளுக்கும் இறைவன். (திருக்குர்ஆன் 55:17) பூமி தட்டையாக இருந்தால் ஒரு இடத்தில் மட்டும் உதித்து மறுஇடத்தில் மறைந்து விடும். பூமி உருண்டையாக இருந்தால் தான் பூமியின் ஒவ்வொரு பகுதியிலும்,” உதிக்கும் பல திசைகளும் மறையும் பல திசைகளும்” உருவாகின்றன. (இந்தியா,அமெரிக்கா) “ஒன்றுக்கு மேற்பட்ட உதிக்கும் திசைகள், மறையும் திசைகள்” என்ற சொல் மூலம் பூமி உருண்டை வடிவமானது என்ற அறிவியல் உண்மையை இந்த இறைவேதம் குர்ஆன் ஒரு மாபெரும் அறிவியல் விறபன்னரைப் போல் பேசுகிறது.
இது ம்ட்டுமா?” அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான். அவனே இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்.(குர்ஆன் 39:5) இதில் “யுகவ்விரு” எனப்பயன் படுத்தப்பட்டுள்ள சொல் “சுற்றுதல்” எனப் போருள் படுகிறது. அதாவது தலையில் சுற்றப்படும் தலைப்பாகைக்கு நிகரான ஒருசெயல்ாகும் இது. பூமி உருண்டையாக இருக்கும் போது தான் இரவும் பகலும் சுற்றி வரும் செயல் நிகழமுடியும். அது மட்டுமல்ல ஒரு படி மேலே சென்று சென்று பூமியின் வடிவத்தையும் தெளிவுபடுத்துவது இன்றைய ஆய்வாளர்களை வியப்பிலாழத்தியுள்ளது. “பின்னர் அவனே பூமியை விரித்தான் (குர்ஆன்:79:30) கூறுகிறது. இந்த இறைமறை வசனத்தில் வரும் “தஹாஹா” என்பது தீப்பறவையின் முட்டை வடிவம் என்பதைக் குறிக்கிறது. அதாவது தீப்பறவையின் ஓரப்பகுதி தட்டையாக இருக்கும். எனவே பூமி உருண்டையாகக் கூட இல்லாமல் முட்டை வடிவமாக இருக்கும் எனக்கூறுகிறது. ஆம் விஞ்ஞானிகள் முழுமையான உருண்டை வடிவமாக இல்லாமல் முட்டைவடிவமானது எனக்கூறுகின்றனர். குர்ஆனின் உவமை விந்தையிலும் விந்தையல்லவா?
இதைப்போன்று விண்ணியியல்,புவியியல்,மண்ணியல்,கடலியல்,இயற்பியல்,
உயிரியல், தாவரவியல், விலங்கியல், மருத்துவ இயல், உடலின் செல்லியல்,கருவியல போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிருபிக்கப்பட் வஞ:ஞானக்கருத்துகளைக் கூறி உலகையே வியப்பிலாழ்த் துகிறது.
திருக்குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்பதை நிரூபிக்கும் மிகப்பெரும் சான்றாகும் இது.

இது இறைவனின் வேதம் தான்
அது சரி… திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து வந்த வேதம்தான் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று நீங்கள் கேட்பதற்கு முன்னர் நாமே அதைத் தெளிவு படுத்துகிறோம்.திருக்குர்ஆன் இறைவேதம்தான் என்பதை நிரூபிக்க எண்ணற்ற சான்றுகளை திருக்குர்ஆனிலிருந்தே காட்ட முடியும. என்றாலும், அவற்றிலிருந்து ஒரே ஒரு சான்றை மட்டும் பார்ப்போம்..சுமார் 2000 வருடங்களுக்கு முன் எகிப்து நாட்டை கொடுங்கோல் அரசன் ஃபிர்அவ்ன் என்ற இரண்டாம் அலெக்சாண்டர் ஆண்டு வந்தான். அவனால் குடிமக்கள் பட்ட அவலங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அக்காலத்தில் வாழ்ந்த இறைத்தூதர் மூஸாவின் படையை ஃபிர்அவ்ன் தன் படையுடன் துரத்துகிறான். எதிரே கடல் குறுக்கிடுகிறது. தப்பிக்க வழியறியாது நின்ற மூஸாவின் படைகளுக்கு இறைவன் கடலின் குறுக்கே பாதையை ஏற்படுத்திக் கொடுக்கிறார்.மூஸாவும், அவரது படைகளும் அவ்வழியே தப்பிச் செல்வதைப் பார்த்த மன்னன் ஃபிர்அவ்ன் அவனது படைகளுடன் அதே பாதையில் துரத்திச்சென்ற போது, இறைவன் அம்மன்னனை அவனது படையுடன் கடலில் மூழ்கடித்து விடுகிறான். ஆனால் அம்மன்னனின் “உடலை மட்டும் பாதுகாப்போம” என்று கூறுகிறான். இச்சம்பவம் 1430 வருடங்களுக்கு முன்பே அருளப்பட்ட திருக்குர்ஆனில் அழகாகச் சொல்லப்பட்டிருப்பதைப் பாருங்கள்.
உனக்குப் பின்வரும் மக்களுக்கு நீ ஒரு சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம் (என்று கூறினோம்) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். (திருக்குர்ஆன் 10:92) இதில் ஆச்சரியம் என்னவென்றால், மூழ்கடிக்கப்பட்டது அம்மன்னனும் அவனது படைகளும் தான்! ஆனால் திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மன்னன் ஃபிர்அவ்னின் உடல் மட்டும் இன்று கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு, எகிப்து அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது நம்மை வியப்பிலாழ்த்துகிறது. இந்த உடலை உலகப்பயணிகள் அங்கே சென்று கண்கூடாகப் பார்த்துவருகின்றனர்.. இது ஒன்றே போதும் திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு…!!! கல்வி, பொருளாதாரம். அரசியல் உள்ளிட்ட வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் உள்ள பிரச்சினைகளுக்கும் அழகிய அற்புதத் தீர்வுகளைத் தந்து கொண்டிருக்கிறது திருக்குர்ஆன்.
1430 வருடங்களுக்கு முன்பே இந்த அருள்மறை திருக்குர்ஆன் அருளப்பட்ட போதிலும் இன்று நடப்பவை, இனி நடக்கப்போவது ஆகிய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக உள்ளதால் “என்றும் இவ்வேதம் புதிது” என்பதைச் சொல்வதற்காகத்தான் “வேதம் புதிது” என்று தலைப்பில் குறிப்பிட்டுள்ளோம்.அவர்கள் இந்த குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் பூட்டப்படடுள்ளனவா? (திருக்குர்ஆன் 47:24) மேற்கண்ட இறை வசனத்தை உங்கள் சிந்தனைக்கு வைக்கிறோம். இன்னும் பல அரிய செய்திகளை இறைவேதம் திருக்குர்ஆன் தன்னகத்தே பொதிந்துள்ளது. தெளிவான சிந்தனையுடன் அனைத்து மதத்தினரும் இவ்வேதத்தைப் படித்துப்பார்த்தால் இது இறைவனின் வேதம் தான் என்பதை புரிந்து கொள்வார்கள். குர்ஆனை படித்துப் பார்க்க உதவுங்கள். அவர்கள் நடுநிலையுடன் ஒரு முடிவுக்கு வருவார்கள்.

திங்கள், 14 டிசம்பர், 2009


According to Merriam-Webster online dictionary, Religion ia “a cause, principle, or system of beliefs held to with ardor and faith.
எளிமையாகச் சொல்வதென்றால் “மதம் என்பது சில காரணங்கள், கொள்கைகள் மீது ஒருவர் ஆழ்ந்த நம்பிக்கை கொள்வது“. கடவுளை நம்பிக்கைக் கொண்டவர்களின் மதத்தில் கடவுள் இருக்கிறான். கடவுளை நம்பாதவர்களின் மதத்தில் கடவுள் இருப்பதில்லை. இரு தரப்பினருமே வெவ்வேறான நம்பிக்கைகளைக் கொண்ட மதவாதிகள் தான். இதைத்தான் ஐன்ஸ்டீன் சொல்கிறார். “நான் கடவுள் நம்பிக்கையற்ற, ஆனால் ஓர் ஆழமான ஆன்மீகவாதி. இது ஒரு புதுவகையான மதம்தான். (I am a deeply religious nonbeliever. This is somewhat new kind of religion.)
கடவுள் என்னும் கோட்பாட்டை மறுப்பவர்கள் தங்களை ‘பகுத்தறிவுவாதிகள்’ என, சற்றும் பொருத்தமேயில்லாத ஒரு பெயரால் அழைத்துக் கொள்கிறார்கள். நமக்குத் தெரிந்து தமிழகத்தில்தான் இந்த ‘பகுத்தறிவு நாடகம்’ அமோகமாக நடந்து வருகிறது. மற்ற நாடுகளில் ‘கடவுள் இல்லா மதவாதிகள்’ தங்களை ‘Rationalists’ என்று அழைத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. சரி, பகுத்தறிவுவாதி என்ற பெயர் ஏன் இவர்களுக்குப் பொருந்தாது?
Rational: 1 a: having reason or understanding b: relating to, based on, or agreeable to reason
மேற்கண்ட அகராதிப் பொருள்படி, பகுத்தறிவு என்பது ‘காரண காரியங்களை நன்கு புரிந்து அதன் அடிப்படையில் ஒரு கொள்கையில் நம்பிக்கைக் கொள்வது‘ எனலாம். ‘கடவுள் இல்லா மதவாதி’களின் அடிப்படைக் கொள்கை ‘கடவுள் என்று ஒருவர் இல்லை’ என்பதுதான். இதை இவர்கள் ஆராய்ந்து அறிந்து, காரண காரியங்களின் அடிப்படையில்தான் நம்புகிறார்களா என்றால் இல்லை. கடவுள் இல்லை என்பதை இவர்கள் யாரும் நேரில் போய்ப் பார்த்து விட்டு வந்து சொல்லவில்லை. ஆராய்ச்சிகள் மேற்கொண்டு ஆதாரங்களைக் கொடுக்கவில்லை. இந்தப் பிரபஞ்சத்தை படைத்து இயங்கச் செய்திருப்பவன் கடவுள் அல்ல என்றால் வேறு எந்தச் சக்தி அதைச் செய்தது என்பதை அவர்கள் விவரிக்கவில்லை. எந்தச் சக்தியுமே இல்லாமல் அவை தானாகத் தோன்றியது என்பதையும் இவர்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துக் காட்டவில்லை. சுருக்கமாக, ‘பகுத்தறிவுக் கொள்கை’ என்று சொல்லிக் கொள்வதற்கு எந்தத் தகுதியுமற்றதாக இருக்கிறது இவர்களின் கொள்கை.
இறை நம்பிக்கையாளர் ‘இறைவன் இருக்கிறான்’ என்று நம்புகிறார். இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தவன் இறைவன் என்பதால் அவன் மாபெரும் சக்தியுடைவன். மனிதர்களின் புலன்களுக்கு அப்பாற்பட்டவன். ஆனால் அவன் இருக்கிறான் என்பதை, நாம் கண்ணால் காணக்கூடிய வேறு பல அத்தாட்சிகளைக் கொண்டு உணர்ந்துக் கொள்ள முடியும். இறைவன் புலன்களுக்கு அப்பாற்பட்டவன் என்பதால், அவனைக் கண்களால் காண இயலாது. ‘உன் கடவுளை எனக்குக் காட்டு’ என்று யாராவது கேட்டால் அவர்களுக்கும் காட்ட முடியாது.
இறை நம்பிக்கையாளர் தனது நம்பிக்கைக்கு ஆதாரமாக physical evidence எதனையும் காட்ட முடியாது என்பது மட்டுமே, ‘கடவுள் இல்லா மதவாதிகளின்’ ஒரே ஆதாரம். அவர் ‘இறைவன் இருக்கிறான்’ என்கிறார். இவரோ ‘உன் இறைவனை என் கண்ணால் பார்க்க முடியவில்லை. அதனால் இறைவனே இல்லை’ என்கிறார். இதில் பகுத்தறிவு எங்கிருந்து வந்தது?
இறைவன் மனிதப் புலன்களுக்கு அப்பாற்பட்டவன் என்ற போதிலும் ‘அவன் இருக்கிறான்’ என்பதை வேறு பல அத்தாட்சிகளைக் கொண்டு இறை நம்பிக்கையாளர் உணர முடியும். அவற்றைப் பிறருக்கு விளக்கவும் அவரால் முடியும். ஆனால், அந்த அத்தாட்சிகளை புரிந்துக் கொள்ள மனப்பக்குவம் வேண்டும். ‘என் கண்களுக்கு புலப்படுவது மட்டுமே உண்மையாக இருக்க முடியும்’ என்ற குறுகிய சிந்தனையை விட்டு வெளிவர வேண்டும். இந்த உலகத்தையும் தாண்டி, பிரபஞ்சம் எவ்வளவு பெரிதானது என்பதைப் பற்றி சிந்திக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
‘எனக்குத் தெரியாது என்றால் அது இல்லாதது’ என்ற குருட்டுப்பூனை மனப்போக்கை விட்டொழிக்க வேண்டும். அடிப்படை காரணங்களோ, சரியான புரிந்துணர்வோ இல்லாமல் ஒரு விஷயத்தில் நம்பிக்கை கொள்வது மற்றும் தெளிவற்ற மனநிலையில் இருப்பதை Irrational என்கிறது ஆங்கில அகராதி (Irrational: not rational: as a (1): not endowed with reason or understanding (2): lacking usual or normal mental clarity or coherence b: not governed by or according to reason) அதாவது பகுத்தறிவற்ற நிலை. இந்நிலையில் உள்ளவர்கள் தங்களை ‘பகுத்தறிவுவாதிகள்’ என்று அழைத்துக் கொண்டால் அது முரணானது அல்லவா? இவ்வாறு, இல்லாத ஒரு விஷயத்தை தொடர்ந்து நம்பிக் கொண்டிருப்பவர்களை என்னவென்று அழைக்கலாம்?
According to the dictionary supplied with Microsoft Word: delusion = a persistent false belief held in the face of strong contradictory evidence, especially as a symptom of psychiatric disorder” (pp28)
Delusion: தவறு என நிரூபிக்கப்பட்ட போதும் தொடர்ந்து அவற்றை நம்புதல் ஒரு மனநோய்க்கான அறிகுறியாகும்.

THANKS தமிழ்மணம்

செவ்வாய், 8 டிசம்பர், 2009

ஏகத்துவமும் இணைவைத்தலும்

Ahmad Baqavi
மனிதன் ஏகத்துவத்திலிருந்து தடம் புரண்ட வரலாறு
அல்லாஹ் ஒருவன் தான்!
மனிதன் ‘தன்னைப் படைத்தவன் அல்லாஹ் தான். அவன் ஒருவனே’ என்னும் ஏகத்துவ நெறியை இயல்பிலேயே பெற்றவனாகவும், அந்த அடிப்படையிலேயே படைக்கப்பட்டவனாகவும் உள்ளான். மனிதன் மட்டுமல்ல. உலகிலுள்ள அனைத்து படைப்புகளும் அவ்வாறு தான் படைக்கப்பட்டுள்ளன. அதை அனைத்தும் உணர்ந்தே உள்ளன. இதுவே இயற்கை நிலையாகும்.
இதை மனிதனைப்படைத்த நாயனே தனது உலகப் பொதுமறையாம் அல்-குர்ஆனில் பின் வருமாறு விவரிக்கிறான்.

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) படைக்கவில்லை. நான் அவர்களிடம் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நாடவில்லை. அல்லாஹ் தான் (யாவருக்கும்) உணவளிப்பவன். உறுதியானவன். ஆற்றல் பெற்றவன். (அல்-குர்ஆன் அத்தாரியாத் : 51:56,57.)

ஒரு மனிதன் தன்னைப்பற்றி தனிமையில் சிந்திக்கத் துவங்கினால் ஓரிறைக் கொள்கையின் பால் சார்ந்து நிற்படையும், அவனையே நம்பி அவனிடம் அன்பு கொண்டு அவனிடமே உதவிதேடுவதையும், இணைவைக்காது வணங்கி வழிபடுவதையும் காணலாம். தவ்ஹீத் என்னும் ஏகத்துவக் கோட்பாடு இயற்கை நிலையைச் சார்ந்தது. அவனுக்கு மாறுபட்டு இணைவைக்கும் நிலையோ இடையில் ஏற்பட்டதாகும்.
இயற்கை மார்க்கம் இஸ்லாம் தான்!
அல்லாஹ் கூறுகிறான்:-(நபியே!) உண்மை நெறியில் நின்று உமது முகத்தை இந்த (இயற்கை) மார்க்கத்தின் பால் (முற்றிலும்) நிலைப்படுத்துவீராக! இதுவே அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கமாகும்.இந்த நிலையிலே அல்லாஹ் மனிதர்களை படைத்துள்ள்ளான். அல்லாஹ்வின் படைப்பில் எந்த மாற்றமும் இல்லை.இதுவே நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிந்து கொள்ள மாட்டார்கள். (அல்-குர்ஆன் அர்-ரூம் 30:30)

பிறக்கும் குழந்தைகளும் இஸ்லாம் தான்!
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :-பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் இறைவனை ஏற்றுக் கொள்ளும் இயல்புடனேயே பிறக்கின்றன. ஆயினும், அவர்களின் பெற்றோர்களே யூதர்களாகவும், கிறித்தவர்களாகவும், நெருப்பை வணங்குபவர்களாகவும். மாற்றுகின்றனர். ஏவ்வாறெனில், ஒரு மாடு ஊனமுற்றதாக நல்ல நிலையிலேயே ஒரு கன்றை ஈன்றெடுக்கிறது.காலப் போக்கில் (மனிதர்களால்) அதன் காது மூக்கு போன்றவை சேதப்படுத்தப்பட்டு ஊனமுற்றதாக மாறுகின்றது.(அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: புகாரி 4402,முஸ்லிம் 4803)
அரபு நாட்டில் தனது ஒட்டகம், மாடு, கன்று எனத் தெரிந்து கொள்வதற்காக இவ்வாறு சேதப்படுத்தி அடையாளமிட்டுக் கொள்வார்கள். இவ்விதம் ஒரு குறிப்பிட்ட குடும்பம், குலம் எனத் தெரிந்து கொள்வதற்காக முகங்களிலும், தாடைகளிலும் கீறி காயப்படுத்தி சில வடுக்களை சூடுபோட்டுக் கொள்வதை ஆப்ரிக்க நாடுகளில் இன்றும் காண முடிகிறது.

இணைவைத்தல் எங்கே எப்போது தோன்றியது?இறைக் கொள்கைக்கு எதிரான நிராகரித்தலும், இணைவைத்தலும் இறைதூதர் நூஹ்-நோவா- (அலை) அவர்களின் சமூகத்தாரிடமே முதலில் தோன்றியது.
இறைமறையில் இறைவன் இதை பின்வருமாறு விவரிக்கிறான்:-
(நபியே! (இறைதூதர்) நூஹுக்கும் அவருக்குப் பிறகு வந்த இறைதூதர்களுக்கும் நாம் வஹீ (இறைத்தூதை) அறிவித்தவாறே உமக்கும் அறிவித்தோம் (அந்நிஸா: 4:163)
நபித் தோழர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:-
நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் நபி நூஹ் (அலை) அவர்களுக்கு மிடையே உள்ள காலம் பத்து நூற்றாண்டுகளாகும். இக்கால கட்டங்களில் மக்கள் அனைவரும் இஸ்லாத்திலேயே இருந்து வந்தார்கள்.(ஆதாரம்:தப்ஸீர் இப்னு கதீர்: பாகம் 2: பக்கம்: 412)
இணைவைத்தல் ஏன் தோன்றியது ?
இணைவைத்தல் (ஷிர்க்) தோன்றுவதற்கு முதற்காரணமே மனிதன் இறைவனின் படைப்புகளை இறைவனின் தகுதிக்கு உயர்த்தியதும், அவர்களிடையே வாழ்ந்து வந்த நல்லோரை வரையறை மீறிப் புகழ்ந்து வந்ததுமேயாகும்.இதையும் இறைவனே கூறுகிறான்:-
மேலும் நூஹ் (அலை) அவர்களின் மக்கள், தமது சமூகத்தாரிடம் உங்களின் (வணக்கத்திற்குரிய) கடவுள்களை விட்டுவிடாதீர்கள்! மேலும் (உங்கள் தெய்வங்களான) வத்து,ஸுவாஉ, யஊது, யகூகு, நஸ்ரு (ஆகிய சிலைகளையும்) விட்டுவிடாதீர்கள் என்றும் கூறினார்கள்; (அல்-குர்ஆன் நூஹ்- 71:23)
இந்தச் சிலைகளை நிறுவியவர்கள் இந்த சிலைகளை அவர்களின் நினைவுச் சின்னங்களாகத்தான் அமைத்தார்கள். ஆயினும் அவர்கள் அவற்றை வணங்கவில்லை.அவர்களின் பின்னர் வந்த அவர்களின் சந்ததியினர் (நினைவுச்சின்னம் என்பதை மறந்து) வணங்கத் தலைப் பட்டனர். (ஆதாரம் புகாரி 4539) இதனால் தான் ஒருவரை அளவுக்கு மீறிப்புகழ்வதையும், அன்பு காட்டுவதையும் இறைவன் தடுத்துள்ளான்.
அல்லாஹ் கூறுகிறான்:-
வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறிவிடாதீர்கள். (அந்நிஸா 4: 171)
பின்வரும் இருபண்புகளும் உண்மையை மறைக்கவும், பொய்யை கலக்கவும் காரணங்களாக அமைந்தன.
1. நல்லடியார்களை அளவுக்கு அதிகமாகப் புகழந்தது.நல்லடியார்மீது கொண்ட அளவுக்கதிகமான அன்பினாலும், அவர்களின் உருவங்களை நேரடியாகக் கண்டு கொண்டிருக்க வேண்டுமென்ற விருப்பத்தாலும் அவர்களின் உருவங்களை செதுக்கி வைத்தனர்.
2. நல்லது தீயது என்பதில் மார்க்கத்தின் வழிகாட்டலை விட்டது.மார்க்க அறிஞர்களும், மதகுருமார்களும் அவர்களின் உருவங்களை வடித்து வைத்திருப்பதால் நன்மை ஏற்படும் எனக்கருதினர். அதுமட்டுமல்ல., இவ்வுருவங்கள் தம் கண் முன்னாலிருந்தால் வணக்கங்களிலும் வழிபாடுகளிலும் பக்தியும் உற்சாகமும் ஏற்படும் எனவும் நம்பினர்.இதன் விளைவாக அவர்களின் சந்ததியினரிடிருந்த எண்ணங்கள் மாறி அந்தக் கல்லுருவங்களையே கடவுள்களாகக் கருதி வணங்கத் தலைப்பட்டனர்.
விளைவு ? மார்க்கத்தில் அல்லாஹ்வும், அவன் தூதரும் சொல்லாத ஒன்றின் மூலமாக தங்களின் மார்க்க ஈடுபாட்டை ஏற்படுத்தலாம், பக்தியை உருவாக்கலாம் என எண்ணிக்கொண்டு, இறைவனின் மார்க்கத்தில் அல்லாஹ்வின் தூதர்கள் காட்டாத நெறிகளை தாமாகவே ஏற்படுத்திவிட்டு அது நன்மை பயக்கும் என தவறாக நம்பிக் கொண்டனர். நற்செயல் என்பதும் அதற்கு நன்மை கிடைக்கும் என நம்புவதும் அல்லாஹ் கூறியதும், அவனது தூதர் சொன்னதும், செய்ததும்,அங்கீகரிததுமாகும். இதை மீறுவது மார்க்கத்தில் அளவு கடந்ததாகவே கருதப்படும். நபிகளார் (ஸல்)அவர்கள் கூறினார்கள்:
”நமது மார்க்கத்தில் இல்லாத புதுமைகளை ஏற்ப்படுத்துபவரின் செயல்கள் நிரகரிக்கப்படும்”.(அறிவிப்பவர் அன்னை ஆயிஷா(ரலி), ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கிறோம், புகழ்கிறோம் எனற பெயரில் புகழ்பாக்கள் எழுதி, அப்பாடல்களில் அவர்களை வரையறை மீறிப் புகழ்ந்து, நபிகளாரை புகழ்வதாகக் கருதிக்கொண்டு வரையறை மீறும் போது அவர்களை அறியாமலே இணைவைத்தல் என்னும் மன்னிக்க முடியாத கொடிய பாவத்தின் பால் தள்ளப்படுகின்றனர். இறுதியில், இது நபிகளார்(ஸல்)அவர்கள் அகில உலகிற்கும் போதிக்க வந்த ‘ஏகத்துவக் கொள்கை’ என்னும் மிகப்பெரிய நெறிப்புரட்சிக்கு எதிராக மாறுகிறது. அதுமட்டுமல்ல, யூத, கிறித்தவர்களைப் போல் நபிகளாரை கடவுள் நிலைக்குக் கொண்டு போகும் அபாயகரமான கட்டத்திற்குச் சென்றுவிடுகின்றனர். இவர்களின் செயல்கள் யாவும் வீணாகி இஸ்லாத்திலிருந்தே வெளியேற்றி, நரகத்திற்கே விறகுகளாகிவிடுகின்றனர். வல்ல நாயன் அல்லாஹ் இக்கொடிய பாவங்களிலிருந்தும் நம்மைக் காப்பானாக!
மனிதனை மார்க்க நெறிகளிலிருந்தும் தூய இஸ்லாத்தின் புனிதக் கொள்கைகளிலிருந்தும் வெளியேற்றும் அபாயங்கள் ஒவ்வொரு கால கட்டங்களிலும் நிகழும் என்பதை முன்னரே அறிந்த அல்லாஹ்வும், அவனது தூதரும் மக்களை எச்செரிக்கை செய்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(மர்யம் (அலை) அன்னை மரியா அவர்களின் மகன் (ஈஸா(அலை) ஏசுஅவர்களை கிறித்தவர்கள் மிகைப்படுத்திப் புகழ்ததைப்போல் என்னையும் நீங்கள் புகழ்ந்துவிடாதீர்கள். நிச்சயமாக நான் ஒரு அடியானே! என்னை நீங்கள் அல்லாஹ்வின் அடியான் என்றும், அவனது தூதர் என்றும் கூறுங்கள். (புகாரி: 3189)
அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய (மஸீஹையும்) ஏசுவையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர். ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள். வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிகவும் பரிசுத்தமானவன். (திருக்குர்ஆன் 9:31)
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான். இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகபெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (திருக்குர்ஆன் 4:48)
எனவே இணைவைக்காது அல்லாஹ்வை வணங்கி இம்மை மறுமைப் பேறுகளைப் பெறுவதற்கு வல்ல நாயன் நமக்கு அருள் பொழிவானாக! ஆமீன்.

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

குர்ஆனில் சிலந்தி வீடு
بَيْتُ الْعَنكَبُوتِ
Ahmad Baqavi

குர்ஆனில் بَيْتُ الْعَنكَبُوتِ சிலந்திவீடு குர்ஆனில் வரும் 29-வது அத்தியாயத்திற்கு சூரத்துல் அன்கபூத் என்று பெயராகும். அன்கபூத் என்றால் ”சிலந்திப்பூச்சி” என்று பொருள்.

இறைவன் குர்ஆனில் இணை வைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக 22:73,29:41; வசனங்களில் ஈயையும் சிலந்தியையும் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
يَا أَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوا لَهُ إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ لَن يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ
மனிதர்களே! (உங்களுக்கோர்) உதாரணம் சொல்லப்படுகிறது.எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்யமாக நீங்கள் அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் (அழைத்துப்)பிரார்த்திக்கிறீர்களோ,அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும், ஒரு ஈயைந்கூட படைக்க முடியாது.மேலும் அவர்களிடமிருந்து (அது) ஒரு பொருளை எடுத்துச் சென்றால் அவர்களால் அந்த ஈயிடமிருந்து அதனைக் கைப்பற்றவும் முடியாது. தேடுவோனும் தேடப்படுபடுவோனும் பலகீனர்களே! (திருக்குர்ஆன் 27:73)
مَثَلُ الَّذِينَ اتَّخَذُوا مِن دُونِ اللَّهِ أَوْلِيَاء كَمَثَلِ الْعَنكَبُوتِ اتَّخَذَتْ بَيْتًا وَإِنَّ أَوْهَنَ الْبُيُوتِ لَبَيْتُ الْعَنكَبُوتِ لَوْ كَانُوا يَعْلَمُونَ

அல்லாஹ் அல்லாதவற்றை (த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப்பூச்சியன் உதாரணம் போன்றது.அது (தனக்காக) ஓரு வீட்டைக் கட்டடியது. ஆயினும் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலகீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும். இதை அவர்கள் அறிந்து கொண்டால் (தாங்கள் இணையாக எடுத்துக்கொண்டவற்றின் பலகீனத்தைப் புரிந்து கொள்வார்கள். (திருக்குர்ஆன் 29:41)

இந்த வசனங்களைக் கேட்ட குரைஷி மக்கள் ‘முஹம்மதின் இறைவன் ஈயையும், சிலந்திப்பூச்சியையும் மேற்கோள் காட்ட வெட்கப்படவில்லை? என்று இழித்துரைத்தபோது இறைவன் பின்வரும் வசனத்தை அருளினான்.
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்.ஆனால் (இறை நம்பிக்கையற்ற) நிராகரிப்பாளர்களோ, 'இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?' என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான் இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப் படுத்துகிறான் ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை. (திருக்குர்ஆன் 2:26)
وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ وَمَا يَعْقِلُهَا إِلَّا الْعَالِمُونَ
‘இந்த உவமைகளை மக்களுக்காகக் கூறுகிறோம். அறிவுடையோரையன்றி வேறு எவரும் இதனை புரிந்து கொள்ள மாட்டார்கள் (திருக்குர்ஆன் 29:43)
என்று எடுத்துரைத்தான்.இந்த சிலந்தியின் அறிவியல் உவமை சிந்திக்க வைக்கும் ஓர் அற்புதமான உவமையாகும்.
சிலந்தி வலையில் பொறியியல் கலை





சிலந்திகள், தமது வலைகளை பின்னுவதற்குரிய நூலை தாங்களே உருவாக்குகின்றன. அவை பின்னுவதற்குப் பயன்படுத்தும் தொழில் நுட்பமும், இன்றைய கட்டிடக்கலை பொறியாளர்கள் பயன்படுத்தும் தொழில் நுட்பமும் ஒன்று தான் என்பதை நம்மில் பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சிலந்தி தனது வலையைப் பின்னுவதற்கு இரண்டு எதிரெதிர் முனைகள் தேவைப்படு கின்றன. பொதுவாக இரண்டு சுவர்கள் சந்திக்கும் மூலையிலோ, இரண்டு மரக்கிளை களுக்கு இடையிலோ, சிலந்தி தனது வலையை உருவாக்குகிறது. இருப்பினும், சிலவகை சிலந்திகள் ஒரு தனிப்பட்ட மரக்கிளையை மட்டுமே பயன்படுத்தி தங்களின் வலைகளை பின்னும் திறன் படைத்தவை. இவை இத்தனை நேர்த்தியான வலைகளை உருவாக்குகின்றன என்பது வரைபடங்களை வைத்து உருவாக்கும் பொறியாளர்களைக் கூட வியப்படையச் செய்கின்றன.
சிலந்தி முதலில் எளிதில் வளையக்கூடிய ஒரு மரக்கிளையைத் தேர்ந்தெடுத்து மரக்கிளையின் முனையில் தனது உடலிலிருந்து உற்பத்திச் செய்யும் நூலின் ஒரு முனையை கெட்டியாகக் கட்டுகிறது. தொடர்ந்து மரக்கிளையின் அடிப்பகுதி நோக்கி ஊர்ந்து செல்கிறது. ஒரு குறிப்பிட்ட தூரம் வந்ததும் தனது உடலிலிருந்து உற்பத்தியாகும் நூலை நிறுத்துகிறது. மரக்கிளையில் கட்டியிருக்கும் நூலை, மரக்கிளை வளையும் வரை இழுத்து அரை வட்டவடிவத்திற்கு கொண்டு வருகிறது. நூலின் மறு முனையை வளைய வடிவத்திற்குக் கட்டுகிறது. உருவாக்கப்பட்ட இந்த வளையத்திற்குள் சிலந்தி தனது வலையை பின்ன ஆரம்கிக்கிறது. இரண்டு மீட்டர் நீளமுள்ள நூலை இரண்டு மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ள இரண்டு சுவர்களுக்கு மத்தியில் கட்ட வேண்டும் எனில் அது எவ்வாறு மிக நேர்த்தியாக கட்டிமுடிக்க முடியும் என்பதை கட்டிடக் கலைஞர்கள் புரிந்து கொள்வார்கள்.
சிலந்தியின் தொழில் நுட்பம்
சில வேளைகளில் அதிக இடைவெளிகளில் பின்னும் வலை வலுவில்லாது போய்விடும். அப்போது தாம் உணவாக உட்கொள்ளும் பூச்சிகளைப் பிடிப்பதற்காக வலை வலுவான தாக இருப்பதற்கு அது ஒரு அதிசயமான முடிவுக்கு வருகிறது. உடனே தனது உடலிலிருந்து உற்பத்திச் செய்யும் நூலின் ஒரு முனையை பின்னப்பட்ட வலையின் மத்தியில் கட்டுகிறது. மற்றொரு முனையை தரையில் உள்ள ஒரு சிறிய கல்லில் கட்டிவைக்கிறது.
மீண்டும் வலைக்கு வரும் சிலந்தி, வலையின் மத்தியில் கட்டியிருக்கும் நூலை இழுத்து தரையில் உள்ள கல்லை மேல் நோக்கி உயர்துத்துகிறது. மேல் நோக்கி உயர்த்தப்பட்ட கல் வலையின் மத்தியில் தொங்கிக் கொண்டிருக்கும் வகையில் நூலை உயர்த்தி,வலையின் மற்றொரு பகுதியில் இழுக்கப்பட்ட நூலை கட்டிவைக்கிறது. தொங்கிக் கொண்டிருக்கும் கல்லின் கனத்தால் ,சிலந்தி வலை கீழ் நோக்கி இழுபடுவதோடு வலையின் வலிமையும், இறுகும் தன்மையும், தேவையான அளவு அதிகரிக்கிறது.

சிலந்தியின் இந்தப்பிரச்சனைக்கு ஒரு பொறியாளர் கூட இதனைச் சிந்தித்திருக்கமாட்டார். சில வகை சிலந்திகள் தங்களின் வலைகளில் அறியாமல் பிறபூச்சியினங்கள் நுழைந்துவிட்டால் அவற்றை தனியாக ஒரு பகுதியில் எங்கும் ‘நகரவிடாமல் சிறைப்படுத்தி விடுகின்றன. இந்த நுண்ணறிவு அவற்றிற்கு எப்படிக் கிடைத்தன? கட்டடக்கலை அறிவு இல்லாத இந்தச் சிலந்திகள் எவ்வாறு இந்த அறிவைப் பெற்றன? ஐந்தறிவு படைத்த இந்த சிலந்திகள் எப்படி இந்த தொழில் நுட்பத்தைப் கற்றன ? இவ்வுலகில் வாழும் சிலந்திகள் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த தொழில் நுட்பத்தைப் பயன்னடுத்துகின்றனவே ? இது அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட அற்புத ஆற்றலல்லவா? ஆம்! அல்லாஹ் கூறுவது போல சிந்திக்கும் மக்களுக்கு இதில் சிறந்த படிப்பினைகள் உள்ளன.
வானங்கள், பூமி, இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா?) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தைத் தான் அவர்கள் நம்பிக்கை கொள்ளப்போகிறார்கள்?(திருக்குர்ஆன் 7:185)

புதன், 25 நவம்பர், 2009

இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உண்மை

டாக்டர் மனேஹ் ஹாமத் அல்ஜொஹானி
முன்னுரை :
இஸ்லாம் மார்க்கத்திற்கும் கிறிஸ்துவ மார்க்கத்திற்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடு இயேசு கிறிஸ்துவின் பாத்திரத்தைப் பற்றியதாகும். இந்தக் கருத்து வேறுபாடுகள் தான் இரண்டு மார்க்கத்தையும் பிரித்து வைத்திருப்பது.
இயேசு கிறிஸ்துவை - முஸ்லிம்கள் - ஆப்ரகாம், மோசஸ், முஹம்மது நபி போன்றவர்களை மதிப்பது போல் அவர் மிகப் பெரிய தீர்க்கதரிசி, இறைவனின் தூதர் என்று மதிப்பு அன்பு செலுத்துகின்றனர்.
கிறிஸ்துவர்கள், இதற்கு மாறாக, இயேசுவைக் கடவுள் என்றும் கடவுளின் குமாரர் என்றும் கருதுகின்றனர். இஸ்லாமியர்கள் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தன்னைக் கடவுள் என்றோ - கடவுளின் குமாரர் என்றோ இயேசு ஒரு போதும் கூறிக் கொள்ளவில்லை என்று இஸ்லாம் போதிக்கின்றது. இயேசுவின் பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்த கிறிஸ்துவ மார்க்கத்தின் முக்கிய கொள்கைகளை இஸ்லாம் முழுமையாக நிராகரிக்கிறது. அவை என்ன?
1. திரி ஏகத்துவம் (முத்தெய்வக் கொள்கை - பிதா, மகன், பரிசுத்த ஆவி)
2. இயேசுவின் கடவுள் தன்மை
3. கடவுளின் குமாரன் என்ற கிறிஸ்துவின் அந்தஸ்து!
4. ஜென்மப்பாவம் அல்லது முதற்பாவம்
5. பாவ மன்னிப்பு
மேற்சொன்ன கொள்கை எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்கு இறைவன் அளிக்க விரும்பிய தகுதிக்கு அதிகமாக அவரை மிக மிக உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் விளைவுகள் என்பது தெளிவாகும். இந்த அதீதமான - அளவுக்கு அதிகமான கொள்கைகள் கிறிஸ்துவ மார்க்கத்திற்கும் இஸ்லாம் மார்க்கத்திற்குமுள்ள ஒற்றுமைகளைப் பின்னுக்குத் தள்ளி விடுகின்றன.
Þ தூய கன்னிக்கு (மேரிக்கு)ப் பிறந்தவர் இயேசு!
Þ தொட்டிலில் இருக்கும் போதே இயேசு பேசினார்
Þ அற்புதங்களைச் செய்தவர் இயேசு
Þ இயேசு கிறிஸ்து இரண்டாம் முறையாக உலகிற்கு வருவார்
இதை எல்லாம் முஸ்லிம்கள் நம்புகின்றார்கள் என்ற உண்மையை கருத்துவேறுபாடுகள் மறைத்து விடுகின்றன.

இந்த சிறுநூலில் வருகின்ற இரண்டு கட்டுரைகள் இயேசு நாதர் பற்றிய இஸ்லாம் வரைகின்ற உண்மையாக ஓவியத்தைத் தர முயல்கின்றன. கிறிஸ்தவர்கள் ஏன் இயேசுவின் மூலாதாரமான உபதேசங்களிலிருந்து மாறுபாடுகின்றார்கள் என்பதையும் எடுத்துக் கூறுகின்றன.
முதற் கட்டுரை - கிறிஸ்துவ மார்க்கத்தின் பிடியில் இப்போதும் இருக்கின்ற மேதைகளும் சிந்தனையாளர்களும் இயேசுநாதர் பற்றி இஸ்லாம் கூறுகின்ற கருத்துக்களை மெல்ல மெல்ல ஒப்புக் கொள்வதை எடுத்துக் சொல்கிறது.
இன்னமும் அவர்கள் பைபிள் பற்றி விரிவாகவும் விஞ்ஞானக் கண்ணோட்டத்தோடும் ஆராய்வார்களானால் இஸ்லாம் கூறுகின்ற கருத்துக்களை இன்னமும் தெளிவாக ஒப்புக் கொள்வார்கள். காலம் செல்லச் செல்ல இஸ்லாமிய உண்மை மிகத் தெளிவான ஒளியோடு அவர்களுக்கு விளங்கும்.
புனிதக் குர்ஆன் இதைக் கீழ்கண்ட வரிகளில் கூறுகின்றது.
நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம். (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?அறிந்து கொள்க் நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பது குறித்துச் சந்தேகத்தில் இருக்கிறார்கள். அறிந்து கொள்க் நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து (அறிந்தவனாக) இருக்கிறான். (அல்குர்ஆன் 41:53)
தகவுரை :
இயேசு நாதரைப் பற்றிய இஸ்லாம் மார்க்கத்தின் கண்ணோட்டம் இருவேறு தீவிர கருத்துக்களுக்கு இடையில் இருக்கின்றது. யூதர்கள் - இயேசு நாதரை இறைவனின் தூதுவர் அல்ல என்றும் - கள்ளத் தீர்க்கதரிசி என்றும் நிராகரிக்கின்றார்கள். கிறிஸ்தவர்களோ இயேசு நாதரை இறைவனின் குமாரர் எனக் கூறி வணங்கவும் செய்கின்றனர். ஆனால் இஸ்லாம் இயேசு நாதரை இறைவனின் உயரிய இறைத்தூதர் எனக் கருதுகிறது. ஆப்ரஹாம், மோசஸ், முஹம்மது நபி போன்றோரை மதிப்பது போல் மதிக்கின்றது.இஸ்லாமின் இந்தக் கருத்து ஓரிறைத் தத்துவத்திற்கு ஓரிறைவனின் தெய்வ வழிகாட்டுதலுக்கும் இறைத்தூதர்களின் ஓரிறைச் செய்திக்கும் ஏற்புடையதாக இருப்பதைக் காணலாம்.
இறைநாட்டத்திற்கு முழுமையாக சரண் அடைதல் எனும் இந்த இஸ்லாமியத் தத்துவம் இறைவனால் ஆதி மனிதரான ஆதமுக்குத் தரப்பட்டு அவரது வழி வந்தோருக்கும் போய்ச் சேர்ந்தது. ஆப்ரஹாம், மோஸே, இயேசு இறுதியாக முஹம்மது நபி என்ற வரிசைப்படி வந்த இறைத்தூதர்களுக்கு -மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு - மனிதனுக்கும் மனிதர்க்கும் உள்ள உறவு – மனிதருக்கும் சுற்றுச்சார்புக்கும் இருக்கும் உறவு பற்றிக் கூறப்பட்டது. இறைக்கட்டளையின்படி மனிதன் இந்த உறவுகளோடு எப்படி வாழ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. எனவே, வேதங்கள் வெளிப்பட்ட மதங்களிலேயே தோன்றியிருக்கின்ற வேறுபாடுகள் எல்லாம் மனிதன் உருவாக்கி நுழைத்த வேறுபாடுகளே என்று இஸ்லாம் கருதுகிறது. இயேசுவின் பாத்திரத்தைப் பற்றி யூத – கிறிஸ்துவ - இஸ்லாம் மார்க்கங்கள் வேறுபாடு கொண்டிருப்பதற்கும் இது விதிவிலக்கல்ல. திருக்குர்ஆன் இயேசுவைப் பற்றி விரிவான வாழ்க்கை வராலாற்றைக் கூறவில்லை. எனினும் அவர் பிறப்பு மேன்மை, அவரது இறைச் செய்தி அவரது வின்னேற்றம், அவரைப் பற்றிய கிறிஸ்தவ நம்பிக்கைகள் மீதான தீர்ப்புகள் ஆகியவை பற்றி முக்கிய விபரங்களை எடுத்துக் கூறுகிறது.
மேரி (மர்யம்) இயேசுவைப் பற்றிய குறிப்பு திருக்குர்ஆனில் அவரது அன்னை மேரி (மர்யாள் - மர்யம்)ன் கர்ப்பம் கொள்வதிலிருந்து தொடங்குகிறது. மேரியின் தாயான (இம்ரானின் மனைவி) தனது மகள் மேரியை கோவிலில் கடவுளின் சேவைக்கு ஒப்படைப்பதாக நேர்சை செய்கிறாள். ஜக்கரிய்யா மேரியை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். மேரியோடு உணவருந்துவதை ஜக்கரிய்யா பழக்கமாகக் கொள்கிறார். இந்த உணவு உனக்கு எங்கிருந்து வருகின்றது என்று ஜக்கரிய்யா ஒருமுறை கேட்க - கடவுளிடம் இருந்து வந்தது - என்று மேரி பதிலுரைக்கின்றார்.
இதுபற்றி திருக்குர்ஆன் வசனம் வருமாறு :
இம்ரானின் மனைவி ''என் இரைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்'' என்று கூறியதையும்- (பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும். ''என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்'' எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள். அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான். ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்.) ''அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.
அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான். அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், ''மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?'' என்று அவர் கேட்டார். ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்'' என்று அவள்(பதில்) கூறினாள்.
அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார். ''இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.''
அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து; ''நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான். அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும் இருப்பார்'' எனக் கூறினர்.
அவர் கூறினார். ''என் இறைவனே! எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும்? எனக்கு வயது அதிகமாகி (முதுமை வந்து) விட்டது; என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்.'' அதற்கு (இறைவன்), ''அவ்வாறே நடக்கும். அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்'' என்று கூறினான். ''என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!'' என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), ''உமக்கு அறிகுறியாவது; மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து; அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக!'' என்று கூறினான். (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள். மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான். இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்'' (என்றும்), ''மர்யமே! உம் இறைவனுக்கு ஸுஜுது செய்யும், ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம் செய்வீராக'' (என்றும்) கூறினர்.
(நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும். இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம். மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
மலக்குகள் கூறினார்கள். ''மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ். மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார். ''மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசவார். இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.'' (அச்சமயம் மர்யம்) கூறினார்.
''என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?'' (அதற்கு) அவன் கூறினான். ''அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.'' (அல்குர்ஆன் 3:35-47)
மேரி வயதடைந்த பின்னர் பரிசுத்த ஆவி (வானவர் தலைவர் கேப்ரியல்) மனித உருவத்தில் வந்து மேரிக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகும் செய்தியைக் கூறுகிறார். இது பற்றிய உரையாடலை திருக்குர்ஆன் தருகிறது.
மலக்குகள் கூறினார்கள். ''மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ். மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார். ''மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசவார். இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.'' (அச்சமயம் மர்யம்) கூறினார். ''என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?'' (அதற்கு) அவன் கூறினான். ''அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.'' (அல்குர்ஆன் 3:45-47)
அதிசய அற்புதமாக மேரி அந்தக் குழந்தையை கருத்தரித்ததும் தொலை தூரத்திற்குப் போய் பிரசவத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். (மர்யம்) என்ற தலைப்பிலுள்ள குர்ஆன் அத்தியாயம் நமக்கு மேரி எத்தகைய மன உணர்வுகளைப் பெற்றாள் - குழந்தையான இயேசுவை எடுத்துக் கொண்டு வீடு திரும்பும் போது மேரியிடம் அவர் என்ன பேசினார் என்பதை எடுத்துக் கூறுகின்றது.
பின்னர் மர்யமுக்கு கர்ப்பம் ஏற்பட்டு கர்ப்பத்துடன் தூரத்திலுள்ள ஒரு இடத்ததைச் சென்றடைந்தார். பின்பு அவருக்கு பிரசவ வேதனை ஏற்பட்டு ஒரு பேரீச்சை மரத்தடியில் சென்ற போது - இதற்கு முன்பாகவே நான் இறந்திருக்க வேண்டாமா? முற்றிலும் நாம் மறக்கடிக்கப்பட்டிருப்பேனே! என்று கூறினார்.
அடிப்புறத்திலிருந்து (ஜிப்ரயீல்) சத்தமிட்டு நீர் கவலைப்படாதீர்! உமக்கு சமீபமாக உம் இறைவன் ஓர் ஊற்று உதித்தோடச் செய்திருக்கிறான். இப்பேரீச்சை மரத்தின் கிளையை உன் பக்கம் பிடித்து உலுக்கு! அது பழுத்த பழங்களை உன் மீது சொறியும். நீ புசித்துக் குடித்து எந்த ஒரு மனிதரைக் கண்ட போதும் - நிச்சயமாக நான் அருளாளனுக்கு நோன்பு நோற்கிறேன் - எனக் கூறிவிடு.
பின்னர் மர்யம் அந்தக் குழந்தையைச் சுமந்து கொண்டு மக்களிடம் வரவே அவர்கள் - மர்யமே! மர்யமே! நீ நிச்சயமாக மகா கெட்ட காரியத்தைச் செய்து விட்டாய். ஹாரூனின்; சகோதரியே! உன் தாயும் கெட்ட நடத்தை உடையவராக இல்லையே! என்று கூறினார்கள்.
(மர்யம் குழந்தை இருந்த) அதன் பக்கம் ஜாடை காண்பித்தாள். அதற்கு அவர்கள் - மடியில் இருக்கும் சிறு குழந்தையிடம் நாங்கள் எவ்வாறு பேசுவோம் என்று கூறினார்கள். (குழந்தை இயேசு) கூறியதாவது : நிச்சயமாக நான் இறைவனின் அடிமை, அந்த இறைவன் எனக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து நபியாகவும் ஆக்குவான். நான் எங்கிருந்த போதிலும் அவன் என்னை மிக்க பாக்கியமுள்ளவனாக ஆக்குவான்! நான் உயிர் வாழும் வரையிலும் தொழுகையை கடைபிடித்து ஒழுகும்படியும், ஜகாத் கொடுத்து வரும்படியும் அவன் எனக்கு உபதேசித்து இருக்கிறான்.
என்னுடைய தாயுக்கு நான் நன்றியுள்ளவனாகவும், நான் முரடனாகவோ வழி தப்பியவனாகவோ ஆகாதபடி செய்வான். நான் பிறந்த நாளிலும் நான் மரிக்கும் நாளிலும் உயிர் பெற்று எழும் நாளிலும் நான் சாந்தமும் சமாதானமும் என் மீது நிலை பெற்றிருக்கும். (அல்குர்ஆன் 19: 22-33)
மேற்சொன்ன திருக்குர்ஆனின் அத்தியாயத்திலேயே இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் உலகத்திற்கும் இயேசுவைப் பற்றிய உண்மை இது தான் என்று உறுதி அளிக்கிறான். கிறிஸ்துவர்கள் இதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்றும் இயேசு - மேரியின் மகன் மட்டுமே என்பதை இறைவன் வலியுறுத்துகின்றான். திருக்குர்ஆன் வசனம் தொடர்கிறது.
இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்); எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்)
அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை அவன் தூயவன். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், ''அகக!'' என்று தான் கூறுவான். (உடனே) அது ஆகிவிடுகிறது. (அல்குர்ஆன் 19:34-35)
இயேசுவின் உண்மையான - இயற்கை நிலை இது என அழுத்தம் திருத்தமான முறையில் நிலைநாட்டிய இறைவன் கிறிஸ்தவர்களை விவாதத்திற்கு அழைக்குமாறு முஹம்மது (ஸல்) அவர்களைப் பணிக்கிறான். அவர்களை ஒரே இறைவனைத் தொழ வருமாறு ஆணை பிறப்பிக்கிறான்.
இறைவன் தான் என்னைப் படைத்து பேணிப் பாதுகாப்பவன். அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். (அல்குர்ஆன் 19:36)
கடவுளுக்கு குமாரர் உண்டு என்ற கருத்தை நிராகரிக்கும் போது இந்த அத்தியாயத்தில் வலிமையான சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
(கிறிஸ்தவர்களாகிய) அவர்கள் - அருளாளனாகிய இறைவன் தனக்கு ஒரு மகன் எடுத்துக் கொண்டவர் எனக் கூறுகின்றனர்.
நிச்சயமாக (கிறிஸ்தவர்களாகிய) நீங்கள் பெரியதோர் அபாண்டத்தைக் கூறுகிறீர்கள். வானங்கள் வெடித்துப் போகவும், பூமி வெடித்துப் போகவும், மலைகள் இடிந்து சரிந்து விடவும் கூடும். இறைவனுக்கு சந்ததி உண்டென்று அவர்கள் கூறுவதன் காரணமாக! சந்ததி எடுத்துக் கொள்வது இறைவனுக்குத் தகுமானதல்ல. ஏனென்றால் வானங்களிலும், பூமியிலும் ஒவ்வொன்றும் இறைவனிடம் அடிமையாகவே இருந்து வருகின்றது (அல்குர்ஆன் 19:88-93)
திருக்குர்ஆன் இயேசுவுக்கு மனித உருவிலான தந்தை இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த ஒப்புதல் உறுதி - இயேசுவை கடவுளின் குமாரர் ஆக்கவில்லை.(தந்தை இல்லாதவர் கடவுளின் குமாரர் என்று ஒப்புக் கொள்ளும்) இந்தத் தகுதியை வைத்துப் பார்த்தால் (முதல் மனிதரான) ஆதம் - இயேசுவை விட கடவுளின் குமாரர் என்று ஆகி விடத் தகுதியுடையவராகி விடுவார். ஏனெனில் ஆதமுக்குத் தந்தையும் இல்லை, தாயும் இல்லை. ஆக திருக்குர்ஆன் அதிசய அற்புதமான இரு படைப்புகளை (ஆதம் - இயேசு) பற்றிக் கூறி கவனத்தை ஈர்க்கிறது.
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப்பின் ''குன்'' (ஆகுக) எனக் கூறினான். அவர் (மனிதர்) ஆகிவிட்டார். (அல்குர்ஆன் 3:59)

கடவுளின் குமாரர் இயேசு என்ற கருத்தை மறுப்பது போலவே திருக்குர்ஆன் (பிதா - மகன் - பரிசுத்த ஆவி என்ற) திரியேகத் தத்துவத்தையும் மறுக்கிறது.
ஏனெனில் இறைவன் ஒருவனே! இது தான் ஓரிறைத் தத்துவத்தின் அனைத்து வெளிப்பாடுகளுக்கும் அடிப்படை. காரணகாரியப்படிப் பார்த்தாலும் - சாதாரணமான கூட்டல் கணக்குப்படி பார்த்தாலும் மூன்று (பிதா - மகன் - பரிசுத்த ஆவி) என்பது ஒன்று என ஆகாது.
பெண்கள் (அந்நிஸா) என்ற அதிகாரத்தில் உள்ள கீழ்க்கண்ட வசனத்தின் மூலம் குர்ஆன் கூறுகிறது :
வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள். நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான். இன்னும் (''குன்'' ஆகக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால் போட்டான். (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான். ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள். இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள். (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான். அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்., பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். (ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய் ) வழிபடுதலைக் குறைவாக எண்ணி, கர்வமுங் கொள்கிறார்களேர். அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பன். ஆனால் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழமையாக (அல்லாஹ்) கொடுப்பான். இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான். எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணு கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான். அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் 4:171-173)
மக்களை - ஆம்! அனைத்து மக்களையும் முஹம்மது (ஸல்) கொண்டு வந்த இறைச் சான்றுகளை - அத்தாட்சிகளைக் கவனிக்குமாறு திருக்குர்ஆனில் உள்ள இந்த வசனங்கள் அழைக்கின்றன.
முந்திய தலைமுறைகளின் எண்ணங்களிலும் கொள்கையிலும் தவறான பொருளை மக்கள் மற்ற பிழைகளோடு சேர்த்து இணைத்து (குழப்பிக்) கொள்வார்கள் என்பதை இறைவன் அறிவான். அந்தப் பிழைகளைக் கண்டுபிடித்து (திருத்திக் கொள்ளும்) வகையறியாது இருப்பார்கள். திருக்குர்ஆன் அத்தகைய மக்களுக்கு, (பிழை திருத்திக் கொள்ளும்) அத்தாட்சியாக உள்ளது. இறைவன் கூறுகிறான் :
ஆனால் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழமையாக (அல்லாஹ்) கொடுப்பான். இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான். எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணு கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான். அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணப்படமாட்டார்கள். மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்து விட்டது; தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம். ஆகவே, யார் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, அவ(ன் அருளிய நோர் வழியி)னை பலமாகப் பிடித்துக் கொள்கிறார்களோ, அவர்களைத் தன் ரஹமத்திலும், அருளிலும் புகச் செய்கிறான். இன்னும் தன்னிடம் (அவர்கள் வந்து) சேரக்கூடிய நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துவான். (அல்குர்ஆன் 4:173-175)
இறுதித் தீர்ப்பு நாளில் இறைவனுக்கும் - இயேசுவுக்கும் நடக்கும் விவாதம் என்ற தலைப்பின் கீழ் - இயேசுவின் கடவுள் தன்மையையும் (மேரியின் கடவுள் தன்மையையும்) மறுக்கப்படுவது திருக்குர்ஆனில் எடுத்துக் கூறப்படுகிறது.
அந்த நாளில் இறைத்தூதர்களும் - அனைத்து இன மக்களும் இறைவன் முன்னர் கூடியிருக்கிறார்கள்.
இறைத்தூதர்களைப் பார்த்து மக்கள் அவர்களை எப்படி வரவேற்றார்கள் அவர்களிடம் மக்கள் என்ன கூறினார்கள் என்று இறைவன் கேட்பான். அவ்விதம் கேள்வி கேட்கப்படுகின்றத இறைத்தூதர்களில் ஒருவராக இயேசு இருப்பார்.
இன்னும், ''மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?'' என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், ''நீ மிகவும் தூய்மையானவன். எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய். உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்'' என்று அவர் கூறுவார். ''நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), ''என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்'' என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்'' (என்றும்); (இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர். அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்'' (என்றும் கூறுவார்). அப்போது அல்லாஹ், ''இது உண்மை பேசபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டான். அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும். (அல்குர்ஆன் 5:116-119)
இயேசுவின் இறைத்தூது
திரியேகத்துவம் - கடவுள் குமாரர் ஆகிய கருத்துக்களை குர்ஆன் மறுக்கும் எனில் இயேசுவின் உண்மையான தூது பற்றி அந்தத் திருமறை கூறுவது என்ன?
பல்வேறு சமூகங்களும் நாடுகளும் இறைவனின் போதனைகளில் இருந்து வழிமாறிச் செல்லும் போது இறைத்தூதர்களும் இறைச் செய்தியாளர்களும் இறைவனால் அனுப்பப்படுகின்றனர். அந்த இறைத்தூது எனும் சங்கிலித் தொடரிலே வந்தவர் தான் இயேசு.
மோஸேயும் மற்ற இறைச் செய்தியாளர்களும் தந்த போதனைகளிலிருந்து யூத இனம் வழிமாறிய போது அவர்களுக்காக சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்ட அனுப்பப்பட்ட இறைத்தூதர் தான் இயேசு.
இயேசுவின் பிறப்பிலே இறைவனின் அதி அற்புதம் இருந்தது. அவரது குழந்தைப் பருவம், சிறுவராய் இருந்த பருவம் - அளவற்ற அற்புதச் செயல் செய்த பருவம் ஆகியவற்றில் இறைவனின் துணை இருந்தது.
எனினும் பெரும்பாலான யூதர்கள் இயேசுவின் இறைத்தூததை மறுத்தனர். கீழ்க்காணும் குர்ஆன் திருமறையில் வசனங்கள் முன்னர் கூறிய வசனங்களில் தொடர்ச்சியாக இயேசுவின் இறைத்தூதை விளக்குகின்றனர். மேதினியை மகிழச்சி அலையில் தீர்க்கதரிசன வசனங்கள் இவை :
இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.
3:49 இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான். இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்.) ''நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன். நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன். அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோதையும் உயிர்ப்பிப்பேன். நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்ற நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவென். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது'' (என்று கூறினார்)
3:50 ''எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்குவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன். ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைப் பின் பற்றுங்கள்.''
3:51 ''நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவன். ஆகவே அவனையே வணங்குங்கள் இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான விழியாகும்.''
திருக்குர்ஆனின் இன்னொரு வசனம் மோஸேவுக்கு இறைவன் அருளிய தவ்ராத் எனும் வேதத்தை செல்லும்படியாவதே என இயேசு ஒப்புதல் அளிப்பது பற்றிக் கூறுகிறது.
இயேசு தனக்குப் பின்னர் வரப் போகின்ற இறுதித் தூதுவர் பற்றிய தீர்க்கதரிசனம் பற்றியும் இந்த வசனம் எடுத்துரைக்கின்றது. அந்த வசனம் வருமாறு :
மேலும், மர்யமின் குமாரர் ஈஸா ''இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும். எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்'' என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் ''இது தெளிவான சூனியமாகும்'' என்று கூறினார்கள். (61:6)
பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் - புதிய ஏற்பாட்டிலும் இயேசு கூறுகின்ற எதிர்காலத் தூதுவர் பற்றிய தீர்க்கதரிசன வசனங்கள் உள்ளன.
குறிப்பாக இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றிய பல்வேறு முன்னறிவிப்புகள் (தீர்க்கதரிசன உரைகள்) பழைய ஏற்பாட்டில் உள்ளன. அவரைத் தவிர வேறு எவரையும் குறிக்கவில்லை என்பது போன்ற வசனங்கள் பழைய ஏற்பாட்டில் இருப்பதை இங்கே காண்போம்.
இந்த தீர்க்கதரிசன உரைகள் இறைவனால் மோஸேவுக்கு அருளப்படுகின்றன. மோஸேயைப் போலவே ஒரு மார்க்க நிறுவனரை (தலைவரை) - நம்பிக்கையாளரின் சமூகத்திற்கு உரிய அழகிய எடுத்துக் காட்டை இஸ்ரவேலவர்களின் சகோதர சமுதாயத்திலிருந்து எழுப்பச் செய்வேன் என இறைவன் கூறுகிறான் (பைபிள்!)
உன்னைப் போலொரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக உங்களது சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி எம் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர் சொல்வார். எம் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்கு செவி கொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன். (பைபிள்: 18 :18-20)
இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றோடு நற்தொடர்பு உள்ள வர்கள் (அந்த வசனங்கள்) அந்த இறைத்தூதரைத் தவிர வேறு எவருக்கும் பொறுத்தமாக இருக்காது என்பதை எளிதாக உணர்வார்கள்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தான் மோஸேயைப் போல் சாதாரணமாகப் பெற்றோருக்குப் பிறந்து திருமண முடித்து நம்பிக்கையாளர்களின் சமூகத்தை அமைத்து, மிகப் பெரிய அளவில் சடடங்களை நிறுவி இயற்கையான மரணத்தை அடைந்தவர். இயேசுவுக்கு இது பொருந்தாது! புதிய ஏற்பாட்டுப் புத்தகத்தைக் கவனமாகப் படித்தாலும் இயேசுவும் இது போன்ற ஒரு திருத்தூதர் பற்றி முன்னறிவிப்புச் செய்வதைக் கவனிக்கலாம்.
நான் பிதாவை வேண்டிக் கொள்வேன் - அவர் என்றென்றைக்கும் உங்களுடன் கூட இருக்கும்படி சத்திய ஆவியாகிய வேறு ஒரு தேற்றறவாளனை அவர் உங்களுக்கு தந்தருள்வார்!
பரிசுத்த ஆவி பற்றியும் அதன் பணிகள் பற்றியும் யோவான், குறிப்பாக விவரித்துள்ளதையும் கவனிப்போம்.
சத்திய ஆவியாகிய அவர் வரும் போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். அவர் தம்முடைய சுயமாகப் பேசாமல் தாம் கேள்விப்பட்டவைகளை யாவையும் சொல்லி வரப் போகிறவைகளையும் அறிவிப்பார். அவர் என்னுடையதை எடுத்து உங்களுக்கு அறிவிப்பதால் என்னை மகிமைப்படுத்துவார், (யோவான்:16:13-14)
இந்த முன்னறிவிப்பின் விவரங்கள் பரிசுத்த ஆவி என்ற (அப்போதிருந்த பெயரைச் சுட்டிக் காட்டுவதல்ல) வரப் போகிறவரைப் பற்றிய குறிப்பே!
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் போகிறது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நான் போகாதிருந்தால் தேற்றறவாளன் உங்களிடத்திலே வாரார். (யோவான் : 16:7)
ஏனெனில் பரிசுத்த ஆவி என்பது இயேசுவின் காலத்திலும் அதற்கு முன்பும் இருந்தது என்பது பைபிளைப் படித்தால் புரியும். யோவான் பிறப்பதற்கு முன்னரே பரிசுத்த ஆவியால் நிரப்பபப்பட்டிருந்தார் என்றும் - இயேசுவும் (ஞானஸ்நானத்தின் போது) புறா உருவத்தில் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார் என்பதையும் பைபிளில் படிக்கிறேர். ஆனால் தேற்றறரவாளர் என்பவருக்கு உரிய குணக்கூறுகள் என்பதை தீர்க்கதரிசனங்களில் இருந்து நாம் காணலாம்.
1. அவர் (தேற்றவாளர்) இயேசு இவ்வுலகத்தை விட்டுப் போகாமல் (அவர்) வாரார்!
2. அவர் நம்பிக்கையாளர்களிடம் நிரந்தரமாகக் குடியிருப்பார்.
3. இயேசுவை அவர் பெருமைப்படுத்துவார்
4. இறைவனிடமிருந்து கேட்ட செய்திகளையே அவர் பேசுவார்.
இந்த குணமேன்மைகள் இறைத்தூதர் முஹம்;மது நபி (ஸல்) அவர்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதை கீழ்க்காணும் சிறு குறிப்புகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
1. இயேசுவுக்குப் பின்னால் வந்த ஒரே இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தான். இயேசுவுக்கு 6 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அவர் வருகின்றார். இயேசுவின் இறைப்பணி இஸ்ரவேல் சந்ததிகளின் காணாமல் போன ஆடு என்ற எல்லையோடு நின்று விடுகின்றது. ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் செய்தி உலகளாவியது.
2. இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் செய்தியைத் தான் இறைவன் உலக முழுமைக்குமான செய்தி - நிரந்தரமான செய்தி எனக் கூறுகிறான்.
3. முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் போல் இயேசுவைப் பெருமைப்படுத்திப் பேசியவர்கள் எவருமில்லை. யூதர்களோ அவரை ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்று அழைத்தார்கள். அவருடைய அன்னையை (மேரியை) ஒழுக்கங்கெட்டவர்கள் எனக் கூறினார்கள். இயேசுவை அவர்கள் சிலுவையில் அறைய முயன்றார்கள். முஹம்மது நபி யோ இயேசுவை மிகப் பெரிய இறைத்தூதர் என்று கருதினார்கள். இறைவனின் வார்த்தை இயேசு - என்றும் கூறினர். பைபிளில் சொல்லப்படாத இயேசுவின் அதிஅற்புதங்கள் பற்றிக் குர்ஆன் கூறுகிறது. மேரியே மிகச் சிறந்த கற்புள்ள பெண்மணி, சொர்க்கத்தில் இருக்கப் போகும் பெண்களில் சிறந்தவர் என்றும் கூறப்பட்டது. இவ்விதம் இயேசுவை மிக மிகப் பெருமைப்படுத்தியவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களே!
4. நான்காவதாக (தேற்றவாளர் பற்றிய) குண மேன்மைகள் இறைத்தூதர் முஹம்மது நபிக்கே மிகச் சுத்தமாகப் பொருந்தும்.
திருமறைக் குர்ஆன் வானவர் தலைவர் கேப்ரியல்(ஜிப்ரயீல்) அவர்களால் முஹம்மது நபிக்கு அருளப்பட்டது. அவரிடமிருந்து கேட்ட இறைவசனங்கள் வார்த்தை தவறாமல் - சேர்த்தல் ஏதுமில்லாமல் திரிபு இல்லாமல் - மறக்காமல் தனது தோழர்களுக்கு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அவர் (நபி) தனது விருப்பப்படி எதுவும் கூறுவதில்லை. இது அவருக்கு வஹி மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறல்ல! (குர்ஆன் 53:4-5)
சுயமாகத் தானே அவர் பேசமாட்டார் என்ற பைபிளின் வசனத்தை கூர்மையாகப் பார்த்தால் - தேற்றவாளர் என்ற பாத்திரத்தின் குண மேன்மைகள் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் குண மேன்மைகளோடு மிகச் சரியாக ஒத்துப் போவதைக் காணலாம்.
இந்தத் தீர்க்கதரிசனங்களோடு - மற்ற பிற தீர்க்க தரிசனங்களையும் வைத்துப் பார்த்தால் மறுக்க முடியாத ஒப்புவமை நபி (ஸல்) அவர்களுக்கே பொருந்தும்.
இதைப் பைபிள் - குர்ஆன் - மற்றும் மத ஒப்புநோக்கு பற்றிய நவீன கால ஆய்வுரைகளை வைத்து யூதர்களும் கிறிஸ்தவர்களும் நபி (ஸல்) அவர்களை மறுப்பதில்லை.
ஆனால் தவறான கருத்தடிப்படையிலும் விவரமறியாத வெறுப்புடனும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை நிராகரிக்கின்றார்கள்.
இயேசுவின் வின்னேற்றம்
இயேசு நாதர் காட்டிய நேர்வழியில் மக்கள் நடக்காமல் இருப்பது தான் வரலாற்றின் சோகமான உண்மை. இறையருளால் சில சீடர்கள் தான் அவரை ஆதரித்து அவரது வழியில் நடந்தனர். இதைவிடவும் நம்பிக்கையற்ற சிலர் 600 ஆண்டுகளுக்குப் பின்னர் இறைத்தூதர் முஹம்மது நபியைக் கொல்ல முயற்சி செய்தது போலவே இயேசுவையும் கொல்ல முயற்சி செய்தனர்.
ஆனால் இறைவன் அந்த சதிகாரர்களின் செயல் அறிந்து அதை விட உயர்ந்த திட்டம் வைத்திருந்தான். இயேசுவுக்காகவும் அவரது சீடர்களுக்காகவும் இதைப் பற்றி திருக்குர்ஆன் கீழ்க்காணும் வசனங்களை விளக்குகிறது.
அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது; ''அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?'' என்று அவர் கேட்டார். (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாதிய்யூன். ''நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம். திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்'' எனக் கூறினர். ''எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம். எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!'' (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.) (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான். தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான். ''ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன். இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன். நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன். மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன். பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்'' என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)! எனவே, நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்வேன். அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் : 3:53-56)
மேற்கூறிய வசனங்கள் குறித்துக் காட்டுவது போல் இயேசு தனது மரணத்திற்கு முன்பே வானத்தில் உயர்த்தப்பட்டார். இதன் பொருள் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை! இதைத் திருக்குர்ஆன் எடுத்தோதுகிறது. இயேசுவின் எதிரிகள் அவரை சிலுவையில் கொல்லப் பார்த்தனர். ஆனால் இறைவன் இயேசுவைக் காப்பாற்றினார். யாரோ ஒருவர் தான் சிலுவையில் அறையப்பட்டார். சிலுவையில் அறையும் இந்த சதியும் மர்யம் (மேரியை) பற்றிய அவதூறும் நம்பிக்கையற்ற யூதர்களால் செய்யப்பட்டது என்று திருக்குர்ஆனின் கருத்து. இது பற்றிய திருக்குர்ஆனின் வசனம் வருமாறு :
இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாசெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிப்பட்டனர்). இன்னும், ''நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்'' என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான். மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார். (4:156-159)
அப்படியானால் இயேசுவுக்குப் பதிலாக அறையப்பட்ட மனிதன் யார்? இதைப்பற்றி திருக்குர்ஆன் விளக்கவில்லை. இந்தக் கேள்விக்குரிய பதிலையும் கூறவில்லை!
திருக்குர்ஆனுக்குத் தெளிவுரை எழுதியவர்கள் சில பெயர்களைக் குறித்து காட்டியுள்ளனர். திருக்குர்ஆனோ நபிகள் நாயகத்தின் அறிவுரை - விளக்கவுரைகளோ இவர்களுடைய யூகங்களுக்கு ஆதரவாக இல்லை.
இதன் பொருள் நீதித் தீர்ப்ப நாளுக்கு முன்னர் இயேசு மீண்டும் பூவுலகிற்கு வருவார் என்பதையே காட்டுகிறது. எனினும், திருக்குர்ஆன், விரிவுரையாளர்கள் மேற்சொன்ன வசனத்தின் கடைசிச் சொற்றொடர்களை வைத்து விளக்கம் தந்துள்ளனர்.
இயேசு மீண்டும் வருவார். அப்போது கிறிஸ்துவர்களும், யூதர்களும் இயேசு இறப்பதற்கு முன் அவரை நம்புவார்கள் என்று தெளிவுரையாளர்கள் கூறுவதற்கு நபிகள் நாயகத்தின் அருள்வாக்குகள் ஆதாரம் தருகின்றன.
கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள்
இந்தக் கருத்துக்களைப் படித்தவுடனேயே கிறிஸ்துவாகள் கூறக் கூடும், பாருங்கள், இது தான் முஸ்லிம்கள். இயேசுவைப் பற்றி இவர்கள் இப்படிக் கூறுவதால் தான் இவர்கள் மறுப்பாளர்களாகவும் நம்பிக்கையற்றவர்களாகவும் இருக்கின்றனர்! என்பர்.
இவர்கள் இப்படிக் கூறினாலும் திருக்குர்ஆனின் கருத்துக்கள் கூர்மையான ஆராய்ச்சிக்கு உரியதாக இருக்கிறது. யார் உள்ளபடியே இறை நம்பிக்கையையும் கிறிஸ்துவ மார்க்கத்தின் மீது ஆர்வம் கொண்டிருக்கின்றார்ளோ அவர்கள் கீழக்காணும் காரணங்களை ஆராய வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.
1. திருக்குர்ஆன் என்பது இறைவன் இறுதியாக அருளிச் செய்த வேதம்.அந்த வேதத்தில் சொல்லப்பட்டது அனைத்தும் முழுமையான உண்மை. இதை நம்பாதவர்களுக்கு இந்தக் கருத்துக்கள் பெரிதாகத் தென்படாது. ஆனால் திருக்குர்ஆன் பற்றிய வரிக்கு வரியான திறனாய்வும், விஞ்ஞான அடிப்படையிலான ஆராய்ச்சியும் அந்த வேதத்தினலுள்ளது அனைத்தும் உண்மைதான்.
என்று சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. குர்ஆன் என்பது முஹம்மத் நபி (ஸல்) அவர் கூறப்பட்டது என்று சிலர் கூறுவர். கிறிஸ்தவ யூத வேதங்களைக் காப்பி அடித்தது என்றும் கூறுவர். அவர்களுக்கு உலக வரலாறும் தெரியாது. குர்ஆனும் புரியாது. நபிகள் நாயகம் பற்றியும் அறிந்திருக்கவில்லை.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவுக்க இரண்டு நூற்றாண்டுகள் கழித்துத் தான் அரபி மொழியில் பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது.
அது தவிர நபிநாதர் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்பதையும், அவர் வாழ்ந்த கி.பி. ஆறாம் நூற்றாண்டில் மத வேதங்கள் என்பன தேவாலயங்கள் சர்ச்சுகள் தவிர வெளியுலகில் புழக்கத்தில் இல்லை என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால்.. மேற்சொன்ன குற்றச்சாட்டிலுள்ள அபத்தத்தைப் புரிந்து கொள்ளலாம்.
2. இறைவனின் செய்தியிலுள்ள ஓரிறைத் தன்மையையும் உலகளாவிய வாக்கையும் புரிந்து கொண்டால் இறைத்தூதர்களை மக்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும். இறைத்தூதரில் ஒருவரை நிராகரித்தாலும் அது அனைத்து இறைத்தூதர்களையும் நிராகரிப்பதற்குச் சமம். யூதர்கள் இயேசுவின் இறைத்தூதையும் நபிகள் நாயகம் அவர்களின் இறைத்தூதையும் நிராகரிக்கிறார்கள். கிறிஸ்துவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் இறைத்தூதை நிராகரிக்கிறார்கள். முஸ்லிம்களோ அனைத்து இறைத்தூதையும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் அதிலுள்ள தவறான சரித்திரத் திரிபுகளையும் - மனிதன் நுழைத்த கருத்துக்களையும் நிராகரிக்கிறார்கள்.
3. திருக்குர்ஆன் கூறுவது காரணமாகவே முஸ்லிம்கள் தங்களது நபிநாதரை நேசிப்பது போலவே இயேசுவையும் நேசிக்கிறார்கள். மேலும் கிறிஸ்துவர்களின் புதிய ஏற்பாட்டில் கூறப்படாத இயேசுவின் அற்புதங்கள் திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றன. எடுத்துக்காட்டாக இயேசு தொட்டிலிலிருந்து பேசுகிறார். மக்கள் எதை உண்கிறார்கள், எதைத் தங்களது களஞ்சியத்தில் வைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார் (திருக்குர்ஆன் வசனங்களின்படி)
4. இயேசு ஒரு தெய்வம் என்ற கருத்து புனிதபால் மற்றும் அவரது சீடர்களால் கிறிஸ்து மார்க்கத்தில் நுழைக்கப்பட்டது. இதை எதிர்த்த பல லட்சக்கணக்கான கிறிஸ்துவர்களின் சவங்களின் மீது இந்தக் கருத்து நிலைநாட்டப்பட்டது. இதைப் பற்றி காஸ்டிலோ என்பவர், ஒரு மனிதனை நெருப்பில் எரிப்பது ஒரு கொள்கையை நிலைநாட்டியது ஆகாது என்றார்.
5. சக்கரவர்த்தி கான்ஸ்டான்டைன் என்பவரின், தலைமையில் நடந்த கிறிஸ்துவ மாநாட்டில் தான் தற்போதுள்ள கிறிஸ்துவர்களின் நான்கு புதிய ஏற்பாடுகள் அங்கீகாரம் பெற்றன. இதுவும் அந்தப் பேரரசரின் அரசியில் லாபங்களுக்காகச் செய்யப்பட்டன.
ஏராளமான பைபிள் புத்தகங்களும் ஏற்பாடுகளும் மதக் கிரந்தங்களும் தள்ளுபடி ஆகமம், என்ற பெயர் இடப்பட்டன. இதில் பல புத்தகங்கள் இயேசுவின் சீடர்களால் எழுதப்பட்டவையாகும். இவற்றில் பர்னபாஸ் ஆகமம் - ஹெர்மாசின் மேய்ப்பன் போன்ற பைபிள் புத்தகங்கள் திருக்குர்ஆனோடு ஒத்துப் போகின்றன.
6. இயேசுவின் ஓரிறைக் கொள்கையும், மனிதக் கருணைக் கொள்கையும் முஸ்லிம்களால் மட்டும் ஒப்புக் கொள்ளப்படவில்லை. யூதர்களாலும், பழைய காலத்துக் கிறிஸ்தவர்களான எபியோனியர்கள் - செரிந்தியர்கள், பாசிலிடியன்கள், காபோகிரேடியன்கள், ஹைபிஸ்சிஸ்டிரியன்கள் போன்றவர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டன.
அரியன்கள், பாசிலியன்கள், கோத்துகள் போன்றவர்களாலும் இறைத்தூதர் தான் இயேசு என்பதை ஒப்புக் கொண்டார்கள். ஆனால் இப்போதும் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலுமுள்ள ஓரிறை சர்ச்சுகளும், ஜெஹோவா காட்சியாளர்களும் இயேசுவைக் கடவுள் என வணங்குவதில்லை.
7. கூர்மையான பைபிள் ஆராய்ச்சி - இயேசுவும், அவரது சரிதம் எழுதியவர்களும் சொல்லாத கருத்துக்களைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது.
இது பற்றி ஹெய்னிஸ் ஜாஹ்ர்ன்ட் என்பவர், இயேசு பேசாத சொற்களை அவரது வாயிதழில் வைத்தனர். அவர் நடத்தாத அற்புதங்களை அவர் நடத்தியதாகக் கூறினர் என்றார். இது போலவே பல முடிவுகளை தேவாலய ஆயர்கள் அறிந்திருந்த போதிலும் அவற்றை ரகசியமாக வைத்திருந்தனர். ஆராய்ச்சி நிபுணர்களுக்கு மட்டும் அறிவித்தனர். சர்ச்சுகள் இயேசுவைப் பற்றிக் கூறுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று மனித குமாரன் இயேசு என்ற நூலில் ரூடால்ஃப் அகஸ்டீன் எழுதியுள்ளார். (ஜெர்மனிய மொழியில் இந்தப் புத்தகம் 1972 ல் வந்தது. 1977 ல் மொழி பெயர்க்கப்பட்டது).
8. இயேசுவின் இயற்கைக் குணம் - இறைத்தூது - சிலுவை மரணம் - விண்ணேற்றம் இவை பற்றிய தவறான எண்ணங்களில் இருப்பது தான் கிறிஸ்துவ மார்க்கத்தில் இன்றுள்ள பிரச்சினை. இதைப் பலரும் அறை கூவி ஆராய்ச்சி செய்துள்ளனர்.
இங்கிலாந்திலுள்ள பல அறிஞர்கள் எழுதி ஜான் ஹிக் என்பவரால் ஒழுங்கு செய்யப்பட்டு, கடவுள் அவதாரப் புராணம் என்ற நூல் 1977 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் அந்த அறிஞர்கள் இயேசு என்ற மனிதர் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டவர், தெய்வீக நோக்கத்துக்காக அவர் செயல்பட்டார். பிற்காலத்தில் அவரே கடவுள் அவதாரம் என்று கூறப்பட்டது. இது புராண பாணியில் கவிதையின் உயர்வு நவிற்சி முறையில் அவரது முக்கியத்துவத்தை உயர்த்துவதற்காக நமக்குக் கூறப்பட்டது தான் என்று சொல்லியுள்ளார்கள்.
ஆனால் ஜார்ஜ் கேரிப் என்பவர் இந்தப் புத்தகத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் போது இயேசுவைக் கடவுள் அவதாரம் என்று ஒப்புக் கொள்ளவில்லை எனில் இயேசுவின் இறைத்தூதை முழுமையாக உணர முடியாது. மக்களை வழிநடத்தும் ஆளுமையை விளக்க முடியாது என்று கூறியுள்ளார்.
ஆனால் உறுதியாக இது பலவீனமான வாதம் ஆகும். ஆப்ரஹாம், மோசஸ், முஹம்மத் நபி (ஸல்) போன்ற மிகப் பெரிய தூதர்கள் தங்களது மக்களின் மீது அளப்பரிய வழி நடத்தும் ஆளுமையை பெற்றிருக்கிறார்கள். இவர்களில் யாரும் தன்னைக் கடவுள் என்றோ - கடவுளின் குமாரர் என்றோ கூறிக் கொள்ளவில்லை.
9. பிதா மகன் பரிசுத்த ஆவி என்ற திரியேகத்தத்துக் கொள்கை இன்றிருக்கும் பைபிளில் கூடக் காண முடியாது. நமது இறைவனான கர்த்தர் ஒரே ஒருவர் தான் (மத்தேயு) என்று இருக்கிறது. திரியேகத்துவத்தை மறுக்கிறது. சுவிசேஷக்காரர்கள் பலரும் இது போல் எழுதியுள்ளனர்.
10. தான் ஒரு தெய்வம் என்று இயேசு கூறியதாக இப்போது இருக்கிற பைபிளில் கூடக் கூற முடியாது. கடவுளின் குமாரன் நான் என்ற சொல் இயேசுவின் வாயிலிருந்து வந்ததாகவும் பைபளில் கூற முடியாது.
பைபிள் அகராதி என்ற நூல் ஹேஸ்டிங்கினர் கூறுகிறார். தன்னைக் கடவுள் என்று இயேசு கூறினாரா என்பது சந்தேகத்திற்குரியது. எனது பைபிள் ஆராய்ச்சியில் கடவுளின் குமாரன் என்ற சொற்களை யோவான் சுவிசேஷத்தில் 5-7 ஆகிய அத்தியாயங்களில் காண முடிகிறது. பிறர் தான் அந்தச் சொற்களை சில இடங்களில் கூறுகிறார்கள். கடவுளின் குமாரன் என்று இயேசுவே கூறியிருப்பதாகவே வைத்துக் கொண்டாலும் கீழ்க்கண்ட கருத்துக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Þ அந்தக் குமாரன் எனும் சொல் ஹெலெனிஸ்டிக் என்ற மொழி வகையைச் சார்ந்தது. இயேசுவும் அவரது சீடர்களும் புழங்கிய மொழி வகை அது. செமிடிக் மொழியில் நிச்சயமாக அந்தப் பொருள் வராது.
Þ கிரேக்க மொழியிலுள்ள பைபிள் குமாரன் என்ற சொல்லுக்கு பியாஸ் - பியாடா எனும் சொற்கள் காணப்படுகின்றன. கிரேக்க மொழியில் இதற்கு ஊழியன் - ஊழிய மகன் என்பதே! இது வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் போது இயேசுவுக்கு மகன் என்ற சொல்லையும் மற்றவர்களுக்கு ஊழியர் என்ற சொல்லையும் பயன்படுத்தினர்.
Þ மனித குமாரன் என்று இயேசுவைக் குறித்துச் சொல்லப்பட்ட சொல் சுவிசேஷங்களில் 81 முறை வருகிறது. இது இயேசு தன்னுடைய மனித நிலைமையைக் குறித்து அறிவார்ந்த முறையில் கூறியதாகும். இந்த இலக்கியப் பூர்வமான சொல் இயேசுவின் மனிதப் பாத்திரத்தைப் புற்றிய அழுத்தமான வெளிப்பாடாகும். இப்போது வாழும் கிறிஸ்தவர்கள் இதை ஒப்புக் கொள்வார்களா?
பைபிள் வசனம் - போப் மறுப்பு
யூதத் தலைமைப் பூசாரியாலும், யூத மூப்பர்களாலும் திட்டமிடப்பட்டு – உத்தரவிடப்பட்டது தான் இயேசு கைது செய்யப்பட்டார். சிலுவையில் அறையப்பட்டார் என்பது பரம்பரையான பைபிள் கூறும் கதை.
1960 ஆம் ஆண்டுகளில் இந்தக் கதை கிறிஸ்துவர்களின் மிக உயரிய அதிபதியான போப்பாண்டவரால் மறுக்கப்பட்டது. சிலுவையில் இயேசு அறையப்பட்டதற்கு யூதர்கள் பொறுப்பில்லை எனக் கூறினார். இக் கூற்று பைபிள் கதையையே மறுப்பதாகும்.
இது (இஸ்ரேல் நாட்டுக்காகச் செய்யப்பட்ட) அரசியல் ரீதியான அறிவிப்பு என நீங்கள் கூறலாம். ஆனால் முஸ்லிம்கள் தொடர்ந்து கூறி வருகின்ற ஒரு உண்மையை இந்த அறிவிப்பு நிலைநாட்டுகிறது.
கிறிஸ்துவ மார்க்கத்திற்குள் தேவாலய நிர்வாகங்கள் பல செய்திகளைப் புகுத்திக் கொண்டிருந்தன. இதனால் பல நம்பிக்கைகள் மாறியது மட்டுமல்லாமல் - கிறிஸ்தவ மார்க்கத்தின் பழைய உருவத்தையே மாற்றி முரண்படுகிறது.
கடவுள், பைபிள், இறைவனுடன் மனிதனின் உறவு நிலை பற்றிய தேவாலயங்கள் மதக்கருத்துக்கள் மக்களை துரதிர்ஷ்டவசமான முடிவுகளை எடுக்கக் கட்டாயப்படுத்தியது.
இதனால் ஒருவர் விஞ்ஞானியாக - படிப்பாளியாக இருந்து கொண்டு கிறிஸ்துவராகவும் இருக்க முடியாது என்ற நிலையைத் தோற்றுவித்தது.
மதத்தையும் விஞ்ஞானத்தையும் ஒன்று சேர்க்க முடியாது என்ற கருத்தை தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள் மற்றும் பெரும்பாலான மக்களிடையே தோற்றுவித்தது.
இதன் தாக்கம் பிற மதங்களின் மீதும் ஏற்பட்டது. இயேசுவின் போதனைகளைச் சீர்குலைக்காமலும் - திரிபு செய்யாமலும் இருந்திருந்தால் இது நடந்திருக்காது.
இதனால் தான் இஸ்லாம் இதைப்பற்றிக் கூறும் போது மதத்திற்கும் விஞ்ஞானத்திற்கம் முரண்பாடு இல்லை எனக் கூறுகிறது.
விஞ்ஞான உண்மைகள் - இறைவனைப் பற்றிய ஞானத்தை அறிய ஒரு வழி தான். வெளிப்பாடுகள் என்ற முன்னுரைப்புகள் இயேசுவின் போதனைகளிலும் குர்ஆனிலும் உள்ளன. உண்மையான விஞ்ஞான அறிவும் மதமும் - கடவுள் எனும் மூல ஊற்றிலிருந்தே வருகின்றன. ஏனெனில் கடவுள் தனக்கு முரணானதைக் கூற மாட்டார்.
கிறிஸ்துவச் சரித்திரத்திலுள்ள திரிபுகளான - திரியேகத்துவம் கடவுளின் குமாரன், ஜென்மப் பாவம், பாவமன்னிப்பு என்பவை மக்களை மத்த்திலிருந்து விரட்டியுள்ளன. ஆனால் இஸ்லாம் மார்கத்திற்கு இது போன்ற பிரச்சினைகள் இல்லை. இருப்பினும் இஸ்லாமையும் ஒரு மதம் என்றே மேற்கத்திய பாணியில் ஒரு குறிப்பிட்ட வளையத்தில் - பொருளில் நிலை நிறுத்தியுள்ளதால் கிறிஸ்துவ மதம் போலவே இஸ்லாத்தையும் எண்ணிக் கொண்டனர். ஆனால் ஒரு சிலர் தான் இந்த யூகத்திலுள்ள பொய்யைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பெற்றுள்ளனர்.
குர்ஆனின் வசனங்களுக்கு ஆதாரம்
இயேசுவைப் பற்றிய குர்ஆனின் கண்ணோட்டத்தைத் தயக்கத்தோடும் விருப்பமில்லாமலும் பலர் பார்ப்பதற்கு மேற்கூறிய யூகங்கள் காரணமாகின்றன. ஆனால்சரித்தித உண்மைகளும் சில இருக்கவே செய்கின்றன.
Þ இயேசுவின் மறைவுக்குப் பின்னர் மூன்று தலைமுறைகளுக்கு கிறிஸ்துவம் என்பது யூத மார்கக்த்தின் ஒரு பகுதி என்றே நினைத்து வந்தனர்.
Þ கிறிஸ்துவ சரித்திரம் முழுவதும் கிறிஸ்துவர்கள் மற்றும் யூதக் கல்வியாளர்களின் பண்பாடு ஒரே மாதிரியாகவே இருந்தது.
Þ பைபிள் ஆராய்ச்சிகளும் விஞ்ஞான ஆய்வுகளும் பைபிளோடு ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது.
Þ கிறிஸ்துவர்களில் சிலர் ஒரு தெய்வத்தை ஒப்புக் கொண்டனர். இயேசுவைக் கடவுளாகவோ - கடவுளின் குமாரராகவோ ஒப்புக் கொள்ளவில்லை.
இன்றைக்கு ஆய்வாளர்களும், பிறரும் கண்டுபிடித்துள்ள இயேசுவின் நிலையைப் பற்றி ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் குர்ஆன் கூறியது. அதிலிருந்து எந்த மாற்றத்தையும் குர்ஆன் செய்து கொள்ளவில்லை.
இஸ்லாம் மார்க்கத்தை மக்களிடமிருந்து மறைத்தல்
குர்ஆன் கூறியவற்றை மக்களிடமிருந்து மறைத்து - அதை நிராகரிக்கம் போக்குக்குக் காரணங்கள் சில உண்டு.
1. நீண்ட நெடிய காலததிற்கான வெறுப்பு இஸ்லாம் மீது ஏற்பட்டது (ஜெருஸலம் நகர் யாருக்குச் சொந்தம் என்பதற்காக முஸ்லிம்கள் கிறிஸ்துவர்களுக்குள்ளே நடந்த) சிலுவை யுத்தம். அடுத்தது அரபு - இஸ்ரேல் மோதல்.
2. சிலர் கிறிஸ்துவத்தை ஒப்புக் கொள்வதில்லை. அதே நேரத்தில் உண்மை எது என்பதும் புரிவதில்லை.
3. மிகப் பலர் இஸ்லாமை ஒப்புக் கொண்டால் பிறர் கேலி பேசுவார்களே, சுற்றத்தாரிடமிருந்து பிரிந்து போய் விடுவோமே - கிறிஸ்துவ மார்க்கத்தை வெளிப்படையாக கைவிட்டு இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றால் மோதல் ஏற்படுமே என்று தான் நினைக்கின்றனர்.
4. கல்வித் துறையில் குறிப்பாகக் கீழ்த்திசை ஆராய்ச்சியாளர்கள் இஸ்லாம் மற்றும் குர்ஆன் பற்றி எழுதினால் யாரும் அதைத் திறனாய்வு செய்வதில்லை. அதிலிருந்து மேற்கோள் காட்டுவதில்லை. அதை ஒரு அறிவார்ந்த பணி என்று கூட ஒப்புக் கொள்வதில்லை.
இதை விடப் பெரிய துயரம் - இதனால் சிலர் பதவியையும் இழந்து விடுகின்றனர். 1978 ஜனவரி 3 ஆம் நாளைய வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கைச் செய்திப்படி ரிச்மாண்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் டாக்டர் ராபர்ட் அலெய் தனது மத ஆராய்ச்சித் துறை பதவியை இழந்தார்.
இயேச ஒரு போதும் தன்னை கடவுளின் குமாரர் எனக் கூறவில்லை என்ற கருத்தை ஆதரித்தார் அவர் என்பதே காரணம்.
பழம்பெரும் பைபிள்களை ஆராய்ந்து டாக்டர் அலெய் எழுதினார்.
இயேசு தன்னைக் கடவுளின் குமாரர் எனப் பெசிய வ சனங்கள் பிற்காலத்தில் பைபிளில் சேர்க்கப்பட்டவையே. தேவாலயங்கள் கூறுவது போல் அவர் பேசவில்லை. இயேசுவின் முழு வாழ்வு முறையைப் பார்த்தாலும் இத்தகைய தெய்வத்தன்மை இருந்ததாகக் கொள்ள முடியாது. இயேசு இறந்த பின்னர் மூன்று தலைமுறைகளுக்கு கிறிஸ்துவத் தேவாலயம் - யூதத் தேவாலயத்தின் கட்டுப்பாட்டிலிருந்தது. இயேசுவுக்கு தெய்வத்தன்மை இருந்தது எனக் கூறுவது அவர்களின் இறைநம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாகும்.
இயற்கை அமைப்பு
இதைத் தவிர இன்னும் ஏராளமான பேர் இயேசு பற்றிய உண்மையை உணர்ந்தவர்களாக இருக்கின்றனர். இதனால் இஸ்லாம் என்பது வேகமாக வளர்கிற மார்க்கமாக உலகில் இருக்கிறது. மிகுந்த விசுவாசம் கொண்ட கிறிஸ்துவர்களாய் உள்ளவர்கள் கூட கீழ்க்காணும் உண்மைகளை உணர்ந்தவர்களாக உள்ளனர்.
1. இயேசுவை இஸ்லாம் நிரகரிக்கவில்லை. மனித குலத்திற்கு இறைச் செய்தியைக் கூறிய மாமனிதர்களின் வரிசையில் அவரை வைக்கிறது. இறைவன் நபித்தும், இறைச்செய்தி ஆகியவற்றில் புதிய எழுச்சியை இஸ்லாம் தோற்றுவிக்கிறது.
2. கிறிஸ்துவம், யூத மதம் அல்லது வேறு எந்த மதமானலும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தோடு பார்க்குமானால் ஓரிறைவனையும் அவன் மனித குலத்திற்கு இட்டிருக்கும் கட்டளைகளை உணர்ந்தவர்களாகவும் மிக மிகப் பொருத்தம் உடையவர்களாகவும் இருப்பார்கள். சில பிரச்சினைகளில் ஏன் பைபிள் குளறுபடிகளுடனும் குறைவிடுதல்களோடும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
3. இறைச் செய்தி வெளிப்பாட்டின் மிகப் பெரிய சங்கிலித் தொடரின் கடைசித் தொடராகத் தான் இருப்பதாக இஸ்லாம் கருதுகிறது. தனக்கு முன்னுள்ள நம்பிக்கையாளர்கள் இஸ்லாம் மீதும் நம்பிக்கை கொள்வார்களானால் மிகப் பெரிய இறை அருள் கிடைக்கும் என்று இஸ்லர் வாக்குறுதி தருகிறது. யார் தனது மதத்தில் நம்பிக்கை கொள்வதோடு என்னையும் நம்பி - எனக்கு இறைச் செய்தி அளிக்கப்பட்டதாக நம்பிக்கை கொள்கிறாரோ அவருக்கு இரு பரிசு இறைவனால் அருளப்படும் எனக் கூறியுள்ளார் நபி. ஒரு பரிசு தனது மதத்தை நம்புவதற்கு! இன்னொன்று உண்மையை அங்கீகரிப்பதற்கும் - இஸ்லாத்தை நம்புவதற்கும்!
இறுதியாக இயேசுவை இறைவனின் மிகப் பெரிய தூதுவர்களில் ஒருவராகக இஸ்லாம் கருதுகிறது. இயேசுவின் செய்தியே ஓரிறைவன் பற்றிப் போதிப்பதும் - அந்த இறைவனிடம் மனித குலத்தை அழைத்துச் செல்வதுமாகும்!
இயேசு தன்னை இறைவனின் அடியார் - நற்செய்தி கொண்டு வந்த தூதுவர் என்பதைத் தவிர வேறு எதுவும் கூறவில்லை. அவரது வாழ்வு - இறைச் செய்தி பற்றி குர்ஆன் ஏராளமான ஆதாரங்களுடன் பேசுகிறது. இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி முஸ்லிம்கள் உறுதியாக நம்புகிறார்கள், காத்திருக்கிறார்கள்.
இயேசு இரண்டாம் வருகை தரும் போது கிறிஸ்துவர் அல்லாதவர்கள் மீது தீர்ப்புத் தருகிற கடவுளாக வருவதில்லை. இறைத்தூதுவர் இயேசு என்ற அளவில் தான் வருவார்.
தவறாக கருத்துக்களைத் திருத்தவே இயேசு வருவார்!
தன்னைப் பற்றியும் தனது இறைத்தூது பற்றியும் ஏற்கனவே தவறான கருத்துக்களை கொண்டிருந்தவர்களைத் திருத்தவே அவர் வருவார்.
நபிநாதர் வாக்குப்படி இரண்டாம் வருகை தருகின்ற இயேசு நாற்பதாண்டுகள் இவ்வுலகில் தங்குவார். அப்போது உலக வாழ்வே அனைவருக்கும் மகிழ்ச்சியுள்ளதாய் இருக்கும். அப்போது உலகிலுள்ள ஒவ்வொருவரும் அவரை இறைத்தூதுவர் என்றே நம்புவார்கள் - கடவுளின் குமாரர் அவர் என்று நம்ப மாட்டார்கள்.
இயேசு இரண்டாம் வருகை நிகழ்கிற போது உயிருடன் இல்லாதிருந்தால் அவரைப் பற்றித் தவறான கருத்துக் கொண்டிருந்தோர் என்ன செய்வது?
இப்போதே - இன்றே - சரியான கருத்தை.. .. சத்தியத்தை நம்பிப் பின்பற்ற வேண்டியது தான்!
சத்தியத்தில் விழித்துக் கொண்ட இதயம்!
(இக்கடிதம் பற்றி குறிப்பு இறுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது)
அன்புள்ள ஐயா,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
தாங்கள் தொலைக்காட்சியில் விவாதித்த விவரம் குறித்து மதக் கல்வி மாணவியாக இருந்போதும் அதற்குப் பிறகு உலகத்தின் பல பாகங்களிலும் நான் விவாதித்திருக்கிறேன்.
ஆங்கில நாட்டைச் சேர்ந்த புதிய முஸ்லிம் பெண்ணாகிய நான் இப்போது சௌதி அரேபியாவில் உள்ளேன். உங்களது விவாதம் கூர்மையான வேறுபாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. சில விஷயங்களில் சிந்தனையையும் தூண்டுவதாகவும் அமைந்திருக்கிறது.
இயேசுவைப் பற்றியும் மேரியைப் பற்றியும் குர்ஆனில் கூறப்பட்டிருப்பதும் புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருப்பதும் எதிர் எதிராக கண்ணோட்டங்களாகும்.
கிறிஸ்துவ நம்பிக்கை இயேசு என்பவர் கடவுளின் குமாரர் என்பதாகும். குர்ஆன் இதை நிராகரிக்கிறது. இயேசு தன்னைப் பற்றி கடவுளின் குமாரர் எனக் கூறாத போது ஏன் கிறிஸ்தவர்கள் இப்படிக் கூறுகிறார்கள்? என்று கேள்வி கேட்க வேண்டியது அவசியமாகிறது.
இஸ்லாம் கிறிஸ்துவம் ஆகியவற்றின் அடிப்படைகளை ஆராய்ந்தால் இதற்குரிய பதில் வெளியாகும். முஸ்லிம்களாகிய நாம் இறைவன் ஒருவன் மீது தான் நம்பிக்கை கொண்டுள்ளோம். வசனங்களைக் கொண்டே குர்ஆன் மீதும் விசுவாசம் கொண்டுள்ளோம்.
அது போலவே இறைவனின் தூதவரான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உண்மையான தூதுவர் - இறைவனின் அடியார். இறைவனுக்கு உண்மையானவர் - கீழ்படிதலுள்ளவர் நீடித்த - முழுக்க முழுக்க, ஒரு மனிதர் - இறைவனின் நல்வழியில் அவனிடம் மக்களை அழைத்துச் செல்லும் இறைக்காரணத்திற்கு ஒரு கருவியாக இருந்தவர் - என்று நம்புகிறோம்.
இப்போது கிறிஸ்து மார்க்கத்தைப் பார்போம். அந்த மார்க்கம் இறைவனை அடிப்படையாக வைத்து எழுப்பப்படவில்லை. வேதப்புத்தகம் என்பது கூட இயேசு இறந்த பின்னர் 150 ஆண்டுகளுக்குப் பின்னரே எழுதப்பட்டதாகும்.
கிறிஸ்து மார்க்கம் என்பது இயேசுவின் பாத்திரத்தை வைத்தே தொடங்கப்படுகிறது. இயேசு அதிசய அற்புதங்களைச் செயதவர் - இறந்தவரைப் பிழைக்கச் செய்தவர் - குஷ்டரோகிகளைக் குணப்படுத்தியவர், குருடர்களுக்குக் கண் தந்தவர் என்பது உண்மையே. வியத்தகு மனிதராய் - இறைவனின் அருள் பெற்றுப் பிறந்தவராய் - இறைப்பணி புரிந்தவராய் இருந்தார்.
அவரது மறைவுக்குப் பிறகு அந்த மந்திர த் தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக கடவுளின் குமாரன் என்ற தத்துவம் உதயமாகி அவரைப் பொருத்தமாக நிலை பெறச் செய்யும் முயற்சிகள் தொடங்கின.
கிரேக்க ரோமன் கடவுள்கள் அற்புத உயர் மனிதர்களாய் மதிக்கப்பட்ட அந்தக் காலத்தில் வாழ்ந்த கிறிஸ்துவக் கல்வியாளர்களும், அது போன்ற கருத்துக்களால் தாக்குதல் பெற்றிருந்தனர்.
கிறிஸ்து மார்க்கத்தில் பின்னர் வந்த பவுல் கூட ஹெலன் இன யூதரே. அவர் இயேசுவைப் பார்த்ததுமில்லை. சந்தித்ததும் இல்லை. ஆனால் அவர் கூறிய - எழுதிய அனைத்தும் அந்தக் காலத்து நம்பிக்கைகளால் தாக்கம் பெற்றவையே ஆகும். வாழ்கின்ற தேவன் இயேசு என்ற கூற்றும் பவுலுடையது தான்.
இயேசுவின் அதி அற்புதமான பிறப்பு- அவர் கடவுளின் குமாரன் என்ற தோற்றத்துக்கு அடிப்படை தருவது போல் தோன்றும். 1101ஸ்ரீ2 இரட்டைப் படைத் தத்துவததைக் கொண்டு இதை நிலை நாட்டுகிறார்கள். கடவுள் மேரியின் கர்ப்பத்தில் ஊதினார். மேரி இயேசுவைப் பெற்றார். எனவே இயேசுவின் தந்தை கடவுள்! இயேசு - கடவுளின் குமாரர் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
குர்ஆனும் கிறிஸ்துவ நூல்களும் மேரி மனதிலும் உடலிலும் விதிவிலக்காக இருக்கின்ற ஒரு பெரும் தூய்மையுடையவராய் இருந்தார் என்றும் கடவுளுக்குச் சேவை செய்வதற்காக இந்த உலகில் அவர் அர்ப்பணிக்கப்பட்டார் என்றும் தேவாலயத்திலேயே அவர் கடவுள் பணி ஆற்றினார் என்றும் கூறின.
ஆகவே கடவுளின் சித்தப்படி மேரியே கூட அந்தத் தேவாலயத்தில் அதி அற்புதம் புரியும் தகுதி பெறுகிறார். ஆயினம் இறைவன் மேரியைத் தனது புதிய இறைத்தூதரை உருவாக்கும் கருவியாக ஆக்குகிறார். அவரது கற்பின் தூய்மை பற்றி ஒச்சம் (களங்கம், பங்கம்) வராத அளவுக்கு அந்த அற்புதத்தைச் செய்து காட்டுகிறார்.
மேரி தனது இறைவனுக்குப் பணி புரிகிறாள். ஆகவேஇறைவன் தனது அளப்பரிய கருணையால் மேரியின் கற்புக்கு மேன்மை தருகிறார்.
ஆகவே இயேசுவின் பிறப்பு என்பதைக் கடவுளின் குமாரர் உற்பத்தியாகக் கொள்ள வேண்டியதில்லை. இயேசுவின் பிறப்பு - இறைவனின் படைப்பாற்றலின் புதிய முறை. மகன் என்பதோ தந்தை என்பதோ இல்லை. இறைவனின் நோக்கமும் அப்படிப்பட்டதாயில்லை.
இயேசுவின் போதனைகள் அவரது காலத்திலும் அவருக்குப் பின்னர் சிலகாலமும் எழுதப்படவில்லை. வாய் மொழியாக வழங்கி வந்த இயேசு போதனைகள் காலப் போக்கில் மூலப் போதனைகளிலிருந்து மாற்றம் அடையத் தொடங்கின. முதலில் எழுதப்பட்டது மத்தேயு-லூக்கா-மாற்கு ஆகியோரின் ஏற்பாடுகளே! (சுவிசேஷங்களே!)
யோவான் அதற்குப் பின்னர் கடைசியாகத் தான் எழுதுகிறார். அவர் எழுதியது மதக் கிரந்தம் போல் இருந்தது.
மத்தேய-லூக்கா-மாற்கு எழுதியவற்றில் இயேசுவைப் பற்றிய சித்தரிப்பு அமைதியான- கம்பீரமான பாத்திரத்தையே உருவாக்கியது.
ஒரு இறைத்தூதுவராயும், இறைவனால் அற்புதனம் செய்தவராயும் மனிதகுலத்தின் அனைத்து மக்களையும் நேசிப்பவராயும் - இறைவனைப் பற்றிய விழிப்புணர்வைத் தோற்றுவிக்க அனுப்பப்பட்டவராயும் அந்த மூன்று ஏற்பாடுகள் (சுவிசேஷங்கள்) கூறின.
மேலும் இயேசு மனிதராகிய நமது கண்களைத் திறப்பவராயும் - இறைவினன் நினைப்பு வாழ்வின் எல்லாச் செயல்களிலும் இருக்க வேண்டும் என்று நினைவூட்டுபவராயும் - செயல் - எண்ணம் ஆகியவற்றில் தன்னலமற்ற போக்கை உண்டாக்குபவராயும் - கடவுள்ள சத்தியம் ஆகியவற்றின் மீதுள்ள நம்பிக்கையை விரிவுபடுத்துபவராகவும் அவர் இருந்தார்.
குழந்தையைப் போன்ற எளிய செயல்பாடும் நம்பிக்கையுமே இறைவனின் விண்ணரசை மண்ணுக்குக் கொண்டு வர முடியும். இந்தக் கருத்து இயேசுவின் போதனைகளில் பல் முறை வலியுறுத்தப்பட்டது.
இயேசு கடவுளை மிக நெருங்கினவராக இருந்ததற்குக் காரணயே அவரது பிரார்த்தனைகளே! அதிலிருந்தே அவர் அற்புதங்களை நிகழ்த்தும் ஆற்றலைப் பெற்றார். அந்த அற்புதங்களை நான் கடவுளின் குமாரர் என்று கூறிக் கொண்டு செய்யவில்லை. இயேசு பயன்படுத்திய மகன் அல்லது குமாரன் எனும் சொல் மக்கள அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது.
இங்குள்ள ஆண் பெண் அனைவரையும் இறைவனின் குமாரன் அல்லது குமாரத்திகளாகக் கருதி மக்களை பார்த்து அவர் விண்ணகத்திலிருக்கும் நமது தந்தையிடம் பிரார்த்தனை செய்வோம் எனக் கூறினார்.
ஆயினம் புதிய ஏற்பாடுகளிலுள்ள இயேசுவின் சில போதனைகள் நம்பும்படி இல்லை. திரிபோ என ஐயுறும்படி அமைந்திருக்கின்றன. இயேசு பெரும்பாலும் ஏழை – ஒடுக்கப்பட்டோர்- தள்ளி வைக்கப்பட்டோர்- பணியாளர்கள் ஆகியோர் பற்றியே அதிகக் கவலையுற்று இறைப்பணி ஆற்றினார். மதக் கருத்து கலந்த போலியான பக்திச் சாமாச்சாரம் அல்ல.
அவரது அழைப்பு மனித இதயங்களுக்கு விடப்பட்ட அழைப்பு! அவரது கொள்கை – மனித நேயமும் அன்பும்!
இதற்குப் பொருள் தேவாலயங்களை நிறுவுவதா? அவர் தேவாலயம் நிறுவ விரும்பினார். ஆனால் இப்போதிருக்கின்ற தேவாலயங்களைப் போல் அல்ல!
இயேசு ஆன்மீகத்தோடும் இருந்தார். நடைமுறை உலகத்தோடும் இருந்தார். அவர் இறை நம்பிக்கையோடு மக்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்துகின்ற சமுதாயத்தை உருவாக்க விரும்பினார்.
இனம் - கொள்கை பாகுபாடற்ற ஒரு குடும்பம் போன்ற அழகிய உறவுடன் - இறைவனின் வழிகாட்டுதலோடு அமைந்த சமூகமே அவர் அமைக்க விரும்பியது. அவரது போதனைகளைக் கூர்ந்து கவனித்தால் இத்தகைய சமூக அமைபில் அவரே முழுக்க முழுக்க தனி ஒளி வீசுபவராக இருக்க வேண்டும் எனக் கருதியதில்லை. இறைவனின் கைகளிலே உள்ள கருவியாக இயேசு தன்னைக் கருதினார்.
ஆனால் இது கடவுளின் சித்தத்திற்கு ஏற்ப டந்த இயேசுவின் எளிய பண்பாடான பாத்திரத்திற்கு முரணானதாகும். மக்களை இறை நம்பிக்கை கொள்ளச் செய்ய இயேசுவுக்கு இறைவன் அளித்த அற்புத சக்தியைத் திசை மாற்றியதுமாகும். இதன் மூலம் கிறிஸ்துவத் தேவாலயங்கள் இயேசுவின் தனித்தன்மையான எளிமையைத் தோற்கடித்து விட்டது ஆகாதா?
திரியேத்துவத்திலும் (பிதா-மகன்-பரிசுத்த ஆவி) தங்களது மதமே உயர்ந்தது எனக் காட்ட நினைக்கிற முயற்சியாகும். இதன் மூலம் இயேசுவை ஒரு புதிராக்கி அதற்கு விளக்கமும் தரப்படுகிறது.
இறைவனின் ஆன்மீக சக்தி என்பது ஆப்ரஹாம், மோஸே காலத்தில் இருந்தது போன்றே முஹம்மது நபி (ஸல்) காலத்திலும் இருந்தது. ஆனால் இந்த திரியேகத்தும் இவர்களின் மீது தத்துவமாகச் சுமத்தப்படவில்லை.
இஸ்லாம் மார்க்கத்தின் வருகையை கிறிஸ்துவர்கள் கள்ளத் தீர்க்கதரிசி அல்லது அந்திக்கிறிஸ்துவின் வருகையாகக் கருதுகிறார்கள் என்பது வேதனைக்குரியது.
இந்த அந்திக் கிறிஸ்துவக் கதை- யோவானின் வெளிப்பாட்டில் கூறப்பட்டுள்ளதால் தான் இந்த நிலை.
ஜெருஸலம் நகருக்காக நடந்த சிலுவைப் போரில் ஒரு ஐரோப்பிய பிரபுவுக்க குர்ஆனில் இயேசு பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் படித்துப் பாருங்கள் என்று ஒரு மொழி பெயர்ப்புப் புத்தகம் முஸ்லிம்களால் தரப்பட்ட போது அதை அவர் படிக்காமல் தூர வைத்து விட்டார்.
இது இஸ்லாம் பற்றிய கிறிஸ்துவர்களின் நிராகரிப்பைப் புலப்படுத்தியது. இந்தப் போக்கு இன்றைக்கும் இருந்து வருகிறது.
சிலுவைப் போர்களின் நினைவுகளை இன்னும் உயிர் வாழச் செய்வதன் மூலம் முழுமையான ஞான சூன்யத்தைத் தோற்றுவிக்கிறார்கள்.
இப்போது முஸ்லிம்களின் கடமை தங்களது ஓரிறை நம்பிக்கையை உறுதி செய்து கொள்வதோடு – உண்மையை அறிய விரும்பும் கிறிஸ்துவர்களுக்கு இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கை விளக்கததைக் கூற வேண்டும்.
சத்தியத்தையும் உண்மையையும் தேடி அலையும் ஆன்மாக்களுக்கு இஸ்லாமும் அதனுடைய போதனைகளும் பாலைவனத்தில் வற்றாது பாயும் மலை அருவி போன்றது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
வஸ்ஸலாம்!
தங்களின் உண்மையுள்ள,
ஜஹ்ரா அஜீஸ்.
மேலே உள்ள கடிதம் பற்றி...
இயேசுவின் இறைப்பணி பற்றிய இஸ்லாம் மார்க்கத்தின் கருத்துக்கள் காரணகாரிய விளக்கத்தோடு இருப்பவை. அவரை மிகப் பெரிய இறைத்தூதராக மதிப்பதாகும்.
துடிப்பான சிந்தனையோடு இருக்கும் மக்கள் இயேசு பற்றி இஸ்லாம் கூறுவதை ஒப்புக் கொள்வர்.
எனினும் இஸ்லாம் நோக்கி வருபவர்கள் திறந்த மனதோடும்- சார்பற்ற தன்மையிலும் வந்தால் இஸ்லாம் கூறுகின்ற வாத நேர்மையையும் ஒப்புக் கொள்ள வைக்கிற தன்மையையும் இயேசுவின் விஷயத்தில் காண்பார்கள். இயேசுவைப் பற்றிய பலவிதமான கிறிஸ்துவத் தத்துவங்களோடு வாதிட்டுப் போராடிப் பார்த்தவர்கள் இஸ்லாமியக் கருத்துக்களை நிச்சயமாக ஒப்புக் கொள்வார்கள்.
சவூதி அரேபியாவிலுள்ள தொலைக்காட்சி இரண்டாவது அலைவரிசையில் எனது நிகழ்ச்சி ஒளிபரப்பான போது மேலே உள்ள கடிதம் ஒன்று வரப் பெற்றேன். இஸ்லாம் மார்க்கத்தில் இயேசு என்ற நிகழ்ச்சியைக் குறித்தும் இந்தக் கடிதம் வரப் பெற்றது. கீழ்க்காணும் காரணங்களுக்காக அந்தக் கடிதம் இணைக்கபட்டுள்ளது.
Þ இந்தக் கடிதத்தை எழுதியவர் - மதக் கல்வியில் மாணவராகவும் - அதில் தேர்ச்சி பெற்றவராகவும் உள்ளார்.
Þ இயேசு கிறிஸ்து பற்றிய கிறிஸ்துவர்களின் நம்பிக்கையையும் உணர்ச்சிகளையும் புரிந்தவராக அவர் இருக்கிறார்.
Þ அவர் எப்படி இயேசுவின் போதனைகளிலிருந்தும் இறைச் செய்திகளிலிருந்தும் கிறிஸ்துவர்கள் வழிமாறிச் செல்கிறார்கள் என்றும் எவ்வாறு அவர்கள் இயேசுவின் மீதான நம்பிக்கையில் தவறாக இருக்கிறார்கள் என்பதையும் விளக்குகிறார்.
இந்த வெளியீட்டில் அவரது கடிதத்தையும் இணைக்க அனுமதித்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.
- டாக்டர் அல்ஜொஹானி
பொதுச் செயலாளர்
உலக முஸ்லிம் இளைஞர்கள் பேரவை
ரியாத், சவுதி அரேபியா.
(இந்த புத்தகத்தின் வெளியீட்டாளர்களுக்கும், மொழி பெயர்ப்பாளர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம