புதன், 28 அக்டோபர், 2009

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி

கட்டுரைப் பற்றிய சிறு குறிப்பு - இது முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் என்று விளக்கிய வீடியோ தொகுப்பிலிருந்து எழுத்தாக்கம் செய்யப்பட்டதாகும். (வீடியோ வெளியீட்டாளர் Truth Vision World wide ) நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono
நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.
பின்னர் பருவ வயதில் தேவாலயத்தைச் சேர்ந்த “Liaision Maria” என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். Maria என்பது ஈஸா (அலை) அவர்களின் தாயார் மர்யம் (அலை) அவர்களைக் குறிக்கும். இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் “Stray Sheeps” என்று சொல்லப்படக் கூடிய “காணாமல் போன ஆடுகளை” தேடுவதாகும். “காணாமல் போன ஆடுகள்” என்று அவர்கள் குறிப்பிடுவது, நம்முடைய உணவுக்காகவும் ஈதுல்-அல்ஹா பெருநாள் குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆடுகளை அல்ல. மாறாக “காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, “கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களை”. அதாவது இந்த பள்ளி வாசலில் குழுமியிருக்கும் நம்மைப் போன்ற முஸ்லிம்களை அவர்கள் “காணாமல் போன ஆடுகள் என்று குறிப்பிடுகிறார்கள். நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக்கும் ஒரு மிகப்பெரும் செயல் திட்டம் அவர்களிடம் இருந்துக் கொண்டிருக்கிறது.
ஒரு வருடம் கழித்த பிறகு நான், இந்தோனேசியாவில் மிக அதிக அளவில் உறுப்பினர்களையுடைய ஒரு கிறிஸ்தவ அமைப்பின் தலைவியானேன். பின்னர் கன்னியாஸ்திரி ஆவதற்காக ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் சேர்ந்தேன். சகோதர சகோதரிகளே நான் ஒரு முஸ்லிம் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை.
நான் கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியது. கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியதிலிருந்து, அல்லாஹ் அவனுடைய அடிமையாகிய எனக்கு நேர்வழி காட்டத் துவங்கினான். பின்னர் கிறிஸ்தவ பாதிரியார்கள் படிக்கும் மேற்படிப்பாகிய மதங்கள் மற்றும் தத்துவங்களைப் பற்றிய (Theology & Philosophy) உயர்ந்த படிப்பைப் படிப்பதற்காக நான் அனுப்பப்பட்டேன். அங்கு நான் மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு (Comparative Religion) பாடங்களைப் படித்தேன். இஸ்லாத்தைப் பற்றி பயிற்றுவிக்கப்பட்டேன். ஆனால் உண்மையான இஸ்லாத்தைப் பற்றி அல்ல! இஸ்லாம் என்பது மிக மோசமான மதம் என்று பயிற்றுவிக்கப்பட்டேன்.
“இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் இந்தோனேசியாவிலுள்ள முஸ்லிம்களைப் பாருங்கள்” என்று எங்களுக்கு விளக்கினார்கள். இந்தோனேசியாவில்,- ஏழைகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்- முட்டாள்களாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்- வெள்ளிக் கிழமை தொழுகையின் போது தங்களின் காலனிகளை தொலைக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்
- ஒற்றுமையாக இருப்பதற்கு மறுக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்- தீவிரவாதிகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம் இவர்களுடைய இத்தகைய தவறான போதனையினால் என்னுடைய நன்பர்கள் அனைவரும் “இஸ்லாம் என்பது ஒரு மிக மோசமான மதம்” என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். ஆனால் அதே சமயத்தில் நான் அவர்கள் எடுத்திருக்கின்ற முடிவு உண்மைக்கு புறம்பானது என்றும் தவறானது என்றும் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களிடம், “நாம் இந்தோனேசியாவை மட்டும் பார்க்கக் கூடாது, மற்ற நாடுகளில் உள்ள நிலவரங்களையும் நாம் பார்க்க வேண்டும்” என்று கூறினேன்.
உதாரணமாக,பிலிப்பைன்ஸ் நாட்டில், ஏழைகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் இருக்கிறார்களே அவர்களுடைய மதம் இஸ்லாம் அல்ல. அவர்களெல்லாம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். மெக்ஸிகோ ஒரு ஏழை நாடு. அந்நாட்டில், குற்றவாளிகளாகவும், திருடர்களாகவும், குடிகாரர்களாகவும், கற்பழிப்பு செய்பவர்களாகவும், சூதாட்டக்காரர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அயர்லாந்து குடியரசு நாடு. இந்த நாடு வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கிடையே தீர்க்க இயலாத உள் நாட்டு பிரச்சனையில், சச்சரவில் சக்கித் தவிக்கும் ஒரு நாடு. இந்தப் சச்சரவில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இந்தப் சச்சரவு நடப்பது கத்தோலிக்க மற்றும் புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களுக்கிடையில் தான். அவர்கள் தமக்குள்ளாகவே சன்டையிட்டுக் கொண்டு கொலை செய்கின்றார்கள். ஐரோப்பிய சமூகம் அவர்களை “அயர்லாந்தின் தீவிரவாதிகள்” என்று கருதுகிறது. அவர்கள் “ஐரோப்பிய தீவிரவாதிகள்” என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள்.
இத்தாலியைப் பாருங்கள் போதைப் பொருள் கடத்துபவர்கள், சூதாட்டக்காரர்கள் - இவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அனைத்து மாஃபிய்யாக் கும்பல்களும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.
அப்போது நான் என்னுடைய மேலதிகாரியான பாதிரியாரிடம், “இஸ்லாம் ஒரு மோசமான மதம் என்று நிரூபிக்கப்படவில்லையே” கூறினேன். அப்போது நான், இஸ்லாத்தை, இஸ்லாமியர்களிடமிருந்தே படிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்தேன். அதற்கு, “நான் இஸ்லாத்தின் பலவீனங்களைப் பற்றி மட்டும் படிக்க வேண்டும்” என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்பட்டென். நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக “இறைவன் ஒருவனே ஒரே ஒருவன் தான்” என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற “திரித்துவக் கடவுள் கொள்கைக்கு” (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. ஆனால் இரவில் நான் குர்ஆனைப் படித்தபோது (சூரா இக்லாஸ்), இறைவன் ஒருவனே! என்றிருக்கிறது. ஆனால் அன்று காலையிலோ தேவாலயத்தில் மதங்களைப் பற்றிய பாடத்தை ரெவ. பாதிரியார் அவர்கள் போதித்த போது “கடவுள் ஒருவரே” ஆனால் மூவரில் இருக்கிறார் (திரித்துவம் - Trinity) என்று போதித்தார். அதனால் அந்த இரவில் ஒரு சக்தி என்னை மேலும் குர்ஆனைப் படிக்க உந்தியது. என் ஆழமான உள் மனது “இறைவன் ஒருவனே! என்றும் மேலும் இது (குர்ஆன்) உண்மையானது தான்” என்றும் கூறிற்று. மறு நாள் காலையில் தேவாலயத்தில் நான் என்னுடைய பாதிரியாரிடம், விவாதித்தேன். “கடவுளின் திரித்துவக் கொள்கை” (Trinity of God) என்பது பற்றி எனக்கு சரியாக விளங்கவில்லை என்று அவரிடம் நான் கூறினேன்.
கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாகிய நான் இதுவரைக்கும் கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி எப்படி விளக்கம் பெறாமல் இருக்கமுடியும் என்பதைப் பற்றி அந்த பாதிரியார் மிகவும் ஆச்சரியமடைந்தார். அந்தப் பாதிரியார் முன் வந்து ஒரு முக்கோனத்தை வரைந்தார். பின்னர் அவர், ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் (three corners) இருப்பதைப் போல, ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறினார். அதற்கு நான், உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும். எனவே கடவுள் மூவரை வைத்து சமாளிப்பது என்பது கடினம். எனவே கடவுள் மற்றொருவருக்கு தேவையுடைவராக இருக்க சாத்தியக்கூறு இருக்கிறதல்லவா? இது சாத்தியம் தானே? என்று கேட்டேன் அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார் ”இதற்கு சாத்தியமே இல்லை” என்று கூறினார். அதற்கு நான், இது சாத்தியமானதே கூறி முன்னாள் வந்து, ஒரு சதுரத்தை வரைந்தேன். முக்கோனத்திற்கு மூன்று கோணங்கள் இருப்பதைப் போன்று சதுரத்திற்கு நான்கு மூலைகள் (Four corners) இருக்கின்றனவே என்று கூறினேன்.அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார், ‘முடியாது’ என்று கூறினார். முன்பு ‘இதற்கு சாத்தியமே இல்லை’ என்று கூறிய அவர், தற்போது ‘முடியாது’ என்று மட்டும் கூறினார். நான் கேட்டேன், ஏன்?அதற்கு பாதியார், ‘இது நம்பிக்கை’. நீ புரிந்துக் கொண்டாயோ இல்லையோ அப்படியே ஏற்றுக்கொள், அப்படியே இதை விழுங்கிவிடு. இதைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே இதைப் பற்றி சந்தேகப்பட்டு கேள்வி கேட்டால் நீ பாவம் செய்தவளாகி விடுவாய் என்று கூறினார்.
இந்த மாதிரியான பதில் எனக்கு கிடைக்கப் பெற்றும் அன்று இரவு குர்ஆனை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற உறுதியான ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. ஏகத்துவம் குறித்த கடவுள் கொள்கையைக் குறித்து கற்றறிந்த என்னுடைய பாதிரியாருடன் விவாதம் செய்ய விரும்பினேன்.ஒரு சமயம் நான் என்னுடைய பாதிரியாரிடம், ‘இந்த மேசைகளை உருவாக்கியது யார் என்று கேட்டேன். அதற்கு பாதிரியார் பதிலளிக்க விரும்பாமல் என்னையே பதிலளிக்குமாறு கூறினார். அதற்கு நான் ‘ இந்த மேசைகளை உருவாக்கியது “தச்சர்கள்” (Carpenters) என்றேன். ஏன்? - பாதிரியார் கேட்டார்.அதற்கு நான் இந்த மேசைகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவோ அல்லது நூறு வருடத்திற்கு முன்பாகவோ உருவாக்கப்பட்டவைகள். இவைகள் இன்னமும் மேசைகளாகவே இருக்கின்றன. இந்த மேசைகள் எப்போதும் “தச்சார்களாக” (Carpenters) மாறமுடியாது. மேலும் ஒரே ஒரு மேசை கூட தச்சராக (Carpenter) மாறுவதற்கு ஒருபோதும் முடியாது.
நீ என்ன சொல்ல வருகிறாய்? - பாதிரியார் கேட்டார். அதற்கு நான், இந்த பிரபஞ்சத்திலே உள்ள மனிதன் உட்பட உயிருள்ள மற்றும் உயிரற்ற ஒவ்வொன்றையும் கடவுளே படைத்தார். ஒரு வருடத்திற்கு முன்னாள் ஒரு மனிதன் பிறந்தால் அடுத்து வரக் கூடிய நூறு வருடங்களாயினும் அவன் மனிதனாகவே இருப்பான். உலக முடிவு நாள் வரைக்கும் கூட அவன் மனிதனாகவே தான் இருப்பான். ஒரே ஒரு மனிதன் கூட கடவுளாக அவதாரம் எடுக்க முடியாது மேலும் கடவுளை மனிதனோடு ஒப்பிட முடியாது. அதற்கு நான் ஒரு உதாரணமும் கூறினேன். ஒரு இராணுவத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களில் ஒருவரை தேர்தெடுத்து அவரை தங்களின் “ஜெனரலாக” தேர்தெடுத்தால் அந்த தேர்வு செல்லாததாகிவிடும். ஏன் அவர்களில் 99 சதவிகிதத்தினர் அவரை தேர்வு செய்திருப்பினும் சரியே நீ என்ன சொல்ல வருகியாய்? - பாதிரியார் அதற்கு நான், “மனிதன் உட்பட இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் கடவுள் படைத்தார். மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை கடவுளாக ஆக்கினால் அந்த தேர்வு செல்லாதது” என்று நான் அந்த பாதிரியாரிடம் விளக்கினேன்.
பின்னர் நான் தொடர்ந்து படித்து வந்தேன். ஒருநாள் நான் என்னுடைய பாதிரியாரிடம், “என்னுடைய ஆராய்ச்சிகளின் படியும், மதங்களைப் பற்றிப் வகுப்புகளில் படித்ததிலிருந்தும் கி.பி. 325 ஆம் ஆண்டில் தான் முதன் முதலாக இயேசு கடவுளாக கருதப்பட்டார்” என்று கூறினேன். இவ்வாறு இந்த கன்னிகாஸ்திரி அவர்கள் பலவிதங்களில் அந்த பாதிரியாரிடம் விவாதம் புரிந்ததாகக் கூறினார்கள். பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தாம் இஸ்லாமே ஏகத்துவத்தை வலியுத்தும் உண்மையான மார்க்கம் என்றறிந்து இஸ்லாத்தை தழுவிய இந்த முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கன்னிகாஸ்திரி Irena Handono அவர்கள் தற்போது இந்தோனேசியாவில் இருக்கும் Central Muslim Women Movement என்ற அமைப்பின் தலைவியாக இருந்துக் கொண்டு இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செய்து கொண்டுவருகிறார்.
அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாகவும்.

திங்கள், 26 அக்டோபர், 2009

சத்தியபாதைக்கு வந்த நால்வர்

தமிழில் :இப்னு பஷீர்

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (உலகில்) பரவச் செய்தான் ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 4:1).
இஸ்லாமை தமது வாழ்க்கை நெறியாக ஏற்க விரும்பும் ஒருவர் முஸ்லிமாக மாறும் வழிமுறை மிக எளிதானது. ஷஹாதா எனப்படும் நம்பிக்கை உறுதிமொழியை மனதால் ஏற்று வாயால் மொழிந்தால் போதும். பிற மதங்களில் இருப்பதுபோல வெற்றுச் சடங்குகள் தேவையில்லை. முஸ்லிமாக ஒருவர் மாறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் செல்வீர்களென்றால் வீடியோ கேமராவெல்லாம் எடுத்துச் செல்லத் தேவையிருக்காது. கேமராவின் மூடியை நீங்கள் திறக்குமுன்பே நிகழ்ச்சி முடிந்து விடக்கூடும்!
முஸ்லிமாக மாற விரும்புபவர் மிக எளிமையாக, இரு முஸ்லிம்களின் சாட்சியுடன் ‘வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை; முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த உலகிற்கு இறுதியாக அனுப்பப்பட்ட இறைத்தூதர்’ என்ற உறுதிமொழியை மொழியவேண்டும். அவ்வளவுதான். அதற்குமேல் எந்தச் சடங்குமில்லை.ஆனால், அந்தப் புதிய முஸ்லிம்களுக்கு ‘ஷஹாதா’ எனப்படும் நம்பிக்கை உறுதிமொழி சொல்வது ஒரு புதிய வாழ்க்கை முறையின் துவக்கம்தான். இது ஒரு முன்னுரை மாதிரி. அல்லது அவர்கள் வாழ்வில் ஒரு அத்தியாயம் முடிந்து இன்னொரு அத்தியாயம் துவங்குகிறது என்றும் சொல்லலாம்.ஒருவகையில் இது அவர்கள் வாழ்வை முழுவதுமாக மாற்றி அமைக்கப்போகும் அனுபவம். புதிய மனிதராக வாழ்க்கையைத் தொடர்கிறார். புதிய முஸ்லிம் தமது குடும்பத்தினரின் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்காகவேனும் தாம் புதிதாக ஏற்றுக் கொண்ட கொள்கைகளைத் தொடர்ந்து சீர்தூக்கிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். கேட்கப்படும் கேள்விகளுக்குத் தகுந்த முறையில் பதில் சொல்ல வேண்டும். இது இரு தரப்பினருக்குமே நன்மை தரக்கூடியதுதான்.
இஸ்லாம் பற்றி இன்றையச் சூழலில் நிலவும் எதிர்மறைப் பிம்பங்களுக்கு காரணம், அதன் கொள்கைகளைப் பற்றி சரியான முறையில் அறியாமல் இருத்தல் அல்லது இனம்புரியாத ஓர் அச்சம்தான். புதிய முஸ்லிம்கள் இந்தச் சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு, இஸ்லாம் பற்றித் தம் குடும்பத்தினருக்குத் தகுந்த முறையில் விளக்கலாம்.“இல்லை அம்மா! இஸ்லாம் அப்படிப்பட்டதல்ல. நான் இஸ்லாத்திந்தான் இணைந்திருக்கிறேன்; அல்-கொய்தாவில் அல்ல.” “இஸ்லாம் அமைதியை வலியுறுத்தும் மார்க்கம்; வன்முறையைத் தூண்டும் மார்க்கமல்ல. இஸ்லாமின் பெயரால் அக்கிரமமான காரியங்களில் ஈடுபடுபவர்கள் இம்மார்க்கத்தின் மீது வீண்பழிச்சொல் விழக் காரணமாகிறார்கள்”“அப்பா..! குர்ஆன், பெண்களை அடிமைப் படுத்துவற்கான கையேடு அல்ல. இந்த உலகில் முதன் முதலாகப் பெண்களுக்கான உரிமைகளையும் கண்ணியத்தையும் பிரகடனப்படுத்திய ஆவணமே அதுதான்!”இப்படியெல்லாம் இஸ்லாம் பற்றிச் சொல்ல ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன! அதிலும் இந்தக் கருத்துகளை புதிதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்கள் உரக்கச் சொல்லும்போது, முஸ்லிமல்லாதவர்களுக்கு அது கூடுதல் தெளிவைக் கொடுக்கலாம். அது மட்டுமல்லாமல், பல்வேறு கலாச்சாரங்களின் தாக்கத்தினால் குர்ஆனின் வழிகாட்டல்களை விட்டு விலகி வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கும் அவை நினைவூட்டலாக அமையும்.

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நான்கு புதிய முஸ்லிம்களும் இஸ்லாமைத் தழுவுவதற்குமுன் இம்மார்க்கத்தைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்களாகத்தான் இருந்தார்கள். இஸ்லாமைத் தழுவுவது பற்றி தங்கள் குடும்பத்தினரிடம் அவர்கள் தெரிவித்தபோது, சந்தேகப் பார்வைகளையும் அச்ச உணர்வையும் மனக்கசப்புகளையுமே அவர்கள் எதிர்கொள்ள நேரிட்டது.

யுவான் ரிட்லி
ஒரு பத்திரிகையாளரான யுவான் ரிட்லி, செப்டம்பர் 2001 தாக்குதலுக்குப் பிறகு ஒரு முஸ்லிம் பெண் போன்ற வேடத்தில் ஆப்கானிஸ்தானில் நுழைந்து, தான் பணியாற்றிக் கொண்டிருந்த பத்திரிகைக்காகச் செய்திகள் திரட்டிக்கொண்டிருந்தபோது, தாலிபான் படையினரால் பிடிக்கப் பட்டார்.உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அவர், ‘தாம் கல்லாலடித்துக் கொல்லப் படுவோமோ’ என்று பயந்து கொண்டிருந்தார். ஆனால், அதற்கு நேர்மாற்றமாக, சிறைப்பிடிக்கப் பட்டிருந்த அவர் மிக மரியாதையாக நடத்தப் பட்டார். குர்ஆனைப் படிக்கப் போவதாகவும் இஸ்லாமைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். பெண்களை அடக்கி, ஒடுக்கி,துன்புறுத்துவது பற்றிய உபதேசங்கள் இருக்கும் என எதிர்பார்த்துக் குர்ஆனைப் படிக்க ஆரம்பித்த அவருக்கு, அதில் அப்படி எதுவும் இல்லை என்பதே ஆச்சரியத்தை அளித்தது!. “இது பெண்ணுரிமைக்கான பிரகடனம்” என்று வியக்கிறார் யுவான் ரிட்லி.2003-ல் யுவான் இஸ்லாமைத் தழுவினார். இஸ்லாம் அவருக்கு அளித்த தன்னம்பிக்கையும் கவுரவமும் பிரச்னைகள் நிரம்பியிருந்த அவரது கடந்த கால வாழ்க்கையை மறக்கடிக்கச் செய்தது. ஆனால் அவரது மனமாற்றத்தைப் பற்றி அவரது தாயை மட்டும் இன்னும் அவரால் புரிந்து கொள்ளச் செய்ய முடியவில்லை.
ஜான் ஸ்டாண்டிங்
ஜான், தனது முஸ்லிம் பெண் தோழி நசிராவை இஸ்லாமிலிருந்து வெளியேற்ற முயன்றார். நசிரா தனது நம்பிக்கையில் உறுதியாக இருப்பது தெரிந்த பிறகே, குர்ஆனைத் தானே படித்துப் புரிந்து கொள்ள ஜான் முடிவு செய்தார். சில மாதங்களுக்குள்ளாகவே அவர் இஸ்லாமைத் தழுவினார். அவர் முஸ்லிமாக ஆனதிலிருந்து மிக அமைதியான, கனிவான மனிதராக இருக்கிறார் என ஜானின் தந்தை டோனி ஒப்புக் கொள்கிறார். இருந்தாலும், ஜான் மூளைச் சலவை செய்யப் பட்டிருப்பாரோ எனத் தனக்கு இன்னும் ஐயம் இருப்பதாகவும் அவர் சொன்னார். ஜான் ஏதாவது வன்முறை தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார் எனத் தெரிந்தால் அவரை தமது குடும்பத்தை விட்டும் விலக்கிவிடுவதாகவும் அவரது தந்தை எச்சரித்திருக்கிறார். அவர் அப்படி எதையும் செய்துவிட மாட்டார் என்ற நம்பிக்கையும் அவரது குடும்பத்தினருக்கு இருக்கிறது.ஜான் ஏன் தனது பெயரை ஜமாலுத்தீன் என மாற்றிக் கொள்ள வேண்டும்? நல்ல எதிர்காலமுள்ள இசைக்கலை தொடர்பான தொழிலை ஏன் அவர் கைவிட வேண்டும்? (இஸ்லாம் இசையைத் தடை செய்திருக்கிறது). மேலும், ஒரு இஸ்லாமிய நாட்டிற்குக் குடிபெயர்வது பற்றி அவர் ஏன் யோசிக்க வேண்டும்? என்பதெல்லாம் ஜானின் தந்தைக்கு இன்னும் புரியாத புதிர்தான்.

அகீல் பர்ட்டன்
அகீல், ஜமைக்காவைச் சேர்ந்த தன் கிருஸ்துவப் பெற்றோருடன் மான்செஸ்டர் நகரில் வளர்ந்தவர். தமது பெற்றோர் பின்பற்றிய கிருஸ்துவ மதம் அகீலுக்குப் பிடிக்கவில்லை. அது வெள்ளை இனத்தவருக்கான மதம் என்று அகீலுக்குத் தோன்றியது. இஸ்லாம் இதிலிருந்து மாறுபட்டது என்றும் அவருக்குத் தோன்றவில்லை. பள்ளிப் பருவத்தில் அவர் அறிந்திருந்த முஸ்லிம்களெல்லாம் ஆசிய நாடுகளிலிருந்து வந்தவர்கள். ஆனால், அவரைப் போன்றே ஜமைக்காவைச் சேர்ந்த ஒரு நண்பர் முஸ்லிமானது, அகீலுக்கும் இஸ்லாம் மீது ஆர்வம் ஏற்படக் காரணமான அமைந்தது. அவர் குர்ஆனைப் படிக்க ஆரம்பித்தார். பதில் கிடைக்காமல் அவரது மனதில் சுழன்று கொண்டிருந்த கேள்விகளுக்கெல்லாம் இஸ்லாமில் பதில் இருக்கிறது என்பதை அவர் கண்டு கொண்டார்.ஒரு தொழில்முறை குத்துச்சண்டை வீரராக இருந்த அகீல், முஸ்லிமாக ஆனதிலிருந்து சண்டையிடுவதை நிறுத்திவிட்டு ஒரு பயிற்சியாளராகத் தொடர்கிறார். குத்துச்சண்டைக்காக அவர் பெற்ற கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறைப் பயிற்சிகள், தமது புதிய இஸ்லாமிய வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்பதற்கும் துணைபுரிவதாக அகீல் உணர்கிறார்.

ஷஹ்நாஸ் மாலிக்

வெள்ளை இனக் குடும்பம் ஒன்றைச் சார்ந்த ஷஹ்நாஸ் அவரது ஆசிய ஆண் நண்பர் நசீரைத் திருமணம் முடித்தபோது இஸ்லாமைத் தழுவினார். அப்பொழுதெல்லாம் வெறும் பெயரளவில் மட்டும் முஸ்லிமாக இருந்த நசீரை கடந்த ஆறு ஆண்டுகளில் ஷஹ்நாஸ்தான் மார்க்கத்தில் பிடிப்புள்ளவராக மாற்றினார். முதலில் ஷஹ்நாஸ் ஹிஜாப் அணியத் தொடங்கினார். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து, நசீரின் தூண்டுதல் எதுவுமின்றியே முழு புர்கா அணிய ஆரம்பித்தார்.உறவினர்கள், நண்பர்கள் சிலரின் கிண்டலும் கேலியும் ஷஹ்நாஸை தைரியமிழக்கச் செய்யவில்லை. மாறாக, அழகிப் போட்டியில் பங்கு கொள்வது போன்று ஆடை அணியும் மேற்கத்தியக் கலாச்சாரத்திலிருந்து விடுதலை பெற்றதாகவே அவர் உணர்கிறார்.இந்த நான்கு புதிய முஸ்லிம்களும் வெவ்வேறு வழிகளில் தங்களது மனமாற்றத்திற்கு முந்தைய மேற்கத்திய கலாச்சார வாழ்க்கை முறைகளிலிருந்து இஸ்லாம் காட்டும் வாழ்க்கை நெறிமுறைகளுக்கு மாறியவர்களாவர். வழிமுறைகள் வேறாக இருந்தாலும், ‘மாற வேண்டும்’ என்ற உறுதி இவர்கள் அனைவரிடமும் இருக்கிறது.
ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள் இன்னும் அவர்கள் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
(திருக்குர்ஆன் 4:124).
நன்றி: சத்தியமார்க்கம்.காம்

ஞாயிறு, 25 அக்டோபர், 2009


நாத்திகம் பகுத்தறிவு வாதமா..? - 3

அபூ பாத்திமா அபூ முஹை

'பகுத்தறிவுக்குப் பரிசளிக்கும் கட்டுரை'
உண்மையில் பகுத்தறிவென்றால் என்ன?
இந்தப் பகுத்தறிவு ஏன் மனித சமுதாயத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது? அதன் சரியான பொருள் என்ன? என்பதை விரிவாகப் பார்ப்போம்!
நடுநிலையோடு சிந்திப்பவர்கள் மனித சமுதாயத்திற்கு மறுமை வாழ்க்கையகை; குறிக்கோளாகக் கொண் டே பகுத்தறிவுக் கொடுக்கப் பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ள முடியும். உலகில் படைக்கப் பட்டு ள்ள மனிதனல்லாத இதர எல்லாப் படைப்புகளும் இவ்வுலகில் மனிதனுக்கு நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவி வருகின்றன. எல்லாப் படைப்புகளைக் கொண்டும் மனிதன் பயடைகிறான். ஆனால் மனிதனைக் கொண்டு எந்தப் படைப்புக்கும் பிரயோஜனம் இல்லை. என்பதை தெளிவாக நாம் அறிகிறோ ம். மனிதன் ஒரு படைப்பின் மீது அக்கறை கொண்டு பாடுபடுகிறானென்றால் அதுவும் தனது சுயநலம் கரு தியே அதைச்செய்கிறான். அவன் ஆடு மாடுகளை வளர்ப்பது அவற்றிலிருந்து பால் இறைச்சி தோல் இவற் றின் பலனைக்கருதியே. அதிலும் மனிதன் இடைத்தரகனாக இருந்து பூமியிலிருந்து உறிபத்தியாகும் பொரு ட்களைக் கொடுக்கிறானேயல்லாமல் மனிதன் தன்னிலிருந்து எதனையும் கொடுப்பதில்லை.
யானை போன்ற படைப்பினங்கள் உயிரோடிருக்கும்போதும் மனிதனுக்கு உதவுகின்றன செத்த பின்பும் மனிதன் அவற்றைக் கொண்டு பயனடைகிறான். ஆனால் உயிரோடிருக்கும் மனிதனைக் கொண்டும் இதர படைப்பினங்களுக்கு உபயோகமில்லை செத்த மனிதனைக் கொண்டும் உபயோகமில்லை. எனவே எதற் கும் உபயோகமற்ற இந்த மனித இனம் ஏன் வாழவேண்டும்? அதற்காக விஷேசமாக மனித இனத்திற்கு மட்டுமே பகுத்தறிவு ஏன் கொடுக்கப் பட்டிருக்க வேண்டும்? என்று சற்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்.
இவ்வுலகில் பயன்பாடாமனிதன் ஏன் படைக்கப் பட்டுள்ளான்...?
பகுத்தறிவு கொடுக்கப் பட்டுள்ள மனிதுனும் இவ்வுலகத்திற்கு அவசியமற்றவனாக இருக்கிறான் அவனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பகுத்தறிவும் இவ்வுலக வாழ்விற்கு அவசியமற்றதாக இருக்கிறது. அப்படியானால் மனிதன் ஏன் படைக்கப்பட்டுள்ளான்? அவனுக்கு விஷேசமாக ஏன் பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது? இதை முறையாக ஒரு மனிதன் சிந்தித்தால் மனிதன மறுமைக்காகப் படைக்கப்பட்டுள்ளான் அந்த மறுமை வாழ்க்கையை உணர்ந்து விளங்கி இவ்வுலக வாழ்க்கையை ஒழுங்குமுறையுடன் நடத்த அவனுக்குப் பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். மனிதல்லாத பிராணிகளுக்கு பகுத்தறிவுமில்ல. அவற்றிற்கு மறுமை வாழ்க்கையுமில்லை. அவற்றிற்கு மறுமை வாழ்க்கை இல்லை யென்றாலும் மனிதனது இவ்வுலக வாழ்க்கைத் தேவைக்காக அவை படைக்கப்பட்டுள்ளன. என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
மறுமைக்காகப் படைக்கப்பட்ட மனிதன் அந்த மனித வாழ்க்கையை உணர்ந்து வாழ பகுத்தறிவு கொடுக்கப்பட்டமனிதன் அந்த மறுமையை மறுத்து வாழ்கிறானென்றால் அல்லது மறந்து வாழ்கிறானென் றால். அவன் மனிதன் என்ற அந்தஸ்தையே இழந்து விடுகிறான். நான்கு கால் பிராணிகள்போல் இவன் இரண்டுகால் பிராணியாக இவ்வுலகில் வாழ்கிறான். ஆனால் நான்கு பிராணிகளுக்கோ நாளைமறுமையில் நரகவேதனை இல்லை. இந்த இரண்டுகால் பிராணிக்கோ நிச்சயமாக நாளை மறுமையில் நரகவேதனை உண்டு. அந்த நரகவேதனையை கண்கூடாகபப் பார்க்கும்போது ' நாங்களும் இந்த மிருகங்களைப் போல் மண்ணோடு மண்ணாகிப் போயிருக்கக்கூடாதா? என்று கதறுவார்கள். ஆனால் அவர்களின் கதறல் எவ்வித பலனையும் தராது. இவ்வுலகியே சிந்தித்து விளங்கி உணர்ந்து வாழ்ந்தால்தான் தப்பினார்கள் இல்லை யேல் அதோகதிதான்.
பகுத்தறிவு என்றால் பிரித்து அறிதல் என்று தமிழ் அகராதியில் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.அப்படி யானால் ஒவ்வொரு விஷயத்திலும் யாதார்த்தமான உணமையான நிலையைப்புரிந்து அறிந்து கொள்வது தான் பகுத்தறிவாகும். உண்மையான நிலையைப் பிரித்தறிய தவறும்போது அது பகுத்தறிவு என்ற தகுதி யை இழக்கிறது. உதாரணமாக குற்றம் சுமத்தப்படுபவர்களில் உண்மையான குற்றவாளியைப் பிரித்தறிந்து தண்டிக்கும் பொருப்பிலுள்ள ஒரு நீதிபதியை எடுத்துக்கொள்வோம். அவர் மிகவும் நீதியாக நடக்கக் கூடிய நீதிபதிதான். லஞ்சம் வாங்கிக் கொண்டு தன் மனசாட்சிக்கு விரோதமாக உண்மைக்குப் புறம்பாகத் தீர்ப் பளிக்கும் ஒரு நீதிபதி அல்ல. குற்றவாளியைக் கண்டுபிடிப்பதில் எச்சரிக்கையாக நடந்து கொள்கிறார்.
இந்த நிலையில் அவர் தீர்ப்பளிக்கும் எல்லாத் தீர்ப்புகளிலும் உண்மையானக் குற்றவாளிகளைக் கண்டு பிடித்து தீர்பளித்து வருகிறாரென்று சொல்லமுடியாது. சல தீர்ப்புகளில் குற்றமற்றவரை தண்டிக்கும் நிலையும். சில தீர்ப்புகளில் உண்மையான குற்றவாளியை விடுதலை செய்துவிடும் நிலையும் ஏற்படத்தான் செய்கிறது இது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இந்த இடங்களில் அந்த நீதி பதி உண்மைக்கு மாற்றமான முடிவுக்கு வந்தமையினால் அவரின் பிரித்தறியும் பகுத்தறிவில் கோளாறு ஏற் பட்டு விட்டது என்பதை மறுக்கமுடியாது. இதற்கு என்ன காரணம்? சம்பவத்தை நேரடியாகப் பார்த்தவர் கள் மூலம் சரியான தகவலைப் பெறத் தவறி விட்டார் அந்த நீதிபதி என்றுதான் சொல்ல வேண்டும். சம் பவத்தோடு நேரடியாகத் தொடர்புடையவர்கள் அல்லது நேரடியாகக் கண்டவர்கள் தரும் வாக்கு மூலத்தை வைத்துத்தான் அவர் தீர்ப்பு சொல்லவேண்டியுள்ளது. அவரது புலன்கள் இத்தீர்ப்பு விஷயத்தில் அவருக்கு துணைசெய்ய முடியுமே தவிர அவரது புலன்களைக் கொண்டு மட்டும் தீர்ப்பு செய்துவிட முடியாது.
நாத்திகர்களின் பெருந்தவறு நீதிபதியின் தீர்ப்புக்குப் புலன்கள் மட்டும் போதும். சம்பவத்தோடு தொடர் புடையவர் அல்லதுசம்பவத்தை நேரில் கண்டவரின் வாக்கு மூலம்தேவையில்லை என்று கருதுவதுதான்.சம்ப வத்தோடு தொடர்புடையவர் அல்லது நேரில் கண்டவரை இவர்கள் முற்றிலுமாக நிராகரித்துவிட்டு புலன்க ளைக் கொண்டு மட்டும் முடிவுசெய்ய முற்பட்டு விடுகிறார்கள். அவர்கள்பெரும் நஷ்டத்திலிருப்பதற்கும் அவர் களது பகுத்தறிவு முழுமை பெறாததற்கும் இதுவே பிரதான காரணமாகும்.
சம்பந்தப் பட்டவரின் வாக்கு மூலம்...
அதாவது இறைவபை;பற்றி. மறுமையைப்பற்றி. மனிதன் தனது புலன்களைக்கொண்டு மட்டும் முடிவு செய்யும்போது அவனது பகுத்தறிவு முழுமைப்பெறாமல் புலன்களைக்கொண்டு மட்டும் அறிந்த ஒரு குறைவா ன அறிவோடு நின்று விடுகிறது. எப்போது அவர்கள் இறைவனோடு தொடர்புடைய இறைவனால் அனுப்பப் பட்ட இறைத்தூதர்களின் வாக்கு மூலத்தை தங்களின் புலன்களின் துணையோடு முறையாக அணுகுகிறார்க ளோ அப்போதே அவர்களின் பகுத்தறிவு முழுமை பெறுகிறது. உண்மை நிலைகளை சரியாகத் தெரிந்து கொள்ள முடிகின்றது. அதே சமயம் அந்த நீதிபதி சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட அல்லது நேரடியாகப் பார்த்த சரியான நபர் மூலம் தகவல் பெறத் தவறிவிடுவதன் காரணமாகத் தவறானத் தீர்ப்பளிக்க நேரிடுகிற தோ அதேபோல் உண்மையான மாற்றப்படாத சட்டங்களையுடைய அதிகாரத்தில் இருக்கிற உண்மைத் தூத ரை விட்டு பொய் தூதர்களையோ அல்லது சட்டங்கள் மாற்றப்பட்ட அதிகாரத்தில் இல்லாத தூதர்களின் வாக்கு மூலங்களையோ அல்லது தூதர்களின் பெயரால் நடைமுறையிலிருக்கும் மனித யூகங்கள் கலக்கப் பட்ட வாக்கு மூலங்களையோ தங்களின் புலன்களைக் கொண்டு விளங்கிச் செயல் பட்டாலும் பகுத்தறிவில் கோளாறு ஏற்படவே செய்யும்;
மனிதப் புனிதர்கள்...
உலகில் தோன்றிய இறைத்தூதர்கபை; பற்றி நாத்திகர்களும் நன்கு அறிவார்கள், அவர்களின் நல்லொழுக்கம், மனித சமுதாயத்தின்பால் அவர்களுக்கிருந்த அன்பு, மனித மேம்பாட்டுக்காக அவர்கள் செய்த கடும் உழைப்பு, அதனால் மக்களிடம் அவர்கள் பெற்றத் துன்பங்கள், அளவற்ற துன்பங்களை மக்கள் அளித்தும் அதற்கு மாறாக அந்த மக்கள் மீது அந்த இறைத்தூதர்கள் காட்டிய பரிவு அனைத்தையும் நாத்திகர்களும் அறிவார்கள். குறிப்பாக அவர்கள் அனைவரும் மனிதருள் மாணிக்கங்களாக வாழ்க்கை நடத்தியுள்ளார்கள் என்பதை நாத்திகர்களும் மறுக்க மாட்டார்கள், இந்த நிலையில் இறைவனைப்பற்றியும் மறுமையைப்பற்றியும் அவர்கள் ஏன் பொய் பகர வேண்டும்? அதனால் அவர்கள் அடைந்த லாபம் என்ன? என்பதை நாத்திகர்கள் சிந்திக்க வேண்டும், நாத்திகர்கள் சொல்வதுபோல் இறைவனோ மறுமையோ இல்லையென்றால், அந்த சான்றோர்கள் அதையே மக்களிடம் சொல்லி மனித சமுதாயத்துக்கு அவர்கள் அரசர்களாக ஆகியிருக்கலாம், எண்ணற்ற உலக சுகபோகங்களை அனுபவித்திருக்கலாம்,
குறிப்பாக இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இப்படிப்பட்ட வாய்ப்புகள் அதிகமதிகம் இருந்தன, நாத்திகர்களால் அறிஞர்களாகப் போற்றப்படுகிறவர்கள் கொடுத்த திட்டங்களை விட மிக உன்னதமானத் திட்டங்களை அந்த மேன்மக்கள் சுயமாகக் கொடுத்திருக்க முடியும், ஆனால் இதற்கு மாற்றமாக அந்த மனிதப் புனிதர்கள் தாங்கள் இறைவனின் அடிமை என்றும், இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் என்றும், இறைவன் கட்டளைக்குத் தாங்களும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், மக்களும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று ஏன் சொல்ல வேண்டும்? தங்களையே மிக வன்மையாகக் கண்டித்துச் சொல்லும் வசனங்களைக்கூட இறைவனிடமிருந்து வந்த வசனங்கள் என்று மக்களிடம் ஏன் சொல்ல வேண்டும்? (இறுதிமறை அல்குர்ஆனில் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைக் கண்டித்து இறக்கப்பட்டுள்ள பல வசனங்களைப் பார்க்கிறோம்)
இறைவன் ஒருவன் இல்லையென்றால், மறுமை என்ற ஒன்று இல்லையென்றால், அந்தப் புனிதர்கள் ஏன் இவ்வாறெல்லாம் செயல் பட்டிருக்க வேண்டும்? என்ற நாத்திகர்கள் நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும், அந்த மனிதப் புனிதர்களான தூதர்களை தன்னுடைய அறிவிப்புகள் மூலம் இறைவனே செயல்பட வைத்துள்ளான்.
இறவைனோடு அந்தத்தூதர்களுக்கு நேரடித் தொடர்பு இருந்ததால் அந்த இறைவனை அத்தூதர்கள் ஐயமின்றி விளங்கிக்கொண்டார்கள், இறைவனால் அறிவிக்கப்பட்ட மறுமை வாழ்க்கையையும் தெளிவாகப் புரிந்து கொண்டார்கள், அந்த மறுக்க முடியாத உண்மைகளையே மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள் என்பதை முறையாகச் சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்ளாமல் இருக்கமுடியாது.
மக்களிடம் அப்படி இறைவன் இருக்கிறான் என்று சொன்னதால்தான் மக்களைக் கவர முடிந்தது அதன் மூலம் சீர் திருத்தங்களைச் செய்ய முடிந்தது, எனவே உண்மைக்குப் புறம்பாக அந்தத்தூதர்கள் கூறினார்கள் என்று நாத்திகர்கள் வாதிடலாம் இதுவும் தவறாகும், இறைவன் இல்லை என்று சொல்லி மக்களிடம் செல்வாக்கு பெறுவதாக இருந்தால் இந்த நாத்திகர்கள் இன்று மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருப்பதை விட மிக அதிகமாக செல்வாக்குப் பெற்றிருக்க முடியும், ஆனால் இறைவனின் கட்டளைக்கு மாற்றமாக இறைத்தூதர்கள் நடக்க முடியாது, இறைவன் இல்லையென்ற பொய்க் கொள்கையை மக்கள் முன்வைத்தால்தான் தாங்கள் செல்வாக்கு பெற முடியும், தங்களால் சில சாதனைகளைப் புரிய முடியும் என்று நம்பியே நாத்திகர்கள் பொய்க்கொள்கையைக் கடைப்பிடிப்பதால் இறைத்தூதர்களும் அவ்வாறு உண்மைக்குப் புறம்பாக நடந்திருப்பார்கள் என்ற தவறான எண்ணத்தில் நாத்திகர்கள் இருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.
எனவே மனிதன் தனது புலன்களைக் கொண்டு மட்டும் அறிந்து கொள்வது நிறைவானப் பகுத்தறிவல்ல, இறைவனையும் மறுமையையும் தெளிவாக அறிந்த, இறைவனோடு நேரடித் தொடர்பில் இருந்த இறுதித்தூதரின் வாக்கு மூலங்களின் அடிப்படையில் புலன்களைப் பயன்படுத்தி அறியும் அறிவே முழுமையானப் பகுத்தறிவாகும், இந்தப் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தும் எந்த மனிதனும் இறைவனையோ, மறுமையையோ, இறுதித்தூதரையோ மறுக்க ஒருபோதும் முற்பட மாட்டான்.
இறை மறுப்புக்குப் பிரதானக் காரணம் என்ன...?
இனி நாத்திகர்கள் இறைவனையும், மறுமையையும் மறுத்துக் கூற பிரதானக் காரணம் என்ன? அவர்களின் அந்த எண்ணம் சரியா? அவர்கள் எண்ணப்படி அவர்கள் தங்கள் திட்டத்தில் வெற்றியடைந்தார்களா? என்று பார்ப்போம். ஒரே தாய்க்கும், தகப்பனுக்கும் (ஆதத்துக்கும் ஹவ்வாவுக்கும்) பிறந்த இந்த உலக மக்களிடம் இன்று எண்ணற்ற மதங்களையும், ஜாதிகளையும், பிரிவுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும், விரோத குரோத மனப்பான்மைகளையும் பார்க்கிறோம், ஒருசாரார், இன்னொரு சாரார் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர் அதிலும் குறிப்பாக மக்களின் ஜனத்தொகையில் குறைந்த விகிதாச்சாரத்தில் உள்ளவர்கள் பெரும்பான்மை மக்களை ஆட்டிப்படைக்கின்றனர், சமத்துவ சகோதரத்துவம் உள்ள சீரானதொரு வாழ்க்கையை மனித சமுதாயத்தில் பார்க்க முடியவில்லை, மனித சமுதாயத்தின் பெரும் தொகையினரை தீண்டத்தகாதவர்கள் என மதத்தின் பெயரால் ஒதுக்கி வைத்து கொடுமைகள் பல இழைக்கப்பட்டு வருகின்றன, நாய்கிருக்கும் அந்தஸ்து கூட இந்த மனிதர்களுக்கு இல்லை என்ற கொடுமையையும் பார்க்கிறோம் (உயர் ஜாதியினர் நாயைத் தொடுவது தீட்டு என்று கூறுவதில்லை)ஆக இப்படி சமுதாயத்தில் காணப்படும் அத்தனைக் கொடுமைகளுக்கும் இறைவனையும், மறுமையையும் நம்;;;;புவதே காரணமாக இருக்கிறது? இறைவனையும், மறுமையையும் சொல்லியே பெரும்பான்மை மக்கனை சிறுபான்மை மக்களை ஏமாற்றுகின்றனர், அந்த மயக்கம் காரணமாகத்தானே பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்குக் கட்டுப்படுகின்றனர், எனவே இறைவனும், மறுமையும் இல்லை மரணத்தோடு மனித வாழ்க்கை முடிவுற்று விடுகின்றது, என்று நிலைநாட்டி விட்டால், இப்படிப்பட்ட கொடுமைகள் அனைத்தையும் அழித்து விடலாம், ஓர் உன்னத சமுதாயத்தை உருவாக்கி விடலாம் என்பது நம் ஊர் நாத்திகர்களின் எண்ணமாகும்.
நாத்திகர்கள் கூறக்கூடிய கொடுமைகள் அனைத்தும் சமுதாயத்தில் இடம்பெற்றுள்ளன என்பதை நாமும் ஒப்புக்கொள்கிறோம், அவை அனைத்தையும் அகற்றி, ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ சகோதரத்துவ சமுதாயத்தை அமைக்க அவர்கள் காட்டும் ஆர்வத்தையும் வரவேற்கிறோம் ஆனால் அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தை அமைக்க அவர்கள் கொடுக்கும் திட்டம்தான் மிகவும் தவறான ஒரு திட்டமாகும், அவர்களின் திட்டம் நாட்டில் குறிப்பாக அதுவும் தமிழகத்தில் எப்படிப்பட்ட ஒரு நிலையை உண்டாக்கி இருக்கிறது என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம், நாட்டில் மலிந்து காணப்படும் கெடுதிகளுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரே மார்க்கத்தை- நேர்வழியை- மதங்களாக்கி மக்களைப் பல பிவினர்களாக்கி அதன் மூலம் அற்ப உலக ஆதாயம் அடைந்து வரும் புரோகிதர்கள் எந்த அளவு பொறுப்பாளர்களாக இருக்கிறார்களோ அதே அளவு அதில் எவ்வித குறையுமின்றி நாத்திகர்களும் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள், என்பதை உணர வேண்டும்.
கள்ளை ஒழிக்க தென்னையை ஒழிப்பதா...?
கள் குடிப்பது கூடாது, குடி குடியைக் கெடுக்கும் இது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை, மக்களை இந்த உண்மையை உணர வைத்து அவர்களை குடியை விடச்செய்வதே அறிவுள்ளவர்கள் செய்யும் நல்ல முயற்சி, தென்னை மரத்திலிருந்துதானே கள் வருகின்றது, தென்னை மரத்தை வெட்டி வீழ்த்தி விட்டால் கள் ஒழிந்துவிடும், என்று தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்துபனை அறிவாளிகள் என்று அறிவாளிகள் சொல்லமாட்டார்கள், மாறாக தென்னை மரத்தைக் கொண்டு மக்கள் பெறும் நல்ல பல பலன்களை இழக்க நேரிடும் என்பதே உண்மையாகும், குடிகாரன் தென்னை மரத்திலிருந்து கள் கிடைக்கவில்லை என்பதற்காகக் குடியை விடப்போவதில்லை, ஸ்பிரிட்டைக் காய்ச்சிக் குடிக்க ஆரம்பிப்பான், அவனுக்கு வேண்டியது போதை, அந்தப் போதையை எப்படியெல்லாம் பெற்றுக்கொள்ள முடியுமோ, அப்படியெல்லாம் பெற்றுக்கொள்ள முயல்வான், இதேபோல் மூட்டைப் பூச்சி தொல்லைத் தாங்க முடியவில்லை என்பதற்காக வீட்டைக் கொளுத்தி விட்டு காட்டில் போய் அவதிப்பட மாட்டான் அறிவுள்ள மனிதன், வீட்டிலிருந்து கொண்டே மூட்டைப் பூச்சிகளின் தொல்லையைப் போக்க உரிய வழியையே பார்ப்பான்;.
இப்படிப்பட்ட அறிவற்ற ஒரு முயற்சிதான், இறைவனின் பெயரால் சிறு சாரார் பெரும் சாராரை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதற்காக, இறைவனே இல்லையென்று நிலைநாட்டச் செய்யப்படும் முயற்சியுமாகும், கள்ளுக்குப் பயந்து தென்னையை வெட்டி வீழ்த்தியதால், தென்னையிலிருந்து பெறப்படும் பல பலன்களை மனிதன் இழப்பதுபோல், சமுதாயத்தில் பெரும்பான்மையினர் இறைநம்பிக்கையின் மூலம் அடையும் பெரும் பலன்களை இழக்கச் செய்வதாகும்.
நாத்திகர்கள் பிரதானமான ஒரு விஷயத்தை சிந்திக்கத் தவறி விடுகின்றனர், மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் காரியங்களிலேயே, அவற்றைப் பெற்றுத்தருவதாகச் சொல்லிக்கொண்டு, ஒரு சாரார் அதன் மூலம் பிழைப்பு நடத்துவர், அவசியம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு இந்த இடைத்தரகர்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர், அவர்களின் தில்லுமுல்லுகளும் அதிகரிக்கின்றன, இந்த இடைத்தரகர்களின் தில்லுமுல்லுகளை ஒழிப்பதற்கு வழி, மனிதனுக்கு அத்தியாவசியமானவற்றை அவசியம் இல்லாமல் ஆக்கிக் கொள்வது என்று நாத்திகர்கள் சொன்னால், அதை எந்த அறிவாளியும் ஏற்றுக்கொள்ள முடியுமா? எளிதாக விளங்க உதாரணம் ஒன்றைச் சொல்கிறோம். (வளரும் இன்ஷா அல்லாஹ்)

சனி, 24 அக்டோபர், 2009


இந்துமத வேதங்களில் இஸ்லாம்

வேதங்களில் இறைக்கோட்பாடு
ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் இந்து மதத்தின் மிகப் புனித வேதங்களாகும்.

யஜூர் வேதம் (32:3)
"ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி" அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த் - யஜூர் வேதம் பக்கம் 377)

அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன். 40:8
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)

"அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே" இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். 40:9
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)

அதர்வண வேதம் (20:58:3)(புத்தகம் 20, அத்தியாயம் 58, சுலோகம் 3)
'தேவ் மஹா ஓசி" கடவுள் மகா பெரியவன்

குர்ஆன் கூறுகிறது:

...அவன் மிகவும் பெரியவன் மிகவும் உயர்ந்தவன் (13:9)

ரிக் வேதம் (1:164:46)
மிகப் பழம்பெரும் வேதம், ரிக்வேதம் கற்றறிந்த துறவிகள் ஓரிறையை பல பெயர் கொண்டு அழைத்தனர். அவர்கள் கடவுளை வருணன், இந்திரன், மித்திரன், சூரியன், அக்னி என பல பெயர்களில் அழகுபட அழைத்தனர். இவை அனைத்தும் அவனின் தன்மைகளை சிறப்பை உணர்த்துவதாக இருந்தன. கடவுளின் 33 தன்மைகளை ரிக் வேதம் குறிப்பிடுகிறது. அதில் ஒரு தன்மை பிரம்மா(படைப்பவன்) என்ற தன்மையை 2:1:3ல் குறிப்பிடுகிறது.

குறிப்பு: இஸ்லாம் படைக்கும் தன்மையை "காலிக்" எனக் கூறுகிறது. ஆனால் சிலர் கூறுகிற பிரம்மாவுக்கு 4-தலைகளும் 4-கைகளும் உண்டு, என்ற இத்தோற்றத்தை உருவகத்தை இஸ்லாம் மறுக்கிறது. மேலும் யஜூர் வேதத்தின் 32:3-ன் கூற்றுப்படி ''அவனை உருவகிக்க முடியாது" என்ற சுலோகத்ததுக்கும் ப்ரம்மாவுக்கு 4-தலைகளும், 4-கைகளும் உள்ளன என்ற வாதம் முரண்படுகின்றது.

ரிக் வேதம் (2:2:3)
விஷ்ணு-பாதுகாப்பவன், உணவளிப்பவன் எனும் கடவுளின் தன்மையைக் கூறுகிறது. இஸ்லாம் இத்தன்மையை ''ரப்" என அரபியில் அழகுபட கூறுகிறது. ஆனால் சிலர் கூற்றுப்டி விஷ்ணு 4 கரங்களைக் கொண்டவன் ஒரு கையில் சக்கரம் மற்றொரு கையில் சூலம், பறவையை வாகனமாய் கொண்டவன் என்று உருவகப்படுத்துவதை இஸ்லாம் மறுக்கிறது.

குறிப்பு:- யஜூர் வேதத்தின் 40:8ன் படி அவன் உருவமற்றவன் என்ற விளக்கத்திற்கு முரணானது.

ரிக் வேதம் (8:1:1)

''மா சிதான்யதியா ஷன்ஸதா" அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்.

(ரிக் வேத சம்ஹிதி 9-ம்பாகம், பக்கம் 1, 2 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)

ரிக் வேதம் (5:81:1)
படைக்கும் அவன் மிகப்பெரும் கீர்த்தியாளன்.
(ரிக்வேத 6-ம்பாகம், பக்கம் 1802, 1803 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)

குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)

ரிக் வேதம் (3:34:1)
கடவுள் மிகப்பெரும் கொடைத் தன்மை கொண்டவன் எனக் கூறுகிறது.

குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)

யஜூர் வேதத்தின் (40:160)
எங்களை நல்வழியில் செலுத்து. எங்களின் பாவங்களைப் போக்கு, பாவங்கள் நரகில் சேர்க்கும் ''யஜூர் வெது சம்ஹிதி-ராலப்" (யஜீர்வேத சம்ஹிதி- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 541)

குர்ஆன் கூறுகிறது: நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!, அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல. நெறி தவறியோர் வழியுமல்ல. (குர்ஆன் 1:5, 6&7)

ரிக் வேதம் (6:45:16)

''யா எக்கா இட்டமுஸ்ததி" தனித்தவனான இணையற்ற அவனுக்கு எல்லாபுகழும்.

இந்து வேதாந்தமான பிரம்ம சூத்திரம்

''ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எநன் நா நாங்தே கின்சான்" கடவுள் ஒருவனே, இருவர் இல்லை, இல்லவே இல்லை! இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை!

ஆக இந்துப் புனித வேதங்கள், புராணங்களைக் கற்றறிந்தால் கூட ஓரிறைக் கொள்கை உறுதியாகக் கூறப்பட்டதை நன்கு உணரலாம்.
இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள் இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள் இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி வருவீர்களாக.(திருக்குர்ஆன்2:41)
இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும் இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது)நேர்வழிகாட்டியாகும். . (திருக்குர்ஆன் 2:2)

நாம் யாரை வணங்க வேண்டும்
நெல்லை இப்னு கலாம் ரசூல்
அல்லாஹ் ஒருவனே! அவன் எந்த தேவையுமற்றவன். அவன் யாரையும் பெறவுமில்லை, அவன் யாராலும் பெற்றெடுக்கப்பட்டவனுமல்ல. அவனுக்கு நிகராக எவருமில்லை என்று நபியே! நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 112:1-4)
பகுத்தறிவின் தீர்ப்புமனிதன் இயற்கையிலேயே நன்மை - தீமையை, உண்மை பொய்யை பிரித்தறியும் பகுத்தறிவு உடையவன். இப்பண்பு இறைவனின் அளப்பெரிய ஆற்றல்களை உணர உதவுவதுடன் வணக்கத்திற்குரியவன் ஓரிறைவனே என்பதை அறியவும் உதவுகிறது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களை பின்பற்றும் அனைவரும் இந்த இயற்கைக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் மனம் கொண்டவர்களாக, இரட்சகனுக்கு கீழ்படிபவராகவே பிறக்கின்றனர். ஆனால் அவர்களின் பெற்றோரே அவர்களை தங்களின் கலாச்சாரத்தில், தாங்கள் சார்ந்துள்ள மதத்தின் அடிப்படையில்; வளர்த்து விடுகின்றனர்.
இஸ்லாம்இஸ்லாம் மனிதனால் உருவாக்கப்பட்ட மதமல்ல, மாறாக, அது இறைவனால் மனித சமுதாயத்திற்கு அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும்.
இஸ்லாம் எனும் பெயர்கூட இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான். மனிதன் தன்னை இறைவனுக்கு மட்டுமே அடிமையாக்கி, அவன் வகுத்துத் தந்துள்ள வாழ்க்கை நெறியில் தனது வாழ்வை அமைத்துக் கொள்வதே இஸ்லாத்தின் முக்கிய நோக்கமாகும்.
இறைத்தூதர்கள்இஸ்லாத்தை மனித சமூகத்திற்கு எடுத்துரைக்க பல இறைத்தூதர்கள் உலகின் பல பகுதிகளில், பல கால கட்டங்களில், பல மொழிகளில் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் இஸ்லாத்தை முறையே தத்தமது சமுதாயத்தவருக்கு போதித்தார்கள். இவ்வருகையின் இறுதியாகவும் உலகத்தாருக்கு அருட்கொடையாகவும் முஹம்மது(ஸல்) அவர்கள் சுமார் கி.பி 610 - ம் ஆண்டு மக்காவில் இறைதூதராக அனுப்பப்பட்டார்கள். இவர்கள் குறிப்பிட்ட மொழியினருக்கோ, குறிப்பிட்ட நாட்டினருக்கோ அன்றி ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளார்கள்.அனைத்து இறைத்தூதர்களும் அவர்களின் சமுதாயத்தினருக்கு போதித்த இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை ''இறைவன் ஒருவனே! அவன் மட்டுமே படைக்கும் வல்லமை கொண்டவன். அவனே உங்களையும் நீங்கள் வாழும் பூமியையும் நீங்கள் காணும் கடல், மலை, விண், விண்மீன்கள், சுரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகிய அனைத்தையும் படைத்தான். வணக்கத்திற்கு தகுதியானவன் அவன் ஒருவன் மட்டுமே. அவனையன்றி வணங்கப்படும் அனைத்தும் அவனது படைப்பினங்களேயன்றி இறைவனல்ல. எனவே ஓரிறைவனான அவனை மட்டுமே வணங்குங்கள்! அவனது வழிகாட்டுதல்கள் இறைத்தூதர்களான எங்கள் மூலம் உங்களை வந்தடைகின்றன. அதனைப் பின்பற்றுங்கள்'' எனப்தேயாகும்.
இறைவன் எப்படிப்பட்டவன்?அல்லாஹ்! அவன் ஒருவனே! அவனுடைய திருப்பெயர்களும் தன்மைகளும் மனிதனால் தேர்ந்தெடுக்கப்பட்டவை அல்ல. அவன் எண்ணைக் கொண்டோ, - ஆண்பால், பெண்பால் போன்ற - பாலினத்தைக் கொண்டோ அறியப்படுபவனல்ல. அல்லாஹ் என்பது இரட்சகனின் பெயர். இது நேசமிகு நபி ஈஸா(அலை) அவர்களின் அராமிக் மொழியின் துணை மொழியாகும். அல்லாஹ் என்ற இத்திருப்பெயர் முதல் மனிதரும் முதல் இறைத் தூதருமான ஆதம்(அலை) அவர்கள் முதல் இறுதி இறைத்தூதரான முஹம்மது(ஸல்)அவர்கள் வரை எல்லா நபிமார்களாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
படைப்பாளனாகிய அல்லாஹ்வே சர்வசக்தியுடையவன், ஆதியானவன், அவனுக்கு முன்பு எதுவுமில்லை, அவனே நித்திய ஜீவன், நிலைத்திருப்பவன், அவனை யாரும் பெறவுமில்லை. அவன் யாராலும் பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகராக எதுவும் எவரும் இல்லை. அவனைத் தவிர உள்ள அனைத்தும் இறுதிநாளன்று அழிந்து விடும். மரணத்திற்குப் பின் நாம் அவனிடமே மீளவேண்டியுள்ளது. அங்கு அல்லாஹ்வால் நாம் அநீதி இழைக்கப்பட மாட்டோம். நீதமாய் நடத்தப்படுவோம்.கடவுள்களாக கருதப்படும் படைப்பினங்கள்
மனிதர்களால் வணங்கப்படும் கல், சிலை, சிலுவை, பிரமிடுகள், கோமேனி, ஃபாராகான், எலிஜாக்கள், மால்கம் ஒ, கிருஷ்ணா, குரு, புத்தர், மகாத்மா, சக்கரவர்த்தி, ஜோஷப் ஸ்மித், சு10ரியன், சந்திரன், ஒளி, நெருப்பு, சிற்பங்கள், கோவில்கள், ஞானிகள், பூசாரிகள், மடங்களில் வாழும் சன்னியாசிகள், திரைப்பட நட்சத்திரங்கள், ஷைக்குகள் ... ஆகியோர் அனைவருமே ஓரிறைவனின் படைப்பினங்களே!ஏன்! இறைத்தூதர்கள் கூட இறைவனின் படைப்பினங்கள் தான் (முஸ்லிம்கள் அவர்களை வணங்கவில்லை. மாறாக ஒரிறைவனையே வணங்குகின்றனர்). இயேசுவைப் பின்பற்றுவோர் இயேசுவும் ஒரு தாயின் கருவில் சிசுவாய் இருந்தவரே என்ற உண்மையை மறந்தவர்களாகவும் புறக்கணிப்பவர்களாகவும் உள்ளனர். அவருக்கு உண்ண உணவு தேவைப்பட்டது. மற்றவர்களைப் போல் அவரும் பிறந்து வளர்ந்து மனிதராக வாழ வேண்டியிருந்தது. அல்லாஹ்விடமிருந்து அவருக்கு அருளப்பட்ட இன்ஜீலும் பனு இஸ்ரவேலர்களுக்கு இவ்வாறு உபதேசம் செய்கிறது:
அல்லாஹ் ஒருவனே! இறைவனுக்கும் மனிதர்களுக்கும் - இஸ்ரவேலர்களுக்கும் - இடையில் தூதரும் ஒருவரே! அம்மனிதர் இயேசு கிருஸ்த்து. (1 தீமோத்தேயு 2:5)
ஒரு மனித தூதர் தம் சமுதாய மக்களை அழைத்து தன்னை வழிபட வேண்டாம் எனக் கூறினார். ஆனால் அது - அந்தப் பிரச்சாரம்- வீணானது. மக்களை அவரையே வழிபடலாயினர். (மத்தேயு 15:9)
நம்மைப் போல் உண்பவர், நடப்பவர், உறங்குபவர், ஓய்வெடுப்பவர் முதலிய சராசரி மனித தேவைகளைத் தன்னகத்தே கொண்டவர் சர்வவல்லமை பொருந்தியவனைப் போல் ஒருபோதும் ஆகமுடியாது. அல்லாஹ் தன்நிகரற்றவன். படைப்பினங்களின் தன்மைகளை விட்டும் முற்றிலும் அப்பாற்பட்டவன்.
பௌத்தம், இந்துத்துவம், சௌராஷ்டரியம், மார்க்ஸியம், முதலாளித்துவம் இவையெல்லாம் படைப்பினங்களையும் உருவங்களையும் வணங்கும் கொள்கையுடையவைகள் தான். அமைதியையும் ஆன்மீகத்தையும் தேடியலையும் மாந்தர்கள்இஸ்லாத்தைத் தவிர உள்ள அனைத்து மதங்களும் வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டுவதில் வெற்றிடமாக இருக்கின்றன. முஸ்லிம்களைத் தவிர உலகில் வாழும் பிறமதத்தவர்கள் தாங்கள் சார்ந்துள்ள மதத்தை வாழ்க்கை நெறியாக கருதுவதே கிடையாது. மதங்களை ஆன்மீக மருந்தாக மட்டுமே கருதி வருகின்றனர்.
இதனால் தாம் சார்ந்துள்ள மதத்தில் வாழ்க்கை நெறியுள்ளதா? என்று ஆராய்ச்சி செய்ய முற்படும் அறிஞர்களும், சித்தனையாளர்களும் அதில் தமது மதம் வெறுமையாக இருப்பதை உணர்கிறார்கள். அல்லது பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளாத, நடைமுறைக்கு சாத்தியமில்லாத வழிகளைக் காண்கிறார்கள். மேலும் மனித சமுதாயத்தை உயர்வு, தாழ்வாக பிரித்து மனிதனை மனிதனுக்கு அடிமையாக்கும் சு10ழ்ச்சிகளையும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் நடைமுறையோடு ஒப்புநோக்குகின்றார்கள்.
இவைபோக இம்மதங்களில் ஆன்மீகத்திலாவது நிம்மதி கிடைக்குமா? என்று பார்க்க முற்படுவோர் அரக்கத்தனமான காரியங்களையே ஆன்மீகமாக கருதும் உண்மையை உணர்கின்றார்கள். மேலும் ஆன்மீகப் போர்வையில் பலர் தம் பொருளாதாரத்தை சுரண்டுவதையும் கண்டு மிரண்டு நிற்கின்றார்கள்.எனவே வாழ்க்கை நெறியிலும் ஆன்மீகத் துறையிலும் சரியான விடை கிடைக்காத சிந்தனையாளர்கள் நிம்மதியையும் அமைதியையும் தேடி அலைகின்றார்கள். இதனால் தமது மதத்தை விட்டும் வெளியேறியவர்கள் பிறகு எந்த மதத்திற்கு செல்வது என்று தடுமாறி நிற்கும் போது பல மதங்கள் அவர்களை அழைக்கின்றன.
தான் சார்ந்துள்ள மதத்தின் விரக்தியில் வேறு ஏதேனும் ஒரு மதத்திற்கு சென்று விடவேண்டும் என்ற நோக்கில் சரியாக ஆராயாது பிற மதத்தில் நுழைவோர் அங்கு வேறுவிதமான தீமையையும் மடமையையும் உணர்ந்து நிம்மதியின்றி தவிக்கின்றனர். இந்நிலையில் யாருக்கு இஸ்லாத்தை அறியும் சந்தர்ப்பம் கிடைக்கின்றதோ, குர்ஆன் கிடைக்கின்றதோ அவர்கள் இஸ்லாமே சரியான தீர்வு என்ற உண்மையை உணர்ந்து அதில் இணைந்து நிம்மதியடைகின்றனர்.
இஸ்லாத்தின் வளர்ச்சியும் அதற்கெதிரான சூழ்ச்சிகளும்இஸ்லாம் தமது கொள்கை மற்றும் கோட்பாடுகளாலும் மனிதன் இறைவனைத் தவிர வேறு எதற்கும் எவருக்கும் அடிமையில்லை என்ற சுதந்திர சிந்தனையாலும் மனிதர்களுக்கு மத்தியில் பிறப்பாலோ, நிறத்தாலோ, மொழியாலோ எந்த ஏற்ற தாழ்வும் கிடையாது என்ற சகோதரத்துவக் கொள்கையாலும் உலக மாந்தர்களை கவர்ந்து கொண்டிருக்கின்றது.
திறந்த மனதுடன் குர்ஆனைப் படிப்பவர், இஸ்லாத்தின் போதனைகளைக் கேட்பவர், இஸ்லாத்தின் சட்டங்களை ஒழுக்கங்களை, வழிபாடுகளை சமூக ரீதியாக, அறிவியல் ரீதியாக, மனிதாபிமான அடிப்படையில் முழுமையாக ஆராய்ச்சி செய்பவர்கள் உண்மையை உணர்ந்து நேர்வழி அடைகின்றனர். இதன் எதிரொலிதான் இன்று உலகம் முழுவதும் இஸ்லாம் வெகுவிரைவாக வளர்ந்து வருகிறது. பல அறிஞர்களை, விஞ்ஞானிகளை, ஆராயிச்சியாளர்களை, வீரர்களை இஸ்லாம் தன்னுள் ஈர்த்துள்ளது. பலரை இஸ்லாத்தைப்பற்றி புகந்ழ்துரைக்கச் செய்துள்ளது.
இஸ்லாத்தின் அதிதீவிர வளர்ச்சியை நன்கறிந்த மேற்கத்திய நாடுகள் தங்களின் அனைத்துச் செய்தித்துறைகளையும் இஸ்லாத்திற்கு எதிராக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இஸ்லாத்தை பலகோணங்களில் தவறாக விமர்சிக்க முயற்சிக்கின்றன. ஆனால் இஸ்லாத்தின் தூயவடிவை உலகிற்கு முன் எடுத்துரைக்கப்படும் போது அந்நாடுகள் தலைகுனிந்து நிற்கின்றன. இந்நிலை சத்தியத்தை நாடுவோருக்கு விடப்பட்ட மிகப்பெரியதொரு சவாலாகும். இஸ்லாத்தைப் பற்றிய தவறான விமர்சனங்களை நம்பிவிடாமல் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை திறந்த மனதுடன் நேரடியாக குர்ஆனிலிருந்து பெற முயற்சித்தால் உண்மையை உணர்ந்து கொள்ள முடியும்.
அன்பான வேண்டுகோள்!மனிதன் படைக்கப்பட்டது ஒரு காரணத்திற்காகவே! அது, அல்லாஹ் பொருந்திக் கொள்ளக்கூடிய வகையில் மனிதன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவே! மனிதன் ஏன் இவ்வாறு செய்வதில்லை? நாம் சுவாசிக்கும் காற்றை நாம் படைத்தோமா? நம்மை நாமோ, அல்லது நாம் பிறரையோ படைக்கிறோமா? நாமோ இறைவனால் படைக்கப்பட்டுள்ளோம். நாம் சில வரம்புகளுக்குள்ளேயே வாழ்கின்றோம். நாம் பலவீனர்கள். சர்வவல்லமை பொருந்திய இறைவனை நமது தேவைகளைத் தருபவனை புறக்கணிப்பது சரியா? தயவு கூர்ந்து தனிமையிலோ, உங்கள் உற்ற நண்பருடன் கலந்தோ சிந்தித்துப் பாருங்கள்!
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே! அவனது செய்திகள் நமக்கு முன்னரே உலகின் அனைத்து பாகங்களிலும் சொல்லப்பட்டு விட்டன. அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனும் ஞானமிக்கவனுமாவான். அவனது படைப்பினங்களில் அவனுக்கு யாதொரு குழப்பமுமில்லை. அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் ஒன்று மட்டுமே! அதன் கோட்பாடும் ஒன்றே! ஏனெனில் அவன் ஒருவனே! அவன் பூவுலக மாந்தர்கள் கூறும் தத்துவங்களைக் காட்டிலும் மிக மேலானவன்.இஸ்லாம் என்பது சிறந்த வாழ்க்கைத் திட்டம். அது வாழ்க்கையின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டுகிறது. இத்தனைச் சிறப்பம்சங்களும் அல்லாஹ்வுடைய மார்க்கமாகிய இஸ்லாத்திற்கே மட்டுமே உள்ளன. இதன் விளக்கங்கள் குர்ஆனில் உள்ளன. அதனை திறந்த மனதுடன் படித்துப் பயன்பெறுவீர்! ஏனெனில் அல்லாஹ்வை விட சிறந்த முறையில் தெளிவாக எடுத்துக் கூறுவோர் எவருமில்லை. குர்ஆன் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு வஹீ (தூதுச் செய்தி) மூலம் அல்லாஹ்வால் அருளப்பட்டது. அவர்கள் அதனை எழுதவில்லை. மாறாக அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத உம்மி நபியாவார்கள். குர்ஆனின் மொழிபெயர்ப்புகள் பல மொழிகளில் நூல் விற்பனை செய்யும் கடைகளிலும் இஸ்லாமிய வழிகாட்டு மையங்களிலும் கிடைக்கும். காலம் தாழ்த்தாது அதனை வாங்கிப்படித்து இரட்சகன் நமக்கிடும் கட்டளைகளை அறிந்து வணக்கங்களை அல்லாஹ்க்கு மட்டும் செலுத்துவீராக!முடிவு உங்கள் கையில்.!

வெள்ளி, 23 அக்டோபர், 2009


இஸ்லாத்தை நோக்கி...

(உமர் ராவ்)

அல்லாஹ்வின் கருணையினால் ஆசீர்வதிக்கப்பட்ட முஹம்மது உமர் ராவ் ஆகிய நான் ஒரு இந்தியக் குடிமகன். நான் என்னுடைய
18ஆவது வயதில் இஸ்லாத்தைத் தழுவி இன்றுடன் 6 வருடம் பூர்த்தியாகிவிட்டன. நான் என்னுடைய வாழ்க்கை விபரங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விருப்பப்படுகிறேன்.
முஸ்லிம் அல்லாதவர்களும் இதைப் பார்த்து உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதும் என்னுடைய ஆசை. என்னுடைய வாழ்க்கைமுறையை இரண்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட போது அவர்கள் என்னுடைய தேர்வு மற்றும் முடிவு மிகச் சிறந்தது என்று உற்சாகப்படுத்தினார்கள். வாழ்க்கை முறைநான் நடுத்தர வகுப்பு ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னுடைய தந்தை இன்ஜினியாராகவும், தாய் ஆசிரியையாகவும் உள்ளனர். என் தாய் மாமன் வீட்டில் தங்கியிருந்துதான் மதச் சம்மந்தமான கல்வியை நான் கற்றேன்.
என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரின் கல்வியும் முஸ்லிம்களுக்கு எதிராகவே இருந்ததால் முஸ்லிம்களைப் பற்றிய ஒரு தவறான எண்ணம் என்னுடன் ஆணி அடித்தது போல் இருந்தது. சிலகாலம் RSS-ல் சேர்ந்திருந்ததால் நான் எப்பொழுதுமே முஸ்லிம்களை வெறுக்கின்றவனாகவே இருந்து வந்தேன். பள்ளிவாசலில் பாங்கு சொல்லும் போது நான் கேட்டுக் கொண்டிருக்கும் இசையின் சப்தத்தை அதிகப்படுத்தி அந்த பாங்கு சப்தம் என்னுடைய காதில் விழாதபடி செய்வேன். நகரத்தில் இருக்கும் எல்லா கோயில்களுக்கும் தினந்தோறும் சென்று வழிபாடு செய்பவனாக இருந்து வந்தேன், இதற்காக என் வீட்டினர் அனைவரும் என்னை உற்சாகப்படுத்துவார்கள்.
இஸ்லாத்துடன் பரிச்சயம்
ஒரு கோடை விடுமுறையில் ஒரு முஸ்லிமின் வியாபார நிர்வாகத்தில் வேலை செய்யச் சொல்லி என் தாய் என்னை அழைத்தார்கள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை, ஏனென்றால் குழந்தைப் பருவத்தில் இருந்தே முஸ்லிம்களை நான் வெறுத்து வந்தேன். என்னுடைய நிலையை அறிந்த என் தாய் மேற்கொண்டு என்னை வற்புறுத்தவில்லை. சில கோடை விடுமுறைகளில் முஸ்லிம் அல்லாத வியாபார நிர்வாகத்தில் நான் வேலை செய்து வந்தேன். ஆதலால் என்னுடைய தாய், தந்தை இருவரும் திருப்தி அடைந்தனர்.
சில காலம் கழிந்து அந்த பகுதி நேர வேலையை விட்டுவிட்டு என்னுடைய படிப்பில் கவனமானேன். மேற்கொண்டு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய தாய் மற்றும் தங்கைகள் ஒரு முஸ்லிம் நிறுவனத்தில் 2 மாதம் தற்காலிகமாக பணியாற்றினார்கள், அந்த 2 மாதத்தில் முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள் எனது தாய் மற்றும் தங்கைகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. நான் வெறுக்கும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக யாராவது பேசினாலே எனக்கு கோபம் வந்துவிடும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து வந்த நான் எனது தாய் மற்றும் தங்கைகளின் நிர்பந்தத்தில் சில முஸ்லிம் நண்பர்களுடன் சேர்ந்து வேலை செய்யும் நிலைக்கு ஆளானேன்.
வேண்டா வெறுப்பாக அந்த கடையில் வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் முஸ்லிம்களின் மேல் உள்ள வெறுப்பு இன்னும் அதிகமானது. ஏனென்றால், அந்தக் கடையில் வேலை செய்யும் முஸ்லிம் அல்லாதவர் பல பேர் இஸ்லாத்தைத் தழுவியிருந்தார்கள். இஸ்லாத்திற்கு ஏன் அனைவரும் இப்படி முக்கியத்துவம் தருகிறார்கள் என்று எண்ணி என்னுடைய இந்து மதம் தான் சிறந்தது, உயர்ந்தது என்று அவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக, இந்து மதத்தையும், இஸ்லாத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தேன். அத்தருணத்திலிருந்து இஸ்லாத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டதால் குர்ஆனின் ஆங்கில மொழியாக்கத்தை படிக்க ஆரம்பித்தேன். படித்து அதன் அர்த்தத்தை நல்லபடியாக தெரிந்து யோசிக்க ஆரம்பித்த என்னுடைய மாணவப் பருவ வாழ்க்கை முற்றிலும் மாறிப்போனது.
அதன் பிறகு நான் என்னென்ன தவறுகள் இதுவரை செய்துக் கொண்டு இருக்கின்றேன் என்பதைப்பற்றி கவலை மற்றும் பயம் வந்தது. என்னுடைய இந்து மதம் முழுவதும் கற்பனை மற்றும் புராணங்களாலும், கட்டுக் கதைகளாலும்தான் நிரம்பி உள்ளது என்று தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து பல கேள்விகளும் சந்தேகங்களும் என்னுள் எழுந்தது. என்னுடைய கடமை என்ன? நான் எப்படி இருக்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? ஏன் இந்த உண்மையான கருத்து எங்களில் பல பேருக்கு வந்து சேரவில்லை? இதைப் போல பல கேள்விகளுக்கு உண்மை மற்றும் பதில் தெரிந்து கொள்வதில் என்னுடைய மீதி மாணவப் பருவத்தை செவழிக்க ஆரம்பித்தேன்.
என்னுடைய பெற்றோர்களையும் என்னைச் சுற்றி இருப்பவர்களையும் நான் கேட்டேன், கடவுளை நேரில் பார்த்தவர்கள் யாராவது உள்ளார்களா? எந்த அடிப்படையில் படங்களையும், சிலைகளையும் உருவாக்குகிறார்கள்? கடவுளை யாரும் பார்த்ததில்லை என்பதுதான் அவர்கள் அனைவரின் பதிலுமாய் இருந்தது. இறுதியில் நான் சில புராணங்களை படித்ததின் மூலம் உண்மையை உணர முடிந்தது. அதன் பிறகு இந்து கடவுள்களின் கதைகள் என்னை அந்த அளவிற்கு பாதிக்கவில்லை. நான் என் பெற்றோர்களிடம் மீண்டும் கேட்டேன். எல்லா இந்து வேதங்களும் சிலை வணக்கங்களை எதிர்க்கின்றன. இருப்பினும் நாம் தொடர்ந்து அதைச் செய்துக் கொண்டிருக்கிறோம். ஏன்? எந்த அடிப்படையில் சிலை வணக்கம் செய்கிறோம். இந்த கேள்வியால் என் பெற்றோர்கள் என் மேல் கோபப்பட்டு நமது முன்னோர்கள் செய்து கொண்டிருந்ததைத்தான் நாம் தொடர்ந்து செய்கிறோம் என்று சொன்னார்கள்.
இந்த பதிலால் நான் திருப்தியடையவில்லை. அடுத்து நான் குர்ஆன் படித்தபோது அத்தியாயம் அல்பகராவில் ஒரு வசனம் என்னை மிகவும் பாதித்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது.மேலும், "அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?" (அல்-குர்ஆன் 2:170)இந்த வசனம் என்னை மிகவும் பாதித்தது. அதன் பிறகு சிலை வணக்கங்களையும், பூஜைகள் செய்வதையும் சிறிது சிறிதாக நிறுத்தினேன். அல்லாஹ்வுடன் மற்றவர்கள் இணை வைப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றம் என்பதை உணர்ந்தேன்.
ஆரம்ப நாட்களில் மிகவும் ரகசியமாக இஸ்லாத்தைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன். அல்பகரா அத்தியாயத்தில் அல்லாஹ் மேலும் தெளிவுபடுத்துகின்றான், என்னவென்றால் இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்;, நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம் எனக் கூறுகிறார்கள்.அல் குர்ஆன் 2 :14அதைத்தொடர்ந்து ஆல இம்ரான் அத்தியாயத்தில் அல்லாஹ் விளக்குவது என்னவென்றால் ..இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;.. (அல் குர்ஆன் 5 : 3)இதன் பிறகு நான் மேலும் தெளிவடைந்தேன்.
என் மனதில் இருந்த எல்லாக் கேள்விகளுக்கும் விடை இந்த குர்ஆனில் மட்டும் தான் கிடைத்தது. அல்லாஹ்வின் கிருபையினால் இஸ்லாத்தைப் பற்றி எனக்குத் தெரிந்த மற்றும் அறிந்த சில விபரங்களை நான் என் வீட்டில் உள்ளவர்களிடம் தெரியப்படுத்தினேன். டிப்ளமோ கடைசி ஆண்டு படிக்கும் காலத்தில் இஸ்லாத்திற்கு கொஞ்ச கொஞ்சமாக நான் மாறிக் கொண்டிருப்பதைப் பார்த்து என் பெற்றோர்கள் என்னை வீட்டை விட்டு அனுப்பிவிட்டனர். ஆனால் என் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு என்னுடன் வெளியே வந்துவிட்டாள். நானும் எனது சகோதரியும் வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு வருடம் எந்த வேலையும் இல்லாமல், எந்தவித வருமானமும் இல்லாமல் மிகவும் சிரமத்திற்குள்ளானோம். அந்த நேரத்திலும் இஸ்லாத்தில் உள்ள பற்று எங்களுக்குக் குறையாமல் மிகவும் ஈமானுடன் இருந்ததால் அல்லாஹ் எங்களுடைய எல்லா சிரமங்களையும் இலேசாக்கினான், அல்ஹம்துலில்லாஹ்.
மிகவும் குறைந்த வருமானத்தில் கிடைத்த வேலைக்கு நாங்கள் இருவரும் சென்று கொண்டிருந்தோம்.இதற்காக எல்லா சிரமங்களையும் தாங்கிக் கொண்டேன். அல்லாஹ் நல்ல சந்தர்ப்பங்கள் எல்லாம் எங்களுக்கு அதிகமாக ஏற்படுத்திக் கொடுத்தான். ஐந்து வேளை தொழ முடியாத காரணத்தால் நான் என்னுடைய முந்தைய வேலையிலிருந்து விடுபட்டேன். கொஞ்ச கொஞ்சமாக பல பெரிய தொழிற்சாலைகளின் வேலைவாய்ப்புகளை நான் இழக்கும்படி ஆகிவிட்டது. இதற்காக நான் வருத்தப்பட்டாலும் அல்லாஹ்வின் கருணையினால் தற்போது நல்ல வேலை கிடைத்ததுடன் ஐந்து வேளை நல்லபடியாக தொழுகவும் முடிகிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!தொகுப்பு:
(ஆங்கிலத்திலிருந்து தமிழில்) : கோவை. பஷீர்
Source Url
: http://www.thetruecall.com/home/modules.php?
நன்றி: இஸ்லாம் கல்வி.காம்

திங்கள், 19 அக்டோபர், 2009

திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு (பகுதி 2)

மூலம்: M.M.அக்பர் - தமிழில் தேங்கை முனீப், பஹ்ரைன்


தீர்க்கதரிசிகளே தீமை புரிந்தனரா?


3. இறைத்தூதர்களின் வரலாற்றைக் கூறுமிடத்து புரோகித வர்க்கத்தின் கற்பனையில் உருவான பல அபத்தமான கருத்துக்கள் பைபிளில் நிறைந்து காணப்படுகின்றன. தங்கள் மன இச்சைகளுக்கேற்ப அவர்களின் வரலாற்றைத் திரித்து, வெளியில் சொல்வதற்கே வெட்கக் கேடான பல தீமைகளையும் தீர்க்கதரிசிகள் எனப்படுவோர் புரிந்ததாக பைபிளைத் தொகுத்தவர்கள் கதை கட்டியுள்ளனர். சாதாரண மக்கள் பாவமான காரியத்தில் ஈடுபட்டுவிட்டு, ஏன் புரோகித வர்க்கமே கூட இத்தகைய மானக்கேடான செயல்களைச் செய்துவிட்டு தீர்க்கதரிசிகளே அவற்றைச் செய்தபோது நாங்கள் செய்வதொன்றும் பெரிதல்ல என்று கூறித் தீமைகளை நியாப்படுத்தும் நிலையைத்தான் பைபிளின் இக்கதைகள் ஏற்படுத்தியுள்ளதே தவிர இக்கதைகள் மூலம் சமூகத்திற்கு எந்த படிப்பினையையும் வழங்கவில்லை.
சில உதாரணங்கள்:1. நோவா என்ற தீர்க்கதரியைப் பற்றி "நீதிமான்" , "உத்தமன்" என்றெல்லாம் புகழும் அதே பைபிள் (ஆதி: 6:9,10) மற்றொரிடத்தில் அவரைப்பற்றிக் கூறும்போது முதன்முதலில் மதுபானத்தைத் தயாரித்தவர் என்றும் மதுபானம் அருந்தியதால் போதை தலைக்கேறி அதனால் ஆடை விலகிப் படுத்திருந்ததாகவும் அதனால் அவரது சொந்தப் புதல்வர்களே வந்து அவரது நிர்வாணத்தை மறைத்த அவலமான நிலைக்கு ஆளானதாகவும் கதை கட்டியுள்ளது.(ஆதி-9:20-23)
2. லோத்து என்னும் தீர்க்கதரிசியைக் குறித்து அவர் பரிசுத்தமானவர் என்றும் நீதிமான் என்றும் அடையாளப்படுத்தும் அதே பைபிளில் (2 பேதுரு 2:7,8) வேறொரிடத்தில் மது அருந்தி போதையில் படுத்திருந்ததாகவும் அதனால் அவருடைய புதல்விகள் அவருடன் சல்லாபித்து அதன் மூலம் அவருக்கு சந்தததிகள் உருவாயின என்றும் கற்பனை செய்துள்ளது. (ஆதி: 19:31-36)
3. இஸ்ரவேல் இனத்தின் பிதாவாகிய யாக்கோபு ஏமாற்றுக்காரனும் வஞ்சகனுமாக இருந்தான் என்றும் பைபிள் (ஆதி: 27:1-46) கூறுகின்றது.
4. தமது படைவீரனின் மனைவியுடன் தகாத உறவு கொண்டு அவள் கற்பமானதும் அப்பழியைத் தனது வீரனின் தலைமேல் சுமத்த முயன்று முடியாமல் போகவே அவனைத் தந்திரமாகக் கொலை செய்ததுடன் அவனது மனைவியையும் தனதுடமையாக்கிக் கொண்ட ஒரு கொடூரனாக தாவீது என்ற தீர்க்கதரிசையை பைபிள் சித்தரிக்கின்றது. (இரண்டாம் சாமுவேல் 11: 1-27)
5. "தாவீதின் குமாரனும், பூமியில் சகல ராஜாக்களிலும் ராஜாவும்" என்றும், "அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கியவனும்" என்றெல்லாம் பைபிள் அறிமுகப்படுத்தும் சாலமன் (1 இராஜாக்கள்: 10:23) திருமணம் முடிக்க விலக்கப்பட்டவர்களுடன் உறவு கொண்டு அவர்கள் மீது அதிகமாக மோகம் கொண்டிருந்ததாகவும் (1 இராஜாக்கள் 11:2) அவர்களுடைய ஆசை வார்த்தைகளுக்கு இணங்கி அந்நிய தேவர்களைப் பூஜித்ததாகவும் (1 இராஜாக்கள் 11:3-7) கூறுகின்றது.
6. இஸ்ரவேலரின் இரட்சகர் என பைபிள் கூறும் இயேசு கிறிஸ்து தாயை மதிக்காதவராகவும் (யோவான்: 2:5, 19:26) சகிப்புத்தன்மை இல்லாதவராகவும் (மத்தேயு 12:34, 12:39, யோவான் 8:44) முன்கோபம் உடையவராகவும் (யோவான் 2:13-17, மத்தேயு 21:19) திருமண விருந்தில் தண்ணீரை மதுவாக மாற்றி மக்களுக்குக் கொடுத்து அவர்களுக்குப் போதையூட்டியவராகவும் (யோவான் 2:1-11) அறிமுகப்படுத்துகின்றது.
ஆனால் இவற்றுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட நிலையில் திருக்குர்ஆன் இறைத்தூதர்களை உண்மையாளர்களாகவும் மகான்களாகவும், இறைவனின் வாக்குறுதியை நிறைவேற்றிய
வர்களாகவும், சமூகத்திற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த உத்தம புருஷர்களாகவும் சுட்டிக்காட்டுகின்றது. மட்டுமன்றி இறை
தூதர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பதன் மூலம் இறைவிசுவாசிகளின் இறையச்சமும் நல்லொழுக்கமும் அதிகரிக்கும் விதத்தில் அவர்களின் வரலாற்றை எடுத்துக் கூறுகின்றது. "(நபியே) தூதர்களின் வரலாற்றில் உமது உள்ளத்தை பலப்படுத்தும் அனைத்தையும் உமக்கு விவரித்துள்ளோம்,
மேலும் இதன் மூலம் உண்மையும், நல்லுபதேசமும், விசுவாசிகளுக்கு அறிவுரையும் உமக்கு வந்துள்ளன." (அல்குர்ஆன் 11:120)இவர்களுக்குத் தான் வேதத்தையும் ஞானத்தையும் நபித்துவத்தையும் நாம் வழங்கியிருந்தோம். ஆகவே அவைகளை இவர்கள் நிராகரித்துவிட்டால் நிராகரிக்காத மக்களை நிச்சயமாக நாம் ஏற்படுத்தி விடுவோம். இவர்கள் அனைவரையும் அல்லாஹ் நேரான வழியில் செலுத்தினான். ஆகவே அவர்களுடைய நேரான வழியை நீங்களும் பின்பற்றுங்கள். நீர் கூறுவீராக. இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. உலகத்தார் அனைவருக்கும் இது ஒரு நல்லுபதேசமேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் 6: 89,90)
அன்றி, நம் கட்டளைக்கேற்ப நேர் வழியை அறிவிக்கக்கூடிய தலைவர்களாகவும் அவர்களை ஆக்கினோம். மேலும் நன்மை செய்யும்படியும் தொழுகையைக் கடைபிடித்து ஜக்காத் கொடுத்து வரும்படியும் அவர்களுக்கு வஹ்யி அறிவித்தோம். அவர்கள் அனைவரும் நம்மையே வணங்கிக் கொண்டிருந்தனர்.(அல்குர்ஆன் 21:73)
இன்னும் வழிகேட்டில் இல்லாத நூஹையும் (7:61) சன்மார்க்கப் பிரச்சாரம் செய்த லூத்தையும் (7:80-84) நல்லடியார்களுள் ஒருவராகிய யாக்கூபையும் (21:72) அடக்கமும் பணிவும் கொண்டு இறைமார்க்கத்தில் உறுதியுடன் நிலைத்து நின்றவர்களான தாவூது மற்றும் சுலைமானையும் (27:15, 38:50) இறைவனுக்கு நெருக்கமான அடியாராகவும், பரிசுத்தமானவராகவும் (3:45) தாயை கண்ணியப் படுத்தியவருமான (19:32) ஈஸா (இயேசு)வையும் (அவர்கள் அனைவர் மீதும் ஸலாம் உண்டாகட்டும்) திருக்குர்ஆன் நமக்கு அறிமுகப்படுத்துகின்றது.

திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு (பகுதி 1)

மூலம்: M.M.அக்பர் - தமிழில் தேங்கை முனீப், பஹ்ரைன்


இறைவெளிப்பாட்டின் அடிப்படையில் சமுதாயத்தை வழிநடத்திய இறைதூதர்கள் மற்றும் அவர்களுக்கு அருளப்பட்ட இறைவசனங்களின் தாக்கத்தை உட்கொண்ட ஒரு நூலே பைபிள் என்பதில் முஸ்லிம்களுக்கு மாற்று அபிப்பிராயம் இல்லை. இறைவசனங்களும் தீர்க்கதரிசிகளின் உபதேசங்களும் வரலாற்றாசிரியர்களின் அபிப்பிராயங்களும் புரோகிதக் கருத்துக்களும் சேர்ந்த ஒரு கலவையே பைபிள். தீர்க்கதரிசிகளின் வாழ்க்கைப் புராணங்கள் பைபிளின் முதுகெலும்பு எனலாம். இந்த வாழ்க்கைப் புராணங்களின் மேல் புரோகிதக் கருத்துக்களைப் பொதிந்து உருவாக்கப்பட்டதே இன்று நடைமுறையில் உள்ள பைபிள் என்று கூறினால் வியப்படையத் தேவையில்லை. பைபிளில் காணப்படும் பல வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் தீர்க்கதரிசனங்கள் திருக்குர்ஆனில் உள்ள தகவல்களை ஒப்ப அமைந்திருப்பதைக் காணலாம். பைபிளில் காணப்படும் அத்தகைய தகவல்கள் இறைவசனங்கள், கண்ணால் கண்ட காட்சிகள் மற்றும் பிறர் கூறக் கேட்ட கருத்துக்களின் அடிப்படையில் பிற்கால எழுத்தாளர்களால் பதிவுசெய்யப்பட்டவை ஆகும். புரோகிதர்களின் மனித அபிப்பிராயங்கள் பைபிளில் மலிந்து காணப்படுவதால் முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்களும், அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களும் பைபிளில் நிறைந்து காணப்படுகின்றது.
திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள வரலாற்றுத் தகவல்கள் இதிலிருந்து முற்றிலும் வேறபட்டுள்ளது. அது அருளப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை எந்த மனிதக் கரங்களாலும் மாசுபடாமல் அதன் பரிசுத்தத் தன்மையிலேயே நிலைத்திருக்கின்றது. எனவே அது கூறும் வரலாற்றுத் தகவல்கள் முற்றிலும் உண்மையானவையகவும் முரண்பாடு களற்றவையாகவும் பரிபூரணத் தன்மை வாய்ந்ததாகவும் நிலைத்து நிற்கின்றன. எனவே திருக்குர்ஆனில் எந்த முரண்பாடு களையும் விமர்சகர்களால் கூறமுடியாது. அவ்வாறு விமர்சித்தாலும் சான்றுகளின் துணையோடு அவற்றை நிரூபிக்க இயலாது என்பதே உண்மை.
இறைவசனங்களின் தாக்கம் உள்ள பைபிளிலும் இறைவசனங்களை மட்டுமே கொண்ட திருக்குர்ஆனிலும் வரலாற்றுத் தகவல்கள் அடிப்படையில் ஒன்றாகத் தோன்றினாலும் அவற்றை விளக்கும் தொனியில் இரண்டிற்கு மத்தியிலும் பாரிய வேறுபாடுகள் நிலவுகின்றன. இத்தகைய வேறுபாடுகள் திருக்குர்ஆன் இறைவாக்கு என்பதை உண்மைப் படுத்துவதோடு பைபிள் மனிதக் கற்பனைகளின் கலவை என்பதையும் நிரூபிக்கின்றன. சில உதாரணங்களைக் கொண்டு இதனை நிரூபிப்போம்.
1. இறைக் கொள்கை மற்றும் இறைவனைப் பற்றிய தகவல்கள்.திருக்குர்ஆனில் இறைவனைக் குறித்துக் கூறப்படும் தகவல்கள் யாவும் அவனது வல்லமையையும் மகத்துவத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளன. ஆனால் பைபிளில் பல இடங்களிலும் இறைவனின் மகத்துவத்திற்குக் களங்கம் ஏற்படும் வகையில் கருத்துக்கள் அமைந்துள்ளன. யஹோவாவின் பகத்துவம் பற்றிக் கூறினாலும் இஸ்ரவேலிய இனஉணர்வின் தாக்கங்கள் வரும் இடங்களில் இறைவனின் மகத்துவத்தைச் சிறுமைப் படுத்தும் விதத்தில் கருத்துக்கள் காணப்படுகின்றன.
உதாரணமாக ஆதியாகமம் 1:26 மனிதனை தனது சாயலில் இறைவன் உருவாக்கினான் என்று கூறி மனிதனுக்கு இறைவனை ஒப்பாக்கி தரம் தாழ்த்துகின்றது. ஆதியாகமம் 2:23 கடவுள் ஓய்வு எடுத்தார் என்ற தகவலைக் கூறி களைப்பும் ஓய்வும் உடைய இறைவனை பைபிள் அறிமுகப்படுத்துகின்றது. ஆதியாகமம் 3:8 முதல் 13 வரை ஏதேன் தோட்டத்தில் ஒளிந்துகொண்ட ஆதாமையும் ஏவாளையும் கடவுள் தேடி அலைந்தார் என்று கூறி முற்றிலும் பரிபூரணமடைந்த அவனது ஞானத்தைக் களங்கப்படுத்துகின்றது.
தான் செய்து விட்ட காரியத்திற்காக வருத்தப்படும் கடவுள் என்ற ஆதியாகமம் 6:6ல் கூறப்பட்டுள்ள தகவல் பின்விளைவை அறியாதவனாக இறைவனைச் சிறுமைப் படுத்துகின்றது. தான் முனரே தீர்மானித்து உறுதிப்படுத்திய ஒரு காரியத்தைச் செய்யாமல் மனம் மாறிவிட்ட தெய்வத்தைப் பற்றி யாத்திராகமம் 32:14 கூறுகின்றது.
இஸ்ரவேல் இனத்தின் பிதாவாகிய யாக்கோபுடன் மல்யுத்தம் நடத்தி இறைவன் தோற்றுவிட்டதாக ஆதியாகமம் 32:28 கூறுகின்றது. மேலும் இஸ்ரவேல் இனஉணர்வின் ஆதிக்கம் பைபிளில் மேலோங்கியுள்ளது என்பதற்கு மேற்படி வசனம் ஒரு சான்றாகும். ஆனால் திருக்குர்ஆனில் இப்பேரண்டத்தின் படைப்பாளனும் ஆட்சியாளனும் ஆகிய அல்லாஹ்வைப் பற்றி எடுத்துக் கூறும் இடங்களில் அவனது மகத்துவத்திற்கோ வல்லமைக்கோ களங்கம் கற்பிக்கும் எந்தக் குறிப்புகளும் இல்லை. மாறாக இறைவனைக் குறித்த தகவல்கள் யாவும் அவனது வல்லமையையும் மகத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதுடன் அவற்றைப் படிப்பவர்களின் இறைநம்பிக்கையையும் பயபக்தியையும் அதிகப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
அல்லாஹ்வாகிய அவ்விறைவன் அரபிகளுக்கு மட்டும் உள்ள இறைவனாகத் திருக்குர்ஆன் அவனைக் குறித்து அறிமுகப்படுத்தவில்லை. திருக்குர்ஆன் அறிமுகப்படுத்தும் இறைவன் அரபிகளையும் அரபியல்லாதவரையும் இன நிற வேறுபாடின்றி அனைவரையும் படைத்தவன், அகி உலகத்தாரின் இரட்சகன். சில வசனங்கள். அல்லாஹ் அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் உயிரோடிருப்பவன். என்றென்றும் நிலைத்திருப்பவன். அவனை சிறுதுயிலோ, உறக்கமோ பீடிக்கா. வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியது. (திருக்குர்ஆன் 2:255)
இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயனாகிய) அல்லாஹ்; உங்கள் இரகசியத்தையும் உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்; இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான். (திருக்குர்ஆன் 6:3)
வானங்களையும் பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து அதைக் கொண்டு உங்களை(ப்பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான் அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன் பார்ப்பவன். (திருக்குர்ஆன் 42:11)
நபியே! நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும் அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (திருக்குர்ஆன்112: 1-4)
2. தீர்க்கதரிசிகளின் வரலாறுவரலாற்றுத் தகவல்களைப் பொறுத்தவரை விவரிக்கும் விதம் தெய்வீகத் தன்மை ஆகியவற்றில் பைபிளும் திருக்குர்ஆனும் முற்றிலும் வேறுபடுகின்றது. முதலாவதாக ஆதிபிதாவாகிய ஆதமுடைய வரலாற்றைப் பற்றி பைபிள் மற்றும் திருக்குர்ஆன் தரும் தகவல்களைக் காண்போம்.
1. ஆதமிடமும் அவரது மனைவியிடமும் உண்ணக் கூடாது என்று விலக்கப்பட்ட கனியானது நன்மை தீமை குறித்து அறிவிக்கக் கூடிய கனி என்று பைபிள் கூறுகின்றது. (ஆதி 2:17)பைபிளின் கூற்றுப்படி விலக்கப்பட்ட கனியைப் புசித்ததன் காரணமாகவே மனிதனுக்கு நன்மை தீமைகளைப் பற்றிய அறிவு கிடைக்கின்றது. (ஆதி 3:6,7 3:22) (கனியைப் புசிப்பதற்கு முன் நன்மை தீமைகளைப் பிரித்தறியாத நிலையில் இருந்த மனிதனிடம் விலக்கப்பட்ட கனியைப் புசிக்க வேண்டாம் என்று எவ்வாறு கட்டளையிட முடியும் ? ஏவல் விலக்கல்களெல்லாம் நன்மை தீமையைக் குறித்து அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் என்பதல்லவா உண்மை ? இதன் காரணமாகவே விலங்கினங்களிடம் ஏவல் விலக்கல்கள் செல்லுபடியாவதில்லை என்பதை கவனத்தில் கொள்க.)
ஆனால் திருக்குர்ஆன் விலக்கப்பட்ட கனியைக்குறித்து பேசும் இடத்தில் அது நன்மை தீமைகளைப் பிரித்தறிவிக்கும் அறிவின் கனி என்று குறிப்பிடவில்லை. நன்மை புரிந்து உயர்நிலை அடையக்கூடிய அல்லது தீமை புரிந்து இழிநிலை அடையக்கூடிய நிலை இயற்கையாகவே மனுதனின் படைப்பில் அமைந்துள்ளது என்ற உண்மையை திருக்குர்ஆன் எடுத்தியம்புகின்றது. நன்மை தீமைகளைக் குறித்த அறிவு விலக்கப்பட்ட கனியைப் புசிப்பதற்கு முன்னரே இறைவனால் மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு அதனால் ஒவ்வொரு பொருளையும் பிரித்தறிந்து அதன் தன்மைகளுக்கு ஏற்ப பெயரிட்டு அழைக்கக் கூடிய ஒரு உன்னதமான ஒரு படைப்பாகவே திருக்குர்ஆன் மனிதனை அறிமுகப்படுத்துகின்றது.(2:30-33) விலக்கப்பட்ட கனியையும் நன்மை தீமைகளைப் பிரித்தறிதலையும் எந்த இடத்திலும் திருக்குர்ஆன் சம்மந்தப்படுத்தவே இல்லை.
2. விலக்கப்பட்ட கனியைப் பற்றிய இறைவனின் கட்டளையை பைபிள் எடுத்துக் கூறும்போது '' அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்'' (ஆதி 2:17) என்று ஆதமிடம் கர்த்தர் கூறியதாகக் குறிப்பிடுகின்றது. ஆனால் இறைக் கட்டளைக்கு மாறு செய்யத் தூண்டிய சர்ப்பமோ ''நீங்கள் நன்மை தீமையை அறிந்து தேவர்களைப்போல இருப்பீர்கள் என்று (ஆதி: 3:5) கூறியது. அவவாறு விலக்கப்பட்ட கனியை உண்டபோது ஆதம் சாகவில்லை. மாறாக சர்ப்பம் கூறியது போன்று நடந்தது. (பார்க்க. ஆதியாகமம்: 3:6,7 3:22)இறைவன் பொய் கூறி ஆதமை பயமுறுத்தினான் என்றும் பாம்பு ஆதமுக்கு உண்மையை எடுத்துக் கூறியது என்றும் இக்கதை மூலம் விளங்க முடிகின்றது. இவ்வாறு இறைவனின் மகத்துவத்துக்குக் களங்கம் கற்பிக்கும் கதைகள் திருக்குர்ஆனில் இல்லை.
3. நன்மை தீமைகளைப் பகுத்துணரும் அறிவு தரும் கனியைப் புசித்த மனிதனைப் பற்றிய அச்சத்தால் மனிதன் தன்னைப் போல் ஆகாதிருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடும் பலவீனமானவனாக இறைவனை பைபிள் காட்டுகின்றது. (ஆதி 3:22)விலக்கப்பட்ட கனியைப் புசித்தன் காரணமாக இறைதன்மை மனிதனிடம் ஊடுருவி விட்டதாக எந்த இடத்திலும் திருக்குர்ஆன் கூறவில்லை. இவ்வாறு இறைவனின் மகத்துவத்துக்குக் களங்கம் ஏற்படுத்தும் இக் கதைகளை விட்டும் திருக்குர்ஆன் பரிசுத்தமானது!
4. விலக்கப்பட்ட கனியை உண்ணுமாறு மனிதனைத் தூண்டியது பாம்பு (சர்ப்பம்) என்று பைபிள் கூறுகின்றது. (ஆதி 3:1-5, 3:13) இதன் காரணமாகவே பாம்பு இறைவனின் சாபத்துக்கு ஆளாகியது என்றும், அச்சாபத்தின் காரணமாகவே அது தன் வயிற்றினால் (ஊர்ந்து) சஞ்சரிக்கிறது என்றும், அதன் காரணமாகவே மனிதனுக்கும் பாம்புக்கும் பகை ஏற்பட்டது என்றும் பைபிள் கூறுகின்றது. (திருக்குர்ஆன் 2:35,36)ஆனால் திருக்குர்ஆனோ மனிதனை வழிகெடுத்து அவனைச் சுவனத்திலிருந்து வெளியேற்றியவன் ஷைத்தான் என்று கூறுகிறது. (திருக்குர்ஆன் 2:35,36) இச்சம்பவத்தைப் பற்றி திருக்குர்ஆன் குறிப்பிட்டுக்காட்டும் எந்த இடத்திலும் பாம்பைப் பற்றிய தகவல் இல்லை. இறைசாபத்தின் காரயமாகவே பாம்பு வயிற்றினால் ஊர்கின்றது என்பதும் அச்சாபத்தின் காரணமாகவே அது மனிதனால் வெறுக்கப்பட்டது என்பதுவும் உண்மையாயின் இறைசாபத்துக்கு முன் உள்ள பாம்பு எந்த நிலையில் இருந்தது ? கால்களால் நடந்து சென்றதா ? மனிதனால் விரும்பப்பட்டதா? இது குறித்த எந்த விளக்கமும் பைபிளில் இல்லை.
5. விலக்கப்பட்ட கனியை உண்டதோடு அதனை உண்ணத் தூண்டியவள் பெண், இதன் காரணமாக அவள் இறைவனால் சபிக்கப்பட்டு அச்சாபத்தின் காரணமாகவே பெண்ணுக்கு கற்பகால சிரமங்களும் பிரசவ வேதனையும் ஏற்படுகின்றது என்று பைபிள் (ஆதி 3:16) கூறுகின்றது. இன்றுவரை தாய்மார்கள் அனுபவித்து வரும் கற்பகால சிரமங்களுக்கும் பிரசவவேதனைக்கும் ஆதிமாதாவின் பாவம் காரணமாம் ? (அப்படியாயின் மனிதனல்லாத இதர ஜீவிகள் அனுபவிக்கும் பிரசவ வேதனைக்கு யார் செய்த பாவம் காரணமாம்?)தாய்மார்களுக்கு ஏற்படும் பிரசவ வேதனை பாவத்திற்காக வழங்கப்பட்ட தண்டனை என்று திருக்குர்ஆன் கூறவில்லை. மாறாக அதனை ஓர் அருட்கொடையாகவே குறிப்பிடுகின்றது. தாயின் தியாகத்துக்கு எடுத்துக்காட்டாக அச்சம்பவத்தைக் குறிப்பிடுகின்றது. (திருக்குர்ஆன் 29:8, 46:15, 31:14) இதன் காரணமாகவே மனிதன் தனது தாய்க்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும் எனவும் கட்டளையிடுகின்றது. விலக்கப்பட்ட கனியையும் கற்ப காலசிரமங்கள் மற்றும் பிரசவ வேதனையையும் திருக்குர்ஆன் எந்த இடத்திலும் சம்மந்தப்படுத்தவே இல்லை.
6. மனிதனுடைய உழைப்பு, பொருளீட்டல், விவசாயம் போன்றவை எல்லாம் விலக்கப்பட்ட கனியை உண்டதன் காரணமாக ஏற்பட்ட சாபம் (பைபிள் ஆதி 3:18,19) ஆனால் திருக்குர்ஆன் உழைப்பு, பொருளீட்டல் எல்லாம் மனிதனின் திறமையை வெளிப்படுத்தும் அருட்கொடை என்று கூறுகின்றது. (திருக்குர்ஆன்62:10) இதன் காரணமாகவே குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கி ஒரு ஆண்மகனை கண்ணியப்படுத்துகிதிருக்குர்ஆன்ன்றது (திருக்குர்ஆன்4:34) மனிதனின் கடின உழைப்பையும் முயற்சியையும் எந்த இடத்திலும் விலக்கப்பட்ட கனியுடன் திருக்குர்ஆன் தொடர்பு படுத்தவில்லை.
7. விலக்கப்பட்ட கனியை உண்ட ஆதமும் ஹவ்வாவும் பாவமன்னிப்புக் கோரியதாகவோ இறைவன் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கியதாகவோ எந்தத் தகவலும் பைபிளில் இல்லை. ஆனால் திருக்குர்ஆன் ஆதி மாதா பிதாக்கள் இருவரின் மனமுருகிய பிரார்த்தனையையும் பாவமன்னிப்புக் கோரலையும், அவர்களுக்கு மன்னிப்பு வழங்கிய இறைவனின் மகத்தான கருணையையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார் (இன்னும் அவற்றின் முலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும் கருணையாளனும் ஆவான். (திருக்குர்ஆன்2:37) அதற்கு அவர்கள்; '' எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்"" என்று கூறினார்கள். (திருக்குர்ஆன்7:23)
இன்ஷா அல்லாஹ் தொடரும்

வெள்ளி, 16 அக்டோபர், 2009


வவ்வால் (Bat)

E. Usman Ali, Jeddah

உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்டுள்ள பாலூட்டிகளில் பெரும்பாலான இனங்கள் அழிந்துவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். இன்றளவிலும் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான புதைப்பொருள் எலும்புக்கூடுகளை கண்டுபிடிக்கின்றனர். கிட்டதட்ட ஒரு லட்சம் பாலூட்டிகள் இந்த உலகில் இருந்ததாகவும் அவற்றில் பெரும் பகுதி அழிந்துவிட்டதாகவும் தற்போது 4000 பாலூட்டிகள் மாத்திரமே உள்ளதாகவும் கூறுகின்றார்கள். மேலும் இவற்றின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருவதாகவும் இன்னும் ஒன்றிரண்டு தலைமுறைக்கு பிறகு பல உயிரினங்களை உயிரியல் கண்காட்சிகளில் மாத்திரமே காணக்கூடிய நிலை ஏற்படும் என்றும் திட்ட வட்டமாக கூறுகின்றார்கள். ஏனென்றுச் சொன்னால் பல விலங்குகளின் நிலை விரல் விட்டு எண்ணக்கூடிய நிலையில் இருப்பதே இதற்குச் சான்றாகும். இந்த எண்ணிக்கையில் உள்ள பாலூட்டிகளில் ஏறக்குறைய நான்கில் ஒருபகுதி இனங்களைக் கொண்டது வவ்வால் இனமாகும். நாம் இந்தத் தலைப்பில் அல்லாஹ்வுடைய படைப்புக்களில் மற்றவற்றிலிருந்து வவ்வால் எந்த பண்புகளில் எந்த தகவமைப்பில் வேறுபட்டுள்ளது என்பதை விரிவான முறையிலே பார்ப்போம்.
"பறக்கக்கூடிய" தன்மையைப் பெற்ற ஒரே பாலூட்டி வவ்வால் ஒன்றுதான் குட்டிப்போட்டு பறக்கக்கூடியத் தன்மையைக்கொண்ட இந்தப்பாலூட்டி பல அதிசியத்தக்க தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. கீழ் காணும் படம் வவ்வால் தன் சிறகை(கையை) விரித்து பறக்கக்கூடிய காட்சி.

உலகில் உள்ள பாலூட்டிகளில் மிகச்சிரியது பம்பல்பீ வவ்வால் ஆகும். தங்கள் உடல் எடையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக் உண்ணக்கூடிய அதிசயத்திலும் அதிசயம்.
வவ்வால்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவைகளின் உருவ அமைப்பை வைத்து பெரிய வவ்வால்கள் (Mega bats) எனவும் சிரிய வவ்வால்கள் (Mictro bats) எனவும் பிரிக்கப்பட்டுள்ளன. பெரிய வவ்வால்களில் குறிப்பிடத்தக்கது பிளையிங் ஃபாக்ஸ் (Flying fox) வவ்வால் ஆகும். இவை அதிகபட்சமாக 41 செ.மீ வரை வளரக்கூடியது. சிறிய வகை வவ்வால்களில் குறிப்பிடக்தக்கது பம்பல்பீ(Bumble Bee) வவ்வால் ஆகும். இவை மூன்று செ.மீ நீளமும் இரண்டு கிராம் எடையும் உள்ளதாகும்.

இதுதான் உலகில் உள்ள பாலூட்டிகளில் மிக சிறியதாகும். மேலும் இவைகளின் உணவு முறைகளை வைத்தும் இரண்டு பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று பழங்கள், பூக்கள் மற்றும் பூக்களின் குளுகோஸ், மகரந்தத் தூள் ஆகியவற்றை உண்டு வாழக்கூடியவை. மற்றது சிறிய பூச்சிகள் வண்டுகள் சிறிய வகை பாலூட்டிகள் சிறிய பறவைகள் ஈக்கள் கொசுக்கள் தவளை மற்றும் மீன்கள் ஆகியவற்றை உண்டு வாழுகின்றன. வவ்வால்களில் மொத்தம் 951 இனங்கள் இருப்பதாக கணக்கிட்டுள்ளார்கள். அவற்றில் மூன்றே மூன்று வகைகள் உயிர் பிராணிகளின் இரத்தத்தை மட்டுமே குடித்து உயிர் வாழக்கூடியது. உதாரணமாக வம்பயர் வவ்வால்கள் (Vampire) இவைகளின் கூறிய பற்களைக்கொண்டு முதலில் பிராணிகளின் உடலில் காயத்தை ஏற்படுத்துகின்றன. அதிலிருந்து ஒரு முறைக்கு 20 மில்லி வரை இரத்தத்தை குடிக்கின்றன. இந்த அளவு அவற்றின் எடையில் 40 சதவிகிதம் ஆகும்.


மேலும் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் வோல்ட் வார்ல்ட் புரூட் வவ்வால்கள் (Old world fruit bats) ஒரு நேரத்திற்கு 500 கிராம் வரை பழங்களை உண்ணுகின்றன. இந்த அளவு இவற்றின் எடையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாகும். இதுவே அல்லாஹ்வின் ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சிதான். நம்முடைய பகுத்தறிவுக்கு ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு விசயமாக இருப்பினும் கூட அல்லாஹ்வுடைய ஆற்றலை எண்ணி வியப்படையக்கூடிய சம்பவமாகவே இது அமைந்துள்ளது.
தங்குமிடங்கள்

வவ்வால்கள் பொதுவாக ஒரு சமுதாயமாக கூடி வாழுகின்றன. ஒரு கூட்டத்தில் 2000க்கம் மேற்ப்பட்ட வவ்வால்கள் வாழுகின்றன. இவைகள் வருடம் முழுதும் தங்களுக்கு உணவுத்தட்டுபாடின்றி கிடைக்கக்கூடிய இடங்களை தேர்வு செய்து வாழுகின்றன. உலகின் அனைத்து பிரதேசங்களில் காணப்பட்டாலும் கூட மிக அதிக அளவில் வெப்பம் மிகுந்த நாடுகளில் பொதுவாகக் காணப்படுகின்றன. இவைகள் குகைகள் பாறை இடுக்குகள் பொந்துகள் பள்ளங்கள் ஆகியவற்றில் இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளுகின்றன. இன்னும் சில வவ்வால்கள் நாம் காணக்கூடிய வகையிலே மரங்களின் கிளைகளிலே தலைகீழாக தொங்கிக்கொண்டிருக்கின்றன.

இவைகள் தலைக்கீழாக தொங்கக்கூடிய இந்க செயலும் கூட மற்ற எல்லாவற்றிலும் வேறுப்பட்டுள்ள ஒரு நிலைதான். மேலும் தலைக்கீழாக தொங்குவதற்கு எந்தவிதமான சக்தி இழப்பும் இவைகளுக்கு ஏற்படுவதில்லை. இதுவும் ஒரு ஆச்சர்யமான நிகழ்வாகும். மனிதர்களைப்பொருத்த வரை இரண்டு நிமிடங்கள் கைகளை ஒரே நிலையில் தூக்கி வைக்க இயலாது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவைகள் தலைகீழாக தொங்கும் போது இவற்றின் உடல் எடையின் காரணமாக பின்புற கால்களின் தசை நார்கள் ஒன்றுடன் ஒன்று தன்னிச்சையாக கோர்த்து இணைந்துக்கொள்வதன் மூலம் இவற்றின் விரல் நகங்கள் தொங்கும் மேற்புறத்தை இறுகப் பற்றிப்பிடித்துக்கொள்ளுகின்றன. இதனால் எந்த விதமான சிரமமுமின்றி இவை உறக்கத்தில் ஈடுபடுகின்றன.

உலகில் உள்ள உயிரினங்களில் ஆண் இனத்தின் மார்பில் பால் சுரக்கும் சம்பவம் தயாக் (Dayak) வவ்வால்களில் மட்டுமே காணக்கூடிய அதிசயம். நாம் பொதுவாக அறிந்திருப்பது என்னவென்றால் முட்டையிடுதல் கர்பமடைதல் பாலூட்டுதல் போன்ற பண்புகளை பெண் உயிரினங்கள்தான் பெற்றிருக்கின்றன. 1994 ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் ஓர் உண்மையினை கண்டறிந்தார்கள். மலேசியாவில் வசிக்கக்கூடிய தயாக் (Dayak) பழந்தின்னி வவ்வால்களில் 10 ஆண் வவ்வால்களை ஆராய்ச்சி செய்து ஓரு அதிசியத்தக்க முடிவினை வெளியிட்டார்கள். நம் கற்பனையிலும் உதிக்காத ஒன்று ஆண் வவ்வால்களின் மார்பகங்களில் பால் சுரந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாலூட்டிகளில் ஆண் உயிரினத்தின் மார்பில் பால் சுரக்கக்கூடியது இது ஒன்றாகத்தான் இருக்கும். இந்த தகவமைப்பு அல்லாஹ்வுடைய அரும்பெரும் ஆற்றலை காட்டக்கூடியதாகவும் நான் அனைத்திற்கும் ஆற்றலுடையவன் என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்தக் கூடிய நிகழ்ச்சியாகவே நமக்கு தோன்றுகின்றது.

தூரப்பிரதேசத்தின் தட்பவெப்ப நிலைகளை துல்லியமாக அறிந்து 1600 மைல்களைக் கடந்து செல்லும் அதிசய ஆற்றல் வவ்வால்கள் சராசரியாக மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றலுடையவை. சில வகை வவ்வால்கள் வருடம் முழுதும் ஒரே மரத்தில் தங்கிவிடுகின்றன. ஆனால் சிலவகை வவ்வால்கள் உதாரணமாக மெக்ஸிகன் பிரிடெய்ல் வவ்வால்கள் குளிர் காலங்களில் தங்கள் இருப்பிடத்தை மாற்றி வெப்பப் பிரதேசங்களுக்கு பெரும் தூரத்திற்க்கு புலம்பெயர்ந்து செல்லுகின்றன. அமெரிக்காவிலிருந்து 1600 மைல்களைக் கடந்து மெக்ஸிகோவை வந்தடைகின்றன. இவைகள் எப்படி இவ்வளவு தூரப்பிரதேசத்தின் கால தட்ப வெப்பநிலையை துல்லியமாக அறிகின்றன என்பதை விஞ்ஞானிகளால் திட்டவட்டமாகக் கூறமுடியவில்லை. இவைகளின் மூளைப்பகுதியில் பூமியின் காந்த மண்டலங்களை அறியக்கூடிய அமைப்பு எதுவும் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் அபிப்பிராயப்படுகின்றார்கள். நம்மைப் பொருத்த வரை தேனீக்களுக்கு இறைச்செய்தி (வஹீ) அறிவிக்கக்கூடிய இறைவன் இந்த வவ்வால்களுக்கும் இறைச்செய்தி (வஹீ) அறிவித்துத்தருகின்றான் என்பதில் மிக எளிதாக விடை கிடைத்தவிடுகின்றது.

அடர்ந்த இருளிலும் பார்க்கக்கூடிய கண் அமைப்பு

வவ்வால்கள் பகல் பொழுதை ஒய்விற்கும் இரவு பொழுதை தங்கள் வாழ்க்கைத் தேவைக்கும் பயன்படுத்துகின்றன. இவைகள் அந்திப்பொழுது முதல் வைகறைப்பொழுது வரை மிகச்சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவை. இரவில் இயங்கக்கூடிய சில உயிரினங்களில் வவ்வாலும் ஒன்றாகும். இரவில் நன்குப்பார்க்கக்கூடிய கண் அமைப்பைப் பெற்றிருக்கின்றன. அடர்ந்த இருளிலும் குறைந்க வெளிச்சத்திலும் நன்கு பார்க்கக்கூடிய கண் அமைப்பினை பெற்றுள்ளன. தூரக்கடல் தீவுகளில் வசிக்கக்கூடிய சில வவ்வால்கள் மாத்திரமே பகல் பொழுதில் தங்கள் இறையைதேடுகின்றன. இவைகளோடு மனிதர்களுக்கு உள்ளத்தொடர்பு இவற்றின் திடீர் குறுக்கீடு காரணமாக மனிதர்கள் சிலசமயம் பயத்திற்கு ஆட்படும் சம்பவம் நடைப்பெறுகின்றன. சராசரியாக வருடத்திற்கு ஒரு மனிதர் வவ்வாலினால் கடிக்கப்பட்டு இறப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இவை நாய் மற்றும் வண்டு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் மிகக்குறைவு.

வம்பயர் வவ்வால் ஒரு விலங்குனுடைய இரத்தத்தை குடிக்கும் காட்சி
"'மஸ்டிப் வவ்வால்களின் ஒரு காலனி ஒரு இரவில் 250 டன் எடையுள்ள இரையை உண்டு முடிக்கக்கூடிய அபரிதமான ஆற்றல்"
"எங்கள் இறைவா! இவற்றையெல்லாம் நீ வீணாக படைக்கவில்லை". (அல்குர்ஆன் 3:191)

சமீபக் காலங்களில் மனிதர்கள் வவ்வால்களின் பயன்பாடுகளை வெகுவாக அறிந்து வருகின்றார்கள். பொதுவாக வவ்வால்கள் கதைகளிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் தீய சக்திக்கும் சாத்தானிய சக்திகளுக்கும் உதாரணமாகக் கூறப்படுகின்றது. ஆனால் இன்றைய விஞ்ஞானிகள் இவைகளின் அளவற்ற பயன்பாடுகளைப்பற்றி சிலாகித்து கூறுகின்றனர். இவை முக்கியமாக மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய பூச்சி, கொசு, வண்டு மற்றும் ஈக்களை தங்கள் முக்கிய உணவாக உட்கொள்கின்றன.

மெக்ஸிகோவில் வாழக்கூடிய மஸ்டிப்(mastiff) வவ்வால்கள் காலனியாக(கூட்டமாக) வாழக்கூடியது. இந்த வவ்வால்களின் ஒரு காலனி(கூட்டம்) ஒரு இரவில் 250 டன் (இரண்டு லச்சத்தி ஐம்பது ஆயிரம் கிலோ) எடையுடைய பூச்சி, வண்டு மற்றும் கொசுக்களை தங்கள் உணவாக உண்ணுகின்றன என்றுச்சொன்னால் சுபஹானல்லாஹ், இறைவன் இவற்றைக்கொண்டு மனிதர்களுக்கு ஏற்படுத்தியுள்ள(Pest control) பாதுகாப்பு அரணை வார்த்தைகளால் விளக்க முடியாது. சிறிய பழுப்பு நிற வவ்வால்கள் (Little brown bat) ஒரு மணி நேரத்தில் 600 கொசுக்கள் வரைப் பிடித்து உண்ணக்கூடியவை. இதிலிருந்து இவை மனித குலத்திற்கு ஆற்றக்கூடிய அளவற்றத் தொண்டினை வார்த்தைகளினால் எங்ஙனம் விளக்க இயலும்.

பல நாடுகளில் இன்று மக்களுக்கு நோய்களையும் இன்னபிற தொல்லைகளையும் கொடுக்கும் கொசுக்களை அழிக்க பட்ஜட் போட்டுக்கொண்டிருப்பதை பார்க்கின்றோம். இது கருணை மிக்க நம் இறைவன் அமைத்துள்ள வாழ்க்கைச் சுழற்ச்சி என்பது ஒன்றை ஒன்று சார்ந்து வாழக்கூடிய அமைப்பாகும். மேலும் இவைகள் தங்கள் உணவாக பழங்களான வாழை, மாம்பழம், கொய்யா பேரிச்சை, அத்தி ஆகியவற்றை உண்பதனால் வவ்வால்களின் மூலம் அயல் மகரந்தச்சேர்க்கை நடைப்பெற பெரிதும் துணைச்செய்கின்றன. இவைகளின் மூலம் 500 க்கும் மேற்ப்பட்ட தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை நடைப்பெற்று வருவதாக அரிய வந்துள்ளது. மேலும் இவற்றின் கழிவுகளில் மிக அதிக அளவிற்கு நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால் மிகச்சிறந்க உரமாக பூமிக்கு அமைந்துவிடுகின்றன. பல நாடுகளில் இவை வசிக்கக்கூடிய இடங்களிலிருந்து இவற்றின் கழிவுகள் சேகரிக்கப்பட்டு விவசாயத்திற்கு தேவையான மிக உயர் தரமான உரம் தயாரிக்கப்படுகின்றது. இவையும் இவற்றின பயன்பாடுகளின் மிகமுக்கியமானதாகும்.

மனிதர்களுக்கு நேரடியான பயன்களும் இவற்றில் உள்ளன.

வம்பைர்(vampire) வவ்வால்களின் வாயில் சுரக்கும் உமிழ் நீரிலிருந்து மனிதர்களுக்கு ஏற்படும் இதய சம்பந்தமான நோய்க்கு மருந்து தயாரிக்கப்படுகின்றது. மேலும் மூளைக்கு செல்லும் இரத்தம் தடைப்படுவதை தடுக்கவும் காயங்களிலிருந்து வெளியேரும் இரத்தத்தை விரைவில் உறைய வைக்கவும் இவை பயனாகின்றன. பிரிடெய்ல் வவ்வால்களின் இருப்பிடங்களில் சேர்ந்த இற்றின் கழிவுகளிலிருந்து கிடைக்கக்கூடிய சோடியம் நைட்ரேட்டைக் கொண்டு அமெரிக்காவில் நடந்த சிவில் போரில்(1861-1865) வெடிமருந்து தயார் செய்துள்ள வரலாறும் நமக்கு காணக்கிடைக்கின்றது.
அல்லாஹ்வின் படைப்பாற்றலை பறைச்சாற்றும் அதிய உடல் அமைப்பு
உறை நிலையை கடந்து -5 (Minus 5) டிகிரி வரை தாங்கக்கூடிய ஆற்றல் பெற்ற சிவப்பு வவ்வால்கள் வவ்வால்கள் வெப்ப இரத்த பிராணியாக இருப்பினும் கூட இவை மற்றவற்றிலிருந்து வேறுபட்ட அம்சத்தை கொண்டுள்ளது. இவை இயங்கக்கூடிய நேரத்தில் மாத்திரமே உடல் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துள்ளன. இவை தலைக்கீழாக ஓய்வெடுக்கும் போது சுற்றுப்புற சூழலின் வெப்ப நிலைக்கு ஏற்ப இவற்றின் உடல் வெப்ப நிலை மாறிவிடுகின்றது.

மனிதர்களைப் பொருத்த வரை 37 டிகிரிக்கு அதிகமாக உடல் வெப்பமானால் வியர்க்க ஆரம்பித்து விடுகின்றது. இதற்கு குறைந்து விட்டாலோ குளிர ஆரம்பித்து விடுகின்றது. மனிதனின் ஆற்றலில் குறிப்பிடத்தக்க அளவு கலோரி உடல் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துக்கொள்ள செலவாகின்றது. சிவப்பு நிற வவ்வால்களின் உடல் வெப்பநிலை உறைநிலையை கடந்து -5 டிகிரிவரை தாங்கிக் கொள்ளுகின்றன என்றுச்சொன்னால் அல்லாஹ் மகா தூய்மையானவன். (0 டிகிரியில் தண்ணீர் பனிக்கட்டியாகிவிடும்) வவ்வால்களின் வேறுபட்ட வெப்ப நிலையை தாங்கக்கூடிய இந்த உடலமைப்பு இறைவன் இவற்றிற்கு அளித்த அருட்கொடையாகும். இவைகளின் உடல் அமைப்பு மற்ற பாலூட்டிகளை ஒத்திருப்பினும் இவைகளின் முன்னங்கால்களின் அமைப்பே மற்றவற்றிலிருந்து மாறுப்பட்டதாகவும் இவற்றிற்கு பறப்பதற்கு உறுதுணையாகவும் அமைந்துள்ளன. இவற்றின் முன்னங்கால்களில் உள்ள விரல்களுக்கிடையே தோலினால் இடைவெளியின்றி பினைக்கப்பட்டுள்ளன. இந்த தோல் அமைப்பே இவற்றிற்கு பறவையின் சிறகினைப்போன்று அமைந்து இவைகள் பறக்க உதவுகின்றன. இவற்றின் விரல்களில் பிணைக்கப்பட்டுள்ள இந்த தோல் அமைப்பு இவற்றின் உடலின் பக்கத் தசையுடன் இணைக்கப்பட்டு பின்புற கால்களில் இணைக்காப்பட்டுள்ளன.
"எதிரொலியின் மூலம் இரையை பிடிக்கும் அதிசியமான ஆற்றல்" ECHO LOCATION

"ரேடாரின் இயக்கத்தை ஒத்த ஒலி அலை அமைப்பு"(1) முதல் படம் மாறுப்பட்ட அலை வரிசைகளைக்கொண்ட ஒலியை வவ்வால் அனுப்புகின்றது,(2) இரண்டாவது படம் அதனால் அனுப்பப்பட்ட ஒலிஅலையின் பாதையில் தடங்கள் ஏற்பட்டு அது எதிரொலியாக திரும்பி வருதல்.(3) ஒலிப்பாதையில் தடங்கள் ஏற்பட்ட இடத்தை நோக்கி துல்லியமாக இரையின் அளவையும் தொலைவையும் அறிய அனுப்பும் ஒலி.(4) இரையை விரைந்துச்சென்று பிடித்தல்.
இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்புக்களில் ஒன்றான ரேடாரின் இயக்கத்தை ஒத்த ஒரு இயக்கம்தான் வவ்வால் தனது இரையை அடைய மேற்கொள்ளும் உத்தியாகும். இந்த பண்புகளை தன்னிச்சையாக எவ்வாறு பெற்றிருக்க முடியும். இத்தகைய திட்டமிட்ட ஒரு செயல் அமைப்பு தன்னிச்சையாகவோ அல்லது வவ்வாலே சிந்தித்து இத்தகைய ஒரு ஏற்பாட்டை அமைத்துக்கொண்டதாகவும் நம்மால் எடுத்துக்கொள்ள முடியுமா?. ஒரு சட்டையின் பொத்தான் தானாகத் தோன்றியதாக சொன்னால் நம்ப நம் பகுத்தறிவு ஏற்க மறுக்கின்றது. ஆனால் கடவுள் மறுப்புக் கொள்கையை நிலைநாட்ட எத்தனிக்கக் கூடியவர்கள் இதற்கு எந்த ஏற்புடைய காரணத்தை சொல்லப்போகின்றார்கள். இனி எவ்வளவு காலம்தான் பரிணாம வளர்ச்சி தத்துவத்தை தூக்கி பிடிப்பார்கள். அமெரிக்க விஞ்ஞானி ஸ்பென்சர் வெல்ஸின் கண்டுபிடிப்புகளின் மூலம் புதைக்குழியை அடைந்த இவர்களுடைய இந்த தத்துவத்தை இனி எவ்வாறு இவர்கள் நியாயப்படுத்த முடியும்.

இனி எந்த புதிய தத்துவத்தை இறைவனை மறுக்க இவர்கள் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்தப்பண்புகளை உடையவர்களைப்பற்றி அல்லாஹ் திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான்.

ஷைத்தான் அவர்களை மிகைத்துவிட்டான் அல்லாஹ்வின் நினைவை அவர்களுக்கு மறக்கச்செய்தான். அவர்களோ ஷைத்தானின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க ஷைத்தானின் கூட்டத்தினரே நஷ்டமடைந்கவர்கள்.(58:19) . இவர்கள் அல்லாஹ்வுடைய ஜோதியை தங்கள் வாய்களினால் ஊதி அணைக்க நாடுகின்றனர். இருப்பினும் அல்லாஹ் இந்த நிராகரிப்பவர்கள் வெறுத்த போதிலும் தன் ஜோதியைப் பூர்த்தியாக்கி வைப்பான். (9:32)

பொதுவாக வவ்வால்கள் எதிரொலிமூலம் தங்கள் இரையை பிடிப்பினும் கூட விதிவிலக்காக எதிரொலியின்றி கண் பார்வையைக்கொண்டு இரையைப்பிடிக்கக்கூடிய வவ்வால்களும் இருக்கின்றன. உதாரணமாக பிளையிங் பாக்ஸ் வவ்வால்கள் இவை மிக கூர்மையான பார்வை திறன் அமையப்பெற்றுள்ளன. இந்தத்தன்மை விதிவிலக்குகளில் விதிவிலக்கான அம்சமாகும்.

"சுயம்வரம் நடத்தி ஆண் வவ்வால்களைத் தேர்வு செய்யும் பெண் வவ்வால்களின் வியப்பூட்டும் ஓர் அம்சம்"
"ஆயிரக்கணக்கான குட்டிகளிடையே தன் குட்டியை மிகச்சரியாக அறியக்கூடிய நினைவாற்றல்" வவ்வால்களின் இனப்பெருக்கத்தை பொறுத்தவரை இனங்களுக்கு இனம் வேறுப்பட்டு காணப்படுகின்றது. பொதுவாக ஒரு முறைக்கு ஒரு குட்டிகளை மட்டும் ஈன்றெடுக்கின்றது. இவைகளின் கர்ப காலம் 40 நாட்கள் முதல் 8 மாதங்கள் வரை இனத்திற்கு இனம் வேறுபட்டுக் காணப்படுகின்றது. ஹாமர் ஹெட் வவ்வால்களின் இனப்பெருக்க முறை மிக வித்தியாசமானதாகும். இவ்வினத்தின் ஆண் வவ்வால்கள் நூற்றுக்கணக்கில் ஒரு மரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும். இவைகள் பெண் வவ்வால்களைக் கவர வித்தியாசமான சப்தங்களை எழுப்புகின்றன. இதனால் கவரப்பட்ட பெண் வவ்வால்கள் அங்கு வருகைத்தருகின்றன.

ஒவ்வொரு ஆண் வவ்வாலும் தான் தேர்வு செய்யபட முயற்ச்சிகளை மேற்கொள்ளுகின்றன. இருப்பினும் கூட அந்த நூற்றுக்கணக்கான வவ்வால்களில் ஒன்றினை மட்டும் தேர்வு செய்து இனப்பெருக்கத்தில் ஈடுபடும் இந்த நிகழ்ச்சி பழங்கால இளவரசிகள் சுயம்வரம் நடத்தி தங்களுக்கு பிடித்த ஆண்களை தேர்வு செய்த சம்பவத்தைதான் நமக்கு நினைவுபடுத்துகின்றது. இனப்பெருக்கத்தின் மூலம் கர்பமடையும் பெண் வவ்வால் குட்டிகளை ஈன்றெடுக்க இடம் பெயர்ந்து இதைவிட வெப்பமான இடத்தில் சென்று மற்ற கர்பமுள்ள வவ்வால்களுடன் சேர்ந்துக்கொள்ளுகின்றன. ஆயிரக்கணக்கான வவ்வால்களின் குட்டிகளுக்கிடையே இவை தங்கள் குட்டியை மிக சரியாக அடையாலம் கண்டுகொள்ளும் இந்த ஆற்றல் மனித இனம் கூட அடையாத ஒன்றாகும். மருத்துவ மனைகளில் குழந்தை பிறந்தவுடன் அடையால அட்டை கட்டாவிட்டால் எந்த தாயும் தன் குழந்தையை அறிய முடியாது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

அழிவின் விளிம்பை நோக்கிச் செல்லும் வவ்வால்கள்.
ஓர் அதிர்ச்சி தகவல்
வவ்வால்களில் சில வகைகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக உயிர் வாழுகின்றன. இன்றைய சூழ்நிலையில் காடுகள் பெருவாரியாக அழிக்கப்படுவதாலும் உலக அளவில் தற்போது ஏற்பட்டுள்ள (Elnino) பருவநிலைக்கோளாறுகளினால் கோடிக்கணக்கான ஹெக்டேர்களில் ஏறபடும் காட்டுத்தீயினாலும் மிக வேகமாக வவ்வால் இனங்கள் அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றன. மெக்ஸிகோவில் ஏற்ப்பட்ட காட்டுத்தீயின் காரணமாக சில வவ்வால் இனங்கள் 99.99 சதவிகிதம் அழிந்துவிட்டதாக கருதப்படுகின்றது. மனிதர்களினால் வவ்வால்களுக்கு பெரிய அளவில் எந்த பிரச்சனையும் ஏற்படாவிட்டாலும் கூட சில வேளைகளில் உண்பதற்காகவும் சோதனைச்சாலைகளில் ஆராயச்சி செய்வதற்காகவும் இவை வேட்டையாடப்படுகின்றன.

இந்த சிரிய உயிரினத்தில்தான் இறைவன் எவ்வளவு அத்தாட்சிகளையும் அதிசயமான பண்புகளையும் வைத்து நம்மை சிந்தனை வயப்படுத்தி பிரமிக்க வைத்துவிட்டான். இதைக்காட்டிலும் பல பிரமாண்டங்களை படைத்துள்ள இறைவன் அனைத்தின் மீதும் ஆற்றல் நிறைந்தவன்.

நீங்கள் பார்க்கக்கூடிய தூண்கள் எதுவுமின்றி வானத்தைப் படைத்தான். நீங்கள் சாய்ந்து விடாதிருக்கும் பொருட்டு முளைகளை (மலைகளை)நாட்டினான். அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச்செய்தான். வானத்திலிருந்து தண்ணீரை (நாமே) இறக்கினோம். அதில் மதிப்பு மிக்க ஒவ்வொன்றையும் முளைக்கச் செய்தோம் (31:10)
ஆதாரங்கள்: கலைக்களஞ்சியம், என்கார்டா என்சைக்ளோபீடியா, டேஞ்சர் கிரியேச்சர்ஸ் நன்றி. இஸ்லாம்கல்வி.காம்