புதன், 3 அக்டோபர், 2012

கருவரைகளில் உள்ளதை மருத்துவர்களும் அறிவார்களா?

கருவரைகளில் உள்ளதை மருத்துவர்களும் அறிவார்களா?
N.K.Abdullah

إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ (34) لقمان : 34


‘மறுமைபற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது.இன்னும் அவனே மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிவான். எந்த ஆத்மாவும் தான் நாளை என்ன சம்பாதிப்பேன் என்று அறியாது. எந்த ஆத்மாவும் தான் எங்கே மரணிப்பேன் என்று அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன் நுட்பமானவன். லுக்மான்:34

இவ்வசனத்தில் இறைவன் 5விடயங்களைப்பற்றிய அறிவு தன்னிடமே உள்ளது என்கிறான். அதில் கருவரைகளில் உள்ளவை பற்றிய அறிவும் ஒன்று. இந்த வசனம் இன்றைய மருத்துவ அறிவியலுக்கு முரண்படுவதாக சிலருக்குத் தோன்றலாம். ஆனால் மருத்துவ அறிவியல் இதனை நிரூபிக்கிறது என்பதே உண்மையாகும். அதனை தெரிந்துகொள்ள முன்னர் இந்த வசனம் என்ன சொல்கிறது என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

‘கருவறைகளில் உள்ளதை அவன் அறிவான்” என்பது சிசு ஆணா பெண்ணா என்பதை மாத்திரங் குறிக்கவில்லை. விந்திலிருந்து குழந்தை உருவாகுமா? அது முழுமையாகுமா? அதன் நிறம் வெண்மையா? கருப்பா? பொது நிறமா? குறைமாதமாகப் பிறக்குமா? முழுமாதங்களையும் தாண்டுமா? உடலில் குறைகளோடு உருவாகிறதா? குறையற்று உருவாகிறதா? சிறந்த குழந்தையா? மோசமானதா? அரவாணியா? ஒற்றையா? இரட்டையா? என்பவைகளையும் இவ்வசனமும் குறிக்கிறது. அல்குர்ஆனில் சில வசனங்கள் இதை இன்னும் தெளிவுபடுத்துகின்றன.

هُوَ الَّذِي يُصَوِّرُكُمْ فِي الْأَرْحَامِ كَيْفَ يَشَاءُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ (6) آل عمران

‘அவனேகருவரையில் உங்களை அவன்விரும்பியவாறு வடிவமைக்கிறான்” ஆலு இம்ரான்:6

ஞாயிறு, 17 ஜூன், 2012

கதீஜாவான மதுராணி

கதீஜாவான மதுராணி

http://www.orkadavul.com/

செய்திராஜா

ஆந்திர மாநில வாரங்கள் நகரத்தில் பிறந்தவர் மதுராணி. ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவர். மதுவின் தந்தை தாகூர் பிரஹலாத் சிங். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இரண்டு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் மதுராணிக்கு உண்டு. மது மூத்தவள்.

மதுராணி அண்மையில் இஸ்லாத்திற்கு மாறிவிட்டார். அதுதான் தாகூர் குடும்பத்தின் தலையாய பிரச்சனையாக மாறிவிட்டது.

பெண்களை கண்ணியப்படுத்துவது இஸ்லாம்தான். தன் 36 வயது மகள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை ஜீரணித்துக் கொள்ள முடியாத தாகூர் பிரஹலாத் சிங், அவளை கொண்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இந்தச் செய்தி ஆந்திர ஊடகங்களில் கடந்த வாரம் வெளியானது.

தந்தை பிரஹலாத் மகள் மதுராணியிடம் பேசுகிறார்.

'மகளே...பார்...நீ எடுத்திருக்கும் முடிவு (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருப்பது) மிக மிகத் தவறானது. உன் முடிவை மாற்றிக் கொள்! யாரும் உன்னை ஒன்றும் சொல்ல மாட்டார்கள். உனக்கு உன் தந்தை, தாய் மற்றும் தம்பிகள், தங்கைகளின் பாசம், அரவணைப்பு மீண்டும் கிடைக்கும்...'

சனி, 28 ஏப்ரல், 2012

பகுத்தறிவுவாதம்

பகுத்தறிவுவாதம்



நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.

“நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?”

“நிச்சயமாக ஐயா..”

“கடவுள் நல்லவரா?”

“ஆம் ஐயா.”

“கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?”

“ஆம்.”

“எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?”



(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)