ஞாயிறு, 25 அக்டோபர், 2009


நாத்திகம் பகுத்தறிவு வாதமா..? - 3

அபூ பாத்திமா அபூ முஹை

'பகுத்தறிவுக்குப் பரிசளிக்கும் கட்டுரை'
உண்மையில் பகுத்தறிவென்றால் என்ன?
இந்தப் பகுத்தறிவு ஏன் மனித சமுதாயத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது? அதன் சரியான பொருள் என்ன? என்பதை விரிவாகப் பார்ப்போம்!
நடுநிலையோடு சிந்திப்பவர்கள் மனித சமுதாயத்திற்கு மறுமை வாழ்க்கையகை; குறிக்கோளாகக் கொண் டே பகுத்தறிவுக் கொடுக்கப் பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ள முடியும். உலகில் படைக்கப் பட்டு ள்ள மனிதனல்லாத இதர எல்லாப் படைப்புகளும் இவ்வுலகில் மனிதனுக்கு நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவி வருகின்றன. எல்லாப் படைப்புகளைக் கொண்டும் மனிதன் பயடைகிறான். ஆனால் மனிதனைக் கொண்டு எந்தப் படைப்புக்கும் பிரயோஜனம் இல்லை. என்பதை தெளிவாக நாம் அறிகிறோ ம். மனிதன் ஒரு படைப்பின் மீது அக்கறை கொண்டு பாடுபடுகிறானென்றால் அதுவும் தனது சுயநலம் கரு தியே அதைச்செய்கிறான். அவன் ஆடு மாடுகளை வளர்ப்பது அவற்றிலிருந்து பால் இறைச்சி தோல் இவற் றின் பலனைக்கருதியே. அதிலும் மனிதன் இடைத்தரகனாக இருந்து பூமியிலிருந்து உறிபத்தியாகும் பொரு ட்களைக் கொடுக்கிறானேயல்லாமல் மனிதன் தன்னிலிருந்து எதனையும் கொடுப்பதில்லை.
யானை போன்ற படைப்பினங்கள் உயிரோடிருக்கும்போதும் மனிதனுக்கு உதவுகின்றன செத்த பின்பும் மனிதன் அவற்றைக் கொண்டு பயனடைகிறான். ஆனால் உயிரோடிருக்கும் மனிதனைக் கொண்டும் இதர படைப்பினங்களுக்கு உபயோகமில்லை செத்த மனிதனைக் கொண்டும் உபயோகமில்லை. எனவே எதற் கும் உபயோகமற்ற இந்த மனித இனம் ஏன் வாழவேண்டும்? அதற்காக விஷேசமாக மனித இனத்திற்கு மட்டுமே பகுத்தறிவு ஏன் கொடுக்கப் பட்டிருக்க வேண்டும்? என்று சற்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்.
இவ்வுலகில் பயன்பாடாமனிதன் ஏன் படைக்கப் பட்டுள்ளான்...?
பகுத்தறிவு கொடுக்கப் பட்டுள்ள மனிதுனும் இவ்வுலகத்திற்கு அவசியமற்றவனாக இருக்கிறான் அவனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பகுத்தறிவும் இவ்வுலக வாழ்விற்கு அவசியமற்றதாக இருக்கிறது. அப்படியானால் மனிதன் ஏன் படைக்கப்பட்டுள்ளான்? அவனுக்கு விஷேசமாக ஏன் பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது? இதை முறையாக ஒரு மனிதன் சிந்தித்தால் மனிதன மறுமைக்காகப் படைக்கப்பட்டுள்ளான் அந்த மறுமை வாழ்க்கையை உணர்ந்து விளங்கி இவ்வுலக வாழ்க்கையை ஒழுங்குமுறையுடன் நடத்த அவனுக்குப் பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். மனிதல்லாத பிராணிகளுக்கு பகுத்தறிவுமில்ல. அவற்றிற்கு மறுமை வாழ்க்கையுமில்லை. அவற்றிற்கு மறுமை வாழ்க்கை இல்லை யென்றாலும் மனிதனது இவ்வுலக வாழ்க்கைத் தேவைக்காக அவை படைக்கப்பட்டுள்ளன. என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
மறுமைக்காகப் படைக்கப்பட்ட மனிதன் அந்த மனித வாழ்க்கையை உணர்ந்து வாழ பகுத்தறிவு கொடுக்கப்பட்டமனிதன் அந்த மறுமையை மறுத்து வாழ்கிறானென்றால் அல்லது மறந்து வாழ்கிறானென் றால். அவன் மனிதன் என்ற அந்தஸ்தையே இழந்து விடுகிறான். நான்கு கால் பிராணிகள்போல் இவன் இரண்டுகால் பிராணியாக இவ்வுலகில் வாழ்கிறான். ஆனால் நான்கு பிராணிகளுக்கோ நாளைமறுமையில் நரகவேதனை இல்லை. இந்த இரண்டுகால் பிராணிக்கோ நிச்சயமாக நாளை மறுமையில் நரகவேதனை உண்டு. அந்த நரகவேதனையை கண்கூடாகபப் பார்க்கும்போது ' நாங்களும் இந்த மிருகங்களைப் போல் மண்ணோடு மண்ணாகிப் போயிருக்கக்கூடாதா? என்று கதறுவார்கள். ஆனால் அவர்களின் கதறல் எவ்வித பலனையும் தராது. இவ்வுலகியே சிந்தித்து விளங்கி உணர்ந்து வாழ்ந்தால்தான் தப்பினார்கள் இல்லை யேல் அதோகதிதான்.
பகுத்தறிவு என்றால் பிரித்து அறிதல் என்று தமிழ் அகராதியில் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.அப்படி யானால் ஒவ்வொரு விஷயத்திலும் யாதார்த்தமான உணமையான நிலையைப்புரிந்து அறிந்து கொள்வது தான் பகுத்தறிவாகும். உண்மையான நிலையைப் பிரித்தறிய தவறும்போது அது பகுத்தறிவு என்ற தகுதி யை இழக்கிறது. உதாரணமாக குற்றம் சுமத்தப்படுபவர்களில் உண்மையான குற்றவாளியைப் பிரித்தறிந்து தண்டிக்கும் பொருப்பிலுள்ள ஒரு நீதிபதியை எடுத்துக்கொள்வோம். அவர் மிகவும் நீதியாக நடக்கக் கூடிய நீதிபதிதான். லஞ்சம் வாங்கிக் கொண்டு தன் மனசாட்சிக்கு விரோதமாக உண்மைக்குப் புறம்பாகத் தீர்ப் பளிக்கும் ஒரு நீதிபதி அல்ல. குற்றவாளியைக் கண்டுபிடிப்பதில் எச்சரிக்கையாக நடந்து கொள்கிறார்.
இந்த நிலையில் அவர் தீர்ப்பளிக்கும் எல்லாத் தீர்ப்புகளிலும் உண்மையானக் குற்றவாளிகளைக் கண்டு பிடித்து தீர்பளித்து வருகிறாரென்று சொல்லமுடியாது. சல தீர்ப்புகளில் குற்றமற்றவரை தண்டிக்கும் நிலையும். சில தீர்ப்புகளில் உண்மையான குற்றவாளியை விடுதலை செய்துவிடும் நிலையும் ஏற்படத்தான் செய்கிறது இது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இந்த இடங்களில் அந்த நீதி பதி உண்மைக்கு மாற்றமான முடிவுக்கு வந்தமையினால் அவரின் பிரித்தறியும் பகுத்தறிவில் கோளாறு ஏற் பட்டு விட்டது என்பதை மறுக்கமுடியாது. இதற்கு என்ன காரணம்? சம்பவத்தை நேரடியாகப் பார்த்தவர் கள் மூலம் சரியான தகவலைப் பெறத் தவறி விட்டார் அந்த நீதிபதி என்றுதான் சொல்ல வேண்டும். சம் பவத்தோடு நேரடியாகத் தொடர்புடையவர்கள் அல்லது நேரடியாகக் கண்டவர்கள் தரும் வாக்கு மூலத்தை வைத்துத்தான் அவர் தீர்ப்பு சொல்லவேண்டியுள்ளது. அவரது புலன்கள் இத்தீர்ப்பு விஷயத்தில் அவருக்கு துணைசெய்ய முடியுமே தவிர அவரது புலன்களைக் கொண்டு மட்டும் தீர்ப்பு செய்துவிட முடியாது.
நாத்திகர்களின் பெருந்தவறு நீதிபதியின் தீர்ப்புக்குப் புலன்கள் மட்டும் போதும். சம்பவத்தோடு தொடர் புடையவர் அல்லதுசம்பவத்தை நேரில் கண்டவரின் வாக்கு மூலம்தேவையில்லை என்று கருதுவதுதான்.சம்ப வத்தோடு தொடர்புடையவர் அல்லது நேரில் கண்டவரை இவர்கள் முற்றிலுமாக நிராகரித்துவிட்டு புலன்க ளைக் கொண்டு மட்டும் முடிவுசெய்ய முற்பட்டு விடுகிறார்கள். அவர்கள்பெரும் நஷ்டத்திலிருப்பதற்கும் அவர் களது பகுத்தறிவு முழுமை பெறாததற்கும் இதுவே பிரதான காரணமாகும்.
சம்பந்தப் பட்டவரின் வாக்கு மூலம்...
அதாவது இறைவபை;பற்றி. மறுமையைப்பற்றி. மனிதன் தனது புலன்களைக்கொண்டு மட்டும் முடிவு செய்யும்போது அவனது பகுத்தறிவு முழுமைப்பெறாமல் புலன்களைக்கொண்டு மட்டும் அறிந்த ஒரு குறைவா ன அறிவோடு நின்று விடுகிறது. எப்போது அவர்கள் இறைவனோடு தொடர்புடைய இறைவனால் அனுப்பப் பட்ட இறைத்தூதர்களின் வாக்கு மூலத்தை தங்களின் புலன்களின் துணையோடு முறையாக அணுகுகிறார்க ளோ அப்போதே அவர்களின் பகுத்தறிவு முழுமை பெறுகிறது. உண்மை நிலைகளை சரியாகத் தெரிந்து கொள்ள முடிகின்றது. அதே சமயம் அந்த நீதிபதி சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட அல்லது நேரடியாகப் பார்த்த சரியான நபர் மூலம் தகவல் பெறத் தவறிவிடுவதன் காரணமாகத் தவறானத் தீர்ப்பளிக்க நேரிடுகிற தோ அதேபோல் உண்மையான மாற்றப்படாத சட்டங்களையுடைய அதிகாரத்தில் இருக்கிற உண்மைத் தூத ரை விட்டு பொய் தூதர்களையோ அல்லது சட்டங்கள் மாற்றப்பட்ட அதிகாரத்தில் இல்லாத தூதர்களின் வாக்கு மூலங்களையோ அல்லது தூதர்களின் பெயரால் நடைமுறையிலிருக்கும் மனித யூகங்கள் கலக்கப் பட்ட வாக்கு மூலங்களையோ தங்களின் புலன்களைக் கொண்டு விளங்கிச் செயல் பட்டாலும் பகுத்தறிவில் கோளாறு ஏற்படவே செய்யும்;
மனிதப் புனிதர்கள்...
உலகில் தோன்றிய இறைத்தூதர்கபை; பற்றி நாத்திகர்களும் நன்கு அறிவார்கள், அவர்களின் நல்லொழுக்கம், மனித சமுதாயத்தின்பால் அவர்களுக்கிருந்த அன்பு, மனித மேம்பாட்டுக்காக அவர்கள் செய்த கடும் உழைப்பு, அதனால் மக்களிடம் அவர்கள் பெற்றத் துன்பங்கள், அளவற்ற துன்பங்களை மக்கள் அளித்தும் அதற்கு மாறாக அந்த மக்கள் மீது அந்த இறைத்தூதர்கள் காட்டிய பரிவு அனைத்தையும் நாத்திகர்களும் அறிவார்கள். குறிப்பாக அவர்கள் அனைவரும் மனிதருள் மாணிக்கங்களாக வாழ்க்கை நடத்தியுள்ளார்கள் என்பதை நாத்திகர்களும் மறுக்க மாட்டார்கள், இந்த நிலையில் இறைவனைப்பற்றியும் மறுமையைப்பற்றியும் அவர்கள் ஏன் பொய் பகர வேண்டும்? அதனால் அவர்கள் அடைந்த லாபம் என்ன? என்பதை நாத்திகர்கள் சிந்திக்க வேண்டும், நாத்திகர்கள் சொல்வதுபோல் இறைவனோ மறுமையோ இல்லையென்றால், அந்த சான்றோர்கள் அதையே மக்களிடம் சொல்லி மனித சமுதாயத்துக்கு அவர்கள் அரசர்களாக ஆகியிருக்கலாம், எண்ணற்ற உலக சுகபோகங்களை அனுபவித்திருக்கலாம்,
குறிப்பாக இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இப்படிப்பட்ட வாய்ப்புகள் அதிகமதிகம் இருந்தன, நாத்திகர்களால் அறிஞர்களாகப் போற்றப்படுகிறவர்கள் கொடுத்த திட்டங்களை விட மிக உன்னதமானத் திட்டங்களை அந்த மேன்மக்கள் சுயமாகக் கொடுத்திருக்க முடியும், ஆனால் இதற்கு மாற்றமாக அந்த மனிதப் புனிதர்கள் தாங்கள் இறைவனின் அடிமை என்றும், இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் என்றும், இறைவன் கட்டளைக்குத் தாங்களும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், மக்களும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று ஏன் சொல்ல வேண்டும்? தங்களையே மிக வன்மையாகக் கண்டித்துச் சொல்லும் வசனங்களைக்கூட இறைவனிடமிருந்து வந்த வசனங்கள் என்று மக்களிடம் ஏன் சொல்ல வேண்டும்? (இறுதிமறை அல்குர்ஆனில் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைக் கண்டித்து இறக்கப்பட்டுள்ள பல வசனங்களைப் பார்க்கிறோம்)
இறைவன் ஒருவன் இல்லையென்றால், மறுமை என்ற ஒன்று இல்லையென்றால், அந்தப் புனிதர்கள் ஏன் இவ்வாறெல்லாம் செயல் பட்டிருக்க வேண்டும்? என்ற நாத்திகர்கள் நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும், அந்த மனிதப் புனிதர்களான தூதர்களை தன்னுடைய அறிவிப்புகள் மூலம் இறைவனே செயல்பட வைத்துள்ளான்.
இறவைனோடு அந்தத்தூதர்களுக்கு நேரடித் தொடர்பு இருந்ததால் அந்த இறைவனை அத்தூதர்கள் ஐயமின்றி விளங்கிக்கொண்டார்கள், இறைவனால் அறிவிக்கப்பட்ட மறுமை வாழ்க்கையையும் தெளிவாகப் புரிந்து கொண்டார்கள், அந்த மறுக்க முடியாத உண்மைகளையே மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள் என்பதை முறையாகச் சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்ளாமல் இருக்கமுடியாது.
மக்களிடம் அப்படி இறைவன் இருக்கிறான் என்று சொன்னதால்தான் மக்களைக் கவர முடிந்தது அதன் மூலம் சீர் திருத்தங்களைச் செய்ய முடிந்தது, எனவே உண்மைக்குப் புறம்பாக அந்தத்தூதர்கள் கூறினார்கள் என்று நாத்திகர்கள் வாதிடலாம் இதுவும் தவறாகும், இறைவன் இல்லை என்று சொல்லி மக்களிடம் செல்வாக்கு பெறுவதாக இருந்தால் இந்த நாத்திகர்கள் இன்று மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருப்பதை விட மிக அதிகமாக செல்வாக்குப் பெற்றிருக்க முடியும், ஆனால் இறைவனின் கட்டளைக்கு மாற்றமாக இறைத்தூதர்கள் நடக்க முடியாது, இறைவன் இல்லையென்ற பொய்க் கொள்கையை மக்கள் முன்வைத்தால்தான் தாங்கள் செல்வாக்கு பெற முடியும், தங்களால் சில சாதனைகளைப் புரிய முடியும் என்று நம்பியே நாத்திகர்கள் பொய்க்கொள்கையைக் கடைப்பிடிப்பதால் இறைத்தூதர்களும் அவ்வாறு உண்மைக்குப் புறம்பாக நடந்திருப்பார்கள் என்ற தவறான எண்ணத்தில் நாத்திகர்கள் இருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.
எனவே மனிதன் தனது புலன்களைக் கொண்டு மட்டும் அறிந்து கொள்வது நிறைவானப் பகுத்தறிவல்ல, இறைவனையும் மறுமையையும் தெளிவாக அறிந்த, இறைவனோடு நேரடித் தொடர்பில் இருந்த இறுதித்தூதரின் வாக்கு மூலங்களின் அடிப்படையில் புலன்களைப் பயன்படுத்தி அறியும் அறிவே முழுமையானப் பகுத்தறிவாகும், இந்தப் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தும் எந்த மனிதனும் இறைவனையோ, மறுமையையோ, இறுதித்தூதரையோ மறுக்க ஒருபோதும் முற்பட மாட்டான்.
இறை மறுப்புக்குப் பிரதானக் காரணம் என்ன...?
இனி நாத்திகர்கள் இறைவனையும், மறுமையையும் மறுத்துக் கூற பிரதானக் காரணம் என்ன? அவர்களின் அந்த எண்ணம் சரியா? அவர்கள் எண்ணப்படி அவர்கள் தங்கள் திட்டத்தில் வெற்றியடைந்தார்களா? என்று பார்ப்போம். ஒரே தாய்க்கும், தகப்பனுக்கும் (ஆதத்துக்கும் ஹவ்வாவுக்கும்) பிறந்த இந்த உலக மக்களிடம் இன்று எண்ணற்ற மதங்களையும், ஜாதிகளையும், பிரிவுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும், விரோத குரோத மனப்பான்மைகளையும் பார்க்கிறோம், ஒருசாரார், இன்னொரு சாரார் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர் அதிலும் குறிப்பாக மக்களின் ஜனத்தொகையில் குறைந்த விகிதாச்சாரத்தில் உள்ளவர்கள் பெரும்பான்மை மக்களை ஆட்டிப்படைக்கின்றனர், சமத்துவ சகோதரத்துவம் உள்ள சீரானதொரு வாழ்க்கையை மனித சமுதாயத்தில் பார்க்க முடியவில்லை, மனித சமுதாயத்தின் பெரும் தொகையினரை தீண்டத்தகாதவர்கள் என மதத்தின் பெயரால் ஒதுக்கி வைத்து கொடுமைகள் பல இழைக்கப்பட்டு வருகின்றன, நாய்கிருக்கும் அந்தஸ்து கூட இந்த மனிதர்களுக்கு இல்லை என்ற கொடுமையையும் பார்க்கிறோம் (உயர் ஜாதியினர் நாயைத் தொடுவது தீட்டு என்று கூறுவதில்லை)ஆக இப்படி சமுதாயத்தில் காணப்படும் அத்தனைக் கொடுமைகளுக்கும் இறைவனையும், மறுமையையும் நம்;;;;புவதே காரணமாக இருக்கிறது? இறைவனையும், மறுமையையும் சொல்லியே பெரும்பான்மை மக்கனை சிறுபான்மை மக்களை ஏமாற்றுகின்றனர், அந்த மயக்கம் காரணமாகத்தானே பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்குக் கட்டுப்படுகின்றனர், எனவே இறைவனும், மறுமையும் இல்லை மரணத்தோடு மனித வாழ்க்கை முடிவுற்று விடுகின்றது, என்று நிலைநாட்டி விட்டால், இப்படிப்பட்ட கொடுமைகள் அனைத்தையும் அழித்து விடலாம், ஓர் உன்னத சமுதாயத்தை உருவாக்கி விடலாம் என்பது நம் ஊர் நாத்திகர்களின் எண்ணமாகும்.
நாத்திகர்கள் கூறக்கூடிய கொடுமைகள் அனைத்தும் சமுதாயத்தில் இடம்பெற்றுள்ளன என்பதை நாமும் ஒப்புக்கொள்கிறோம், அவை அனைத்தையும் அகற்றி, ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ சகோதரத்துவ சமுதாயத்தை அமைக்க அவர்கள் காட்டும் ஆர்வத்தையும் வரவேற்கிறோம் ஆனால் அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தை அமைக்க அவர்கள் கொடுக்கும் திட்டம்தான் மிகவும் தவறான ஒரு திட்டமாகும், அவர்களின் திட்டம் நாட்டில் குறிப்பாக அதுவும் தமிழகத்தில் எப்படிப்பட்ட ஒரு நிலையை உண்டாக்கி இருக்கிறது என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம், நாட்டில் மலிந்து காணப்படும் கெடுதிகளுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரே மார்க்கத்தை- நேர்வழியை- மதங்களாக்கி மக்களைப் பல பிவினர்களாக்கி அதன் மூலம் அற்ப உலக ஆதாயம் அடைந்து வரும் புரோகிதர்கள் எந்த அளவு பொறுப்பாளர்களாக இருக்கிறார்களோ அதே அளவு அதில் எவ்வித குறையுமின்றி நாத்திகர்களும் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள், என்பதை உணர வேண்டும்.
கள்ளை ஒழிக்க தென்னையை ஒழிப்பதா...?
கள் குடிப்பது கூடாது, குடி குடியைக் கெடுக்கும் இது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை, மக்களை இந்த உண்மையை உணர வைத்து அவர்களை குடியை விடச்செய்வதே அறிவுள்ளவர்கள் செய்யும் நல்ல முயற்சி, தென்னை மரத்திலிருந்துதானே கள் வருகின்றது, தென்னை மரத்தை வெட்டி வீழ்த்தி விட்டால் கள் ஒழிந்துவிடும், என்று தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்துபனை அறிவாளிகள் என்று அறிவாளிகள் சொல்லமாட்டார்கள், மாறாக தென்னை மரத்தைக் கொண்டு மக்கள் பெறும் நல்ல பல பலன்களை இழக்க நேரிடும் என்பதே உண்மையாகும், குடிகாரன் தென்னை மரத்திலிருந்து கள் கிடைக்கவில்லை என்பதற்காகக் குடியை விடப்போவதில்லை, ஸ்பிரிட்டைக் காய்ச்சிக் குடிக்க ஆரம்பிப்பான், அவனுக்கு வேண்டியது போதை, அந்தப் போதையை எப்படியெல்லாம் பெற்றுக்கொள்ள முடியுமோ, அப்படியெல்லாம் பெற்றுக்கொள்ள முயல்வான், இதேபோல் மூட்டைப் பூச்சி தொல்லைத் தாங்க முடியவில்லை என்பதற்காக வீட்டைக் கொளுத்தி விட்டு காட்டில் போய் அவதிப்பட மாட்டான் அறிவுள்ள மனிதன், வீட்டிலிருந்து கொண்டே மூட்டைப் பூச்சிகளின் தொல்லையைப் போக்க உரிய வழியையே பார்ப்பான்;.
இப்படிப்பட்ட அறிவற்ற ஒரு முயற்சிதான், இறைவனின் பெயரால் சிறு சாரார் பெரும் சாராரை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதற்காக, இறைவனே இல்லையென்று நிலைநாட்டச் செய்யப்படும் முயற்சியுமாகும், கள்ளுக்குப் பயந்து தென்னையை வெட்டி வீழ்த்தியதால், தென்னையிலிருந்து பெறப்படும் பல பலன்களை மனிதன் இழப்பதுபோல், சமுதாயத்தில் பெரும்பான்மையினர் இறைநம்பிக்கையின் மூலம் அடையும் பெரும் பலன்களை இழக்கச் செய்வதாகும்.
நாத்திகர்கள் பிரதானமான ஒரு விஷயத்தை சிந்திக்கத் தவறி விடுகின்றனர், மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் காரியங்களிலேயே, அவற்றைப் பெற்றுத்தருவதாகச் சொல்லிக்கொண்டு, ஒரு சாரார் அதன் மூலம் பிழைப்பு நடத்துவர், அவசியம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு இந்த இடைத்தரகர்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர், அவர்களின் தில்லுமுல்லுகளும் அதிகரிக்கின்றன, இந்த இடைத்தரகர்களின் தில்லுமுல்லுகளை ஒழிப்பதற்கு வழி, மனிதனுக்கு அத்தியாவசியமானவற்றை அவசியம் இல்லாமல் ஆக்கிக் கொள்வது என்று நாத்திகர்கள் சொன்னால், அதை எந்த அறிவாளியும் ஏற்றுக்கொள்ள முடியுமா? எளிதாக விளங்க உதாரணம் ஒன்றைச் சொல்கிறோம். (வளரும் இன்ஷா அல்லாஹ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக